January 24, 2020

பரம்பொருள்-பதிவு-118


           பரம்பொருள்-பதிவு-118

(கிருஷ்ணன்
அரவானை சந்திக்க
அவன் மாளிகைக்கு
செல்கிறார் - அரவான்
கிருஷ்ணனை
வரவேற்று அவர்
பாதங்களில்
விழுகிறான்)

அரவான் :
“என்னை
ஆசிர்வதியுங்கள்
பரந்தாமா !”

கிருஷ்ணன் :
“இந்த உலகம்
உள்ளளவும் உன்
புகழ் நிலைத்து
நிற்கட்டும் அரவான்!”

அரவான் :
“ஏன் ? நீடூழி
வாழ்க என்று வாழ்த்த
மாட்டீர்களா பரந்தாமா ! “

கிருஷ்ணன் :
“நான் ஏன் அவ்வாறு
வாழ்த்தவில்லை என்பது
உனக்கே தெரியும் “

“அது மட்டுமல்ல
வாழ்த்துவது என்பது
சாதாரணமான விஷயம்
என்று நினைத்து
விட்டாயா அரவான் ?”

“வாழ்த்தும் போது
யாரை வாழ்த்துகிறோம்  ;
எதற்காக
வாழ்த்துகிறோம் ;
என்ன காரணத்திற்காக
வாழ்த்துகிறோம் ;
என்பது முக்கியம் “

“எல்லோராலும்
உண்மையாக
வாழ்த்த முடியாது  ;
அப்படியே ஒரு
சிலர் உண்மையான
மனதுடன் வாழ்த்தினாலும்
வாழ்த்துபவர்களுடைய
வாழ்த்துக்கள் அனைத்தும்
பலிக்கும் என்று
சொல்லி விட முடியாது ;” 

“கோடியில் ஒருவர்
வாழ்த்தும் வாழ்த்தே
பலிக்கும் என்பதை
நினைவில் கொள்
அரவான் !“

அரவான் :
“கோடியில் ஒருவரான
நீங்கள் வாழ்த்தினால்
அது நடக்குமே !
அப்படி இருக்கும்
போது நீங்கள் ஏன்
என்னை நீடுழி வாழ்க
என்று வாழ்த்தக்கூடாது?”

கிருஷ்ணன் :
“அரவான் !
என்ன நடக்கப் போகிறது
என்பது உனக்குத் தெரியும் “

“அப்படி இருக்கும் போது
நடக்க முடியாததை
நடக்க வையுங்கள்
என்று ஏன்
என்னிடம் கேட்கிறாய் ?”

அரவான் :
“நான் இதுவரை
வாழ்ந்த காலத்தில்
பெரியதாக
சாதனைகள் எதுவும்
செய்ததாக எனக்கு
தெரியவில்லை ;
இனி வாழப்போகும்
கொஞ்ச காலத்திலும்
என்னால் பெரியதாக
சாதனைகள் படைக்க
முடியுமா என்று
தெரியவில்லை. ;”

“அப்படி இருக்கும்
போது எனக்கு புகழ்
எப்படி உண்டாகும் ?
அப்படியே புகழ்
கிடைத்தாலும்  
அந்தப் புகழ்
இந்த உலகம்
உள்ளளவும் எப்படி
நிலைத்து நிற்கும் ?
அதற்கு நீண்ட ஆயுள்
தேவையல்லவா ?
அதற்காக நான்
நீண்ட காலம் வாழ
வேண்டும் அல்லவா ? ;”.

கிருஷ்ணன் :
“அரவான்
எவ்வளவு காலம்
வாழ்கிறோம் என்பது
முக்கியமில்லை ;
வாழ்ந்த காலத்தில்
மக்கள் மனதில்
இடம் பெற்று
நீங்காத புகழை
பெறுவதற்காக
எத்தகைய உயர்ந்த
செயல்களைச் செய்தோம்
என்பது தான் முக்கியம் ;
இவ்வாறு பெறப்படும்
புகழே உலகம் உள்ளளவும்
நிலைத்து நிற்கும் ;
என்பதை உணர்ந்து
கொள் அரவான் ;”

அரவான் :
“நான் தான் எந்த
ஒரு உயர்ந்த
செயலையும்
செய்யவில்லையே !”

கிருஷ்ணன் :
“நீ ! தான் யாருமே
செய்ய முடியாத
மிகப்பெரிய உயர்ந்த
செயலை செய்ய
போகிறாயே  ?”

அரவான் :
“பெரிய தந்தை
துரியோதனனுக்காக
நான் களப்பலி
ஆகப்போவதைத் தான்
உயர்ந்த செயல்
என்று சொல்கிறீர்களா?”

கிருஷ்ணன் :
“ நீ ! களப்பலி
ஆகப்போவதைத் தான்
நான் உயர்ந்த
செயல் என்றேன் ;
துரியோதனனுக்காக
களப்பலியாவதை
நான் உயர்ந்த
செயல் என்று
சொல்லவே இல்லையே “

“துரியோதனன் எதிரி
என்று தெரிந்தும்
துரியோதனனுக்காக
எப்படி களப்பலியாவதற்கு
சம்மதித்தாய் அரவான் “

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
-------------24-01-2020
//////////////////////////////////////////