பரம்பொருள்-பதிவு-99
“யாருக்கும்
பயப்படாமல் 
அரவான்
பேசிய 
அர்த்தம்
நிறைந்த 
வாத்தைகளைக்
கொண்ட 
பேச்சைக்
கேட்ட 
இந்திரன்
அவையில் 
உள்ளோர்
அனைவரும் 
அரவானின்
மயக்கும் 
பேச்சைக்
கேட்டு 
பேசுவதற்கு
வார்த்தை 
எதுவும்
இல்லாமல் 
இருந்த
போதும் 
தங்களையும்
அறியாமல் 
எழுந்து
நின்றனர் “
“அர்ஜுனன்
எழுந்து
நின்று 
மகனே
! என்று 
அழைத்துக்
கொண்டே 
அரவானை
நோக்கி
சென்று 
கொண்டிருந்தார்
; 
அரவானும்
தன் 
தந்தை
அர்ஜுனனைக் 
கண்ட
மகிழ்ச்சியில் 
அர்ஜுனனை
நோக்கி
ஓடினான்  
தன்னுடைய
தந்தை
அர்ஜுனன் 
காலில்
விழுந்து 
வணங்கினான்
அரவான்;”
அரவான்
: 
“என்னை
ஆசிர்வதியுங்கள்
தந்தையே
! “
அர்ஜுனன்
:
“எல்லா
நலமும் 
பெற்று
வளமுடன் 
வாழ்க
மகனே !
(என்று
சொல்லிக் 
கொண்டே
காலில் 
விழுந்த
அரவானை 
தூக்கி
நிறுத்தி 
இறுக
தழுவிக் 
கொண்டான்
அர்ஜுனன்)
;”
“உன் அன்னை
எப்படி
இருக்கிறார் ?”
அரவான்
:
“தங்கள்
நினைவாகவே 
இருக்கிறார்
; 
தங்களுக்காகவே
வாழ்ந்து
கொண்டிருக்கிறார்
; 
என்றேனும்
ஒரு 
நாள்
உங்களைக் 
காண
முடியும் 
என்ற
நினைப்பில் 
வாழ்ந்து
கொண்டிருக்கிறார்
;
தங்களைக்
காண்பதற்கு
காலம் 
வழி
ஏற்படுத்திக் 
கொடுக்கும்
என்ற 
நம்பிக்கையுடன்
உயிரை
உடலில்
வைத்துக் 
கொண்டிருக்கிறார்
; 
உங்களைத்
தவிர 
அவர்
வேறு
எதையும்
சிந்தனை 
செய்வதில்லை
; 
உங்களைப்
பற்றியே
பேசிக் 
கொண்டிருக்கிறார்
; 
உங்கள்
சிந்தனையிலேயே
காலத்தை
ஓட்டிக் 
கொண்டிருக்கிறார்
;”
அர்ஜுனன்
:
“உன்
அன்னை
பெண்களுக்குள்
தெய்வம்
;
காணக்கிடைக்காத
மாணிக்கம்
; 
மாசு
குறையாத
தங்கம்
; “
அரவான்
:
“ஆமாம்”
அர்ஜுனன்
:
“உன்
தாய் உன்னிடம் 
என்ன
சொல்லி 
அனுப்பினார்?”
அரவான்
:
“என்
தாய் போர் 
ஏற்படப்
போவதை
அறிந்து 
தந்தைக்கு
உதவியாக
இரு 
என்று
என்னை 
அனுப்பி
வைத்தார் ;
தந்தை
என்ன 
சொன்னாலும்
எதை 
செய்யச்
சொன்னாலும் 
தட்டாமல்
செய்ய 
வேண்டும்
என்று 
சொல்லி
என்னை 
அனுப்பி
வைத்தார் ;”
“என்னுடைய
தாயின் 
உத்தரவை
ஏற்று 
நான்
தங்களைக் 
காண
வந்தேன் ;
போரில்
உங்களுக்கு 
துணையாக
இருப்பேன் ; 
எத்துன்பம்
வரினும் 
உங்களை
விட்டு 
விலக
மாட்டேன் ;
நான்
தங்களுக்காக 
போர்
புரிய 
எனக்கு
அனுமதி 
வழங்க
வேண்டும் ;” 
அர்ஜுனன்
:  
“அரவானே!
நீ ! 
பாண்டவர்
சார்பாக
போரில் 
பங்கேற்பதைக்
கண்டு 
நான்
மனம் 
மகிழ்ச்சி
அடைகிறேன்
; 
போர்
நேரும் போது 
நீ
எங்களுக்கு 
உதவி
செய்வாயாக ;” 
அரவான்
:
“அப்படியே
ஆகட்டும்” 
“அர்ஜுனனும்
அரவானும்
பேசி
முடித்த
பின் 
அர்ஜுனனிடமிருந்து
விடை
பெற்றுச்
சென்ற
அரவானை
அர்ஜுனன்
மட்டுமல்ல
கிருஷ்ணனும்
அரவான்
செல்வதையே 
பார்த்துக்
கொண்டிருந்தார்
;”
----------
இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
----------
16-12-2019
//////////////////////////////////////////
