July 26, 2022

ஜபம்-பதிவு-821 (சாவேயில்லாத சிகண்டி-155)

 ஜபம்-பதிவு-821

(சாவேயில்லாத

சிகண்டி-155)

 

கர்ணனைக்

கொல்வேன்

என்று அர்ச்சுனன்

சபதம் செய்து

இருக்கிறான்

 

சகுனியைக்

கொல்வேன்

என்று சகாதேவன்

சபம் செய்து

இருக்கிறான்

 

நீயும் பீஷ்மனைக்

கொல்வேன் என்று

சபதம் எடுத்து

அதற்காகவே

பிறந்திருக்கிறாய்

 

இவைகளை

அனைத்தும்

நடக்க வேண்டும்

என்றால்

போர் கண்டிப்பாக

நடந்து தானே

ஆக வேண்டும்

 

சிகண்டி :

ஏன் போர்

நடக்காமல்

இவைகள்

அனைத்தும்

நடக்காதா

 

துருபதன் :

நடக்காது

நடக்கவே நடக்காது

போர் நடக்காமல்

இவைகள் அனைத்தும்

நடப்பதற்கு

வாய்ப்பே இல்லை

 

நான் சொன்னவைகள்

அனைத்தையும்

ஒன்றுடன் ஒன்று

இணைத்துப்

பார்த்தாயானால்

ஒன்றுடன் ஒன்று

தொடர்பு கொண்டு

இருப்பது

தெரிய வரும்

 

ஒன்றுடன் ஒன்று

தொடர்பு கொண்டு

இருப்பது நடக்க

வேண்டும் என்றால்

அனைத்தையும்

கொண்டு ஒரு

நிகழ்ச்சி

நடந்து தானே

ஆக வேண்டும்

 

அந்த நிகழ்ச்சி தான்

பாண்டவர்களுக்கும்

கௌரவர்களுக்கும்

இடையே நடக்கப்

போகும் போர்

 

கிருஷ்ணனின்

தூது தோல்வியில்

தான் முடியப்

போகிறது

பாண்டவர்களுக்கும்

கௌரவர்களுக்கும்

போர் நடக்கத்

தான் போகிறது

 

சிகண்டி :

அப்படி நடந்தால்

எனக்கும் மகிழ்ச்சியே

அப்போது தான்

நான் போரில்

பீஷ்மனை

சந்திக்க முடியும்

பீஷ்மனை போரில்

எதிர்க்க முடியும்

பீஷ்மனுடன்

போரிட முடியும்

பீஷ்மனைக்

கொல்ல முடியும்

 

நான்

செல்கிறேன்

 

துருபதன் :

இப்போது

தானே வந்தாய்

இரண்டு நாட்கள்

ஓய்வு எடுத்து

விட்டு பிறகு

செல்லலாமே

 

நான் காலத்தோடு

போட்டி போட்டுக்

கொண்டு சென்று

கொண்டிருக்கிறேன்

நான் ஓய்வு

எடுத்தால் காலம்

என்னை

விட்டு விட்டு

நெடுந்தொலைவு

சென்று விடும்

 

ஓய்வு எடுப்பேன்

கண்டிப்பாக

ஓய்வு எடுப்பேன்

பீஷ்மனைக் கொன்ற

பிறகு கண்டிப்பாக

ஓய்வு எடுப்பேன்

 

என்று சொல்லி

விட்டு

அரண்மனையை

விட்டு

வெளியே வந்து

தன்னுடைய

குதிரையின்

மேல் ஏறி

அஸ்தினாபுரம்

நோக்கி சென்று

கொண்டிருந்தான்

சிகண்டி

 

மரணமற்றவனுக்கு

மரணத்தைப்

பரிசாக

தருவதற்காகச்

சென்று

கொண்டிருந்தான்

சிகண்டி

 

மரணமற்றவனுக்கு

மரணத்தை எப்படி

சிகண்டி

பரிசாகத் தருகிறான்

என்பதை அறிவதற்கு

ஆவலாக இருப்பவர்கள்

சிகண்டியைப்

பின் தொடருங்கள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----26-07-2022

-----செவ்வாய்க் கிழமை

 

//////////////////////////////////////////////

 

 

ஜபம்-பதிவு-820 (சாவேயில்லாத சிகண்டி-154)

