January 22, 2022

பதிவு-11-வினைவலியும்- திருக்குறள்

 பதிவு-11-வினைவலியும்-

திருக்குறள்-

 

ஜுலியஸ் சீசரைப்

பற்றி

ஆய்வு செய்ததில்

ஜுலியஸ் சீசரிடம்

உள்ள குறை எது

என்பதைக் கண்டு

பிடித்து விட்டார்

கிளியோபாட்ரா

 

ஜுலியஸ் சீசர்

ஒரு பெண் பித்தர்

என்பதையும்,

பெண் என்றால்

பேயாய் அலைபவர்

என்பதையும்,

பல பெண்களுடன்

தொடர்பில்

இருப்பவர்

என்பதையும்

பல பெண்களை

சுவைத்தவர்

என்பதையும்

தெரிந்து கொண்டாள்

கிளியோபாட்ரா

 

காமத்தை பல

வழிகளில் சுவைத்தவர்

ஜுலியஸ் சீசர்

என்ற காரணத்தினால்

ஜுலியஸ் சீசரை

காமத்தால் வீழ்த்த

முடியாது என்று

தெரிந்து கொண்டாள்

கிளியோபாட்ரா

 

காமத்தால்

ஒருவரை

வீழ்த்துவது எளிது

காமத்தால்

வீழ்த்தப்பட்டவர்

நம்முடன்

நீண்ட நாட்கள்

இருக்க மாட்டார்

காமம்

எழும் போது

நம் நினைவு வரும்

காமம்

தீரும் போது

நம் நினைவு

மறந்து விடும்

 

காதலால் வீழ்த்தினால்

உடலில்

உயிர் இருக்கும்

வரை அவர்

நம்மை விட்டு

பிரிய மாட்டார்

காதலால்

வீழ்த்தப்பட்டவருக்கு

நம்முடைய சிந்தனை

எப்போதும் இருக்கும்

மறக்க மாட்டார்

 

காதலுக்கும்

காமத்துக்கும்

உள்ள வேறுபாட்டை

புரிந்து கொண்ட

கிளியோபாட்ரா

ஜுலியஸ் சீசரை

காதலால்

வீழ்த்த முடிவு

எடுத்தார்

அதற்காக

தெளிவான திட்டம்

ஒன்றைத் தீட்டினார்

 

நான் உங்களைத்

தனிமையில்

சந்திக்க வேண்டும்

நம்முடைய

சந்திப்பு ரகசியமாக

இருக்க வேண்டும்

யாருக்கும்

தெரியக் கூடாது

என்று

ஜுலியஸ் சீசருக்கு

ரகசியத் தூதன்

மூலம் செய்தி

அனுப்பினார்

 

அதற்கு

ஜுலியஸ் சீசர்

பதில் அனுப்பினார்

நீங்கள் எப்போது

வேண்டுமானாலும்

வரலாம்

நீங்கள் வருவதும்

போவதும் யாருக்கும்

தெரியாமல்

ரகசியமாக

வைக்கப்படும்

நீங்கள் வந்து

செல்வது ரகசியமாக

வைக்கப்படும்

 

ஜுலியஸ் சீசரிடமிருந்து

பதில் பெற்ற

கிளியோபாட்ரா

ஜுலியஸ் சீசரை

சந்திக்க தரைவழி

சென்றால்  தனக்கு

பாதுகாப்பில்லை

தன்னுடைய எதிரிகளால்

தன்னுடைய

உயிருக்கு ஆபத்து

எனவே

கடல்வழியாகத் தான்

செல்ல வேண்டும்

என்று முடிவு எடுத்து

தன்னுடைய முழு

நம்பிக்கைக்குரிய

பாதுகாவலன்

அப்போலோடோரஸ்

(APPOLLODORUS)

அழைத்துக் கொண்டு

கடல் வழியில்

படகில் பயணம்

மேற்கொண்டார்

கிளியோபாட்ரா

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------22-01-2022

-------சனிக்கிழமை

//////////////////////////////////////////////

பதிவு-10-வினைவலியும்- திருக்குறள்

 பதிவு-10-வினைவலியும்-

திருக்குறள்-

 

எதிரிகளே

பாராட்டக்கூடிய

அரசியல்

சூழ்ச்சியையும்

எதிரிகளே

பிரமிக்கத் தக்க

ராஜதந்திரத்தையும்

கொண்ட

கிளியோபாட்ராவை

எகிப்து நாட்டின்

அரசியாகக்

கூடாது என்று

தடுத்தவர்களில்

முக்கியமானவர்கள்

தியோடோடோஸ்

(THEODOTOS)

போதினெஸ்

அக்கிலஸ்

(ACHILLAS)

