March 09, 2012

இயேசு கிறிஸ்து-உலகநாதர்-கோயில்இல்லா-பதிவு-21



       இயேசு கிறிஸ்து -உலகநாதர் -கோயில் இல்லா-பதிவு - 21    

                         “”பதிவு இருபத்துஒன்றை விரித்துச் சொல்ல
                                                          ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
கடவுள் இருக்கும் இடத்தைப் பற்றியும் ,
கடவுள் இருக்கும் இடத்தை எவ்வாறு
துhய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் ,
இயேசு தன் வாழ்வில் செயல்படுத்தி காட்டிய விதத்தைப் பற்றி
கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் :

இயேசு எருசலேமுக்குப் போய் ,

தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும் , காசுக்காரர்  உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு, ”
                                                                        ----------யோவான் - 2 : 14

கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டு பண்ணி , அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்தி விட்டு , காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி பலகைகளைக் கவிழ்த்துப் போட்டு, ”
                                                                        -----------யோவான் - 2 : 15  

புற விற்கிறவர்களை நோக்கி : இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக் கொண்டு போங்கள் ; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார் .”
                                                                          -----------யோவான் - 2 : 16

                         அறியாமையை அடித்தளமாக்கி ;
                         மடமையைச் சுவராக்கி ;
                        மத வெறியை மாளிகையாக்கி ;
                        கண்மூடிப் பழக்கங்களைக் கதவாக்கி ;
                        வேற்றுமையை வேலியாக்கி ;
                         கடவுளை வியாபாரப் பொருளாக்கி ;

பக்தி என்னும் போர்வையில்
தின்று கொழுக்கும் பருந்துகள் ;
இரத்தம் குடிக்கும் ஓநாய்கள் ;
இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் ;
சாக்கடையில் நெளியும் புழுக்கள் ;
அழுக்கை சாப்பிடும் காகங்கள் ;
பிணம் தின்னும் கழுகுகள் ;


நல்லவர்கள் என்ற போர்வையில் ,

நல்லவர்கள் போல் நடித்து ,
உண்மை உணர்ந்தவர்   ஊருக்கு உழைப்பவர்  - என்று

பகல் வேஷம் போட்டுக் கொண்டு
தன்னையும் தன் குடும்பத்தையும்
உயர்த்திக் கொள்ளும் சுயநல விரும்பிகள் ;


மதத்தின் பெயரால் ; கடவுளின் பெயரால் ; பக்தியின் பெயரால் ;
உண்மையை வெளிப்படுத்தாமல் ,
அறியாமையை விதைத்து ,
பணத்தை அறுவடை செய்து ,
வயிறு வளர்க்கும் தவறானவர்கள் - ஓரு சிலர்

வியாபாரம் செய்து கொண்டிருக்கும்
எல்லாம் வல்ல இறைவனுடைய புனித வீட்டில் ;
அனைத்தையும் அளிக்கும் இறைவனுடைய புனித வீட்டில் ;
அன்பு குடி கொண்டிருக்கும் இறைவனுடைய புனித வீட்டில் ;
கருணை நிரம்பி வழியும் இறைவனுடைய புனித வீட்டில் ;

துன்பம் என்று வந்தவர்க்கு துன்பம் நீக்கி
இன்பம் தரும் இறைவனுடைய வீட்டில் ;

கண்ணீருடன் வந்தவர்க்கு கண்ணீரைத் துடைத்து
புன்னகை அளிக்கும் இறைவனுடைய வீட்டில் ;

சோகத்தின் சுமையை தோளில் சுமந்து வந்தவர்க்கு
சோகத்தின் சுமையை முற்றிலும் நீக்கி
மகிழ்ச்சி கொடுக்கும் இறைவனுடைய வீட்டில் ;

வாழ்க்கையை வெறுத்து வாழ முடியாமல் போனவர்க்கு
வாழ்வின் இனிமையை அளிக்கும் இறைவனுடைய வீட்டில் ;

பாவத்தால் பாதிக்கப்பட்டவருக்கு
பாவத்தைக் கழித்து நல்வழி காட்டும் இறைவனுடைய வீட்டில் ;

