December 03, 2019

பரம்பொருள்-பதிவு-91


           பரம்பொருள்-பதிவு-91

“காண்பவர் யாராக
இருந்தாலும்
மோகத் தீயில்
வெந்து சாகும்
படியான
அழகைக் கொண்ட
அழகுப் பதுமையான
உலூபியின்
வசீகரத்தால்
கவர்ந்திழுக்கப்பட்ட
அர்ஜுனன்
உலூபி பேசிய
வார்த்தைகளில் உள்ள
அர்த்தங்களை
உணர்ந்து உள்ளம்
உருகிப் போனான் ;
உலூபியின்
சாதுர்யமான
பேச்சைக் கேட்டு
மதி மயங்கிப்
போனான் ;
உலூபியின்
வார்த்தைகளில் உள்ள
வசீகரத்தைக் கண்டு
கிறங்கிப் போனான்;”  

“அழகு ;
வீரம் ;
அறிவு ;
ஆகிய முப்பெரும்
அரிய குணங்களைத்
தன்னகத்தே கொண்ட
உலூபியைக் கண்டு
அர்ஜுனன்
மனதைப்
பறி கொடுத்தான் ;
உலூபியின்
உண்மையான
காதலுக்குள்
விழுந்தான் ;
காதலானது
கொஞ்சம்
கொஞ்சமாக
அர்ஜுனனுக்குள்
உதிக்கத்
தொடங்கியது ;”

“அர்ஜுனனுக்குள்
காதலானது
முளை விட்டு
செடியாக
வளரத் தொடங்கியது  ;
செடியானது
மரமாக மாற்றம்
அடைந்தது ;
மரத்தில் பூவானது
மலரத் தொடங்கியது ;
பூத்த பூவானது
காயாக மாற்றம்
அடைந்தது ;
காயானது முற்றி
கனியாக
மாற்றம் அடைந்தது ;”

“இப்படியாக
அர்ஜுனனுக்குள்
காதலானது
படிப்படியாக
வளர்ந்து ஆழமாக
வேர் ஊன்றத்
தொடங்கி விட்டது ;
அர்ஜுனன்
உலூபியை
காதலிக்கத்
தொடங்கி
விட்டான் ;”

“உலூபியின் மேல்
காதல் வயப்பட்ட
அர்ஜுனன்
உலூபியை காதல்
பார்வையால்
பார்த்தான் ;
அர்ஜுனனின்
காதல் ரசம்
சொட்டும் காதல்
பார்வையைப்
புரிந்து கொண்ட 
உலூபி
அர்ஜுனனின்
கண்களை
நேருக்கு நேர்
பார்க்கத்
தொடங்கினாள் ;

“இருவருடைய
கண்களின் வழியாக
காதலானது
பரிமாற்றம்
செய்யப்பட்டது ;
பிரபஞ்சத்தின்
ஒரே மொழியான
மெளனத்தின்
மூலம் காதலானது
கண்கள்
மூலமாக பேசிக்
கொள்ளப்பட்டது ;
இருவருடைய
இதயங்களின்
வழியாக
காதல்
சங்கமிக்கும்
நிகழ்ச்சி
நடைபெற்றுக்
கொண்டிருந்தது ;”
அங்கே இது
வரை யாரும்
கண்டிராக ஒரு
ஆழ்ந்த அமைதி
நிலவிக்
கொண்டிருந்தது;”

“காதலின்
ஆழம் வரை
சென்ற உலூபியும்
அர்ஜுனனும்
மெய் மறந்து
நின்று
கொண்டிருந்தனர் ;
உலூபியின்
ஆசை
நிறைவேறுவதற்கான
சாத்தியக்
கூறுகள்
உதயமாகின ;”

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
-----------03-12-2019
//////////////////////////////////////////