அவரது தம்பி

பதிமூன்றாம் தாலமி

தங்கை அர்சினோ

ஆகியோர் ஆவர்

 

இவர்களுடைய

சதிவேலையில்

இருந்து தன்னை

காத்துக் கொண்டு

எகிப்து நாட்டின்

அரசியாக வேண்டும்

என்றால்

தனக்கு துணையாக

இருப்பவர்

வல்லமை

பொருந்தியவராக

இருக்க வேண்டும்

என்பதையும்

எதையும்

சமாளிக்கக்கூடிய

திறமை படைத்தவராக

இருக்க வேண்டும்

என்பதையும்

யோசித்த

கிளியோபாட்ரா

ரோமபுரி நாட்டின்

ஜுலியஸ் சீசர்

தான் தன்னுடைய

எண்ணங்களை

நிறைவேற்றக்

கூடியவர் என்பதை

உணர்ந்து அவரை

தனக்கு துணையாக

வைத்துக் கொள்ள

வேண்டும் என்று

முடிவு எடுத்தார்

கிளியோபாட்ரா

 

ஜுலியஸ் சீசர்,

தனக்கு உதவியாக

இருக்கச் சொல்ல

வேண்டும்

தனக்கு துணையாக

இருக்கச் சொல்ல

வேண்டும்

தனது எண்ணங்களை

நிறைவேற்றச்

சொல்ல வேண்டும்

தனக்கு ஆதரவு

அளிக்கச் சொல்ல

வேண்டும்

தனக்கு

உதவியாக நிற்கச்

சொல்ல வேண்டும்

அதற்காக

ஜுலியஸ் சீசரை

எப்படியாவது

நேரில் சந்தித்தாக

வேண்டும் என்று

கிளியோபாட்ரா

முடிவு எடுத்தார்

 

ஜுலியஸ் சீசரை

பார்க்க வேண்டும்

என்று

கிளியோபாட்ரா

எப்போது முடிவு

எடுத்தாரோ

அப்போதே

ஜுலியஸ் சீசரைப்

பற்றிய அனைத்து

விவரங்களையும்

சேகரிக்க ஆரம்பித்தார்

 

ஜுலியஸ் சீசருக்கு

என்ன பிடிக்கும்

என்ன பிடிக்காது

யாரைப் பிடிக்கும்

யாரைப் பிடிக்காது

எந்த செயல்களைச்

செய்வார்

எந்த செயல்களைச்

செய்ய மாட்டார்

எதற்கு கட்டுப்படுவார்

எதற்கு கட்டுப்பட

மாட்டார்

எதற்கு

அடிமையாக இருப்பார்

எதற்கு அடிமையாக

இருக்க மாட்டார்

யாரை நம்புவார்

யாரை நம்ப மாட்டார்

யாரை எதிர்ப்பார்

யாரை எதிர்க்க

மாட்டார்

அவருடைய

நிறைகள் எது

அவருடைய

குறைகள் எது

அவரை எதை வைத்து

வீழ்த்தலாம் அவரை

எதை வைத்து

வீழ்த்த முடியாது

என்று பல்வேறு

நிலைகளில் நின்று

ஜுலியஸ் சீசரைப்

பற்றிய அனைத்து

விவரங்களையும்

சேகரித்தார்

கிளியோபாட்ரா

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------22-01-2022

-------சனிக்கிழமை

//////////////////////////////////////////////

பதிவு-9-வினைவலியும்- திருக்குறள்

 பதிவு-9-வினைவலியும்-

திருக்குறள்-

 

காதல்

எங்கே

ஆரம்பிக்கிறது

என்று தெரியாது

 

காதலை

உணர்ந்தவர்கள்

பிரபஞ்சத்தின்

அதிசயத்தைக்

கண்டவர்கள்

 

காதலின்

ஆழத்தை

தரிசித்தவர்கள்

பரம்பொருளின்

மகத்துவத்தைப்

புரிந்தவர்கள்

 

இந்த உலகத்தில்

உள்ள யாரையும்

காமத்தால்

வீழ்த்தி

நீண்ட நாட்கள்

தன்னுடன்

வைத்துக் கொள்ள

முடியாது என்பது

கிளியோபாட்ராவுக்கு

தெரியும்

 

காமத்தால்

ஒருவரை

வீழ்த்துவது

புத்திசாலித்தனமல்ல

காமத்தால்

ஒருவரை

வீழ்த்தக்கூடாது

என்பது

கிளியோபாட்ராவுக்கு

தெரியும்

 

இந்த உலகத்தில்

உள்ள யாரையும்

காதலால்

வீழ்த்தினால்

அவர் உடலில்

உயிர் இருக்கும்

வரைக்கும்

நம்முடன்

இருப்பார் என்பது

கிளியோபாட்ராவுக்கு

தெரிந்த

காரணத்தினால்

கிளியோபாட்ரா

ஜுலியஸ் சீசரையும்

ஆன்ட்டனியையும்

காமத்தால்

வீழ்த்தவில்லை

காதலால்

வீழ்த்தினாள்

 

