May 12, 2022

பதிவு-6-துன்பம் உறவரினும் -திறக்குறள்

 பதிவு-6-துன்பம்

உறவரினும்

-திறக்குறள்

 

கணிக்க முடியாத

திறமை படைத்த

செங்கிஸ்கானை

யாரும் செய்யாத

சாதனையைச்

செய்த

செங்கிஸ்கானை

யாராலும் செய்ய

முடியாத

சாதனையைச்

செய்த

செங்கிஸ்கானை

போர்க்கலையில்

யாருடனும்

ஒப்பிட முடியாத

செங்கிஸ்கானை

உலகத்தையே

தன் காலடியின்

கீழ் வைத்து

ஆட்சி செய்த

செங்கிஸ்கானை

வரலாற்றில்

கொடுங்கோலன்

என்று இழிவு

படுத்தி வரலாற்றை

தவறாக எழுதி

வைத்து

இருக்கிறார்கள்

 

செங்கிஸ்கானிடம்

தோற்ற

நாடுகள் தான்

செங்கிஸ்கானை

கொடுங்கோலனாக

சித்தரித்து

வரலாற்றை

தவறாக எழுதி

வைத்து

இருக்கிறார்கள்

 

செங்கிஸ்கான்

யாரும்

செய்யாததையும்

யாராலும்

செய்ய

முடியாததையும்

செய்தான்

ஏனென்றால்

செங்கிஸ்கான்

சாவைக் கண்டு

பயப்படாதவன்

 

உலகமே எதிர்த்து

நின்ற போதும்

தன்னுடைய

கொள்கையை

விட்டுக்

கொடுக்காமல்

இந்த

உலகத்தையே

எதிர்த்து

நின்றவன்

 

சாவைக் கண்டு

பயப்படாதவனால்

மட்டுமே

சாதனை

செய்ய

முடியும்

என்பதை

நிரூபித்துக்

காட்டியவன்

 

இதைத் தான்

திருவள்ளுவர்

 

சாவைக்கண்டு

பயப்படாமல்

செயலைச்

செய்பவனால்

மட்டுமே சாதனை

படைக்க முடியும்

சாவைக் கண்டு

பயப்படுபவன்

சாதனை

செய்ய

மாட்டான்

 

என்று

 

துன்பம்

உறவரினும்

செய்க

துணிவாற்றி

இன்பம்

பயக்கும்

வினை”””

 

என்ற திருக்குறளின்

மூலம் தெளிவு

படுத்துகிறார்

 

 

-------என்றும் அன்புடன்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

---------12-05-2022

---------வியாழக் கிழமை

 

/////////////////////////////////////

 

 

பதிவு-5-துன்பம் உறவரினும் -திறக்குறள்

 பதிவு-5-துன்பம்

உறவரினும்

-திறக்குறள்

 

அது மட்டுமல்ல

செங்கிஸ்கான்

பட்டமும்

பதவிகளும்

உயர்ந்த

ஜாதியினருக்கு

என்று இருந்த

நிலைமையை

மாற்றினான்

திறமை இருந்த

தாழ்ந்த ஜாதி

மக்களை உயர்ந்த

நிலைக்கு கொண்டு

வந்தான்

பரம்பரை

பரம்பரையாக

பிறப்பின்

அடிப்படையில் வந்த

பதவிகளை

ஒழித்தான்

திறமையின்

அடிப்படையில்

பதவிகளை

வழங்கினான்

 

போரில் இறந்த

போர்வீரர்களின்

குடும்பங்களுக்கு

உதவிகள் செய்தான்

பெண்களை மதித்தான்

சமுதாயத்தில்

பெண்களுக்கு

சம உரிமை

அளித்தான்

குறிப்பிட்ட

மதத்தைத்

தான் பின்பற்ற

வேண்டும் என்று

எந்த ஒரு

ஆணையும் அவன்

பிறப்பிக்கவில்லை

மக்கள் எந்த

மதத்தை

பின்பற்ற

நினைக்கிறார்களோ

அதை

பின்பற்றலாம்

என்ற மதச்

சுதந்திரத்தை

மக்களுக்கு

அளித்திருந்தான்

 