வருந்தி உழைப்பவர்க்கு
உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை - என்று
வருத்தப்படுவர்க்கு செல்வம் அடைவதற்கான
திறவு கோலைத் தரும் இறைவனுடைய வீட்டில் ;

தீர்க்க முடியாத நோயினால் பாதிக்கப் பட்டிருப்பவரையும்
நோயைத் தீர்த்து சுகமளிக்கும் இறைவனுடைய வீட்டில் ;

வறுமையில் வாடிக் கொண்டிருப்பவர்க்கும்
வறுமையை நீக்கி ஏற்றத்தைக் கொடுக்கும் இறைவனுடைய வீட்டில் ;

இறைவனின் வீட்டை அசுத்தப்படுத்தியவர்களை ,
இறைவனின் வீட்டை அவமானம் செய்தவர்களை ,
இறைவனின் வீட்டை இழிவு படுத்தியவர்களை ,
இறைவனின் வீட்டை வியாபாரம்  செய்ய பயன்படுத்தியவர்களை

ஏன் என் பிதாவின் வீட்டை கள்ளர்  குகை ஆக்கினீர்கள்
என்று அடித்து துரத்தினார் .

என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார் .
கடவுள் இருக்கும் இடத்தை வியாபார ஸ்தலமாக்காதீர்கள் என்றார்.
இயேசு .

கடவுள் இருக்கும் இடம் துhய்மையாக இருக்க வேண்டும் என்றும்
அதை அசுத்தப் படுத்தக் கூடாது என்றும் விளக்குகிறார் .

துhய்மையாக இருக்கும் இடத்தில் தான் கடவுள் வந்து தங்குவார்
அசுத்தமான இடத்தில் கடவுள் வந்து தங்க மாட்டார்
என்ற காரணத்திற்காகவே இயேசு இச்செயலைச் செய்தார்.


இதில் இன்னொரு ரகசியமும்  மறைந்து இருக்கிறது
அகத்தில் துhய்மை இருந்தால் தான் ,
இறைவன் வந்து தங்குவார்  என்று பொருள் .

புற வழிபாட்டிற்காக அமைக்கப்பட்ட கோயில்கள்
துhய்மையாக இருந்தால் எப்படி இறைவன் எவ்வாறு வந்து தங்குவாரோ?
அதைப் போல ,
உடலாகிய ஆலயத்தில் உள்ளமாகிய கோயில்
துhய்மையாக இருந்தால் தான் இறைவன் வந்து தங்குவார்
என்கிறார்  இயேசு .



உலகநாதர்:

       “””கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்”””
                                                    -----உலகநாதர்-----உலக நீதி------

மிகவும் புகழ் பெற்ற இந்தப் பாடல் பெரும்பாலான நுhல்களில்
ஔவையார்  என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது .
பலரும் அவ்வாறே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த புகழ்மிக்க சிறப்புமிக்க பாடலைப் பாடியவர்  
உலகநாதர்  என்பதையும்,
அதை அவர்  தன்னுடைய உலகநீதி என்ற நுhலில்
எழுதியிருக்கிறார் என்பதையும் ,
அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் .

இந்த பாடலில் உலகநாதர்  என்ன கருத்தை
சொல்ல வருகிறார்  என்பதை இப்பொழுது பார்ப்போம்:


கடவுளிடம் இருந்து சக்திகளைப் பெற வேண்டும் ;
கடவுளிடம் இருந்து வரங்கள் பலவற்றைப் பெற வேண்டும் ;
கடவுள் விளக்கம் பெற வேண்டும் ;
கடவுள் நிலை புரிய வேண்டும் ;
கடவுள் தன்மை உணர வேண்டும் ;
கடவுள் உண்மை நிலை விளங்க வேண்டும் ;
கடவுளை அறிய வேண்டும் ;
கடவுளை அடைய வேண்டும் ;
கடவுளாய் மாற வேண்டும் - என்று
கடவுள் பற்றி நிதம் சிந்தித்துக் கொண்டிருப்பவர் ;
கடவுளை அறிய முற்படுபவர் ;