 ஜபம்-பதிவு-820

(சாவேயில்லாத

சிகண்டி-154)

 

சிகண்டி :

போரா நடக்கப்

போகிறது

நீங்கள் படை

எடுத்துச்

செல்வதற்கு

 

துருபதன் :

போர் தான்

நடக்கப் போகிறது

 

அதற்கான

சூழ்நிலை தான்

இப்போது உருவாகிக்

கொண்டு இருக்கிறது

 

சிகண்டி :

எதை வைத்து

இப்படி

சொல்கிறீர்கள்

 

துருபதன் :

நடந்து

கொண்டிருக்கும்

நிகழ்வுகளை

வைத்துத் தான்

 

சிகண்டி :

நடந்து

கொண்டிருக்கும்

நிகழ்வுகளைப்

பார்த்தால்

அப்படி ஒன்றும்

தெரியவில்லையே

 

துருபதன் :

பாண்டவர்களுக்குரிய

பங்கைப் பெறுவதற்காக

பாண்டவர்கள் சார்பாக

கிருஷ்ணன்

அஸ்தினாபுரத்திற்கு

தூது செல்கிறார்

போர் நடக்காமல்

இருக்க வேண்டும்

என்பதற்காக

தூது செல்கிறார்

 

சிகண்டி :

கிருஷ்ணன்

சாமாதானத்

தூது தானே

செல்கிறார்

 

சமாதானத்தை

நிலை நாட்டுவதற்குத்

தானே செல்கிறார்

 

அமைதியைக்

கொண்டு

வருவதற்குத்

தானே செல்கிறார்

 

போரா நடக்கப்

போகிறது

பீஷ்மனைக்

கொல்வதற்கான

வாய்ப்பாக எடுத்துக்

கொள்வதற்கு

 

துருபதன் :

போர் தான்

நடக்கக் போகிறது

கண்டிப்பாக

நடக்கப் போகிறது

 

சிகண்டி :

போர் எப்படி

நடக்கும்

 

போர் நடப்பதற்கான

வாய்ப்பு எதுவும்

இருப்பதாக

எனக்குத்

தெரியவில்லையே

 

சமாதானத்

தூது அல்லவா

செல்ல  இருக்கிறார்கள்

சமாதானத்தை

நிலை நாட்டுவதற்கு

 

துருபதன் :

சமாதானப் பேச்சு

வார்த்தை நடந்தால்

சமாதானம்

வந்து விடுமா

 

எந்த சமாதானப்

பேச்சு வார்த்தை

சமாதானத்தில்

முடிந்து இருக்கிறது

போரில் தானே

முடிந்திருக்கிறது

 

துரியோதனன்

சமாதானத்திற்கு

ஒத்துக்

கொள்ளவே

மாட்டேன்

 

கிருஷ்ணன் பேசச்

செல்லும் சமாதானம்

தோல்வியில் தான்

முடியப் போகிறது

 

போர் கண்டிப்பாக

நடக்கத்

தான் போகிறது

 

சிகண்டி :

எப்படி இவ்வளவு

உறுதியாகச்

சொல்கிறீர்கள்

 

துருபதன் :

துரோணரைக்

கொல்ல வேண்டும்

என்பதற்காகவே

திருஷ்டத்யும்னன்

பிறந்திருக்கிறான்

 

துச்சாதனனின்

மார்பு இரத்தத்தை

தன் கூந்தலில்

பூசும் வரை

தன் கூந்தலை

முடிய மாட்டேன்

என்று திரௌபதி

சபதம்

செய்திருக்கிறாள்

 

துரியோதனன்

முதலிய

நூற்றுவரையும்

நான் போரில்

கொல்வேன் என்றும்

துச்சாதனனின்

மார்பைப் பிளந்து

இரத்தத்தைக்

குடிபேன் என்றும்

பீமன் சபதம்

செய்து இருக்கிறான்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----26-07-2022

-----செவ்வாய்க் கிழமை

 

//////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-819 (சாவேயில்லாத சிகண்டி-153)

 ஜபம்-பதிவு-819

(சாவேயில்லாத

சிகண்டி-153)

 

துருபதன் :

சிகண்டிநீ

என்னுடைய

இரத்தத்தில்

பிறந்தவன்

சிவனுடைய

அருளைப்

பெற்றவன்

 

அதனால் தான்

என்னுடைய அறிவு

நிகரற்ற வீரம்

எதையும்

சமாளிக்கும் திறமை

பிரச்சினையைக்

கண்டு பயப்படாமல்

இருக்கும் தைரியம்

பிரச்சினையை

எதிர் கொள்ளும்

புத்திசாலித்தனம்

யோசிக்கும் திறமை

ஆகிய அனைத்தும்

உன்னிடம் இருக்கிறது

                     

உன்னுடைய

தங்கை திரௌபதி

என்னுடைய

இரத்தத்தில் இருந்து

பிறந்தவள் அல்ல

நெருப்பில்

இருந்து பிறந்தவள்

அதனால் தான்

என்னுடைய அறிவு

நிகரற்ற வீரம்

எதையும்

சமாளிக்கும் திறமை

பிரச்சினையைக்

கண்டு பயப்படாமல்

இருக்கும் தைரியம்

பிரச்சினையை

எதிர் கொள்ளும்

புத்திசாலித்தனம்

யோசிக்கும் திறமை

ஆகிய எதுவும்

அவளிடம் இல்லை

 

அதனால் தான்

இப்போது

அவனமானப்பட்டு

நிற்கிறாள்

நாட்டை

இழந்து நிற்கிறாள்

கவலையுற்று

நிற்கிறாள்

எதையும்

தாங்கக் கூடிய

சக்தியில்லாமல்

நிற்கிறாள்

 

இப்போது தான்

அம்பை சொன்ன

ஒரு விஷயம்

என்னுடைய

நினைவுக்கு

வருகிறது

 

சிகண்டி :

அம்பை அப்படி

என்ன தான்

சொன்னாள்

 

துருபதன் :

ஒரு பெண்ணின்

கண்ணீருக்காக

படை எடுக்க

மாட்டேன் என்று

சொன்ன துருபதா

உன் குடும்பத்தில்

ஒரு பெண்

வடிக்கப் போகும்

கண்ணீருக்காக

நீ படை

எடுக்கும் போது

உன்

குடும்பத்திற்காகப்

படை எடுத்தாய்

என்று

இந்த உலகமே

உன்னை

கேவலமாகப்

பேசப் போகிறது

இந்த உலகம்

உன்னை

சுயநலக்காரன்

என்று எள்ளி

நகையாடப்

போகிறது

 

நீ அசிங்கப்பட்டு

அவமானப்பட்டு

தலைகுனியும்

காலம்

வரப்போகிறது

துருபதா

 

என்று அம்பை

சொன்னாள்

 

அவள் சொல்லியபடியே

இன்று என்னுடைய

மகள் திரௌபதி

வடிக்கும்

கண்ணீருக்காக

படை எடுக்கப்

போகிறேன்

என்பதை அறிந்து

இந்த உலகமே

என்னை

கேவலமாகக்

பேசுகிறது

 

சுயநலக்காரன்

என்கிறது

அசிங்கப்பட்டு

அவமானப்பட்டு

நிற்கக்கூடிய

சூழ்நிலையும்

உருவாகி

இருக்கிறது

 

அம்பை சொன்ன

அனைத்தும்

இப்போது நடந்து

கொண்டிருக்கிறது

 

சிகண்டி :

மகளின் கண்ணீரை

துடைப்பதற்காக

ஒரு தந்தை

செய்யும் செயலைச்

செய்வதற்கான

முயற்சியைத்

தானே நீங்கள் செய்து

கொண்டிருக்கிறீர்கள்

 

துருபதன் :

மகளின்

தந்தையாக

அல்ல

 

நாட்டின் மன்னனாக

இருந்து கொண்டு

அல்லவா

செயலைச் செய்து

கொண்டிருக்கிறேன்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----26-07-2022

-----செவ்வாய்க் கிழமை

 

//////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-818 (சாவேயில்லாத சிகண்டி-152)

 ஜபம்-பதிவு-818

(சாவேயில்லாத

சிகண்டி-152)

 

இத்தகைய

கோழைத்தனமானவர்களை

நாம் புறந்தள்ளி

விட வேண்டும்

அவர்களை மனித

இனத்தில் ஒருவராக

கணக்கில் எடுத்துக்

கொள்ளாமல் நாம்

நம்முடைய

கடமையைச்

செய்ய வேண்டும்

 

அப்போது தான்

நாம் நம்முடைய

கடமைகளை

முடிக்க முடியும்

 

துருபதன் :

உன்னுடைய

கடமை என்று

நீ சொல்வது

பீஷ்மனைக்

கொல்வதைப்

பற்றித் தானே

 

சிகண்டி :

ஆமாம்

 

துருபதன் :

ஆனால்

அதற்கான

வாய்ப்பு எதுவும்

இருப்பதாகத்

தெரியவில்லையே

 

வாய்ப்புக்காகக்

காத்திருக்கப் போவதில்லை

வாய்ப்பை உருவாக்கப்

போகிறேன் என்கிறாயா

 

சிகண்டி :

வாய்ப்பு என்பது

வாழ்க்கையில் எதிர்ப்பட

மட்டுமே செய்யும்

அதை நம்மால்

பயன்படுத்திக்

கொள்ளத் தான்

முடியுமே தவிர

நம்மால் உருவாக்க

முடியாது

 

துருபதன் :

வாய்ப்புக்காகக்

காத்திருக்காதே

வாய்ப்பை

உருவாக்கிக் கொள்

என்று

சொல்லப்படுகிறதே

 

சிகண்டி :

அது தவறாக

சொல்லப்பட்ட

வார்த்தை

 

அனுபவமில்லாதவர்களால்

சொல்லப்பட்ட

வார்த்தை

 

யோசிக்காமல்

சொல்லப்பட்ட வார்த்தை

யோசித்துப் பார்த்தால்

தெரியும் அது

தவறாக சொல்லப்பட்ட

வார்த்தை என்று

 

துருபதன் :

தவறானது என்று

எப்படி சொல்கிறாய்

 

சிகண்டி :

தவறானதை

தவறானது என்று

சொல்லாமல்

சரியானது

என்றா சொல்ல

முடியும்

 

வாழ்க்கையில்

எதிர்ப்படுவது

வாய்ப்பு என்பதை

அறிந்து கொள்ள

முடிந்தவர்களால்

மட்டுமே வாய்ப்பைப்

பயன்படுத்திக்

கொள்ள முடியும்

 

வாழ்க்கையில்

எதிர்ப்படுவது

வாய்ப்பு என்பதை

அறிந்து கொள்ள

முடியாதவர்களால்

வாய்ப்பைப் பயன்படுத்திக்

கொள்ள முடியாது

 

வாய்ப்பு என்பது

எந்த காலத்தில்

எந்த இடத்தில்

எந்த நேரத்தில்

எந்த சூழ்நிலையில்

வெளிப்படும் என்று

யாராலும்

சொல்ல முடியாது

 

காலம் நேரம்

இடம் சூழ்நிலை

பார்த்து எந்த

ஒன்றை நாம்

செய்தாலும்

அது நாம் செய்த

செயலாகத் தான்

இருக்குமே தவிர

வாய்ப்பாக இருக்காது

 

மழை பெய்யும்

போது மழை நீரைத்

தேக்கி வைத்து

விவசாயத்திற்குப்

பயன்படுத்த வேண்டும்

என்பதற்காக

கிணறுகளை

வெட்டி வைத்து

மழைக்காகக் காத்துக்

கொண்டு இருக்கிறோம்

மழை பெய்யும் போது

கிணறுகளில் நிரம்பிய

நீரைப் பயன்படுத்தி

விவசாயம் செய்கிறோம்

 

மழை பெய்வது

என்பது ஒரு வாய்ப்பு

அதை பயன்படுத்திக்

கொள்ளத் தான் முடியும்

மழை பெய்ய வைக்க

வேண்டும் என்ற

வாய்ப்பை

நம்மால் உருவாக்க

முடியாது

 

அதைப் போலத்

தான் பீஷ்மனைக்

கொல்வதற்கான

வாய்ப்பை என்னால்

உருவாக்க முடியாது

 

பீஷ்மனைக்

கொல்வதற்கான

வாய்ப்புக்காகக் காத்துக்

கொண்டு இருக்கிறேன்

வாய்ப்பு கிடைத்தவுடன்

அந்த பீஷ்மனைக்

கொல்கிறேன்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----26-07-2022

-----செவ்வாய்க் கிழமை

 

//////////////////////////////////////////////