July 28, 2012

இயேசுகிறிஸ்து-இடைக்காட்டுச்சித்தர்-வானியல்-பதிவு48

      

        இயேசு கிறிஸ்து-இடைக்காட்டுச் சித்தர்-வானியல்-பதிவு-48
               
          “”பதிவு நாற்பத்திஎட்டை விரித்துச் சொல்ல  
                                ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம் பண்ண வேண்டுமென்று அவரை வேண்டிக் கொண்டான் ; அவர்  அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார்.”
                                                                ----லுhக்கா - 7 : 36
அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர்; பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து , ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டு வந்து ,”
                                                                ----லுhக்கா - 7 : 37
அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுது கொண்டு , அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து , தன் தலைமயிரினால் துடைத்து  , அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து , பரிமளதைலத்தைப் பூசினாள்.
                                                                ----லுhக்கா - 7 : 38
அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்ட போது , இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார் ;  இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.
                                                                ----லுhக்கா - 7 : 39
இயேசு அவனை நோக்கி : சீமோனே உனக்கு நான் ஒரு காரியம் சொல்ல வேண்டும் என்றார் . அதற்கு அவன்  : போதகரே , சொல்லும் என்றான்.
                                                                ---லுhக்கா - 7 : 40
அப்பொழுது அவர் ; ஒருவனிடத்தில் இரண்டு பேர்; கடன்பட்டிருந்தார்கள் ; ஒருவன் ஐந்நுhறு வெள்ளிக்காசும் , மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்க வேண்டியதாயிருந்தது.
                                                                ----லுhக்கா - 7 : 41
கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது , இருவருக்கும் கடனை மனித்து விட்டான். இப்படியிருக்க அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார்.”
                                                                ----லுhக்கா - 7 : 42
சீமோன் பிரதியுத்தரமாக : எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான் ; அதற்கு அவர் : சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி  ,”
                                                                ----லுhக்கா - 7 : 43
ஸ்திரீயினிடமாய்த் திரும்பி , சீமோனை நோக்கி : இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயே ; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன் , நீ என் கால்களுக்குத் தண்ணீர்  தரவில்லை , இவளோ கண்ணீரினால் என் கால்களை நனைத்து , தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.
                                                                ----லுhக்கா - 7 : 44
நீ என்னை முத்தஞ்செய்யவில்லை , இவளோ , நான் உட்பிரபிரவேசித்தது முதல் , என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள் .”
                                                                ----லுhக்கா - 7 : 45
நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை , இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள்.
                                                                ----லுhக்கா - 7 : 46
ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன் ; இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது ; இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே , எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப் படுகிறதோ , அவன் கொஞ்சமாய் அன்பு கூருவான் என்று சொல்லி; ”
                                                                ----லுhக்கா - 7 : 47
அவளை நோக்கி : உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
                                                                ----லுhக்கா - 7 : 48
அப்பொழுது கூடப் பந்தியிருந்தவர்கள் : பாவங்களை மன்னிக்கிற இவன் யார் என்று தங்களுக்குள்ளே சொல்லிக் கொண்டார்கள்.
                                                                ----லுhக்கா - 7 : 49
அவர்  ஸ்திரீயை நோக்கி : உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சாமாதானத்தோடே போ என்றார் .”
                                                                ----லுhக்கா - 7 : 50
கனவு என்பது வேறு
கற்பனை என்பது வேறு

விழிப்பற்ற நிலையில் வருவது கனவு
விழிப்பு நிலையில் வருவது கற்பனை

கற்பனை நம் ஆளுகைக்கு உட்பட்டது
கனவு நம் ஆளுகைக்கு உட்பட்டதல்ல
நிறைவேற்ற வேண்டியவைகளை ,
இன்பத்தின் சுவைகளை ,
அழகின் இனிமைகளை ,
வெற்றியின் இலக்கணங்களை ,
ஆசைகளின் உருவங்களை ,
சிந்தனையின் பிம்பங்களை ,
எதிர்கால நினைவுகளை ,
நிகழ்கால நடைமுறைகளை ,
அறிவின் விளக்கங்களை ,
விஞ்ஞானத்தின் செயல்களை ,
கண்டுபிடிப்பின் முதன்மைகளை ,
உயர்வின் அரியணைகளை ,
செல்வத்தின் சாளரங்களை ,
பொக்கிஷத்தின் சாவிகளை ,
புதையலின் சூட்சுமங்களை ,
முன்னேற்றத்தின் முழுமைகளை ,

கற்பனையில்  கோர்வையாக எந்த வகையில்
எந்த விதத்தில் - என்று வரிசைப் படுத்தி
கற்பனை செய்ய முடியும்.
ஏனென்றால் , கற்பனையை நாமே உருவாக்கலாம்
ஆனால் கனவை நம்மால் உருவாக்க இயலாது .