அறிய வேண்டிய முக்கியமான விஷயங்கள் இரண்டு :
ஒன்று -------- கர்ம வினை,
இரண்டு ------ மறுபடியும் பிறத்தல்
இவைகள் இரண்டும் மறைக்கப்பட்டதால் ;
விளக்கம் தெரியப்படுத்தப் படாததால் ;
சூட்சுமம் விளக்கப் படாததால் ;
ரகசியங்கள் அவிழ்க்கப் படாததால் ;

கடவுளை அடையும் வழி மறைக்கப் பட்டது ;
கடவுளை உணரும் வழி சிக்கலாக்கப் பட்டது ;
கடவுளை அறியும் வழி புதைக்கப் பட்டது ;
இதனால் தான் இந்த உலகம்
மூவரின் ஆளுகைக்குள் வந்து விட்டது ;

மக்கள் கடவுளின் மேல் வைத்த பக்தியை
தனக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டு
மதத் தலைவர்கள் பெருகி விட்டனர்;

மதத்தின் மூலம் கிடைக்கும் பணம் அளவற்றது என்பதால்
பொருளாதாரத் தலைவர்கள் வளர்ந்து விட்டனர்;

இரு நிலையில் உள்ளவர்களும்
தான் பெற்றதைக் காப்பாற்றிக் கொள்வதற்கும்
இனி பெறப் போவதை வளர்த்துக் கொள்வதற்கும் ;
அரசியல் தலைவர்களுடன்  இணைந்து விட்டனர் ;
இணக்கமாக சென்று விட்டனர் ;

அரசியல் தலைவர்கள்,  மதத் தலைவர்கள் , பொருளாதாரத் தலைவர்கள்,
இந்த மூவரின் ஆளுகைக்குள்  - தான்
இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது .
இந்த உலகம் வந்து விட்டது .

தாங்கள் வாழ்வதற்காக கடவுளின் உண்மை நிலை
மக்களை உணர விடாமல் தடுத்து விட்டனர் .

இதனால் தான் ,
புற வழிபாட்டில் உள்ள ஆளுமைத் தன்மையையும் ,
அக வழிபாட்டில் உள்ள உண்மைத் தன்மையையும் ,
அறியும் அறிவு இல்லாமல் போய் விட்டது .

இந்தத் தன்மையைத் தான் புறத்தை சொல்வது போல் இருக்கும்
இந்த அடிகளில் தான் உலகநாதர்
அகத்தை அக வழிபாட்டில் உள்ள,  
சூட்சும ரகசியங்களை கட்டவிழ்க்கிறார்.



கோயில் :
கோ என்றால் அரசன் என்று பொருள் .
இல் என்றால் இறைவன் , அரசன் , தலைவன் , உறைவிடம்
இருக்குமிடம் என்று பொருள் .
கோயில் என்றால் இறைவன் இருக்குமிடம் என்று பொருள் .

இந்த உடலாகிய ஆலயத்தில்
உள்ளம் என்ற கோயிலில் இறைவன் இருக்கிறான் .

                                                          மயக்கு மொழி பேசி
                                                         மங்கையர்  வாழ்வை
                                                         நிர்மூல மாக்குபவன் !
          காவி வேடம் தரித்துக் கொண்டு
          கயமைத் தனம் புரியும்
          கபட வேடதாரிகள் !
                                                         அறியாத நெஞ்சை
                                                         அடிமையாக்கி
                                                         அழவைத்து ரசிப்பவர்கள் !
         ஏழ்மையில் உழல்பவர்களை
         ஏளனம் செய்து
         எள்ளி நகையாடுபவர்கள்!
                                                      நாவின் நுனியில்
                                                      நயவஞ்சக வார்த்தை வைத்துக் கொண்டு
                                                      நல்லவர்களை அழிப்பவர்கள் !
         தலைக் கணம் மிகுதி கொண்டு
         தலை கால் புரியாமல்
         தறி கெட்டு நடப்பவர்கள் !
                                                      பொய் பேசி
                                                      பித்தலாட்டம் செய்து
                                                      கூட இருந்தே குழிபறிப்பவர்கள் !
        அஞ்சாது தவறுகளைச் செய்து
        சுக போகங்களில்
        திளைப்பவர்கள் !
                                                   நஞ்சை நெஞ்சிலும்
                                                   போலித் தனத்தை முகத்திலும்
                                                   வைத்துக் கொண்டு குடி கெடுப்பவர்கள் !    
                  
