June 07, 2020

அறிய வேண்டியவை-பதிவு-17


              ஜபம்-பதிவு-509
         (அறிய வேண்டியவை-17)

(என்று சாபம் கொடுத்து
விட்டு ஊர்வசி அந்த
அறையை விட்டு
வெளியேறினாள்  ; - இந்த
நிகழ்வை அர்ஜுனன்
சித்திர சேனன் மூலம்
தன்னுடைய தந்தையான
இந்திரனிடம் சொன்னான் ;
விஷயத்தைக்
கேள்விபட்ட இந்திரன்
அர்ஜுனனை நேரில்
காண்பதற்காக வந்தான் ;)

இந்திரன் :
விஷயத்தைக் கேள்விபட்டேன்
நடந்த விஷயங்களுக்காக
வருந்துகிறேன் - நீ
ஊர்வசியை பார்க்கும்
பார்வையை தவறாக
புரிந்து கொண்டு விட்டேன் ;
நீ அவள் மேல்
ஆசை வைத்திருக்கிறாய்
அவளுடன் இணைவதற்கு
விரும்புகிறாய் என்று
நினைத்து விட்டேன் ;
அதனால் உன்னுடைய
ஆசையை நினைவேற்ற
வேண்டும் என்ற எண்ணம்
கொண்டு ஊர்வசியை
நான் தான்
உன்னிடம் அனுப்பினேன் ;
நடந்து விட்ட
பெருந்தவறை நினைத்து
என்னுடைய மனது
வருந்துகிறது ;”

அர்ஜுனன் :
“தந்தையே நான்
ஊர்வசியை என்னுடைய
குலம் தழைக்க காரணமாக
இருந்தவராகத் தான்
பார்த்தேன் - என்னுடைய
தாயாக நினைத்துத்
தான் பார்த்தேன்  
எந்தவிதமான தவறான
எண்ணத்துடன்
நான் பார்க்கவில்லை ;”

இந்திரன் :
“உன்னுடைய எண்ணங்கள்
எனக்கு புரிகிறது அர்ஜுனா
ஆனால் ஒருவர்
கொடுத்த சாபத்தை
நீக்க முடியாது ;
ஒருவர் கொடுத்த சாபத்தை
நடக்க விடாமல்
தடுக்க முடியாது ;
ஆனால் கொடுத்த சாபத்தை
மாற்றி அமைக்க முடியும் ;
நானும் அதைத் தான்
செய்யப்போகிறேன் ;
ஊர்வசி கொடுத்த
சாபத்தை மாற்றி
அமைக்கப் போகிறேன் ;
வருங்காலத்தில் நீ
தலைமறைவாக
வாழக்கூடிய சூழ்நிலை
உனக்கு ஏற்படும் போது
நீ ஆணிலிருந்து
பெண்ணாக
திருநங்கையாக மாறுவாய் ;
அந்த சமயத்தில்
உன்னுடைய உருவம்
மறைந்திருக்கும் ;
அப்போது அர்ஜுனன்
என்பவன் மறைந்து
திருநங்கை என்ற தன்மை
மட்டுமே இருக்கும் ;
அந்த சமயத்தில்
நீ எடுக்கப் போகும்
திருநங்கை உருவமே
உன்னைக் காப்பாற்றும் ;
அர்ஜுனனுடைய
வீரம் காப்பாற்றாது ;”

“மற்ற நேரங்களில்
திருநங்கை என்ற
தன்மை உனக்குள்
மறைந்திருக்கும்”

(என்று இந்திரன்
சாபத்தை மாற்றி
அமைத்தார் இந்திரன்
சொன்னது போலவே
பாண்டவர்கள் அஞ்ஞாத
வாசம் மேற்கொண்டு
மறைவாக வாழக்கூடிய
நிலை ஏற்பட்டபோது
அர்ஜுனனுடைய வீரம்
பயன்படவில்லை ;
அர்ஜுனனுடைய தனுசு
பயன்படவில்லை ;
அவனைக் காப்பாற்றியது
திருநங்கை
உருவம் மட்டுமே ;
திருநங்கை என்ற
உருவமே அர்ஜுனனைக்
காப்பாற்றியது ;)

“ஒருவருடைய
கர்மவினையில் உள்ள
புண்ணிய பதிவுகளை
அனுபவிக்க வேண்டும்
என்பதற்காக
கொடுக்கப்படும் சாபம்
நல்லவவை
நடக்க வேண்டும்
என்பதற்காக
கொடுக்கப்படும் சாபம்”

