December 16, 2019

பரம்பொருள்-பதிவு-99


            பரம்பொருள்-பதிவு-99

“யாருக்கும் பயப்படாமல்
அரவான் பேசிய
அர்த்தம் நிறைந்த
வாத்தைகளைக் கொண்ட
பேச்சைக் கேட்ட
இந்திரன் அவையில்
உள்ளோர் அனைவரும்
அரவானின் மயக்கும்
பேச்சைக் கேட்டு
பேசுவதற்கு வார்த்தை
எதுவும் இல்லாமல்
இருந்த போதும்
தங்களையும் அறியாமல்
எழுந்து நின்றனர் “

“அர்ஜுனன்
எழுந்து நின்று
மகனே ! என்று
அழைத்துக் கொண்டே
அரவானை
நோக்கி சென்று
கொண்டிருந்தார் ;
அரவானும் தன்
தந்தை அர்ஜுனனைக்
கண்ட மகிழ்ச்சியில்
அர்ஜுனனை
நோக்கி ஓடினான்  
தன்னுடைய
தந்தை அர்ஜுனன்
காலில் விழுந்து
வணங்கினான் அரவான்;”

அரவான் :
“என்னை
ஆசிர்வதியுங்கள்
தந்தையே ! “

அர்ஜுனன் :
“எல்லா நலமும்
பெற்று வளமுடன்
வாழ்க மகனே !
(என்று சொல்லிக்
கொண்டே காலில்
விழுந்த அரவானை
தூக்கி நிறுத்தி
இறுக தழுவிக்
கொண்டான்
அர்ஜுனன்) ;”

“உன் அன்னை
எப்படி இருக்கிறார் ?”

அரவான் :
“தங்கள் நினைவாகவே
இருக்கிறார் ;
தங்களுக்காகவே
வாழ்ந்து
கொண்டிருக்கிறார் ;
என்றேனும் ஒரு
நாள் உங்களைக்
காண முடியும்
என்ற நினைப்பில்
வாழ்ந்து
கொண்டிருக்கிறார் ;
தங்களைக்
காண்பதற்கு காலம்
வழி ஏற்படுத்திக்
கொடுக்கும் என்ற
நம்பிக்கையுடன்
உயிரை
உடலில் வைத்துக்
கொண்டிருக்கிறார் ;
உங்களைத் தவிர
அவர் வேறு
எதையும் சிந்தனை
செய்வதில்லை ;
உங்களைப்
பற்றியே பேசிக்
கொண்டிருக்கிறார் ;
உங்கள்
சிந்தனையிலேயே
காலத்தை ஓட்டிக்
கொண்டிருக்கிறார் ;”

அர்ஜுனன் :
“உன் அன்னை
பெண்களுக்குள்
தெய்வம் ;
காணக்கிடைக்காத
மாணிக்கம் ;
மாசு குறையாத
தங்கம் ; “

அரவான் :
“ஆமாம்”

அர்ஜுனன் :
“உன் தாய் உன்னிடம்
என்ன சொல்லி
அனுப்பினார்?”

அரவான் :
“என் தாய் போர்
ஏற்படப்
போவதை அறிந்து
தந்தைக்கு
உதவியாக இரு
என்று என்னை
அனுப்பி வைத்தார் ;
தந்தை என்ன
சொன்னாலும் எதை
செய்யச் சொன்னாலும்
தட்டாமல் செய்ய
வேண்டும் என்று
சொல்லி என்னை
அனுப்பி வைத்தார் ;”

“என்னுடைய தாயின்
உத்தரவை ஏற்று
நான் தங்களைக்
காண வந்தேன் ;
போரில் உங்களுக்கு
துணையாக இருப்பேன் ;
எத்துன்பம் வரினும்
உங்களை விட்டு
விலக மாட்டேன் ;
நான் தங்களுக்காக
போர் புரிய
எனக்கு அனுமதி
வழங்க வேண்டும் ;”

அர்ஜுனன் : 
“அரவானே! நீ !
பாண்டவர்
சார்பாக போரில்
பங்கேற்பதைக் கண்டு
நான் மனம்
மகிழ்ச்சி
அடைகிறேன் ;
போர் நேரும் போது
நீ எங்களுக்கு
உதவி செய்வாயாக ;”

அரவான் :
“அப்படியே ஆகட்டும்”

“அர்ஜுனனும்
அரவானும் பேசி
முடித்த பின்
அர்ஜுனனிடமிருந்து
விடை பெற்றுச்
சென்ற அரவானை
அர்ஜுனன் மட்டுமல்ல
கிருஷ்ணனும்
அரவான் செல்வதையே
பார்த்துக்
கொண்டிருந்தார் ;”

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 16-12-2019
//////////////////////////////////////////