எந்த ஒரு

திட்டத்தை

செயல்படுத்துவதாக

இருந்தாலும்

மக்களின்

கருத்துக்களைக் கேட்டு

அவர்களின்

ஆதரவைப் பெற்ற

பிறகே

செயல்படுத்தினான்

மக்களின்

ஆதரவைப்

பெறாமல் எந்த

ஒரு திட்டத்தையும்

செயல்படுத்தவில்லை

இந்தத் திட்டத்தை

முதன் முதலில்

அறிமுகப்படுத்தியவன்

செங்கிஸ்கான் தான்

 

தன் மேல்

நம்பிக்கை

வைத்தவர்களின்

நம்பிக்கையை

செங்கிஸ்கான்

ஒரு நாளும்

கெடுத்ததில்லை

யாருக்கும்

துரோகம்

செய்ததில்லை

மக்களின்

உணர்வுகளைப்

புரிந்து கொண்டு

செயல்பட்டதால் தான்

ஒரு லட்சத்திற்கும்

மேற்பட்ட

போர் வீரர்கள்

அவர் இட்ட

ஆணைகளை ஏற்று

செயல் படுத்தினர்

 

மங்கோலிய தேசம்

பிரிவு படாமல்

மக்களின்

ஆதரவுடன்

மக்களின்

அன்பைப் பெற்று

மரியாதையைப்

பெற்று

செங்கிஸ்கானால்

21 ஆண்டுகள்

ஆட்சி செய்ய

முடிந்தது

 

எழுதப்படிக்கத்

தெரியாத

செங்கிஸ்கான்

இத்தகைய

மாபெரும்

செயலைச்

செய்தார் என்றால்

அவர் எவ்வளவு

திறமைசாலியாக

உழைப்பாளியாக

அறிவாளியாக

தளபதியாக

மன்னராக

தலைவராக

இருந்திருக்க

வேண்டும்

என்பதைச்

சிந்தித்துப்

பார்க்க வேண்டும்

 

செங்கிஸ்கான்

செய்த செயலை

அலெக்ஸாண்டர்

நெப்போலியன்

ஜுலியஸ் சீசர்

உட்பட யாரும்

இது வரை

செய்ததில்லை

 

அலெக்ஸாண்டர்

நெப்போலியன்

ஜுலியஸ்சீசர்

இவர்கள்

அனைவரும்

செங்கிஸ்கானின்

கால் தூசுக்குக்

கூட சமமாக

மாட்டார்கள்

 

-------என்றும் அன்புடன்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

---------12-05-2022

---------வியாழக் கிழமை

 

/////////////////////////////////////

பதிவு-4-துன்பம் உறவரினும் -திறக்குறள்

 பதிவு-4-துன்பம்

உறவரினும்

-திறக்குறள்

 

