January 21, 2019

திருக்குறள்-பதிவு-86


                       திருக்குறள்-பதிவு-86

“ ஜியார்டானோ
புருனோவிற்கு
எதிராக ரோம்
நகரத்தில் நடைபெற்ற
முதல் கட்ட
விசாரணையின்
குறிப்புகள்
அடங்கிய கோப்பு
கார்டினல் சார்டோரி
(Cardinal Sartori)
அவர்களால் தயார்
செய்யப்பட்டு
ஃபாதர் டிராக்காலியோலோ
(Father Tragagliolo)
அவர்கள் மூலமாக
போப் கிளமெண்ட்-VIII
(Pope Clement-VIII)
அவர்களிடம்
ஒப்படைக்கப்பட்டது ”

“ போப் கிளமெண்ட்-VIII
(Pope Clement-VIII)
அவர்கள்
அந்த கோப்பை
முழுமையாக
கவனத்துடன்
படித்து முடித்தார் “

போப் கிளமெண்ட்-VIII :
(Pope Clement-VIII)
 “கிறிஸ்தவ
குடும்பத்தில் பிறந்து ;
கிறிஸ்தவ
குடும்பத்தில் வளர்ந்து ;
கிறிஸ்தவராக வாழ்ந்து :
கிறிஸ்தவ பழக்க
வழக்கங்கங்களைக்
கற்று அதனைக்
கடைபிடித்து
கிறிஸ்தவராக வாழ்ந்து
வருவதோடு மட்டும்
அல்லாமல் ,
Father ஆக இருக்கும்
ஜியார்டானோ புருனோ
“ பைபிளில்
சொல்லப்பட்ட
கருத்திற்கு எதிராகவும் ;

கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபையின்
நடவடிக்கைகளுக்கு
எதிராகவும் ;

கிறிஸ்தவ மதத்தில்
உள்ள நம்பிக்கைகளுக்கு
எதிராகவும் ;

கருத்து சொல்கிறார்
என்றால் அது
ஆச்சரியப்பட
வேண்டிய விஷயம்

 “ ஏனென்றால்
கிறிஸ்தவ மத
வரலாற்றில்
இத்தகைய நிகழ்வு
நடைபெறுவது
என்பது இது தான்
முதல் முறை ”
.
“பிரச்சினைக்குரிய
இந்த விஷயத்தை
உலகமே உற்று
நோக்கி இமை
கொட்டாமல் கவனித்துக்
கொண்டு இருக்கிறது “

“ ஜியார்டானோ புருனோ
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபையின்
நடவடிக்கைகளுக்கு
எதிராக செயல்பட்டார்
என்ற காரணத்திற்காக
அவரை நெருப்பில்
எரித்து கொல்ல
வேண்டும் என்று
ரோம் நகரத்தின்
விசாரணைக்குழு
முடிவு செய்து
இருந்தால் ,
வெனிஸ் நகரத்தின்
விசாரணைக்குழு
அளித்த
ஆதாரங்களைவிட
வலுவான
ஆதாரங்களை
ரோம் நகரத்தின்
விசாரணைக்குழு
சமர்ப்பிக்க வேண்டும் “

“ கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபை
சிறையில்
அடைப்பதையும்
நெருப்பில் இட்டு
கொல்லுவதையும்
விரும்பவில்லை. “

“ கிறிஸ்தவ மத
வரலாற்றில்
நடக்காத ஒரு
விஷயம் இப்போது
நடந்து கொண்டிருக்கிற
காரணத்தினால்
இந்த விஷயத்தை
கவனமுடன் எந்தவித
தவறுகளும் நேராத
வண்ணம் கையாள
வேண்டும் என்றும் ;
அவ்வப்போது
நடக்கும்
விசாரணைப் பற்றிய
நிகழ்வுகளை
உடனுக்குடன்
தனக்கு தெரிவிக்க
வேண்டும் என்றும் ;
கார்டினல் சார்டோரி
(Cardinal Sartori)
அவர்களிடம் இந்த
தகவலை சேர்க்குமாறு
ஃபாதர் டிராக்காலியோலோ
(Father Tragagliolo)
அவர்களிடம்
போப் கிளமெண்ட்-VIII
(Pope Clement-VIII)
அவர்கள்
வலியுறுத்தினார் ”

 ‘ஜியார்டானோ புருனோ
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபையின்
பழக்க வழக்கங்களுக்கு
எதிராக செயல்பட்டார்
என்பதற்கு ,
ஆதாரமாக அவர்
பல்கலைக் கழகத்தில்
மாணவர்கள் மத்தியில்
பேசிய பேச்சை
எடுத்துக் கொண்டு
ஆராயலாம் என்று
ரோமன்
விசாரணைக்குழு
முடிவு எடுத்து
அந்த பேச்சை
ஆராய்ந்தது.

ஜியார்டானோ புருனோ
பல்கலைக் கழகத்தில்
மாணவர்கள்
மத்தியில் பேசிய
பேச்சு இது தான் !

---------  இன்னும் வரும்
---------  21-01-2019
/////////////////////////////////////////////////////////////