May 12, 2022

பதிவு-4-துன்பம் உறவரினும் -திறக்குறள்

 பதிவு-4-துன்பம்

உறவரினும்

-திறக்குறள்

 

பல்வேறு

தலைமுறைகளாக

தங்குவதற்கு

நிரந்தரமாக

ஒரு இடம் கூட

இல்லாமல்

ஊர் ஊராக

நாடோடியாக

அலைந்து

கொண்டிருந்தவர்களை

கிடைத்த

இடத்தில்

கூடாரம்

அமைத்துக்

கொண்டு

வாழ்ந்து

கொண்டிருந்தவர்களை

சாப்பிட்டிற்கு

வழியில்லாமல்

அணில்களையும்

எலிகளையும்

நாய்களையும்

உணவாக

உட்கொண்டவர்களை

நாகரிகம்

கலாச்சாரம்

பண்பாடு என்றால்

என்னவென்றே

தெரியாது

திரிந்து கொண்டு

இருந்தவர்களை

ஒற்றுமை

என்றால்

என்ன என்பதை

அவர்களுக்கு

உணர வைத்து

குடும்பம் என்றால்

என்ன என்பதை

அவர்களுக்கு

புரிய வைத்து

மங்கோலியர்கள்

என்ற

அடையாளமே

இல்லாமல்

வாழ்ந்து

கொண்டிருந்தவர்களை

ஒன்றாகச் சேர்த்து

தன்மானத்தை

அவர்கள் இரத்தத்தில்

கலக்க வைத்து

வீரத்தை அவர்கள்

எண்ணத்தில்

நிறைய வைத்து

நாட்டுப்பற்றை

அவர்கள்

உடலில்

உறைய வைத்து

தங்களை விட

உயர்ந்தவர்கள்

இந்த உலகத்தில்

யாரும் இல்லை

என்ற உணர்வை

அவர்கள் மனதில்

வளர்த்து வைத்து

எங்கள் நாடுகளை

வெற்றி பெற

முடியாது என்று

ஆணவத்துடன்

கொக்கரித்த

நாடுகளை

எல்லாம் வென்று

50 க்கும் மேற்பட்ட

குழுக்களாக

சிதறிக் கிடந்த

பல்வேறு மக்களை

மங்கோலியர்கள்

என்ற ஒரே

இனமாக உருவாக்கி

ஒன்றும்

இல்லாததிலிருந்து

யாராலும் நினைத்து

கூட பார்க்க

முடியாத

மிகப்பெரிய

அனைத்தும் கொண்ட

மங்கோலியா

என்ற மாபெரும்

மங்கோலிய

சாம்ராஜ்ஜியதை

செங்கிஸ்கான்

உருவாக்கி

கிபி 1206 முதல்

கிபி1227 வரை

21 ஆண்டுகள் ஆட்சி

செய்தார் என்றால்

அது சாதாரண

விஷயம் இல்லை

 

செங்கிஸ்கான்

செய்திருக்கும்

இந்த சாதனை

யாரும் செய்யாத

சாதனை

யாராலும் செய்ய

முடியாத சாதனை

 

மாவீரர்கள்

என்று போற்றப்படும்

அலெக்ஸாண்டர்

நெப்போலியன்

ஜுலியஸ் சீசர் கூட

இத்தகைய

சாதனையை செய்தது

கிடையாது

செங்கிஸ்கான்

அருகில்

நிற்பதற்குக் கூட

தகுதி இல்லாத

இவர்களைத் தான்

உலகத்தின் ஒரு

சில வரலாற்று

ஆசிரியர்களும்

ஒரு சில மக்களும்

மாவீரர்கள் என்று

போற்றுகிறார்கள்

உண்மையை

மறைத்து

பொய்யை இந்த

உலகத்தில் உலவ

விட்டு

இருக்கிறார்கள்

 

கி.பி.1206 முதல்

கி.பி.1227

வரையிலான

21 ஆண்டுகளில்

செங்கிஸ்கான்

உருவாக்கிய

சாம்ராஜ்யத்தின்

நிலப்பரப்பு

நான்கு

இந்தியாக்களை

ஒன்று சேர்த்தால்

வரும்

நிலப்பரப்பளவு

இது உலக

நிலப்பரப்பில்

பத்து சதவீதம்

 

செங்கிஸ்கானுக்கு

அடி பணிந்து

நின்ற

மக்கள் 11 கோடி

இது அன்றைய

உலக மக்கள்

தொகையில்

நான்கில்

ஒரு பங்கு

 

-------என்றும் அன்புடன்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

---------12-05-2022

---------வியாழக் கிழமை

 

/////////////////////////////////////

 

 

No comments:

Post a Comment