June 30, 2019

பரம்பொருள்-பதிவு-33


                    பரம்பொருள்-பதிவு-33

" அவனன்றி ஒரு அணுவும்
அசையாது என்ற
வாக்கிற்கேற்ப - இந்த
அண்ட சராசரங்கள்
அனைத்தையும் தன்னுடைய
ஆளுகையின் கீழ் வைத்து
காப்பாற்றி வழிநடத்திக்
கொண்டிருக்கும்
எல்லாம் வல்ல
அருவ நிலையில்
உள்ள பரம்பொருள்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசுக்குள்
இருக்கிறான் என்பதை
நாம் உணர்ந்து கொள்ள
வேண்டும் என்றால்
மூன்று விஷயங்கள் நமக்கு
தெரிந்திருக்க வேண்டும் "

ஒன்று ;
" நம்முடைய உடலில்
நம்முடைய சிரசுக்குள்
இறைவன் எந்த
இடத்தில் இருக்கிறான் ? "

இரண்டு :
" இறைவனை
அடையக்கூடிய வழி எது ?"

மூன்று :
"இறைவனை அடைவதற்கு
பயன்படுத்தக்கூடியது எது ?"

" இந்த மூன்றும் யாருக்கு
தெரிந்திருக்கிறதோ
அவரால் மட்டுமே
தன்னுடைய உடலில்
தன்னுடைய சிரசுக்குள்
இருக்கும் இறைவனை
உணர்ந்து கொள்ள முடியும் "

"இறைவன்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசுக்குள்
இருக்கிறான் என்பதை
நாம் உணர்ந்து கொள்ள
வேண்டும் என்றால் - நாம்
இறைவனை அடைவதற்கு
பயன்படுத்தக்கூடியது எது ?
என்பதை முதலில்
தெரிந்து வைத்திருக்க
வேண்டும் "

"இறைவனை அடைவதற்கு
பயன்படுத்தக்கூடியது எது?
என்பதை யார் ஒருவர்
தெரிந்து கொண்டு அதை
பயன்படுத்துகிறாரோ ?
அவரால் மட்டுமே
தன்னுடைய உடலில்
தன்னுடைய சிரசுக்குள்
இறைவன் எந்த
இடத்தில் இருக்கிறான்
என்பதையும் ;
இறைவனை
அடையக்கூடிய வழி எது
என்பதையும் ;
தெரிந்து கொள்ள முடியும் "

" தனக்குள் இருக்கும்
இறைவனை அடைவதற்கு
பயன்படுத்தக் கூடியது எது
என்பதை நம்முடைய
முன்னோர்கள் ; சித்தர்கள் ;
உண்மையை உணர்ந்தவர்கள் ;
அறிவு விளக்கம் பெற்றவர்கள் ;
சமாதியில் திளைத்தவர்கள் ;
ஞானத்தை சுவைத்தவர்கள் ;
முக்தியின் வாசலைத்
தட்டியவர்கள் ;
தங்களுடைய பாடல்களில்
எழுதி வைத்து இருக்கிறார்கள் ;
பல்லாயிரக்கணக்கான
பாடல்களில் இறைவனை
அடைவதற்கு பயன்படுத்தக்
கூடியது எது ? என்பதை
எழுதி வைத்து
இருக்கிறார்கள் "

" இறைவனை அடைவதற்கு
பயன்படுத்தக்கூடியது எது
என்பதை உணர்ந்தாலும்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசுக்குள்
இறைவன் எந்த இடத்தில்
இருக்கிறான் என்பதையும் ;
இறைவனை அடையக்கூடிய
வழி எது என்பதையும் ;
கண்டறிவது
மிகவும் கடினம்?"

" பார்க்க முடியாத இடத்தில்
இருக்கும் ஒன்றை  ;
இதுவரை பார்த்திராத
ஒன்றை ;
எப்படி நம்மால் நினைத்து
பார்க்க முடியும்
கற்பனை செய்து கூட
பார்க்க முடியாது "

" இறைவனை அடைவதற்கு
பயன்படுத்தக்கூடியது எது
என்பதை பலவித
சோதனைகளுக்குப் பிறகு
தெரிந்து கொண்டு
அதனைப் பயன்படுத்தி
தொடர்ந்து பயிற்சி
செய்து வருபவர்கள்
இறைவன் தன்னுடைய
உடலில் எந்த
இடத்தில் இருக்கிறான்;
இறைவனை அடையக்கூடிய
வழி எது ;என்ற
இரண்டையும் தெரிந்து
கொள்ள வேண்டும்
என்பதற்காகவும் ;
இந்த இரண்டையும்
தெரிந்து கொண்டு
அதனைப் பயன்படுத்தி
இறைவனுடன் இரண்டறக்
கலந்து முக்தி அடைய
வேண்டும் என்ற உயர்ந்த
நோக்கத்திற்காகவும் ;
வடிவமைக்கப்பட்டது தான்
சிவலிங்கம்"

" ஆமாம் சிவலிங்கம்
என்பது இறைவன்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசுக்குள்
எந்த இடத்தில்
இருக்கிறான் என்பதையும் ;
இறைவனை அடையக்கூடிய
வழி எது என்பதையும் ;
சுட்டிக்காட்டும் குறியீடாக
இருப்பது தான்
சிவலிங்கம் ;"

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 30-06-2019
//////////////////////////////////////////////////////////