“இந்த கதையிலிருந்து
நாம் அறிந்து கொள்ள
வேண்டிய உண்மை
என்னவென்றால்
ஒருவருடைய கர்ம
வினைகளுக்கேற்ப
புண்ணிய பதிவுகளை
அனுபவிக்க வேண்டும்
என்பதற்காக கொடுக்கப்படும்
சாபம் நல்லவை
நடக்க வேண்டும்
என்பதற்காக
கொடுக்கப்படும் சாபம்
என்பது ஆகும் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 07-06-2020
//////////////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-16


               ஜபம்-பதிவு-508
          (அறிய வேண்டியவை-16)

“உண்மை இப்படி
இருக்கும் போது
தாங்கள் என்னை
தாய் என்று
அழைத்தது தவறு ;
உங்கள் மேல்
விருப்பம் கொண்டு
உங்களுடன் இணைய
வந்தவள் நான் ;
உங்கள் மேல்
அளவற்ற காதல் கொண்டு
இணைய வந்தவள் நான் ;
உங்களுக்காக என்னை
அர்ப்பணிக்க வந்தவள் நான் ;
என்னை தாய் என்றும்
தங்களை மகன் என்றும்
சொல்வது தவறு ;
நான் சொன்ன உண்மைகளை
புரிந்து கொண்டு
என்னுடன் இணைந்து
என்னுடைய ஆசையை
பூர்த்தி செய்யுங்கள்;”

அர்ஜுனன் ;
“உங்களை என்னுடைய
தாயாக நினைத்திருக்கிறேன் ;
தாயான உங்களை
என்னுடைய இதய
சிம்மாசனத்தில் அமர
வைத்திருக்கிறேன் ;
உங்களை நினைக்கும்
போதும் ; உங்களைப்
பார்க்கும் போதும் ;
நீங்கள் எனக்கு தாயாகத்
தான் தெரிகிறீர்கள் ;
தாயாக இருக்கும்
உங்களை எப்படி நான்
தவறான எண்ணத்துடன்
பார்க்க முடியும் ;”

“தாயான நீங்கள் என்னை
உங்களுடைய மகனாக
ஏற்றுக் கொள்ளுங்கள் “

“நான் இல்லாவிட்டாலும்
நீங்கள் சந்தோஷமாகத்
தான் இருப்பீர்கள் ;
உங்களுடைய ஆசைகளை
உங்களுடைய தேவைகளை
உங்களுடைய விருப்பங்களை
நிறைவேற்றுவதற்கு
உங்கள் மேல்
விருப்பம் கொண்டவர்கள்
இந்த உலகத்தில்
உங்களைச் சுற்றி இருக்கத்
தானே செய்கிறார்கள் “

“ஆதலால் நான்
இல்லாவிட்டாலும் நீங்கள்
சந்தோஷமாகத்
தான் இருப்பீர்கள் “

ஊர்வசி :
“இன்னொரு முறை
சொல்லுங்கள் “

அர்ஜுனன் :
“நான் இல்லாவிட்டால்
நீங்கள் சந்தோஷமாகத்
தான் இருப்பீர்கள் “

ஊர்வசி :
“மற்றொரு முறை
சொல்லுங்கள் “

அர்ஜுனன் :
“நான் இல்லாவிட்டால்
நீங்கள் சந்தோஷமாகத்
தான் இருப்பீர்கள் “

ஊர்வசி :
“நான் இல்லாவிட்டால்
நீங்கள் சந்தோஷமாகத்
தான் இருப்பீர்கள்
என்ற வார்த்தை
தவறான வார்த்தை ;
முட்டாள்கள்
பயன்படுத்தும் வார்த்தை ;
அறிவற்றவர்கள்
பயன்படுத்தும் வார்த்தை ;
தன்னை அதிமேதாவிகள்
நினைத்துக் கொள்பவர்கள்
பயன்படுத்தும் வார்த்தை ;
வாழ்க்கையை சரியாக
புரிந்து கொள்ளாதவர்கள்
பயன்படுத்தும் வார்த்தை ;”

“இந்த உலகத்தில்
யாரும் தனிமையில்
சந்தோஷமாக இருக்க
முடியாது ; நம்மைச் சுற்றி
ஆயிரம் பேர்கள்
இருந்தாலும் ; நமக்கு
நன்மை செய்யக்கூடியவர்கள்
ஆயிரம் பேர்கள் இருந்தாலும் ;
நமக்கு உதவி
செய்யக்கூடியவர்கள்
ஆயிரம் பேர்கள் இருந்தாலும் ;
நாம் விருப்பப்படுபவர்
நம்முடன் இருந்தால்
மட்டுமே நாம் சந்தோஷமாக
இருக்க முடியும் ;”

