Showing posts with label ஜபம்-. Show all posts
Showing posts with label ஜபம்-. Show all posts

August 04, 2024

ஜபம்-பதிவு-1004 மரணமற்ற அஸ்வத்தாமன்-136 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1004

மரணமற்ற அஸ்வத்தாமன்-136

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

இவர்கள் நால்வரும்

முழு மனதுடன் போர் புரியவில்லை

அரை மனதுடன் தான் போர் புரிந்தார்கள்

முழு மனதுடன் போர் புரிந்து இருந்தால்

பாண்டவர்களால் இவர்களை வீழ்த்தி இருக்கவே முடியாது.

பாண்டவர்கள் இவர்களைக் கொன்று இருக்கவே முடியாது

பாண்டவர்கள் வெற்றி பெற்று இருக்கவே முடியாது

அரை மனதுடன் போர் புரிந்த காரணத்தினால் தான்

இவர்களைக் கொல்லவே முடிந்தது

இங்கே கிருஷ்ணரின் சூழ்ச்சி இருந்தது

 

கிருபர்  : கிருஷ்ணன் சூழ்ச்சி செய்தார் என்றால்

நீயும் ஏன் அதே சூழ்ச்சியைச் செய்ய வேண்டும் என்கிறாய்

சூழ்ச்சிக்கு சூழ்ச்சி என்பது பதில் கிடையாது

இரவில் ஏன் போர் புரிய வேண்டும் என்கிறாய்

கிருஷ்ணன் செய்த தவறை

கடவுள் என்று சொல்லப்படுகிற கிருஷ்ணன் செய்த தவறை

நீயும் ஏன் செய்ய முயற்சி செய்கிறாய்

நாளை காலை சூரியன் உதிக்கட்டும்

நாளை காலை போர் செய்வோம்

 

அஸ்வத்தாமன் : கடமை என்னை அழைக்கிறது. எனக்கு இடப்பட்ட கடமையை நான் முடிக்க வேண்டும். எனக்கிருக்கும் காலம் குறைவு. அதற்குள் எனக்குள்ள கடமையை முடிக்க வேண்டும். கால நேரம் பார்த்துக் கொண்டிருந்தால் என்னால் என்னுடைய கடமையை முடிக்க முடியாது.

 

நான் போர் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். போர் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு எனக்கு நேரம் காலம் கிடையாது. இரவு பகல் கிடையாது. அதை எல்லாம் பார்க்கும் நிலையில் நான் இல்லை.

 

என்னுடைய எண்ணத்தை யாராலும் மாற்றவும் முடியாது. என்னுடைய எண்ணத்தை நான் யாருக்காகவும் மாற்றிக் கொள்ளவும் மாட்டேன்.

 

உங்களுக்கு போர் செய்ய விருப்பம் இருந்தால் என்னுடன் வாருங்கள். நான் செய்வது சரி என்று நீங்கள் நினைத்தால் என்னுடன் இணைந்து போர் செய்ய வாருங்கள். இரவில் போர் செய்ய விருப்பம் இருந்தால் என்னுடன் வாருங்கள்.

 

பகலில் தான் போர் செய்வோம் என்று முடிவெடுத்து விட்டால் நீங்கள் செல்லலாம். தன்னந்தனியாக நான் ஒருவனே பார்த்துக் கொள்கிறேன்.

 

கிருபர் : போர் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு பின் வாங்குவது முறை கிடையாது. உன்னுடன் வந்து விட்டேன். எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்து விட்டேன். எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். நான் தயார்

 

கிருதவர்மன் : நானும் தயார்

 

அஸ்வத்தாமன் பாண்டவர்கள் இருக்கும் பாசறையில் நுழைகிறான். கிருபரும், கிருதவர்மனும் பாசறையின் வெளியில் இருக்கின்றனர். அஸ்வத்தாமன் ஒரு கூடாரத்தில் நுழைகிறான். அங்கு திருஷ்டத்யும்னன் உறங்கிக் கொண்டிருக்கிறான். அவனை காலால் எட்டி உதைத்தான். தூக்கத்தில் விழித்து எழுந்தான் திருஷ்டத்யும்னன்.

