November 12, 2011

சிவவாக்கியர் -ராம நாம ஜெபம்


            சிவவாக்கியர் -ராம நாம ஜெபம்
சிவம் என்றால் என்ன என்று உணர்ந்தவர்  சிவவாக்கியர் தான் உணர்ந்த சிவத்தை எழுத்தாக்கி வார்த்தையாக்கி வாக்கியமாக்கி அனைவரும் சிவம் என்பதின் உண்மைப் பொருளை  உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற  உயரிய நோக்கில் பாடலாக்கியவர்  சிவவாக்கியர்

சமுதாயத்தில் நிலவிவரும் தவறான கடவுள் கொள்கைகளை பின்பற்றுபவர்களை சமுதாயத்தில் நிலவிவரும் தவறான நடவடிக்கைகளை  தவறு என்று தைரியமாக சுட்டி காட்டி சிவத்தின் உண்மைப் பொருளை இந்த உலகத்திற்குச் சுட்டிக் காட்ட வாக்கியத்தில் எழுதிவைத்ததால் இவர் சிவவாக்கியர்

இவருடைய பாடலில் சில வரிகளில் ராம நாம என்ற வார்த்தை வருவதால் இந்த பாடல் இவர்  எழுதவில்லை என்கின்றனர் சிலர்
இப்பாடல்கள் வைஷ்ணவர்  காலத்தில் எழுதப்பட்டது என்கின்றனர்  சிலர்
எது எப்படி இருந்தாலும் இப்பாடல்களின் அர்த்தத்தை நாம் இப்பொழுது பார்ப்போம்



“””””””அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
    சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்
    சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கு மந்திரம் 
    எந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே”””””””
                                                                           --------சிவவாக்கியர்-------------
“””””””அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் “””””””
அந்தி - பகல் பொழுது முடியும் நேரம் - அதாவது அந்தி மயங்கி இருட்டத் தொடங்கியது என்று பொருள்
மாலை - பிற்பகலுக்கு பின்னர்  சூரியன் மறையும் வரை உள்ள நேரம் - சாயங்காலம்
உச்சி - பகல் பன்னிரண்டு மணி

இந்த மூன்று வேளைகளிலும் உடலைத் துhய்மைப்படுத்துகிறோம் உடலைத் துhய்மைப்படுத்தி புற வழிபாடு செய்வதால் என்ன பயன் இருக்கிறது ஒரு பயனும் இல்லை
அக வழிபாட்டின் மூலம் பெறப்படும் பயன்களை அடுத்த அடிகளில் குறிப்பிடுகிறார்



””””””சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்”””””””””””””””
சந்தி
பகலும் இரவும் சந்திக்கும் நேரம்-சந்தி எனப்படுகிறது
இதைப் பகலும், இரவும் பிரியும் நேரம் என்றும் சொல்லலாம்
இந்த சந்தி ஒரு நாளில் இரண்டு முறை நடைபெறுகிறது இரண்டு பெயர்களால் அழைக்கப்படுகிறது
இரவும் பகலும் சந்திக்கும் நேரம் - விடியல் என்றும்
பகலும் இரவும் சந்திக்கும் நேரம் - மாலைப் பொழுது என்றும் கூறப்படுகிறது

இறந்தவரை நினைத்துக் காலையில் ஒப்பாரி  வைப்பதைச் சந்தி அழுகை என்பார்கள்
அதாவது சந்தியில் ஜபம்
சந்தி வேளையில் செய்யப்படும் தர்ப்பணங்கள் தபங்கள் செபங்கள் இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய செய்யப்படுபவை

சந்தி வேளையில் செய்தால் இறந்தவர்கள் ஆத்மா சாந்தி அடையுமா என்ன முறையைக் கையாண்டால் இறந்த ஆத்மா சாந்தி அடையும் என்பதைப பற்றிப்  பார்ப்போம்

இரவு பகல் என்றால்
இரவுக்கு அதிபதி நிலா - அதை இடது நாடி இடகலை என்றும,
பகலுக்கு அதிபதி அதாவது பகலை ஆள்வது சூரியன் - வலது நாடி - பிங்கலை என்றும்
இந்த இரண்டு நாடிகளும் சந்திக்கும் இடம் நெற்றிக் கண் அங்கே பார்த்தால் அருள் இருக்கும்