பல்வேறு

தலைமுறைகளாக

தங்குவதற்கு

நிரந்தரமாக

ஒரு இடம் கூட

இல்லாமல்

ஊர் ஊராக

நாடோடியாக

அலைந்து

கொண்டிருந்தவர்களை

கிடைத்த

இடத்தில்

கூடாரம்

அமைத்துக்

கொண்டு

வாழ்ந்து

கொண்டிருந்தவர்களை

சாப்பிட்டிற்கு

வழியில்லாமல்

அணில்களையும்

எலிகளையும்

நாய்களையும்

உணவாக

உட்கொண்டவர்களை

நாகரிகம்

கலாச்சாரம்

பண்பாடு என்றால்

என்னவென்றே

தெரியாது

திரிந்து கொண்டு

இருந்தவர்களை

ஒற்றுமை

என்றால்

என்ன என்பதை

அவர்களுக்கு

உணர வைத்து

குடும்பம் என்றால்

என்ன என்பதை

அவர்களுக்கு

புரிய வைத்து

மங்கோலியர்கள்

என்ற

அடையாளமே

இல்லாமல்

வாழ்ந்து

கொண்டிருந்தவர்களை

ஒன்றாகச் சேர்த்து

தன்மானத்தை

அவர்கள் இரத்தத்தில்

கலக்க வைத்து

வீரத்தை அவர்கள்

எண்ணத்தில்

நிறைய வைத்து

நாட்டுப்பற்றை

அவர்கள்

உடலில்

உறைய வைத்து

தங்களை விட

உயர்ந்தவர்கள்

இந்த உலகத்தில்

யாரும் இல்லை

என்ற உணர்வை

அவர்கள் மனதில்

வளர்த்து வைத்து

எங்கள் நாடுகளை

வெற்றி பெற

முடியாது என்று

ஆணவத்துடன்

கொக்கரித்த

நாடுகளை

எல்லாம் வென்று

50 க்கும் மேற்பட்ட

குழுக்களாக

சிதறிக் கிடந்த

பல்வேறு மக்களை

மங்கோலியர்கள்

என்ற ஒரே

இனமாக உருவாக்கி

ஒன்றும்

இல்லாததிலிருந்து

யாராலும் நினைத்து

கூட பார்க்க

முடியாத

மிகப்பெரிய

அனைத்தும் கொண்ட

மங்கோலியா

என்ற மாபெரும்

மங்கோலிய

சாம்ராஜ்ஜியதை

செங்கிஸ்கான்

உருவாக்கி

கிபி 1206 முதல்

கிபி1227 வரை

21 ஆண்டுகள் ஆட்சி

செய்தார் என்றால்

அது சாதாரண

விஷயம் இல்லை

 

செங்கிஸ்கான்

செய்திருக்கும்

இந்த சாதனை

யாரும் செய்யாத

சாதனை

யாராலும் செய்ய

முடியாத சாதனை

 

மாவீரர்கள்

என்று போற்றப்படும்

அலெக்ஸாண்டர்

நெப்போலியன்

ஜுலியஸ் சீசர் கூட

இத்தகைய

சாதனையை செய்தது

கிடையாது

செங்கிஸ்கான்

அருகில்

நிற்பதற்குக் கூட

தகுதி இல்லாத

இவர்களைத் தான்

உலகத்தின் ஒரு

சில வரலாற்று

ஆசிரியர்களும்

ஒரு சில மக்களும்

மாவீரர்கள் என்று

போற்றுகிறார்கள்

உண்மையை

மறைத்து

பொய்யை இந்த

உலகத்தில் உலவ

விட்டு

இருக்கிறார்கள்

 

கி.பி.1206 முதல்

கி.பி.1227

வரையிலான

21 ஆண்டுகளில்

செங்கிஸ்கான்

உருவாக்கிய

சாம்ராஜ்யத்தின்

நிலப்பரப்பு

நான்கு

இந்தியாக்களை

ஒன்று சேர்த்தால்

வரும்

நிலப்பரப்பளவு

இது உலக

நிலப்பரப்பில்

பத்து சதவீதம்

 

செங்கிஸ்கானுக்கு

அடி பணிந்து

நின்ற

மக்கள் 11 கோடி

இது அன்றைய

உலக மக்கள்

தொகையில்

நான்கில்

ஒரு பங்கு

 

-------என்றும் அன்புடன்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

---------12-05-2022

---------வியாழக் கிழமை

 

/////////////////////////////////////

 

 

பதிவு-3-துன்பம் உறவரினும் -திறக்குறள்

 பதிவு-3-துன்பம்

உறவரினும்

-திறக்குறள்

 

செங்கிஸ்கான்

பிறந்த போது

மங்கோலியா என்ற

தேசமே கிடையாது

 

ஒரு லட்சத்திற்கும்

மேற்பட்ட

போர்வீரர்களைக் கொண்ட

ஒரு பெரும்

படையை

தன்னந்தனியாக

தனி ஒருவனாக

அந்தக் காலத்திலேயே

ஒருவன் உருவாக்கினான்

என்றால் அது

செங்கிஸ்கான்

மட்டும் தான்

 