திருஷ்டத்யும்னன் : உறங்கும் சமயத்தில் போர் செய்ய வந்திருக்கிறாயே

உறங்கிக் கொண்டிருப்பவர்களுடன் போர் செய்ய வந்திருக்கிறாயே

இரவில் போர் செய்ய வந்திருக்கிறாயே

நீயெல்லாம் ஒரு வீரனா

போரின் விதிமுறைகள் உனக்கு தெரியும் அல்லவா

 

அஸ்வத்தாமன் : நான் இரவில் போர் செய்ய வந்திருப்பது

புதிய போர் முறையைக் கொண்டு வருவதற்கு

பழைய போர் முறையை மாற்றுவதற்கு

காலங்காலமாக நடைபெற்று வரும் போர் முறையில்

மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு

புது முறையைக் புகுத்துவதற்கு

சீர்திருத்தங்கள் கொண்டு வருவதற்கு

வருங்காலத்தில் பின்பற்றுவதற்கு

புதிய போர் முறையை உருவாக்குவதற்கு

நான் இரவில் போர் செய்ய வந்திருக்கிறேன்

 

எதிர்காலத்தில் செய்யப்படும் போர்முறைக்கு

முன்னுதாரணமாக என்னுடைய போர் முறை

இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக

போர் முறையில் ஒரு புதிய மாற்றத்தை

உருவாக்கி இரவு நேரத்தில் போர் செய்ய வந்திருக்கிறேன்

 

நான் செய்யும் இந்த போர் முறையைத் தான்

வருங்காலத்தில் பின்பற்றப் போகிறார்கள்

 

வருங்காலத்தில் அனைவராலும் பின்பற்றப்படும்

ஒரு போர் முறையைத் தான்  

நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்

 

வருங்காலத்தில் போரானது

அதற்கென்று ஒதுக்கப்பட்ட களத்தில் நடைபெறாது

அதற்கென்று தனியாக சட்ட திட்டங்கள் இருக்காது

இரவு பகல் என்று பார்க்காமல்

கால நேரம் எதுவும் பார்க்காமல் போர் நடைபெறும்

சிறுவர்கள் சிறுமிகள் பெண்கள் குழந்தைகள்

என்று பார்க்காமல் அனைவரும் கொல்லப்படுவார்கள்

இத்தகைய ஒரு நிலையில் தான்

வருங்காலத்தில் போர்கள் நடைபெறப்போகிறது

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----04-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

 

 

 

 

 

ஜபம்-பதிவு-1001 மரணமற்ற அஸ்வத்தாமன்-133 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1001

மரணமற்ற அஸ்வத்தாமன்-133

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

செத்த பாம்பைக் கூட அர்ஜுனன் நேருக்கு நேராக நின்று

அவனால் கொல்ல முடியவில்லை

சதி செய்து கொன்றான் அவன் எல்லாம் ஒரு வீரன்

வில்லுக்கு விஜயன் என்ற பட்டம் வேறு

 

இத்தகைய கர்ணனை

நட்புக்கு துரோகம் செய்த கர்ணனை

நட்பு என்றால் என்ன என்று தெரியாத கர்ணனை

துரோகியாக உன்னுடன் இருந்த கர்ணனை

இடையில் வந்த கர்ணனை நண்பன் என்றாய்

 

ஆனால் இளமைக்காலம் முதல் இருந்த என்னை

உனக்காக வாழ்ந்து கொண்டிருந்த என்னை

உனக்காக எதுவும் செய்யத் துணிந்த என்னை

சந்தேகம் கொண்டு என்னை

நண்பன் என்ற நிலையில் இருந்து விலக்கி வைத்தாய்

 

சந்தேகம் கொண்டாலும் அழிந்து விடுவர்

நம்முடன் இருப்பவர்களின் மதிப்பு தெரியாவிட்டாலும்

அழிந்து விடுவர் என்பதற்கு நீ மிகச் சிறந்த உதாரணம் ஆகிவிட்டாய்

 

துரியோதனன் : நடந்து விட்ட தவறுக்காக என்னை மன்னித்து விடு

 

அஸ்வத்தாமன் : இப்போது மன்னிப்பு கேட்டு என்ன பயன் ஏற்படப் போகிறது

உன் வாழ்க்கை முடியப் போகிறது

இருந்தாலும் நான் உன் நண்பன்

 

நீ உயிர் துறப்பதற்கு முன் உன் கனவுகளை நிறைவேற்றுகிறேன்

நீ என்ன நினைக்கிறாயோ அதை செய்து காட்டுகிறேன்

பாண்டவர்களை அழித்துக் காட்டுகிறேன்.

பாண்டவர்களுக்கு வீரம் என்றால் என்ன என்று காட்டுகிறேன்

வீரன் எப்படி இருப்பான் என்பதைக் காட்டுகிறேன்

நண்பன் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை

இந்த உலகத்திற்கு நிரூபித்துக் காட்டுகிறேன்

 

நண்பா இது வரை யாரும் செய்யாத செயலை

இந்த உலகம் இது வரை கண்டிராத செயலை

இந்த உலகம் இனி காண முடியாத செயலை

நான் உனக்காக செய்து காட்டுகிறேன்

 

பாண்டவர்களை நான் கொன்று காட்டுகிறேன்

பாண்டவர்களின் படைகளை நான் அழித்துக் காட்டுகிறேன்

 

துரியோதனன் :  நண்பா உன்னை நான் கௌரவர்களின் படைத்தளபதியாக நியமிக்கிறேன்

 

அஸ்வத்தாமன் : பதவிக்காக ஆசைப்படும் பாண்டவர்கள் என்று என்னை நினைத்து விட்டாயா?

 

எந்தப் பதவியும் எனக்குத் தேவையில்லை. எந்தப் பதவிக்கும் நான் ஆசைப்பட்டவன் கிடையாது.

 

துரியோதனன் :  எனக்காக நீ கௌரவர்களின் படைத்தளபதியாக வேண்டும் இது என் விருப்பம்

 

உன்மேல் நான் கொண்ட சந்தேகம் தவறானது என்பதை உணர்ந்து கொண்ட ஒரு நண்பனின் வேண்டுகோளாக இதை ஏற்றுக் கொள்.

 

அஸ்வத்தாமன் : அடிபட்டுக் கிடந்தாலும் சிங்கம் சிங்கம் தான். சிறு நரியாகி விடாது.

 

வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டாலும் நீ எனக்கு எப்போதும் நண்பன் தான்

மன்னன் தான்

 

நண்பா நீ என்னைப் பற்றி உணர்ந்து கொள்ள வேண்டும்

என்பதற்காகத் தான் சொன்னேன்

என்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்

என்பதற்காகத் தான் சொன்னேன்

 

என்னைப் பற்றி தெரியாமல் நீ இறந்து விட்டால்

என்னைப் பற்றி உணராமல் நீ இறந்து விட்டால்

என்னுடைய மதிப்பு உனக்குத் தெரியாமல் போய் விடும்

என்னுடைய நட்பின் பெருமை உனக்குத் தெரியாமல் போய் விடும்

என்ற காரணத்தினால் தான் நான் சொன்னேன்

 

நீ ஒரு அரசன் என்னிடம் மன்னிப்பு கேட்கக் கூடாது

நீ என்னிடம் கையேந்தக் கூடாது நீ கட்டளையிடு நான் செய்கிறேன்

 

துரியோதனன் :  அரசன் என்ற முறையில் நான் உனக்கு கட்டளையிட விரும்பவில்லை. நண்பன் என்ற முறையில் நான் கேட்கிறேன்

 

கௌரவர்களின் படைத்தளபதியாக நீ ஆக வேண்டும்

 

அஸ்வத்தாமன் : நீ அரசனாக இருந்தாலும் நண்பனாக இருந்தாலும் உன் பேச்சை நான் என்றும் தட்டியது இல்லை. உனக்காக எதையும் செய்யக் காத்திருக்கும் இந்த நண்பன் படைத்தளபதியாக மாட்டானா

 

நான் ஆகிறேன்

கௌரவர்களின் படைத்தலைவனாக ஆகிறேன்

பாண்டவர்களை அழிக்கிறேன்

 

துரியோதனன் :  எனக்கு இது போதும்

 

துரியோதனன் அஸ்வத்தாமனை கௌரவர்களின் படைத்தளபதியாக

நியமிக்கிறான் பீஷ்மர், துரோணர், கர்ணன் ,சல்லியன்

என்ற வரிசையில் அஸ்வத்தாமன்

கௌரவர்களின் படைத்தளபதியாக ஐந்தாவதாக பொறுப்பேற்றான்

 

துரியோதனன் :  பாண்டவர்கள் இறந்து விட்டார்கள் என்ற செய்தியைக் கேட்பதற்கு நான் காத்துக் கொண்டிருப்பேன். உயிரைப் பிடித்துக் கொண்டு உனக்காக நான் காத்துக் கொண்டிருப்பேன். விரைவாக வந்து விடு.