நம் எண்ணத்திற்கு ஏற்ற வகையில் ,
நம் உணர்வுக்கு உகந்த வகையில் ,
நம் இன்பத்திற்கு பொருத்தமான வகையில் ,
நம் நடைமுறை வாழ்க்கைக்கு தகுந்த வகையில் ,
கனவு காண இயலாது .
ஏனென்றால் , கனவு நம் ஆளுகைக்கு உட்பட்டதல்ல
கனவு நம் ஆளுகைக்கு அப்பாற்பட்டது  .
கனவு விழிப்பு நிலையில் உருவாவதல்ல
கனவு விழிப்பற்ற நிலையில் வருவது.
கனவு எண்ணப்படி வருவதல்ல;
கனவு முறைப்படுத்தப்பட்டபடி வருவதல்ல ;
கனவு வரிசைப்படுத்தப்பட்டபடி வருவதல்ல ;
கனவு கோர்வையாக வருவதல்ல ;
கனவு முறைப்படுத்தப்பட்டபடி வருவதல்ல ;
முன்னுக்கு பின் முரணாகவும்
ஓன்றுக்கொன்று தொடர்பு அற்ற நிலையிலும்
தொடர்ச்சி இல்லாத நிலையிலும்
புரிந்து கொள்ள முடியாத வகையிலும் வருவது கனவு.
கனவு நம் ஆளுகைக்கு உட்படாத காரணத்தால்
நாம் என்ன நினைக்கிறோமோ அதை கனவில் கொண்டு வர முடியாது.
ஆனால் கற்பனையில் நாம் என்ன செய்ய வேண்டும்
என்று நினைக்கிறோமோ அதை கொண்டு வர முடியும்
ஏனென்றால் கற்பனை நம் ஆளுகைக்கு உட்பட்டது.

கனவு நிலையில் இருப்பவனால் சிந்திக்க முடியாது
சிந்தனை கதவுகள் தட்டப்படும் போது
அன்பு கருணை நெஞ்சில் ஊற்றெடுக்கும்
அன்பின் இலக்கணங்களை
கருணையின் திருஉருவங்களை
இரக்கத்தின் பிம்பங்களைக் காண முடியும் .

அன்பே ! உருவான இயேசு கிறிஸ்து
பரிசேயன் ஒருவன் அழைப்பின் பேரில்
உணவு உண்பதற்கு பரிசேயன் வீட்டில் பிரவேசித்து பந்தியிருந்தார்.
மேரி  மேக்தலினா - ஒரு விலை மாது
இயேசு பரிசேயன் வீட்டில் பந்தியிருக்கிறதை அறிந்து
பரிமளத் தைலம் கொண்டு வந்தாள் .
அவருடைய கால் மாட்டில் பின்புறமாக இருந்து அழுது கொண்டே
அவர்  பாதங்களின் மேல் கண்ணீர் பொழிந்து
அவற்றைக் கூந்தலால் துடைத்து
முத்தமிட்டு அப்பாதங்களில் தைலம் பூசினாள் .

அவரை அழைத்த பரிசேயன் இதைக் கண்டு இவர்
இறை வாக்கினராய் இருந்தால் தம்மைத் தொடும்
இவள் யார்  எத்தகையவள் என்று அறிந்திருப்பார்.
இவளோ பாவி ,
தவறான வழி நடப்பவள் ,
தவறான காரியங்களைச் செய்பவள் ,
தவறான நடைமுறைகளை பின்பற்றுபவள் ,
தவறை கடைப்பிடிப்பவள் ,
இத்தகைய தன்மை கொண்டவளை ,
இத்தகைய குணங்களை கொண்டவளை ,
இயேசு ஒன்றுமே சொல்லவில்லை .
அவள் செய்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
முகம் சுளிக்கவில்லை
கோபக் கனலை வீசவில்லை என்று
தனக்குள்ளே சொல்லிக் கொண்டான் .

அவனுடைய மனநிலையை உணர்ந்து கொண்ட இயேசு
அவனுக்கு பதிலளிக்கும் வகையில்    
இயேசு அவனை நோக்கி சீமோனே
நான் உனக்கு ஒன்று சொல்ல வேண்டும் என்று கூற ,
அவனும் போதகரே சொல்லும் என்றான்.
உள்ளே இயேசுவை தவறாக நினைத்துக் கொண்டு
வெளியே இயேசுவை மதிப்பது போல்
மரியாதை செய்வது போல் காட்டிக் கொண்டு
போதகரே சொல்லும் என்றான் .

இயேசு சொல்ல ஆரம்பித்தார்  கடன் கொடுப்பவன் ஒருவனுக்கு
கடன்காரர்  இருவர்  இருந்தனர்.
ஒருவன் ஐநுhறு வெள்ளிக் காசும் , மற்றவன்
ஐம்பது வெள்ளிக் காசும் கடன்பட்டிருந்தான் .
கடனைத் திருப்பிக் கொடுக்க அவர்களால் முடியாமற் போகவே
கடன் கொடுத்தவன் இருவர்  கடனையும் மன்னித்து விட்டான் .
அவர்களுள் யார் கடன் கொடுத்தவனுக்கு அதிகமாக அன்பு செய்வான்?
யாருக்கு அதிக கடனை மன்னித்தானோ?”
அவன் தான் என்று நினைக்கிறேன் என்றான் சீமோன் .
நீர்  சொன்னதே சரி  என்றார்  இயேசு .

அவள் என் மேல் கொண்ட அன்பை ,
என் மேல் கொண்ட நம்பிக்கையை ,
என் மேல் வைத்த விசுவாசத்தை ,
கள்ளங் கபடமில்லாமல்
யாரேனும் திட்டுவார்களா
யாரேனும் எதிர்ப்பு தெரிவிப்பார்களா
யாரேனும் மறுப்பு காட்டுவார்களா
யாரேனும் தகாத வார்த்தைகளை கூறுவார்களா
யாரேனும் அவ மரியாதை செய்வார்களா
யாரேனும் மனதை புண்படுத்துவார்களா
யாரேனும் வருத்தப்பட வைப்பார்களா
என்று நினையாமல் என் மேல் உண்மையான அன்பு கொண்டு
கண்ணீரினால் என் கால்களை நனைத்து
தன் தலை மயிரினால் அவைகளைத் துடைத்தாள் .
நீயோ என் கால்களுக்கு தண்ணீர்  தரவில்லை .

நான் உள்ளே பிரவேசித்தது முதல்
என் பாதங்களை முத்தஞ் செய்தாள்
நீயோ முத்தஞ் செய்யவில்லை .

இவள் என் பாதங்களுக்கு பரிமளத் தைலம் பூசினாள்
நீயோ என் தலைக்கு எண்ணெய் பூசவில்லை
அவள் என் மேல் கொண்ட உண்மையான அன்பை
துhய்மையான அன்பை
களங்கமற்ற அன்பை
தன் செய்கையின் மூலம் வெளிப்படுத்தினாள் .
அதனால் நான் உனக்குச் சொல்வதாவது
அவள் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன .
அவள் காட்டியே பேரன்பே அதற்குச் சான்று    
குறைவாக மன்னிப்பு பெறுபவனோ
குறைவாக அன்பு செய்கிறான் என்றார்.

நான் உனக்குச் சொல்கிறேன் அவள்
அதிக அளவு என்னை மிகவும் நேசித்தாள்
குறைந்த அளவு நேசித்தாலும்
சிறிதளவாவது மன்னிப்பு கிடைக்கும்
ஆனால் அவள் அதிக அளவு நேசித்தாள் என்றார் .

பின் அவளை நோக்கி உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்றார் .
இயேசு உன் பாவங்கள் போக இதைச் செய்
அதைச் செய் என்று சொல்லவில்லை.
உன் செயலே உன்னை இன்னார்  என்று காட்டி விட்டது .
ஆதரவற்றவள் ; சமுதாயத்தால் கைவிடப்பட்டவள்;
சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவள் ;
சமுதாய தாக்குதலுக்கு உட்பட்டவள் ;
சமுதாய அவமதிப்புக்கு ஆளாக்கப்பட்டவள் ;
மனவேதனைக்கு தள்ளப்பட்டவள் ;
என்று உன் செயல் காட்டிவிட்டது .
நீ பாவம் செய்திருந்தாலும் உன் அன்பு பரிசுத்தமானது
உனது அன்பே உன் புறம் அழுக்காக இருந்தாலும்
களங்கப்பட்டு இருந்தாலும்
அகம் துhய்மையாக களங்கமற்று இருப்பதைக் காட்டுகிறது
ஆகவே உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்றார் .

பாவங்களை மன்னிக்கும் இவர்  யார் என்று
அவரோடு பந்தியிருந்தவர்கள் தங்களுக்குள்ளே
சொல்லிக் கொண்டார்கள் .
இயேசுவால் இது நிகழும் என்று
பந்தியிருந்தவர்களுக்கு தெரியவில்லை
இது இயேசுவால் இது நிகழும் என்று அந்த ஸ்திரீ
விசுவாசம் கொண்ட காரணத்தாலேயே
சந்தேகம் துளியும் இல்லாமல்
உண்மையான அன்பு செய்த காரணத்தினாலேயே
இயேசு அதை உணர்ந்து உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்றார்.

உனது விசுவாசம் உன்னை மீட்டது
உனது விசுவாசம் உன்னை இரட்சித்தது
சாமாதானத்தோடே போ என்றார்.

உன்னுடைய விசுவாசம் , உன்னுடைய நம்பிக்கை ,
என் மேல் நீ வைத்த நம்பிக்கை ,
உனது நம்பிக்கை உன்னை காப்பாற்றி விட்டது என்றார்  இயேசு .
ஆகவே மனக்குழப்பம் கொள்ளத் தேவையில்லை ,
நிம்மதியான மனதுடன் , அமைதியான நெஞ்சத்துடன் ,
குழப்பமில்லா இதயத்துடன் , சமாதானமாய்ப் போ என்றார் .

ஆண்டவர்  மேல் விசுவாசமும் ,உண்மையான அன்பும் ,நம்பிக்கையும்,
கொள்பவர்களால் மட்டுமே ஆண்டவர்  அருளைப் பெற முடியும் .

ஆண்டவர்  ஆசி பெற முடியும் என்பது
இயேசுவின் செயல் விளக்கிக் காட்டுகிறது .
ஆண்டவர்  மேல் உண்மையான நம்பிக்கை
வைப்பவர்களால் மட்டுமே
தனக்கு தேவையானவைப் பெற்று
இன்புற்று இருக்க முடியும் என்கிறார்  இயேசு .



இடைக்காட்டுச் சித்தர் :

      “வானியல் போல வயங்கும் பிரமமே
                     சூனிய மென்றறிந் தேத்தாக்கால்
        ஊனிய லாவிக் கொருகதி யில்லையென்
                    றோர்ந்துகொள் ளுவீர்நீர்  கோனாரே
                    -----இடைக்காட்டுச் சித்தர்---பெரியஞானக் கோவை---

கற்பனை எங்கு ஏற்படுகிறது ;
எதன் அடிப்படையில் ஏற்படுகிறது ;
எதனை அடைய ஏற்படுகிறது ;
எதனைப் பொறுத்து ஏற்படுகிறது ;
எப்படிப் பட்ட நிலையில் ஏற்படுகிறது ;
நல்லவைகளைக் கொண்டு ஏற்படுகிறதா ;
அல்லவைகளைக் கொண்டு ஏற்படுகிறதா ;
முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு ஏற்படுகிறதா ;
வெற்றியை இலக்காக வைத்து ஏற்படுகிறதா ;
என்பதைப் பொறுத்து கற்பனையின் தரம் இருக்கும் .

கற்பனையை குறிப்பிட்ட எல்லைக்குள்ளும் அடக்கலாம்
எல்லையற்ற நிலையிலும் பரந்து விரிந்த நிலையிலும்
கற்பனை சிறகை விரிக்கலாம் .

குழந்தையின் கற்பனை இனிப்பு பொருட்களின் மீது இருக்கும் ;
தாயின் கற்பனை குழந்தையின் முன்னேற்றத்தின் மீது இருக்கும் ;
தந்தையின் கற்பனை குடும்பத்தின் உயர்வின் மீது இருக்கும் ;
இளைஞனின் கற்பனை உயர்ந்த வேலையின் மீது இருக்கும் ;
தொழிலாளியின் கற்பனை அமைதியான வாழ்வின் மீது இருக்கும்;     
போராளியின் கற்பனை வெற்றியின் மீது இருக்கும் ;
அரசியல்வாதியின் கற்பனை ஆட்சியின் மீது இருக்கும் ;
ஆணின் கற்பனை புதுமைகளின் மீது இருக்கும் ;
பெண்ணின் கற்பனை மாற்றங்களின் மீது இருக்கும் ;

சிந்தனையின் வேகத்தைப் பொறுத்து
உயர்வின் இலக்கைப் பொறுத்து
கற்பனையின் எழுச்சி இருக்கும் .

