June 07, 2020

அறிய வேண்டியவை-பதிவு-16


               ஜபம்-பதிவு-508
          (அறிய வேண்டியவை-16)

“உண்மை இப்படி
இருக்கும் போது
தாங்கள் என்னை
தாய் என்று
அழைத்தது தவறு ;
உங்கள் மேல்
விருப்பம் கொண்டு
உங்களுடன் இணைய
வந்தவள் நான் ;
உங்கள் மேல்
அளவற்ற காதல் கொண்டு
இணைய வந்தவள் நான் ;
உங்களுக்காக என்னை
அர்ப்பணிக்க வந்தவள் நான் ;
என்னை தாய் என்றும்
தங்களை மகன் என்றும்
சொல்வது தவறு ;
நான் சொன்ன உண்மைகளை
புரிந்து கொண்டு
என்னுடன் இணைந்து
என்னுடைய ஆசையை
பூர்த்தி செய்யுங்கள்;”

அர்ஜுனன் ;
“உங்களை என்னுடைய
தாயாக நினைத்திருக்கிறேன் ;
தாயான உங்களை
என்னுடைய இதய
சிம்மாசனத்தில் அமர
வைத்திருக்கிறேன் ;
உங்களை நினைக்கும்
போதும் ; உங்களைப்
பார்க்கும் போதும் ;
நீங்கள் எனக்கு தாயாகத்
தான் தெரிகிறீர்கள் ;
தாயாக இருக்கும்
உங்களை எப்படி நான்
தவறான எண்ணத்துடன்
பார்க்க முடியும் ;”

“தாயான நீங்கள் என்னை
உங்களுடைய மகனாக
ஏற்றுக் கொள்ளுங்கள் “

“நான் இல்லாவிட்டாலும்
நீங்கள் சந்தோஷமாகத்
தான் இருப்பீர்கள் ;
உங்களுடைய ஆசைகளை
உங்களுடைய தேவைகளை
உங்களுடைய விருப்பங்களை
நிறைவேற்றுவதற்கு
உங்கள் மேல்
விருப்பம் கொண்டவர்கள்
இந்த உலகத்தில்
உங்களைச் சுற்றி இருக்கத்
தானே செய்கிறார்கள் “

“ஆதலால் நான்
இல்லாவிட்டாலும் நீங்கள்
சந்தோஷமாகத்
தான் இருப்பீர்கள் “

ஊர்வசி :
“இன்னொரு முறை
சொல்லுங்கள் “

அர்ஜுனன் :
“நான் இல்லாவிட்டால்
நீங்கள் சந்தோஷமாகத்
தான் இருப்பீர்கள் “

ஊர்வசி :
“மற்றொரு முறை
சொல்லுங்கள் “

அர்ஜுனன் :
“நான் இல்லாவிட்டால்
நீங்கள் சந்தோஷமாகத்
தான் இருப்பீர்கள் “

ஊர்வசி :
“நான் இல்லாவிட்டால்
நீங்கள் சந்தோஷமாகத்
தான் இருப்பீர்கள்
என்ற வார்த்தை
தவறான வார்த்தை ;
முட்டாள்கள்
பயன்படுத்தும் வார்த்தை ;
அறிவற்றவர்கள்
பயன்படுத்தும் வார்த்தை ;
தன்னை அதிமேதாவிகள்
நினைத்துக் கொள்பவர்கள்
பயன்படுத்தும் வார்த்தை ;
வாழ்க்கையை சரியாக
புரிந்து கொள்ளாதவர்கள்
பயன்படுத்தும் வார்த்தை ;”

“இந்த உலகத்தில்
யாரும் தனிமையில்
சந்தோஷமாக இருக்க
முடியாது ; நம்மைச் சுற்றி
ஆயிரம் பேர்கள்
இருந்தாலும் ; நமக்கு
நன்மை செய்யக்கூடியவர்கள்
ஆயிரம் பேர்கள் இருந்தாலும் ;
நமக்கு உதவி
செய்யக்கூடியவர்கள்
ஆயிரம் பேர்கள் இருந்தாலும் ;
நாம் விருப்பப்படுபவர்
நம்முடன் இருந்தால்
மட்டுமே நாம் சந்தோஷமாக
இருக்க முடியும் ;”

“நான் உங்களை
விரும்புகிறேன் ;
காதலில் தவிக்கிறேன் ;
என்னுடைய ஆசையை
புரிந்து கொண்டு
என்னுடைய தேவையை
நிறைவு செய்வதற்காக
என்னுடன் இணைய நீங்கள்
ஒப்புக் கொள்கிறீர்களா ?
இல்லையா ?
கடைசியாக ஒரு முறை
உங்களை நான் கேட்கிறேன்”

அர்ஜுனன் :
“நீங்கள்
முதலில் கேட்டாலும் ;
கடைசியாக கேட்டாலும் ;
எப்போது கேட்டாலும் ;
என் முடிவு ஒன்று தான்
நீங்கள் எனக்கு தாய் ;
நான் உங்கள் மகன் ;”

(கோபத்தின் உச்சத்தில்
இருந்தாள் ஊர்வசி)

“நான் என்ற ஆணவம்
கொண்டு இருக்கிறீர்கள் ;
உலகத்திலேயே சிறந்த
வீரன் என்ற
எண்ணத்தில் இருக்கிறீர்கள் ;
யாராலும் உங்களை
வீழ்த்த முடியாது
என்ற எண்ணம்
கொண்டு இருக்கிறீர்கள் ;
இந்த எண்ணம் உங்களை
உண்மை எது என்று
யோசிக்க விடாமல் உங்கள்
அறிவை மறைக்கிறது ;”

“நான் என்ற வார்த்தையில்
மறைந்திருக்கும்
அர்ஜுனன் என்ற பெயர்
தானே உங்களுக்கு
ஆணவத்தை உண்டாக்குகிறது ;
அர்ஜுனன் என்ற
உருவத்தை உடைத்து
உங்களுடைய ஆணவத்தை
அடக்குகிறேன் ;
இனி நான் என்ற
எண்ணம் உங்களுக்கு
ஏற்படாமல் செய்கிறேன்;
நான் என்ற அகம்பாவத்தில்
தானே என்னை
உதாசீனப்படுத்தினீர்கள் ;
இனி அந்த நானாகிய
அர்ஜுனன் இருக்க மாட்டான் ;
இருக்க முடியாது;
இருக்க விட மாட்டேன்;
ஆண்தன்மை திரிந்து
பெண்ணாக மாறி
அணும் பெண்ணும்
கலந்த கலவையான
திருநங்கையாக மாற
வேண்டும் என்று
உங்களை சபிக்கிறேன்;
நீங்கள் ஆணிலிருந்து
பெண்ணாக திருநங்கையாக
மாறுவீர்கள் இது
தான் என்னுடைய சாபம்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 07-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment