April 21, 2019

பரம்பொருள்-பதிவு-5


                       பரம்பொருள்-பதிவு-5

“கோயில் கோபுரங்களில்
உள்ள கோபுரக் கலசங்கள்
பிரபஞ்ச சக்தியை கிரகித்து
கோயிலுக்குள் செலுத்தி
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்யும்
மிகப்பெரிய வேலையை
செய்து வருகின்றன “

“கோபுரக் கலசங்கள்
என்பது தங்கம், வெள்ளி,
செப்பு மற்றும் ஐம்பொன்
இவைகளில் ஏதேனும்
ஒன்றால் செய்யப்பட்டதாக
இருக்கும் “

“கோபுரக் கலசத்திற்குள்
உயிர்ச்சக்தி கொண்ட
பொருள் வைக்கப்பட்டிருக்க
வேண்டும் - அப்படி
உயிர்ச்சக்தி கொண்ட பொருள்
கோபுரக் கலசத்திற்குள்
வைக்கப்பட்டு இருந்தால்
மட்டுமே கோபுரக் கலசங்கள்
பிரபஞ்ச சக்தியை
கிரகிக்கும் - இல்லை என்றால்
கோபுரக் கலசங்கள் பிரபஞ்ச
சக்தியை கிரகிக்காது “

“கோபுரக் கலசங்கள் பிரபஞ்ச
சக்தியை கிரகிக்க வேண்டும்
என்பதற்காக - கோபுரக்
கலசத்திற்குள்
நவ தானியங்கள் அல்லது
பாதரசம் வைப்பார்கள்”

“ நவ தானியங்கள்
உயிர்ச்சக்தியுடன் இருக்கும்
வரை தான் - கோபுரக்
கலசங்கள் பிரபஞ்ச சக்தியை
கிரகிக்கும் தன்மையுடன்
இருக்கும்- நவ தானியங்கள்
உயிர்ச்சக்தியை இழந்து
விட்டால் கோபுரக் கலசங்கள்
பிரபஞ்ச சக்தியை கிரகிக்கும்
சக்தியை இழந்து விடும்”

“ கோபுரக் கலசத்தில்
நிரப்பப்பட்டிருக்கும்
நவதானியங்கள் எனப்படும்
நெல், கம்பு, கேழ்வரகு,
திணை, வரகு,சோளம்,
மக்காச்சோளம், சாமை
எள் ஆகியவை 12 ஆண்டுகள்
வரை தான் உயிர்ச்சக்தி
கொண்டதாக இருக்கும் ;
12 வருட காலத்தை
தாண்டும் போது அந்த
நவதானியங்கள்
தங்கள் உயிர்ச்சக்தியை
இழந்து விடும் ; “

“ 12 வருடங்கள் கழித்து
கோபுரக் கலசங்கள்
பிரபஞ்ச சக்தியை
கிரகிக்கக்கூடிய தன்மையை
இழந்து விடக் கூடிய
நிலைக்கு வந்து விடும் ;
12 வருடங்களுக்கு
ஒரு முறை கும்பாபிஷேகம்
என்ற பெயரில்-கோபுரக்
கலசத்தில் உள்ள
உயிர்ச்சக்தியை இழந்த
நவதானியங்கள் மாற்றப்பட்டு
புதியதாக உயிர்ச்சக்தி
கொண்ட நவதானியங்கள்
நிரப்பப்படுகின்றன “

“நவதானியங்கள் ஒரு
குறிப்பிட்ட காலம்
வரை தான் உயிர்ச்சக்தி
கொண்டதாக இருக்கும் ;
அந்த குறிப்பிட்ட காலம்
முடிந்தவுடன் அந்த
நவதானியங்களை
மாற்ற வேண்டும்- ஆனால்
பாதரசம் எப்போதும்
உயிர்ச்சக்தியுடன்
தான் இருக்கும்;-பாதரசம்
ஒருபோதும் தன்
உயிர்ச்சக்தியை இழக்காது  
எனவே கோபுரக் கலசத்தில்
ஒருமுறை பாதரசத்தை
நிரப்பி விட்டால்
12 வருடங்களுக்கு
பாதரசத்தை மாற்ற
வேண்டிய அவசியம் இல்லை;”

“இவ்வாறாக கோபுரக்
கலசங்கள் பிரபஞ்ச சக்தியை
கிரகிக்கின்றன;”

“கோபுரக் கலசங்களின்
நீளம், அகலம், உயரம்
ஆகியவற்றைப்
பொறுத்து தான்
கோபுரங்கள் அமைக்கப்பட
வேண்டும் “

“கோபுரக் கலசங்கள்
மூலம் கிரகிக்கப்படும்
பிரபஞ்ச சக்தியானது
கோபுரத்தின் வழியாக
இறங்கி கோயிலுக்குள்
செல்கிறது”

“கோபுரக் கலசங்கள்
மூலமாக கிரகிக்கப்படும்
சக்தியானது கோபுரத்தின்
குறுகிய இடம் வழியாக
உட்புறமாக இறங்கி
அகன்று கொண்டே
சென்று கோபுரத்தின்
கீழ் வரை சென்று
கோயிலுக்குள் சென்று
சக்தியை உற்பத்தி
செய்கிறது “

“கோபுர கலசத்திற்கு
ஏற்றவிதத்தில்
கோயில் கோபுரங்கள்
அமைக்கப்படவில்லை எனில்
கோபுரக் கலசங்கள்
வழியாக கிரகிக்கப்படும்
பிரபஞ்ச சக்தியானது
கோபுரங்கள் வழியாக
கீழே இறங்காது ;
கோபுரக் கலசங்கள்
மூலமாக கோயிலுக்குள்
சக்தியை உற்பத்தி செய்ய
முடியாத நிலை உருவாகும்

எனவே, கோயிலுக்குள்
சக்தியானது கோபுரக்
கலசங்கள் மூலமாக
உற்பத்தி செய்யப்பட
வேண்டுமானால்
கோபுரக் கலசங்கள்
எத்தகைய நீளம்,
அகலம், உயரம்,
கொண்டிருக்கிறதோ
அதற்கேற்றவாறு கோயில்
கோபுரங்களின் நீளம்,
அகலம், உயரம்,
அமைக்கப்பட வேண்டும்
இல்லை என்றால்,
கோபுரக் கலசங்கள்
மூலமாக பிரபஞ்ச
சக்தியை கிரகித்து
கோயிலுக்குள் செலுத்தி
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்ய முடியாது

--------   இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  21-04-2019
/////////////////////////////////////////////////////