ஒரு தலை ராகம் மீட்டிய ஒருமை ராகம்
கற்பனைக் கோட்டைக்குள்
கனலாக கொதித்த போது ,
இதயராகமாக
இதயத்தில் நின்ற போது ,
போகாத இடந்தன்னில்
போகும் வழி ஆகியதால் ,
சேராத இடந் தன்னில்
சேரும் வகை ஆகி விட்டால் ,
முடியாத நினைவும்
பாடாத கனவும்
சேராத சொர்க்கமும்
எழுந்து தான் நிற்கும் !
நான் மீட்டியதை - நீ அறியவில்லை
நீ மீட்டியதை - நான் அறியவில்லை
தன்னந்தனியாத
தனித்த இடந்தன்னில்
தனிமையாய் - நாம் மீட்டியது
அநாதை முத்திரை குத்திக் கொண்டது .
சாகாத வரம் தான் - அது
பெற்று விடுமானால்
அன்புக்கு ஏது பெருமை?
உயிருக்கு ஏது பெருமை?
விடியும் என்று நினைத்துக் கொண்டு
விடியா திசை நோக்கி
விடியும் என்று காத்திருப்பதால்
விடிவுக்கு ஏது விடிவு?
மறக்க முடியுமா……….?
மறந்து விடக் கூடிய நினைவா?
மறக்கக் கூடிய நினைவென்றால்
மறந்து விடலாம்.
மறந்து விட முடியுமா? இதை
மறந்து விடும் அளவுக்கு
இது என்ன
காம வேள்வில் பூத்த
கட்டிலறைக் காட்சியா?
முத்துக் குளிப்பு நடத்திய
முத்தத்தின்
முதலிரவு நினைவா?
கரங்களின் தழுவலில் பூத்த
கனல் நெருப்பின்
காதல் வேகமா?
இவையனைத்தும் தான்
கற்பனையில் பூத்த
காதலின் இலக்கணம் என்றால்
உள்ளின் உண்மை உருவகம்
உருவகிக்க முடியாதது தான் !
அன்பின் துhய்மைகளை
அனுபவிக்காதவர்கள் தீட்டிய
ஆளுமைகளை
ஆளாக்க முடியாதவர்கள்
ஆக்கி வைத்தவை இவை ! எவை !
இன்பத்தின் உறைவிடம்
அன்பின் பிறப்பிடம்
பிறப்பில்லா பிறப்பு
பிறப்புக்கு உண்டென்றால்
பிறப்பு என்ற ஒன்று பிறப்புக்கு ஏது ?
இறப்பெல்லாம் பிறப்பாகி விட்டால்
இறப்புக்கு ஏது இறப்பு ?
இறவாப் புகழுடன்
இன்பமுடன் வாழ வேண்டுமானால்
உள்ளத்தின் உரு தெரிய வேண்டும்
உண்மையின் பொருள்
உணர வேண்டும் .
காதல் அன்பாகி விட்டால்
அன்பு காதலாகி விடும்
காதலுக்கும் அன்புக்கும்
வேறுபாடு தெரியா விட்டால்
வேற்றுமையின் வேறுபாடு
எங்கே தெரியும் !
முடிவு தேடுபவன்
முடிவு நிலை அறியாதவன்
முடிவின் பொருள் உணராதவன்
இவை தான்
இறுதி என்று நினைப்பவன்
இல்வாழ்க்கையின்
இன்பம் அறியாதவன்
இல்வாழ்வு இன்பத்தில்
இன்ப துhரிகை
தீட்டியவர்கள் காட்டிய
தீந்தமிழ் இலக்கணத்தை
உணர்ந்தவர்கள் உரைத்தவற்றை
உள்ளத்தில் உருவகித்தால்
உவமையின்
உண்மை வாழ்வு தெரியும் !
உண்மையை உணர்ந்தவர்களால் மட்டுமே
வாழ்வின் ரகசியத்தை உணரத் துடிப்பவர்களால் மட்டுமே
ஆதி - அந்தத்தை அறிய துடிப்பவர்களால் மட்டுமே
பிறப்பு - இறப்பு ரகசியத்தை கட்டவிழ்க்க நினைப்பவர்களால் மட்டுமே
ஆண்டவனை நம்புவர்களால் மட்டுமே
ஆண்டவன் படைத்த படைப்பை ஏற்றுக் கொள்பவர்களால் மட்டுமே
ஆண்டவன் அருளைப் பெற முடியும்.