        பேதையராய் பெண்டிரைக் கண்டு
        அவர்களை ஊமையராக்கி
        போகப் பொருளாக்கி துய்க்கும்
        இழி குணம் கொண்டவர்கள் !

                                               பஞ்சமா பாதகங்களை
                                               மனதிற்கு பயப்படாமல்
                                               மனம் அறிந்து செய்பவர்கள் !
        ஆகியோருடைய உள்ளத்தில் அதாவது
        கலங்கமுள்ள அசுத்தமுள்ள உள்ளத்தில்
        இறைவன் குடி இருக்க மாட்டான் .


                                              இத்தகைய தன்மை கொண்டவரிடம்
                                             அசுத்தம் நிறைந்த உள்ளம் கொண்டவரிடம்
                                             இறைவன் இருக்க மாட்டான் .


உடலாகிய ஆலயத்தில் , உள்ளம் என்ற கோயிலில் , இருக்கும் இறைவன்
அசுத்தமுள்ள , களங்கம் நிறைந்த அகத்தில், அதாவது
உள்ளமாகிய கோயிலில் இறைவன் வந்து இருக்க மாட்டான் .
உள்ளமாகிய கோயிலில் இறைவன் வந்து தங்க மாட்டான் .


உள்ளம் சுத்தமாக இருந்தால் தான் ,
உள்ளமாகிய கோயிலில் இறைவன் வந்து தங்குவான் .
உள்ளம் சுத்தமாக இல்லையெனில் ,
உள்ளமாகிய கோயிலில் இறைவன் வந்து தங்க மாட்டான் .
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் , அதாவது
உடலாகிய ஆலயத்தில் , உள்ளமாகிய கோயிலில் ,
இறைவன் இல்லையெனில்
உயிரே நீ உடலில் இருக்க வேணடாம் .
உடலாகிய ஆலயத்தில், உள்ளமாகிய கோயிலில்,

இறைவன் இல்லையெனில்
அத்தகையவன் இழிவான குணத்தை உடையவன் .
அத்தகைய தன்மை உடையவன் இருப்பதை விட இறப்பதே மேல் .
உடலாகிய ஆலயத்தில்,உள்ளமாகிய கோயிலில்,

இறைவன் இல்லையெனில்
அதாவது இறைவன் இல்லாத உடம்பில் குடியிருக்க வேண்டாம் .
அதாவது உயிரே நீ உடலில் குடி இருக்க வேண்டாம் .
உயிர் உடலில் இருக்க வேண்டாம் .
உயிர் உடலில் தங்க வேண்டாம் .
உயிரே நீ வெளியே வந்து விடு என்கிறார்  உலகநாதர்
ஒருவனுடைய அகம் துhய்மையாக இல்லையெனில்
இறைவன் வந்து அகத்தில் தங்க மாட்டான் .
அத்தகைய நிலை உடைய மனிதன் ,
துhய்மையான அகம் இல்லாத மனிதன் ,
இருப்பதை விட இறப்பதே மேல் என்கிறார்  உலகநாதர் .



இயேசு கிறிஸ்து - உலகநாதர்:

இயேசு ,
அகத்தை துhய்மையாக வைத்திருந்தால் இறைவன் வந்து

குடியேறுவார், இருப்பார்,  தங்குவார், என்கிறார் .


அவ்வாறே,
உலகநாதரும் ,
அகம் துhய்மையாக இருந்தால் இறைவன் வந்து தங்குவார்.
அகம் துhய்மையாக இல்லையெனில் இறைவன் வந்து

தங்க மாட்டார் என்கிறார்.
மேலும் ,
ஒரு படி மேலே போய் அகத்தில் இறைவன் இல்லாதவன்

இருப்பதை விட இறப்பதே மேல் என்கிறார்.


                         “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                      போற்றினேன் பதிவுஇருபத்துஒன்று  ந்தான்முற்றே “”