“நான் உங்களை
விரும்புகிறேன் ;
காதலில் தவிக்கிறேன் ;
என்னுடைய ஆசையை
புரிந்து கொண்டு
என்னுடைய தேவையை
நிறைவு செய்வதற்காக
என்னுடன் இணைய நீங்கள்
ஒப்புக் கொள்கிறீர்களா ?
இல்லையா ?
கடைசியாக ஒரு முறை
உங்களை நான் கேட்கிறேன்”

அர்ஜுனன் :
“நீங்கள்
முதலில் கேட்டாலும் ;
கடைசியாக கேட்டாலும் ;
எப்போது கேட்டாலும் ;
என் முடிவு ஒன்று தான்
நீங்கள் எனக்கு தாய் ;
நான் உங்கள் மகன் ;”

(கோபத்தின் உச்சத்தில்
இருந்தாள் ஊர்வசி)

“நான் என்ற ஆணவம்
கொண்டு இருக்கிறீர்கள் ;
உலகத்திலேயே சிறந்த
வீரன் என்ற
எண்ணத்தில் இருக்கிறீர்கள் ;
யாராலும் உங்களை
வீழ்த்த முடியாது
என்ற எண்ணம்
கொண்டு இருக்கிறீர்கள் ;
இந்த எண்ணம் உங்களை
உண்மை எது என்று
யோசிக்க விடாமல் உங்கள்
அறிவை மறைக்கிறது ;”

“நான் என்ற வார்த்தையில்
மறைந்திருக்கும்
அர்ஜுனன் என்ற பெயர்
தானே உங்களுக்கு
ஆணவத்தை உண்டாக்குகிறது ;
அர்ஜுனன் என்ற
உருவத்தை உடைத்து
உங்களுடைய ஆணவத்தை
அடக்குகிறேன் ;
இனி நான் என்ற
எண்ணம் உங்களுக்கு
ஏற்படாமல் செய்கிறேன்;
நான் என்ற அகம்பாவத்தில்
தானே என்னை
உதாசீனப்படுத்தினீர்கள் ;
இனி அந்த நானாகிய
அர்ஜுனன் இருக்க மாட்டான் ;
இருக்க முடியாது;
இருக்க விட மாட்டேன்;
ஆண்தன்மை திரிந்து
பெண்ணாக மாறி
அணும் பெண்ணும்
கலந்த கலவையான
திருநங்கையாக மாற
வேண்டும் என்று
உங்களை சபிக்கிறேன்;
நீங்கள் ஆணிலிருந்து
பெண்ணாக திருநங்கையாக
மாறுவீர்கள் இது
தான் என்னுடைய சாபம்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 07-06-2020
//////////////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-15


               ஜபம்-பதிவு-507
         (அறிய வேண்டியவை-15)

ஊர்வசி :
“என்னை அன்பே
என்று அழையுங்கள் ;
ஆரூயிரே என்று
அழையுங்கள் ;
மோகத்தின் முழுநிலவே
என்று அழையுங்கள்;
இன்பத்தை அளிக்க
வந்த தாரகையே
என்று அழையுங்கள்;
தாய் என்ற
வார்த்தையால்
மட்டும் என்னை
அழைக்காதீர்கள்;”

“ஏற்கனவே உங்களுடைய
அழகால் கவரப்பட்டு
மதி மயங்கிய நான்
தங்களுடைய
பிதாவான இந்திரனின்
கட்டளைக்கிணங்க
உங்களுடன் கலந்து
உறவாட வந்தேன் ;
இன்பத்தை இருவரும்
பகிர்ந்து கொண்டு
களிக்கலாம்
என்று வந்தேன் ;
காமக்கடலில்
மூழ்கி முத்து
எடுக்கலாம்
என்று வந்தேன் ;
உங்களுடைய
ஆசைகளுக்கு உருவம்
கொடுக்கலாம்
என்று வந்தேன் ;
கண்ணால் காண
முடியாத சுகங்களையும்
உணர்வுகளால்
நீங்கள் உணர்ந்து
கொள்வதற்காக
சுகங்களை அள்ளி
வாரி வழங்கலாம்
என்று வந்தேன் ;
உங்களை என்னுடைய
கதாநாயகனாக
என்னுடைய மனதில்
உருவகித்து
வைத்து விட்டேன் ;
நான் என்னுடைய
மனக்கோட்டையில் கட்டி
வைத்துள்ள காதல்
சாம்ராஜ்யத்தில் காதல்
நாயகனாக உங்களை
வைத்திருக்கிறேன் ;
என்னுடைய காதல்
சாம்ராஜ்யத்தை தகர்த்து
காதல் கோட்டைடைய
அழித்து விடாதீர்கள் ;
என்னை கட்டி அணைத்து
தழுவுவீர்களாக ;
இன்பத்தின் வாயில்களைத்
திறந்து சொர்க்கத்தின்
சுகங்களை அனுபவிப்போம்;
வாருங்கள்
வார்த்தையில் இருக்கும்
மகிழ்ச்சியை உருவமாக
உணர்வுகளாக
பார்ப்போம் வாருங்கள் ;”

