December 06, 2018

திருக்குறள்-பதிவு-63


                       திருக்குறள்-பதிவு-63

கி.பி.87-150
ஆண்டுகளில் வாழ்ந்த
கிரேக்க ஞானி
டாலமி (Ptolemy)
தான் எழுதிய
இரண்டு நூல்களான
மாபெரும்
வானியல் ஞானி ;
(The Great
Astronomer)
அல்மகெஸ்ட் ;
(Almagest)
என்னும் இரண்டு
நூல்களில் தன்னுடைய
பூமி மையக்
கோட்பாட்டை விளக்கி
சொல்லி இருந்தார்

பூமியே பிரபஞ்சத்தின்
மையம் ஆகும் ;
அது அசையாமல்
நகராமல் அப்படியே
நிலைத்து நிற்கிறது ;
எல்லா அண்டங்களும்
பிரபஞ்சத்தின்
மையமாக இருக்கும்
பூமியை நோக்கி
வருகின்றன ;

பூமியை
மையமாக வைத்து
நிலவு,
புதன், வெள்ளி,
சூரியன், செவ்வாய்,
வியாழன், சனி
எனக் கூறப்படும்
வரிசையில்
வட்ட வீதியில்
சீரான வேகத்தில்
சுற்றி வருகின்றன ;

டாலமி சொன்ன
பூமியை மையமாக
வைத்து சூரியன்
சுற்றுகிறது என்ற
பூமி மையக் கோட்பாடு
பைபிளில் உள்ள
கருத்துக்கு
ஒன்றுபட்டு இருந்த
காரணத்தினாலும் ;
ரோமன் கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபை
ஏற்றுக் கொண்ட
காரணத்தினாலும் ;
கிறிஸ்தவ
மதவாதிகளால்
ஒப்புக் கொள்ளப்பட்ட
காரணத்தினாலும் ;
1500 ஆண்டுகளாக
டாலமியின் பூமி
மையக் கோட்பாடு
மக்களால்
நம்பப்பட்டு
பின்பற்றப்பட்டு
வந்தது

1500 ஆண்டுகளாக
மக்களால்
நம்பப்பட்டு
பின்பற்றப்பட்டு வந்த
பூமியை
மையமாக வைத்து
சூரியன் சுற்றுகிறது
என்ற டாலமியின்
பூமி மையக்
கோட்பாட்டு
தவறு என்றும்
சூரியனை மையமாக
வைத்து பூமி
சுற்றுகிறது என்ற
சூரிய மையக்
கோட்பாட்டை சொன்ன
காரணத்திற்காக
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
அச்சுறுத்தப்பட்டார்

பல்வேறு
அச்சுறுத்தல்களுக்கும்
இடையூறுகளுக்கும்
இடையில்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தன்னுடைய
ஆராய்ச்சியை தொடர்ந்து
செய்து கொண்டு
இருந்தார்,

1517-ஆம்
ஆண்டு முதல்
1530-ஆம்
ஆண்டு வரை
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தான் கண்டுபிடித்த
கண்டுபிடிப்பான
சூரிய மையக்
கோட்பாட்டை
பல்வேறு குறியீடுகள்
எண்கள்
எழுத்துக்கள்
வரை படங்கள்
ஆகியவற்றின் மூலம்
பல்வேறு
உதாரணங்கள் மூலம்
எடுத்துக் காட்டி  
அவர் தன்னுடைய
இரண்டாவது நூலான
அண்டக்
கோள்களின் சுற்றுகள்
De revolutionibus
Orbium Coelestium
(or)
On the
Revolutions of the
Heavenly Spheres
என்ற தன்னுடைய
நூலில் தன்னுடைய
சூரிய மையக்
கோட்பாட்டை
விளக்கி உள்ளார்.

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தன்னுடைய
இரண்டாவது நூலில்
வலியுறுத்தி சொன்ன
கோட்பாடு இது தான்
பூமி தினமும்
தன்னச்சில்
தன்னைத் தானே
ஒரு முறை
சுற்றிக் கொண்டு
சூரியனையும்
ஓராண்டில்
சுற்றி வருகிறது
அந்த சமயம் பூமி
பம்பரம் போன்று
தலை சாய்ந்து
ஆடுகிறது
பிற அண்டங்களும்
சூரியனை மையமாக
வைத்து சுற்றி
வருகின்றன
பிரபஞ்சத்தின்
உண்மையான மையம்
சூரியன்,
பூமி இல்லை
சூரியனை
விண்கோள்கள்
வட்ட வீதியில்
சீரான வேகத்தில்
(Uniform Motion
in Circular Orbits)
சுற்றி வருகின்றன
என்று ஆணித்தரமாக
கூறினார்

---------  இன்னும் வரும்
---------  06-12-2018
///////////////////////////////////////////////////////////