June 27, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-32


            நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-32
  
அரசன் அன்றே
கொல்வான்
தெய்வம் நின்று
கொல்லும்

இந்த பழமொழியில்
""கொல்லுதல்""""
என்ற சொல்
உயிரை எடுத்தல்
என்ற பொருளில்
வரவில்லை
கொல்லுதல்
என்ற சொல்
செய்த குற்றத்திற்குரிய
தண்டனையை
வழங்குதல்
என்ற பொருளில்
வந்து உள்ளது

அரசன் அன்றே
கொல்வான் என்றால்
அரசன்
ஒருவன் செய்த
குற்றத்தை விசாரித்து
தண்டனையை
உடனே வழங்கி
அனுபவிக்கச் செய்வான்
என்று பொருள்

தெய்வம் நின்று
கொல்லும் என்றால்
ஒருவன் செய்த
குற்றத்திற்குரிய
தண்டனையை
தெய்வம்
செய்த குற்றத்திற்கேற்ப
குறிப்பிட்ட காலத்திற்குள்
தண்டனையை வழங்கி
அதை அனுபவிக்கச்
செய்வான்
என்று பொருள்

அரசன் என்பவன்
ஒருவன்
குற்றம் செய்தாலும்
தண்டனை வழங்குவான்
ஒருவன்
குற்றம் செய்யாவிட்டாலும்
தண்டனை வழங்குவான்
ஆனால் தெய்வம்
குற்றம் செய்தவனுக்கு
மட்டுமே
தண்டனை வழங்கும்

அரசன் வழங்கும்
தண்டனையில் சில சமயம்
நீதி என்பது இருக்கும்
சில சமயங்களில்
நீதி என்பது இருக்காது
ஆனால் தெய்வம்
வழங்கும் தண்டனையில்
நீதி என்பது இருக்கும்

அரசன் வழங்கும்
தண்டனையில்  
இந்த குற்றத்திற்கு
இந்த தண்டனை
என்பது தெளிவாகத்
தெரியும்
ஆனால்
தெய்வம் வழங்கும்
தண்டனையில்
இந்த குற்றத்திற்கு
இந்த தண்டனை
என்பது
கண்டுபிடிக்க முடியாத
நிலையில் வைக்கப்
பட்டிருக்கிறது.


குற்றம் செய்து விட்டு
அரசன் கொடுக்கும்
தண்டனையிலிருந்து கூட
தப்பித்து விடலாம்
ஆனால்
குற்றம் செய்து விட்டு
தெய்வம் கொடுக்கும்
தண்டனையிலிருந்து
யாரும் தப்பிக்க முடியாது.


செய்த குற்றத்திற்கு
அரசனால் வழங்கப்படுவதற்குப்
பெயர் தண்டனை
செய்த குற்றத்திற்கு
கடவுளால் வழங்கப்படுவதற்குப்
பெயர் விளைவு
மனிதன் எந்த ஒரு
செயலைச் செய்தாலும்
செய்த செயலுக்குரிய
விளைவை
மனிதன் அனுபவித்தே
ஆக வேண்டும்
செயலைச் செய்து விட்டு
செய்த செயலுக்குரிய
விளைவிலிருந்து
யாரும் தப்பிக்க முடியாது

ஒவ்வொரு செயலுக்கும்
விளைவு உண்டு
நல்ல செயலைச்
செய்தால்
நல்ல விளைவும்
தீய செயலைச்
செய்தால் தீய
விளைவும் ஏற்படும்
அதாவது
நல்ல செயலைச்
செயதால்
நல்ல செயலுக்குரிய
புண்ணியமும்
தீய செயலைச்
செய்தால்
தீய செயலுக்குரிய
பாவமும் ஏற்படும்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னர் நம்
முன்னோர்கள்
ஒவ்வொரு செயலுக்கும்
விளைவு உண்டு
என்பதை கண்டுபிடித்து
இந்த உலகத்திற்கு
சொன்னதைத் தான்
பல்லாயிரம்
ஆண்டுகள் கழித்து
நியூட்டன் தனது
மூன்றாவது விதியில்
கூறியுள்ளார்

ஒவ்வொரு வினைக்கும்
அதற்குச் சமமான ஆனால்
எதிர் திசையில்
செயல்படுவதுமான
ஓர் எதிர்வினை உண்டு
என்று நியூட்டன் தனது
மூன்றாவது விதியில்
கூறியுள்ளார்.

ஒரு பந்தை நாம்
கையில் வைத்திருக்கிறோம்
இதை சுவரில் எரிகிறோம்
சுவரில் பட்ட பந்து
நம்மீது திரும்ப வருகிறது

சுவரில் பந்தை எரிவது
நாம் செய்த செயல்
பந்து நம்மீது
திரும்ப வருவது
நாம் செய்த
செயலுக்குரிய விளைவு

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பாகவே
ஒவ்வொரு செயலுக்கும்
விளைவு உண்டு
என்பதை கண்டுபிடித்து
அதை மக்களுக்கு
சொல்லிச் சென்ற
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்

---------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////////