அர்ஜுனன் :
“தாயே ! நீங்கள் என்
மூதாதையரில்
ஒருவராகிய
புரூரவனுடன்
இணைந்து ஆயு
என்ற மகனைப் பெற்று
எடுத்து இருக்கிறீர்கள் ;
ஆதலால் நீங்கள்
என் குலத்துக்கே
தாயாகத் திகழ்பவர் ;
தாயாக வாழ்பவர் ;
தாயாக வாழ்ந்தவராக
நீங்கள் இருக்கின்ற
காரணத்தினால்
குந்தி தேவியும்
இந்திராணியும்
நீங்களும் எனக்கு தாயைப்
போன்றவர்கள் தான் ;
நீங்கள் தாய் என்றால்
நான் உங்கள் மகன் ;
ஆகவே நீங்கள்
என்னை மகனாக
ஏற்றுக் கொள்ளுங்கள் ;
நான் உங்கள் மகன் ;
நீங்கள் எனக்கு தாய் ;”

ஊர்வசி :
“அர்ஜுனரே ! என்னை
என்ன கண்டவரையும்
கண்டு மதி மயங்கும்
பெண் என்று
நினைத்து விட்டீர்களா ?
கண்டவர் பின்
செல்லும் மதியற்றவள்
என்று நினைத்து
விட்டீர்களா ?
காமவெறி கொண்டு
ஆசைப்பட்டவர்களுடன்
இணையும் அறிவற்றவன்
என்று நினைத்து
விட்டீர்களா ?
நான் உங்களுக்கு
தாயும் இல்லை ;
நீங்கள் எனக்கு
மகனும் இல்லை ; “

“சில நியதிகளை
புரிந்து கொள்ளாமல்
பேசுகிறீர்கள்
உண்மைகளை
உணர்ந்திருந்தால்
நீங்கள் இவ்வாறு
என்னை அன்னை
என்றும் உங்களை
மகன் என்றும் பேசி
இருக்க மாட்டீர்கள் “

“நான் பொது மகள்
பொதுமகள் என்ற
வார்த்தைக்கு அர்த்தம்
தெரியுமா உங்களுக்கு ?
பொதுமகளுக்கும்
விலைமகளுக்கும்
வேறுபாடு தெரியுமா
உங்களுக்கு ; “

“விலைமகள் என்றால்
தன்னுடைய
வாழ்க்கையையும்
தன்னைச்
சார்ந்தவர்களுடைய
வாழ்க்கையையும்
காப்பாற்றுவதற்காக
தேவைப்படும்
செல்வத்தைப்
பெறுவதற்காக தன்மேல்
விருப்பப்படுபவர்களுடன்
இணைந்தால்
அவர்களுக்கு பெயர்
விலைமகள்
அவர்கள் செல்வத்தைப்
பெறுவதற்காக
இவ்வாறு செய்வார்கள் “

“ஆனால் நான் பொதுமகள்
பொது மகளாக
கருதப்படும் எங்களிடம்
அனைத்து
செல்வங்களும் இருக்கும்;
எங்கள் வாழ்க்கையை
நடத்துவதற்கும்
எங்களைச் சார்ந்தவர்களுடைய
வாழ்க்கையை
காப்பாற்றுவதற்காகவும் ;
செல்வத்தைப்
பெறுவதற்காக
நாங்கள் எங்கள் மேல்
விருப்பப்படுபவருடன்
இணைய வேண்டிய
அவசியம் இல்லை ;
ஏனென்றால் எங்களிடம்
அனைத்து செல்வங்களும்
இருக்கும் ;“

“புண்ணியம் செய்தவர்கள்
மட்டுமே பொது மகள்
என்று சொல்லப்படும்
எங்களுடன்
இணைய முடியும்
மற்றவர்கள் யாரும்
எங்களுடன்
இணைய முடியாது “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 07-06-2020
//////////////////////////////////////////