மொத்தத்தில்

சொல்ல வேண்டும்

என்றால்

ஜுலியஸ் சீசரும்

ஆன்ட்டனியும்

கிளியோபாட்ரா

ஒரு சிறந்த

ராஜதந்திரி என்பது

தெரியாமல் அவர்

காலடியில் விழுந்து

கிடந்தார்கள்

என்று தான்

சொல்ல வேண்டும்

 

ஜுலியஸ் சீசரையும்

ஆன்டனியையும்

காதலால் வீழ்த்திய

கிளியோபாட்ரா

நாளடைவில்

தானும் காதலில்

வீழ்ந்தார்

 

கிளியோபாட்ரா

ஜுலியஸ் சீசரையும்

காதலித்தார்

ஆன்டனியையும்

காதலித்தார்

 

ஒருத்தரை

காதலித்தவர்

மற்றொருவரை

எப்படி

காதலிக்கமுடியும்

இது உண்மையான

காதல் கிடையாது

தவறான காதல்

என்பர்

 

காதல்

என்றால்

காதல் மட்டுமே

 

காதலில்

உண்மையான காதல்

பொய்க்காதல்

நல்ல காதல்

கெட்ட காதல்

கள்ளக் காதல்

என்று எதுவும்

கிடையாது

 

காதல்

என்றால்

காதல் மட்டுமே

 

ஒருவரைக்

காதலித்தாலும்

பலரைக்

காதலித்தாலும்

யாரைக்

காதலித்தாலும்

காதல்

என்றால்

காதல் மட்டுமே

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------22-01-2022

-------சனிக்கிழமை

//////////////////////////////////////////////

பதிவு-8-வினைவலியும்- திருக்குறள்

 பதிவு-8-வினைவலியும்-

திருக்குறள்-

 

ஜுலியஸ் சீசரையும்

ஆன்ட்டனியையும்

கிளியோபாட்ரா

காமத்தால் வீழ்த்தினார்

என்று சொல்வார்கள்

அது தவறு

 

கிளியோபாட்ரா

ஜுலியஸ் சீசரையும்

ஆன்ட்டனியையும்

காமத்தால்

வீழ்த்தவில்லை

காதலால்

வீழ்த்தினாள்

 

காமம்

நிலையில்லாதது

 

காமம்

காலத்திற்கு

ஏற்றவாறு

மாறக்கூடியது

 

காமம்

அனைவருக்கும்

ஒரே மாதிரி

இருக்காது

 

காமம்

மனதைப் பொறுத்து

உருவம்

பெறக்கூடியது

 

காமம்

மனிதர்களைப்

பொறுத்து

வித்தியாசப்படுவது

 

காமம்

மனிதர்களைப்

பொறுத்து

அவர்களுடைய

தேவையைப்

பொறுத்து

மாறிக் கொண்டே

இருப்பது

 

காமம்

சிறிது நேரம் தான்

உயிர்த் தன்மையுடன்

இருக்கும்

 

காமத்தில்

உயிர்த்தன்மை

தொடர்ந்து இருக்காது

குறிப்பிட்ட காலம்

வரை தான்

இருக்கும்

 

காமம்

தன் தேவை

முடியும் வரை தான்

உயிர்த்தன்மையுடன்

இருக்கும்

 

காமத்தின்

தேவை முடிந்தவுடன்

காமம்

தன்

உயிர்த்தன்மையை

இழந்து விடும்

 

ஆனால்

 

காதல்

பிரபஞ்சத்தின்

உயிர்த்தன்மை

கொண்ட உணர்வு

 

காதல்

இந்த

பிரபஞ்சத்தையே

இயங்க வைக்கிறது

 

காதல்

என்றும் இருப்பது

 

காதல்

அழிவில்லாதது

 

காதல்

இறவா வரம்

பெற்றது

 

காதல்

இறக்காது

 

காதலை

யாராலும்

அழிக்க முடியாது

 

காதல்

வற்றாமல்

இருப்பது

 

காதல்

அள்ள அள்ளக்

குறையாது

 

காதல்

சுவைக்க சுவைக்க

திகட்டாது

 

காதல்

அனுபவிக்க

அனுபவிக்க

பிரமிப்பை

ஏற்படுத்தக் கூடியது

 

காதல்

என்றும்

உயிர்த் தன்மையுடன்

இருப்பது

 

காதலுக்கு

முடிவு என்ற

ஒன்று கிடையாது

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------22-01-2022

-------சனிக்கிழமை

//////////////////////////////////////////////