ஒரு தலைவனுக்கு

இருக்க வேண்டிய

ஐந்து பண்புகளான

பொறுமை

நிதானம்

தொலைநோக்கு

பார்வை

அனைத்தையும்

சமாளிக்கும் திறன்

அனைவரையும்

கட்டுப்படுத்தும் திறமை

ஆகிய ஐந்தும்

செங்கிஸ்கானிடம்

இருந்தது

அதனால் தான்

செங்கிஸ்கானால்

ஒரு லட்சத்திற்கும்

மேற்பட்ட

வலிமை மிக்க

போர் வீரர்களை

இறப்பைக் கண்டு

அஞ்சாத

போர் வீரர்களை

தன் மேல் மதிப்பு

வைத்திருந்த

போர் வீரர்களை

தனக்காக உயிரையும்

கொடுக்கக் கூடிய

போர் வீரர்களை

தன்னுடைய

கட்டளைக்குக்

கீழ்படிந்து நடக்க

வைக்க முடிந்தது

தன்னுடைய

தலைமையின் கீழ்

இருந்து போரிட

வைக்க முடிந்தது

 

செங்கிஸ்கானின்

அனைத்து

வெற்றிகளுக்கும்

அவனுடைய

தலைமைப்பண்பு தான்

காரணம்

அதுமட்டுமல்ல

அனைவரையும்

ஒன்றாக இணைத்து

கட்டுக் கோப்புடன்

படையை

வழிநடத்திச் செல்வது

தன்னுடைய

தலைமையின் கீழ்

அனைவரையும்

ஒற்றுமையாகச்

செயல்பட வைப்பது

எந்த பொறுப்புகளை

யாரிடம் ஒப்படைக்க

வேண்டும் என்ற

திறனைப்

பெற்று இருப்பது

எதிரிகளால்

யோசிக்கக் கூட

முடியாத போர்த்

தந்திரங்களை

போரின் போது

பயன்படுத்துவது

எதிரிகளைக் குழப்பி

அவர்களைத் திணற

அடித்து அவர்களைக்

கொல்வது

யாரும்

பயன்படுத்தாத போர்

வியூகங்களைப்

பயன்படுத்துவது

போரின் போது

ஆளுமைத் திறனை

எப்படி எல்லாம்

பயன்படுத்த

முடியுமோ

அப்படி எல்லாம்

பயன்படுத்துவது

கற்பனைக்கு

எட்டாத வேகத்தில்

ஒரு இடத்தில்

இருந்து மற்றொரு

இடத்திற்கு செல்வது

திறமையான

உளவாளிகள் மூலம்

சிறப்பான

தகவல்களை

உடனுக்குடன்

பெறுவது

என்று

பல்வேறு திறன்களை

செங்கிஸ்கான்

பெற்றிருந்த

காரணத்தினால் தான்

எழுதப்படிக்கத்

தெரியாத

செங்கிஸ்கான்

பணம் பதவி

அதிகாரம் என்று

எந்த ஒரு

பின்புலமும் இல்லாத

செங்கிஸ்கான்

நாடோடியாக

அலைந்து திரிந்த

செங்கிஸ்கான்

தங்குவதற்கு

ஒரு இடம் கூட

இல்லாமல் வாழ்ந்த

செங்கிஸ்கான்

சாப்பாட்டிற்கு

வழியில்லாமல்

எலிகளையும்

நாய்களையும் தின்ற

செங்கிஸ்கான்

சமுதாயத்தில்

தாழ்ந்தஜாதி என்று

ஒதுக்கி வைக்கப்பட்ட

செங்கிஸ்கான்

50-க்கும் மேற்பட்ட

பிரிவுகளாகப்

பிரிந்து

கிடந்தவர்களை

ஒருவருக்கொருவர்

சண்டையிட்டுக்

கொண்டு பல்வேறு

குழுக்களாகச்

சிதறிக்

கிடந்தவர்களை

எழுதப் படிக்கத்

தெரியாது

கல்வியறிவு

இல்லாமல்

அலைந்து கொண்டு

இருந்தவர்களை

 

 

-------என்றும் அன்புடன்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

---------12-05-2022

---------வியாழக் கிழமை

 

/////////////////////////////////////