இந்த இடத்தில் வைத்து இறந்தவர்களை நினைத்து தபங்கள் தர்ப்பணங்கள் செபங்கள் செய்ய ஆத்மா சாந்தி அடையும்
இதை அகவழிபாடு மூலம் செய்ய வேண்டும்

புற வழிபாடு மூலம்  செய்வதால் எந்த பயனும் இல்லை புற வழிபாட்டால் எந்த ஆத்மாவும் சாந்தி அடையர்து
இரண்டு நாடிகளும் சேர்ந்தால் ஆத்மா சாந்தி அடையும் என்பதைப் பற்றி சொன்ன சிவவாக்கியர் எப்படி சேர வேண்டும் என்பதை அடுத்த இரண்டு அடிகளில் சொல்கிறார்



“”””””””சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கு மந்திரம் 
       எந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே”””””””””””””” 
இரண்டு நாடிகளும் சேர வேண்டுமென்றால், தினம் செபிக்கும் மந்திரம் ஒன்று ஒன்று உண்டு அது என்ன என்று விளக்குகிறார்

ராம நாம ஜெபம்
மூச்சுக் காற்றான பிராணனை ராஎன உள்ளே இழுக்க வேண்டும்
என வெளியே விட வேண்டும்
இதுவே ராம நாம ஜெபம் எனப்படுகிறது

ராம ராம ராம ராம என்று தொடர்ந்து ஜெபிக்க அதாவது ராம நாம ஜெபம் என்னும் மூச்சுப் பயிற்சியைச் செய்ய படர்க்கையாக விரிந்த நிலையில் உள்ள மனம் அடங்கி நம் கட்டுக்குள் வந்து உயிருடன் இணைகிறது
இதை விரிந்த மனம் சுருங்கி உயிராகி பரத்துடன் இணைகிறது என்று சொல்லலாம்

ஏவ்வாறெனில் ராம என்று சொல்ல மூச்சுக்காற்றான பிராணன் அக்கினியாக உருவாகி குண்டலினி சக்தியை தட்டி எழுப்பி சகஸ்ராரத்தின் வாசல்களைத் திறந்து சிவனுடன் இணையச் செய்கிறது
இங்கே ராம ராம என்ற சொல் வினைவேக ஊக்கியாகச் செயல்படுகிறது   

மேற்கண்ட ரகசியங்களை யார் ஒருவர்  உணர்ந்து கொண்டு ராம ராம - என்ற வார்த்தையைப் பயன்படுத்தி மூலதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி சகஸ்ராரத்தில் உள்ள சிவனுடன் கலக்கச் செய்கிறார்களோ அவர்களே  முக்தி அடைய முடியும் என்று சிவவாக்கியர் கூறுகிறார்



சிவவாக்கியர்----ராம நாம ஜெபம்----கர்ம வினைகள்
ராம நாம ஜெபம் எனப்படும் மூச்சுப் பயிற்சியைப் பயன் படுத்தி எவ்வாறு கர்ம வினைகளைத் தீர்ப்பது என்பதைப் பற்றி  சிவவாக்கியர்  கீழ்க்கண்ட பாடலின் மூலம் விளக்குகிறார்


“””””””””கதாவு பஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம்
        இதாம் இதாம் இதல்ல என்று வைத்துழலும் ஏழைகாள்
        சதா விடாமல் ஓதுவார்  தமக்கு நல்ல மந்திரம்
        இதாம் இதாம் ராம ராம ராம என்னும் நாமமே”””””””””””

                                                                           ----------------சிவவாக்கியர்-------------


எங்கிருந்து வந்தோமோ அந்த இடத்தை கண்டு பிடித்து எதற்காக பிறந்தோமோ அந்த கடமையை முடித்து விட்டு எதில் போய் சேர வேண்டுமோ? அதில் போய் சேர்ந்து பிறவிப் பெருங்கடலை முடிக்க வேண்டும்