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----04-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

ஜபம்-பதிவு-1000 மரணமற்ற அஸ்வத்தாமன்-132 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1000

மரணமற்ற அஸ்வத்தாமன்-132

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

நீ என்னைப் பற்றித் தெரிந்து கொள்ளவில்லை

என்னுடைய திறமையைப் பற்றி நீ தெரிந்து கொள்ளவில்லை

நான் சிரஞ்சீவி

மரணமற்றவன் - இந்த

அஸ்வத்தாமன் மரணமற்றவன்

மரணமற்றவன் அஸ்வத்தாமன்

 

இந்த உலகத்தின் கடைசி உயிர் இறந்த பின் தான் இறப்பேன்

என்னுடைய இறப்பு இந்த உலகத்தின் இறப்பு

என் மேல் நீ சந்தேகம் கொள்ளவில்லை எனில்

என்னைப் பற்றி நீ தெரிந்து கொண்டிருப்பாய்

உன்னுடைய சந்தேகம் என்னைப் பற்றித்

தெரிந்து கொள்ள முடியாமல் உன்னைச் செய்து விட்டது

என்னைப் பற்றிய ரகசியங்களை

உன்னைத் தெரிந்து கொள்ள விடாமல் செய்து விட்டது

அதுவே உன்னுடைய அழிவிற்கும் காரணமாகி விட்டது

 

என்னை மட்டும் நீ கௌரவர்களின் படைத் தலைவனாக ஆக்கி இருந்தால்

நீ தான் வெற்றி பெற்று இருப்பாய்

போர் எப்போதோ முடிந்து போய் இருக்கும்

உனக்கும் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது

 

எனக்கு இறப்பு கிடையாது

என்னை யாராலும் கொல்ல முடியாது

நான் இறந்தால் இந்த உலகம் அழிந்து விடும்

என்ற காரணத்தினால் என்னை கொல்ல மாட்டார்கள்

ஆனால் நான் அனைவரையும் கொல்லலாம்

இந்த விஷயம் தெரிந்த காரணத்தினால் தான்

கிருஷ்ணன் என் மேல் சந்தேகம் வரும் படி செய்தான்

 

நீ என்னைப் பற்றி யோசிக்காமல்

என் நட்பைப் பற்றி யோசிக்காமல்

என் மேல் சந்தேகம் கொண்ட காரணத்தினால்

அடிபட்ட நிலையில் இருக்கிறாய்

 

கர்ணனை விட நான் என்ன விதத்தில் குறைந்து விட்டேன்

 

கர்ணன் உன் மேல் கொண்ட அன்பை

உண்மையான அன்பு என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்

நீயும் கர்ணனும் கொண்ட அன்பை

இந்த உலகம் உண்மையான அன்பு என்று நினைத்துக் கொண்டிருக்கிறது

நட்புக்கு எடுத்துக் காட்டாக உங்கள் நட்பை சொல்லிக் கொண்டிருக்கிறது

 

இந்த உலகம் போலியானவர்களைத் தான்

உண்மையானவர்கள் என்று நம்பும்

உண்மையானவர்களை நம்பாது

 

போலியானவர்கள் பின் தான் செல்லும்

உண்மையானவர்கள் பின் செல்லாது

 

போலியானவர்கள் இந்த உலத்திற்கு வழிகாட்டுவதினால் தான்

உண்மையானவர்கள் மறைக்கப்பட்டு விடுகிறார்கள்

ஒதுக்கப்பட்டு விடுகிறார்கள்

 

உண்மையானவர்கள் எத்தகைய தன்மையைப் பெற்றவர்கள் என்பதை

இந்த உலகம் அறிந்து கொள்ள முடியாமல் போய் விடுகிறது

 

உண்மையானவர்கள் ஒதுக்கப்படுகின்ற காரணத்தினால் தான்

உண்மையானவர்கள் புறக்கணிக்கப்படுகின்ற காரணத்தினால் தான்

போலியானவர்கள் தலை விரித்து ஆடுகின்றனர்

 

நீ கர்ணன் மேல் வைத்த நட்பு உண்மையாக இருக்கலாம்

ஆனால் கர்ணன் உன் மேல் வைத்த நட்பு

உண்மையான நட்பு கிடையாது

போலியான நட்பு

 