5 பூதங்கள்
9 கிரகங்கள்
12 வீடுகள்
27 நட்சத்திரங்கள்
108 பாதங்கள்
ஆகியவற்றைத் தன்னில் கொண்டு
சக்தி களமாக
பேரியக்க மண்டலமாக
இயக்க நிலையாக
இயங்கு ஒழுங்கு மாறாமல்
இயங்கி கொண்டிருப்பது பிரம்மமே .
பிரம்மம் இயக்க நிலைக்கு வரும் போது
சக்தி களம் என என்று பெயரிட்டு அழைக்கப் படுகிறது .

பிரம்மம் அமைதி நிலையில் இருக்கும் போது
அமைதியாக இருக்கும் போது
சிவகளம் , சுத்தவெளி , சூன்யம் எனப்படுகிறது .
சிவகளமே - சக்திகளமாகவும்
இருப்பு நிலையே - இயக்க நிலையாகவும் மாற்றமடைகிறது .

இருப்பு நிலை - இயக்க நிலையாக
மாற்ற மடைந்து பரிணத்து நின்றாலும்
இருப்பு நிலையில் உள்ளவைகளே
இயக்க நிலையில் பிரவகித்து நிற்கும்
பெயர்  தான் மாறுபடுமே ஒழிய பண்பு மாறாது .

இருப்பு நிலை அசைந்தால் இயக்க நிலை
இயக்க நிலை நின்றால் இருப்பு நிலை
இருப்புக்குள் இயக்கமும் - இயக்கத்திற்குள் இருப்பும் இருக்கிறது .
இதனை ஆண்டவர்  அருளால் உணரப் பெற்றவர்களால் மட்டுமே
தான் அவனாக மாறி தன்னை அறிய முடியும் .
தன் தலைவனை அறிய முடியும் .
தன்னை அறியாதவனால் தன் தலைவனை அறிய முடியாது .
தான் அவனாக மாறியவனுக்கு பிறப்பு - இறப்பு கிடையாது
தான் அவனாக மாறாதவனுக்கு பிறப்பு - இறப்பு உண்டு
கர்ம வினை உண்டு பாவ - புண்ணியம் உண்டு .

கடவுளின் அருளால் கடவுளுடன் இணைந்தவனுக்கு
இருப்பு நிலையே இயக்கத்தில் இயக்க நிலையாகவும்
இயக்க நிலையே ஒடுக்கத்தில் இருப்பு நிலையாகவும் இருக்கிறது
என்பதை உணர்ந்து பிறப்பை - இறப்பை அறுத்து
கர்ம வினையை எரித்து
உயர்  நிலை அடைய முடியும் .

அத்தகைய நிலையை எட்ட முடியாதவனுக்கு
உயிரானது உடல் என்ற கூட்டிற்குள் மாட்டிக் கொண்டு
பிறப்பு - இறப்பு என்ற சுழற்சியில் சிக்கிக் கொண்டு
மனித வாழ்க்கையில் மாட்டிக் கொண்டு தள்ளாத சோகத்தில்
தளாத துன்பத்தில் மாட்டிக் கொண்டு அல்லாட வேண்டியிருக்கும்
என்கிறார்  இடைக்காட்டுச் சித்தர் .



இயேசு கிறிஸ்து - இடைக்காட்டுச் சித்தர்:

இயேசு ,
ஆண்டவரின் மேல் நம்பிக்கை வைத்தால் 
ஆண்டவரின் அருளைப் பெறலாம்
என்பதை தன் செயலின் மூலம் எடுத்துக் காட்டி
ஆண்டவரை நம்புகிறவர்களுக்கு
ஆண்டவரை விசுவாசிக்கிறவர்களுக்கு
அவருடைய அருள் கிடைக்கும் என்பதை விளக்கினார் .

அவ்வாறே ,
இடைக்காட்டுச் சித்தரும் ,
கடவுள் மேல் உண்மையான நம்பிக்கை வைத்தால்
கடவுள் அருளைப் பெற்று கடவுளை உணர்ந்து
கடவுளுடன் இணையலாம் என்கிறார் .


               “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                 போற்றினேன் பதிவுநாற்பத்திஎட்டு ந்தான்முற்றே “”