September 10, 2018

திருக்குறள்-பதிவு-17


                     திருக்குறள்-பதிவு-17

ஹக்ஸிலி சிரித்துக்
கொண்டே மேடை
மீது ஏறினார்
அன்பார்ந்த மக்களே
நான் இங்கே
விஞ்ஞானத்தைப்
பற்றித் தான்
பேச வந்திருக்கிறேன்
மதத்தைப் பற்றி
பிரச்சாரம் செய்வதற்கு
நான் வரவில்லை
மதத்தைப் பற்றி
பிரச்சாரம் செய்வதற்கு
பிஷப் வில்பர்போர்ஸ்
போன்ற மதவாதிகள்
நம் நாட்டில்
நிறைய
எண்ணிக்கையில்
உள்ளார்கள்
ஆகவே நான்
பேசுவதை
மதரீதியாக
பார்க்காமல்
விஞ்ஞான ரீதியாக
பாருங்கள் என்று
தன் பேச்சை
துவங்கினார்.

ஒன்று பரிணாமத்தில்
பல்வேறு மாற்றங்களை
அடைந்து
முழுமை அடைகிறது

பரிணாமத்தில் முழுமை
அடைந்த ஒன்று
தன் நிலையில்
முழுமை
அடைந்த பிறகு
அதாவது இறுதிநிலை
அடைந்து விட்ட பிறகு
பரிணாமம் என்பது
கிடையாது

ஒரு மாமர
விதையை
விதைத்தால்
அந்த விதை
மாஞ் செடியாகி,
மா மரமாகிறது
மாமரத்தில்
பூ உற்பத்தியாகி,
பூ - மாங்காயாகி,
மாங்காய் - மாம்பழம் ஆகி
பல்வேறு மாற்றங்களை
அடைகிறது
மாமர விதையின்
இறுதி வடிவம்
மாம்பழம் என்பதால்
அதற்கு மேல்
பரிணாமம் என்ற
ஒன்று கிடையாது

ஒன்று பரிணாமத்தில்
பல்வேறு மாற்றங்களை
அடைந்து முழுமை
அடைந்த பின்பு
பரிணாமம் என்பது
கிடையாது

தாயின் வயிற்றில்
பிஷப் வில்பர்போஸ்
ஐந்து நாள்
பிண்டமாயிருக்கும் போது
அந்தப் பிண்டம்
ஒரு பென்சிலின்
முனையளவு கூட
இருந்திருக்காது
அதுவே
பத்து மாதத்திற்குப்
பின் ஒரு முழு
உருவமாய் வளர்ச்சி
பெற்ற பின்பு
தான் இவர்
பிறந்திருக்கிறார்
முழு வளர்ச்சி
அடையாமல்
பிறக்கவிலை,

கரு உருவாகி
பல்வேறு மாற்றங்களை
அடைந்து குழந்தை
என்ற முழுமை
நிலையை அடைந்த
பின்பு பரிணாமம்
முடிவடைந்து விடுகிறது
பரிணாமம் என்பது
முடிவடைந்த பின்னர்
தான் அவர்
பிறந்தார்
என்பதை சிறிதும்
சிந்திக்காமல்
பேசி விட்டார்

எந்த ஒன்று
முழுமை அடைந்து
விட்டதோ
அந்த ஒன்று
அதற்கு மேல்
மாற்றமடையாது
மனிதன் என்பவன்
முழுமையான வளர்ச்சி
அடைந்தவன்
அதனால் பரிணாமத்தில்
மனிதனுக்கு பின்
எதுவும் தோன்றவில்லை

என் முன்னோர்கள்
குரங்காக இருந்தார்கள்
என்று கூறிக்
கொள்வதில்
எனக்கு சிறிதளவு கூட
தயக்கம் இல்லை
ஆனால் பிஷப்
வில்பர்போர்ஸின்
பரம்பரை என்று
என்னைக்
கூறிக்கொள்ளத் தான்
நான் பெரிதும்
வெட்கமடைகிறேன்
என்றார்

ஹக்ஸ்லி பேசி
முடித்து விட்டு
திரண்டு இருந்த
மக்கள் கூட்டத்தைப்
பார்த்தார்

சார்லஸ் டார்வினை
ஆதரிப்பவர்கள்
சார்லஸ் டார்வினை
எதிர்ப்பவர்கள்
என்ற இரண்டு
நிலையிலேயே மக்கள்
பிரிந்து நின்று
அவர்களுடைய
பேச்சை கேட்க
குழுமியிருந்ததால்
மூன்றாவதாக
தனியாக நின்று
தீர்ப்பு சொல்வதற்கு
யாரும் இல்லை

டார்வினின்
கண்டுபிடிப்புக்கு
ஆதரவாகவும்
டார்வினின்
கண்டுபிடிப்புக்கு
எதிராகவும்
இருவேறுபட்ட
எண்ணங்களைக்
கொண்ட
பிரிவினரிடையே
நடைபெற்ற
விவாதத்தில்
மக்கள் யாருடைய
பக்கம் இருந்தார்கள்
யாருடைய
கருத்துக்கு
ஆதரவாக
இருந்தார்கள்
யாருடைய கருத்தை
உண்மை என்று
ஏற்றுக்
கொண்டார்கள்
என்பதை இனி
பார்ப்போம்

--------- இன்னும் வரும்
--------- 10-09-2018
/////////////////////////////////////