October 02, 2018

திருக்குறள்- பதிவு-29


                      திருக்குறள்- பதிவு-29

மாற்றத்தின் மூலம்
தோன்றிய
ஆண் இனம்
பெண் இனம்
ஆகிய இரண்டு
இனங்களும்
பிறப்பின் மூலம்
தோன்ற ஆரம்பித்து
பிறப்பின் மூலம்
தோன்றிக் கொண்டு
வருகிறது

மாற்றத்தின் மூலம்
தோன்றிய இனமான
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனம்
பிறப்பினால் தோன்றிய
ஆண் இனத்தில்
மாற்றம் ஏற்பட்டும்,
பிறப்பினால் தோன்றிய
பெண் இனத்தில்
மாற்றம் ஏற்பட்டும்,
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனம்
மாற்றத்தின் மூலம்
தோன்றிக் கொண்டு
வருகிறது.

மூன்று இனங்களும்
மாற்றத்தின் மூலம்
ஒரே நேரத்தில்
தோன்றி இருந்தாலும்
ஆண் இனமும்,
பெண் இனமும்
எண்ணிக்கையில்
அதிக அளவில்
இருக்கின்ற காரணத்தினால்
இந்த இரண்டு
இனங்களும் குறைந்த
எண்ணிக்கையில் இருக்கும்
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனத்தை
சமுதாயத்திலிருந்து
புறக்கணித்து
வைத்திருக்கிறது;
ஒதுக்கி வைத்திருக்கிறது;
இழிவு படுத்தி
வைத்திருக்கிறது;

பெரும்பான்மையாக உள்ள
ஆண் இனமும்
பெண் இனமும்
இச்சமுதாயத்தில்
தாங்கள் சந்தோஷமாக
வாழ்வதற்குரிய அனைத்து
வசதிகளையும் செய்து
வைத்துக் கொண்டு
வாழ்ந்து கொண்டு
இருக்கிறது ஆனால்
அன்றாட வாழ்க்கையை
நடத்துவதற்கு தேவையான
அத்தியாவசியமான
அடிப்படையான
தேவைகளைக் கூட
சிறுபான்மையாக உள்ள
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனத்திற்கு
ஆண் இனமும்
பெண் இனமும்
செய்யாமல் விட்டது
தான் மிகப்
பெரிய வேதனை

ஆண்கள் கழிவறை
பெண்கள் கழிவறை
என்று தங்கள்
இனத்திற்கு மட்டும்
எல்லா இடங்களிலும்
கழிவறைகளை
ஏற்படுத்திக் கொண்ட
ஆண் இனமும்
பெண் இனமும்
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனத்திற்கு
எங்கும் கழிவறை
அமைக்காமல்
விட்டதிலிருந்து
ஆண் இனம்,
பெண் இனம்
ஆகிய இரண்டு
இனங்களும்
எவ்வளவு பெரிய
மனிதத் தன்மையற்ற
செயலை செய்து
இருக்கிறது என்பது
தெரியும்

அனைத்து இடங்களிலும்,
அனைத்து செயல்களிலும்,
அனைத்து துறைகளிலும்
தங்களை மட்டுமே
முன்னிறுத்தி செயல்களைச்
செய்து வரும்
ஆண் இனமும்,
பெண் இனமும்
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனத்தை
புற்க்கணித்தே வைத்து
இருக்கிறது

ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனத்திற்கு
பெற்றோர்கள் புறக்கணிப்பு,
சொந்தக்காரர்கள் புறக்கணிப்பு,
சுற்றத்தார்கள் புறக்கணிப்பு,
கல்வியில் புறக்கணிப்பு,
வேலை வாய்ப்பில்
புறக்கணிப்பு,
வீட்டை வாடகைக்கு
விடுவதில் புறக்கணிப்பு,
பழகுவதில் புறக்கணிப்பு,
என அனைத்து
நிலைகளிலும்
புறக்கணிக்கப்படும் போது
அவர்கள் தங்கள்
வாழ்வாதாரத்திற்காக
என்ன செய்வார்கள்

பிச்சை எடுப்பதும்,
தவறான தொழிலில்
ஈடுபவதும்,
போன்ற செயல்களைச்
செய்பவர்கள்
ஆண் இனத்திலும்
பெண் இனத்திலும்
இருக்கிறார்கள்
ஆனால் குறைவான
எண்ணிக்கையில் இருக்கும்
ஆணும், பெண்ணும்
சேர்ந்த நிலையில்
உள்ளவர்கள் தங்கள்
வாழ்வாதாரத்திற்காக
செய்யும் செயல்களை
மட்டும் இச்சமுதாயம்
பெரியதாக பார்க்கிறது

ஆண்டாண்டு காலமாக
சமுதாயத்தால்
புறக்கணிக்கப்ட்டு வந்தாலும்;
சமுதாயத்தால்
இழிவுபடுத்தப்பட்டு
வந்தாலும்;
இச்சமுதாயம் மனித
இனத்தில் ஒரு இனமாக
அவர்களை மதிக்காமல்
அவமதித்தாலும்;
அவர்களை எதிலும்
சேர்க்காமல்
புறக்கணித்து வந்தாலும்;
அத்தனை கஷ்டங்களையும்
தாங்கிக் கொண்டு,
அத்தனை
மனவேதனைகளையும்
தாங்கிக் கொண்டு,
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனத்தில்
உள்ளவர்கள்
போராடிக் கொண்டு
ஒவ்வோரு துறையிலும்
முன்னேறிக் கொண்டு
வருகிறார்கள்

அவர்கள் முன்னேற்றத்திற்கு
ஆண் இனம், பெண் இனம்
ஆகிய இரண்டு இனங்களும்
உதவி செய்யாவிட்டாலும்
பரவாயில்லை
அவர்கள் முன்னேற்றத்தை
தடை செய்யக்கூடிய
செயல்களைச் செய்யாமல்
இருந்தாலே போதும்

--------- இன்னும் வரும்
---------- 01-10-2018
///////////////////////////////////////////////