“””””””””கதாவு பஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம்”””””””””””
இந்த பிறவிப் பெருங்கடலைக் கடக்க தடையாக இருப்பவை கர்மவினைகள் இந்த கர்மவினைகள் எப்படி தோன்றுகின்றன என்பதை தெரிந்து கொள்வோம்
கர்ம வினைகள்
மனிதனிடம் ஆறு வகையான குணங்கள் இருக்கின்றன ஆறு வகையான குணங்கள் எனப்படுபவை  காம குரோத லோப மோக மத மாச்சரியம் எனப்படும்

இதனையே தமிழில் பேராசை சினம் கடும்பற்று முறையற்ற பால் கவர்ச்சி உயர்வு தாழ்வு மனபான்மை வஞ்சம் என்று கூறுவர்

இந்த ஆறு வகையான குணங்களில் மாட்டிக் கொண்டு ஒருவன் செய்வது பஞ்சமா பாதகங்கள் எனப்படும் பஞ்சமா பாதகங்கள் எனப்படுபவை பொய் சூது கொலை கொள்ளை கற்புநெறி பிறழ்தல் ஆகியவை ஆகும்

இந்த ஆறு வகையான குணங்களில் ஒருவன் மாட்டிக் கொண்டு ஒருவன் செய்யும் பஞ்சமா பாதகங்கள் கர்ம வினைகளை தோற்றுவிக்கின்றன இந்த கர்மவினைகளே ஒருவனை பிறவிப் பெருங்கடலில் சிக்க வைத்து துன்பச் சகதியில் சுழல வைக்கிறது
இத்தகைய துன்பங்களை கொடுக்கக் கூடிய கர்ம வினைகளை தீர்ப்பதற்கு என்று ஒரு மந்திரம் இருக்கிறது என்கிறார்   சிவவாக்கியர்


”””இதாம் இதாம் இதல்ல என்று வைத்துழலும் ஏழைகாள்””””
இந்த மந்திரம் கர்ம வினைகளைத் தீர்க்கும் இந்த மந்திரம் கர்ம வினைகளைத் தீர்க்காது என்றும் சரியான மந்திரம் அதாவது உண்மையான மந்திரம் எது என்றும் தெரியாதவர்களை ஏழைகள் என்கிறார்  சிவவாக்கியர்

அவர் பணமில்லாதவர்களை ஏழைகள் என்று சொல்லவில்லை உண்மை மந்திரம் எது என்ற உண்மை நிலை தெரியாதவர்களைத் தான் ஏழைகள் என்று சொல்கிறார்

பாடலில் தொடர்ந்து கர்ம வினைகளை தீர்க்க ஒரு மந்திரம் உண்டு உண்டு என்று சொல்லி வந்த சிவவாக்கியர் தொடர்ந்து மந்திரத்தை உச்சரிப்பதின் மூலம் கர்ம வினையை தீர்க்கக் கூடிய மந்திரம் என்னவென்று அடுத்த அடிகளில் சொல்கிறார்



“”””””””””சதா விடாமல் ஓதுவார்  தமக்கு நல்ல மந்திரம்
        இதாம் இதாம் ராம ராம ராம என்னும் நாமமே””””””””””

மூச்சுக் காற்றான பிராணனை ராஎன்று உள்ளே இழுக்க வேண்டும்
என்று வெளியே விட வேண்டும்
இதே மாதிரி தொடர்ந்து ராம ராம ராம என்று தொடர்ந்து செய்யும் பொழுது மனம் சுருங்கி உயிராகி உயிர்  பரத்துடன் இணைவதன் மூலம் கர்ம வினை கழிகிறது

கர்ம வினை கழிய ராம ராம மந்திரம் என்னும் மூச்சுப் பயற்சி சிறந்த மந்திரமாக இருக்கிறது என்கிறார்   சிவவாக்கியர்
கர்ம வினைகளை கழிக்க மிகச் சிறந்த மந்திரம் ராம ராம ஜெபம் எனப்படும் - மூச்சுப் பயற்சியே என்கிறார்  சிவவாக்கியர்