கர்ணனின் மானத்தை நீ காப்பாற்றிய போது

உனக்காக உயிரையே கொடுப்பேன் என்று கர்ணன் கூறினான்

ஆனால் அதை அவன் செய்யவில்லை

உனக்காக அவன் உயிரைக் கொடுக்கவில்லை

அவன் உயிர் எடுக்கப்பட்டது

அவன் உயிர் எடுக்கப்பட்டு விட்டதற்கு காரணம்

சதிவேலைகள் பாசம் என்று

பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும்

உண்மையான காரணம்

அவன் உன் மேல் உண்மையான

நட்பு கொள்ளாமல் இருந்தது தான்

 

கர்ணன் உன் மேல் உண்மையான

நட்பு கொண்டிருந்திருப்பானேயானால்

உனக்காக உயிரைக் கொடுத்து இருப்பான்

ஆனால் அவன் உயிரைக் கொடுக்கவில்லை

 

அவன் உன் மேல் உண்மையான நட்பு கொள்ளவில்லை

அதனால் அவன் உயிர் எடுக்கப்பட்டு விட்டது

 

அவன் ஒரு நம்பிக்கை துரோகி

நண்பன் என்று சொல்வதற்கே தகுதியில்லாதவன்

 

கர்ணன் உன் மேல் உண்மையான நட்பு கொண்டு இருப்பான் என்றால்

உனக்கா உயிரையே கொடுப்பேன் என்று சொன்னது உண்மை என்றால்

உனக்காக மட்டுமே வாழ்கிறேன் என்று சொன்னது உண்மை என்றால்

கர்ணன் என்ன செய்து இருக்க வேண்டும்

 

இந்திரன் கவச குண்டலங்களைக் கேட்டு வந்த போது

அதை இந்திரனுக்குக் கொடுத்திருக்கக் கூடாது

 

அவனுடைய தாய் குந்தி தேவி கேட்ட போது

அர்ஜுனனை மட்டும் தான்கொல்வேன்

மற்ற பாண்டவர்களைக் கொல்ல மாட்டேன்

என்றும்

அர்ஜுனன் மேல் ஒரு முறை தான் நாகாஸ்திரத்தை

பிரயோகம் செய்வேன்

என்று சத்தியம் செய்து தந்து இருக்கக் கூடாது

 

இவ்வளவையும் செய்து விட்டுத் தான்

உனக்கு துரோகம் செய்து விட்டுத் தான்

நட்புக்கு களங்கம் விளைவித்து விட்டுத் தான்

போருக்கு வந்தான்

 

செத்த பாம்பாகத் தான் கர்ணன் போருக்கு வந்தான்

செத்த பாம்பு போருக்கு வந்து என்ன பயன்

ஒரு பயனும் இல்லை.

செத்த பாம்பாக வந்தவனைத் தான் அர்ஜுனன் கொன்றான்

செத்த பாம்பைத் தான் கொன்றான்

அதுவும் நேருக்கு நேராக நின்று கொல்லவில்லை

கர்ணன் ஆயுதம் இல்லாத போது தான் அவனைக் கொன்றான்

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----04-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

ஜபம்-பதிவு-999 மரணமற்ற அஸ்வத்தாமன்-131 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-999

மரணமற்ற அஸ்வத்தாமன்-131

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

குருஷேத்திரப் போரை தொடர்ந்து நடத்தும் தகுதியும்

அதை முடித்து வைக்கும் தகுதியும் உனக்கு மட்டுமே இருக்கிறது

 

உன்னால் மட்டுமே குருஷேத்திரப்போரைத்

தொடரவும் முடியும்

முடிக்கவும் முடியும்

 

நான் உன்னை அதிக அளவு நம்புகிறேன்

யாராலும் செய்ய முடியாத செயலை உன்னால் மட்டுமே

செய்ய முடியும் என்று நம்புகிறேன்

 

உன்னைத் தவிர பாண்டவர்களைக் கொல்லக் கூடியவர்கள்

யாரும் இல்லை என்று நம்புகிறேன்

 

உன் மேல் நான் அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்திருக்கிறேன்

என்னுடைய நம்பிக்கையை காப்பாற்றுவாயா?