சிவவாக்கியர்-----ராம நாம ஜெபம்---- ஆதி மூல ரகசியம்
ராம நாம ஜெபத்தைப் பயன் படுத்தி எவ்வாறு பிரபஞ்சத்தின் ஆதி மூல ரகசியத்தைத் தெரிந்து கொள்வது என்பதைப் பற்றி சிவவாக்கியர் கீழ்க்கண்ட பாடலின் மூலம் விளக்குகிறார்
“””””””நான தேது? நீய தேது? நடுவில் நின்றது ஏதடா
        கோண தேது? குருவ தேது? கூறிடும் குலாமரே
    ஆன தேது? ஆழிவ தேது? அப்புறத்தில் அப்புறம்
    ஈன தேது? ராம ராம ராம என்ற நாமமே””””””””””””””

                                                                                                                 ------------ சிவவாக்கியர்---------
“””””””நான தேது? நீய தேது? நடுவில் நின்றது ஏதடா””””””””
நான் என்ற உடலுக்குள் உயிராக நிறைந்திருப்பது எது?
நீ என்ற உடலுக்குள் உயிராக நிறைந்து இருப்பது எது?
நான் நீ என்று சொல்லப்படும் இந்த உடலுக்குள் இருக்கும் உயிரானது தோன்றுவதற்கு பொதுவான காரணமாக இருப்பது எது என்று தெரியுமா?



“””””””கோண தேது? குருவ தேது? கூறிடும் குலாமரே”””””
கோ - என்றால் அரசன் நாட்டை ஆள்பவன் என்று பொருள்
கோன தேது என்றால் இருப்பு நிலையிலிருந்து நுண்ணலையான விண் என்ற ஐPவன் தோன்றி இயக்க நிலையாகி பிரபஞ்ச தோற்றங்களாகி இந்த பிரபஞ்சம் முழுவதும் உயிராக இருப்பதை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆண்டு கொண்டிருப்பது எது? என்று பொருள்

குரு - என்றால் வழி தவறி நடக்காமல் வழி காட்டுபவன் என்று பொருள்
இந்த பிரபஞ்சம் முழுமையும் நிறைந்திருக்கும் அனைத்து உயிர்களையும் இயக்க விதி மாறாமல் வழி நடத்திச் செல்வது எது? என்று பொருள்

இந்த ரகசியம் யாருக்கேனும் தெரிந்தால் கூறுங்கள் என்கிறார்  சிவவாக்கியர்


“””””””ஆன தேது? ஆழிவ தேது? அப்புறத்தில் அப்புறம்
      ஈன தேது? ராம ராம ராம என்ற நாமமே”””””””””””””
 இந்த உலகம் என்று சொல்லக் கூடிய இயக்க நிலையில் உள்ள உயிர் தோன்றுவதற்கு மூல காரணமாக இருந்தது எது
இந்த உலகம் எல்லாம் அழிந்த பிறகு உலகமெல்லாம் எஞ்சி இருக்கும் நீக்கமற நிறைந்து இருக்கக் கூடிய உயிரானது சென்று சேரும் இடம் எது?

உலகமெலாம் தோன்றுவதற்கு முன்பு இருந்தது எது? உலகமெலாம் அழிந்த பிறகு எஞ்சி இருப்பது எது?

இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ராம ராம ராம ஜெபம் செய்ய வேண்டும் என்கிறார்  சிவவாக்கியர்
ராம நாம ஜெபம்
மூச்சுக் காற்றான பிராணனை ராஎன்று உள்ளே இழுக்க வேண்டும்
”  என்று வெளியே விட வேண்டும்

இந்த ராம ராம ராம என்று சொல்லும் ராம நாம ஜெபத்தை அதாவது மூச்சுப் பயிற்சியை தொடர்ந்து செய்து வர விரிந்த மனம் சுருங்கி உயிராகி பரத்துடன் இணைகிறது
அதாவது மனம் அடக்கம் பெற்று ஜீவாத்மா பரமாத்வுடன் இணைவதன் மூலம் மேலே சொல்லப்பட்ட பிரம்ம ரகசியங்கள் அனைத்திற்கும் விடை கிடைக்கும்

எனவே ராம ராம ஜெபம் எனப்படும் மூச்சுப் பயிற்சியை தொடர்ந்து செய்து பிரபஞ்ச ரகசியங்களைத் தெரிந்து கொள்வோம் என்கிறார்  சிவவாக்கியர்