 

அஸ்வத்தாமன் : நண்பா  என் மேல் நீ வைத்திருப்பது சந்தேகம் மட்டுமே

 

பாண்டவர்கள் சார்பாக கிருஷ்ணன் சமாதானத் தூது வந்த போது

என் மேல் உனக்கு சந்தேகம் வரவில்லை

 

கிருஷ்ணன் என்னிடம் பேசிய போது உனக்கு

சந்தேகம் வரவில்லை

 

கிருஷ்ணனின் மோதிரத்தை நான் எடுத்து

அவர் கையில் வைத்த போது தான்

என் மேல் உனக்கு சந்தேகம் வந்து விட்டது

 

என் மேல் கொண்ட சந்தேகத்தை நீயாக தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும்

அதை நீ செய்யவில்லை

என்னை அழைத்தாவது என் மேல் உள்ள சந்தேகத்தை

தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும்

அதையும் நீ செய்யவில்லை.

 

என் மேல் கொண்ட சந்தேகத்தால் என்னை ஒதுக்கி வைத்தாய்

என் மேல் வெறுப்பு கொண்டாய்

என் மேல் பகைமை கொண்டாய்

எதிரியைப் போல் என்னை நடத்தினாய்

எதிரியாக நினைத்து என்னுடன் பழகினாய்

அருகில் வைத்துக் கொண்டே என்னை இழிவு படுத்தினாய்

 

இவைகள் அனைத்தையும் அறிந்த நான்

அப்போதே உன்னை விட்டு விலகிச் சென்று இருக்க வேண்டும்

ஆனால் நான் விலகிச் செல்லவில்லை

 

அதற்குக் காரணம் நான் உன்னுடைய நண்பனாக இருக்கின்ற காரணத்தினால் தான்

உண்மையான நட்பை நான் உன் மேல் வைத்திருக்கின்ற காரணத்தினால் தான்

எனக்கு போலியாக நட்பு கொள்ளத் தெரியாது என்ற காரணத்தினால் தான்

 

அதனால் தான் நீ என்னை விலகினாலும்

என்னை விலக்கி வைத்தாலும்

உன்னை விட்டு நான் விலகாமல் இருந்ததற்குக் காரணம்

 

நீ என் மேல் சந்தேகப்பட்ட நேரத்தில் கூட

நான் உன்னுடன் இருந்ததற்குக் காரணம் இது தான்

 

என் மேல் சந்தேகத்துடன் இருந்த நீ

எப்போது முதல் என் மேல் நம்பிக்கை வைத்தாய்

 

எப்போது என் மேல் உனக்கு நம்பிக்கை வந்தது

இவ்வளவு நாள் இல்லாத நம்பிக்கை

இப்போது எப்படி வந்தது

 

அனைத்தையும் இழந்து விட்ட நிலையில்

உயிர் போகும் நிலையில்

என் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்கிறாய்

 

என்னுடைய உண்மையான நட்பை நீ புரிந்து கொள்ளவில்லை

என்னுடைய நட்பை நீ புரிந்து கொண்டு இருந்திருப்பாயேயானால்

நீ என் மேல் சந்தேகம் கொண்டிருக்க மாட்டாய்

என் மேல் உனக்கு உண்மையான அன்பு இல்லை

அதனால் தான் என் மேல் சந்தேகம் கொண்டாய்

 

உன்னுடைய சந்தேகம் தீரும் அப்போது நீ என்னை

புரிந்து கொள்வாய் என்று நினைத்தேன்

ஆனால் அனைத்தும் இழந்த நிலையில்

உயிர் போகும் நிலையில் என்னைப் புரிந்து கொண்டதால்

என்ன பயன் உனக்கு ஏற்படப் போகிறது

 

உலகத்திலேயே தீர்க்க முடியாத வியாதி என்ற ஒன்று

உண்டு என்றால் அது சந்தேகம் தான்

சந்தேகம் என்ற வியாதிக்குத் தான்

இந்த உலகத்தில் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவேயில்லை

 

சந்தேகம் என்பது ஒருவருக்குள் வந்துவிட்டால்

அது அவரை மட்டுமல்ல அவரைச் சார்ந்தவர்களையும்

அழித்து விடும் என்பதற்கு நீயே ஒரு சிறந்த

உதாரணமாக இருக்கிறாய்

 

நம்முடன் இருப்பவர்களைப் பற்றித் தெரிய வேண்டும்

நம்முடன் இருப்பவர்களைப் பற்றித் தெரியாவிட்டால்

அப்போதும் கஷ்டப்பட வேண்டியது தான்

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----04-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////