December 12, 2019

பரம்பொருள்-பதிவு-97


                  பரம்பொருள்-பதிவு-97

"தன்னுடைய தாய்
உலூபியின் அனுமதியைப்
பெற்று தன்னுடைய
தந்தை அர்ஜுனனைக்
காண புறப்பட்டான்
அரவான் "

"அர்ஜுனனுடைய
தந்தையான
இந்திரன் இருக்கும்
இந்திரலோகத்தில்
இந்திரனுடைய அவையில்
அர்ஜுனன் இருப்பதாகக்
கேள்விப்பட்டு இந்திரனுடைய
அவைக்கே சென்றான்
அரவான் "

"இந்திரன் அவையில்
இந்திரன் ; அர்ஜுனன் ;
கிருஷ்ணன் ; மற்றும்
சிலர் இருந்தனர்.
இந்திரனுடைய அவைக்குள்
நுழைந்தான் அரவான் "

இந்திரன்  :
"யார் நீ
எங்கிருந்து வந்திருக்கிறாய் ?
எதற்காக வந்திருக்கிறாய் ?
என்ன காரணத்திற்காக
வந்திருக்கிறாய் ?
என்ன நோக்கத்தோடு
வந்திருக்கிறாய் ?
எத்தகைய செயலைச்
செய்வதற்காக
வந்திருக்கிறாய் ?

" இந்திரன் அவைக்குள்
நுழைவதற்கு முன்
அனுமதி பெற்று
வர வேண்டும்
என்பது உனக்கு
தெரியாதா ?
அனுமதி இல்லாமல்
இந்திரன் அவைக்குள்
நுழைந்தவர்கள்
உயிரோடு வெளியே
சென்றதில்லை என்ற
செய்தி உனக்கு
தெரியாதா ?

நல்ல எண்ணத்துடன்
வந்திருந்தால்
உன் உயிர் தப்பியது ?
தவறான எண்ணத்துடன்
வந்திருப்பாயேயாகில்
உன் உயிர் உனக்கு
சொந்தமல்ல ? "

"நீ உயிரோடு
வாழ வேண்டும் என்றால்;
உன் உயிர் உனக்கு
சொந்தமாக இருக்க
வேண்டும் என்றால் ;
உண்மையைச் சொல்
யார் நீ…………………………….?"

அரவான் :
"தர்மத்தின் பக்கம்
நின்று போர் புரிவதற்காக
வந்திருக்கிறேன் "

இந்திரன் :
" தர்மம் என்றால்
என்ன என்றே
உனக்குத் தெரியவில்லை ?
அப்படி இருக்கும் போது
எப்படி தர்மத்தின்
பக்கம் நின்று
போர் புரிவாய் ? "

அரவான் :
"தர்மம் என்றால்
என்ன என்பதை
என்னுடைய அன்னை
எனக்கு சொல்லிக்
கொடுத்துத் தான்
வளர்த்து இருக்கிறார் "

"என்னுடைய அன்னை
எனக்கு சொல்லிக்
கொடுத்த
தர்மத்தை உணர்ந்து ;
தர்மத்தின்
பாதை தவறாமல்
வாழ்க்கையை நடத்திக்
கொண்டிருப்பவன் நான் ;"

இந்திரன் :
"உன்னுடைய
செயல்களைப் பார்த்தால்
அன்னையின் வார்த்தைக்கு
மதிப்பு கொடுத்து
நடப்பவனாகத்
தெரியவில்லையே !"

" அன்னையின் வார்த்தைக்கு
மதிப்பு கொடுத்து
தர்மத்தை
கடைபிடிப்பவனாக
இருந்திருந்தால்……………….?
இந்திரன் அவைக்குள்
அனுமதி பெற்று அல்லவா
உள்ளே நுழைந்திருப்பாய் !"

"ஒரு விஷயத்தை
நன்றாக தெரிந்து கொள் !
இந்திரன் அவைக்குள்
நட்புடன்  வந்தவர்களை
அன்பு காட்டி ;
அரவணைத்து ;
பாசத்தைக் காட்டி ;
மகிழ்வித்து வழியனுப்பி ;
வைத்திருக்கிறோம் !
விரோதியாக வந்தவர்களுக்கு
மரணம் என்றால்
என்ன என்பதைப்
புரிய வைத்து எங்கு
செல்ல வேண்டுமோ
அங்கு வழியனுப்பி
வைத்திருக்கிறோம் !"

"நீ நண்பனாக
வந்திருக்கிறாயா ? (அல்லது)
விரோதியாக
வந்திருக்கிறாயா ? "

அரவான் :
"எனக்கு விரோதிகள்
என்று யாரும் இல்லை  ;
என்னை யாரும்
விரோதியாக
நினைத்ததில்லை ;
என்னுடைய விரோதி
என்று சொல்லிக்
கொண்டு என் எதிரே
யாரும் நின்றதில்லை.;
ஏனென்றால் என்
எதிரே என்னுடைய
எதிரியாக நிற்பதற்கு
யாருக்கும் தைரியம்
இருந்ததில்லை ;"

"எனக்கு எதிரி என்று
சொல்லிக் கொண்டு
எதிரியாக இப்போது
இந்த உலகத்தில்
யாருமே இல்லை ;
என்னை நண்பனாக
ஏற்றுக் கொண்டவர்கள்
மட்டுமே இந்த
உலகத்தில் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள் ;"

இந்திரன் :
" உன்னுடைய பேச்சும்
நடவடிக்கையும்
உன் மேல்
எனக்கு கோபத்தை
ஏற்படுத்தவில்லை ;
மாறாக உன் மேல்
எனக்கு அன்பைத் தான்
ஏற்படுத்துகிறது ;
பாசத்தைத் தான்
ஏற்படுத்துகிறது ;
இனம் புரியாத
ஏதோ ஒன்று
உனக்குள்ளும்
எனக்குள்ளும்
பிணைப்பை
ஏற்படுத்துகிறது ;"

"பிரபஞ்சத்தின்
ரகசியங்கள்
ஆச்சரியப்படத்தக்கவை !
அந்த ஆச்சரியத்தில்
பூத்து வந்தவனாக
நீ இருக்கிறாய் !"

"அதிசயத்தில் பிறந்து
வந்த அற்புதமாக
நீ இருக்கிறாய் "

"விடை காண முடியாத
கேள்விக் குறியாக
நீ இருக்கிறாய்"

"என் மனம் கலக்கம்
அடைகிறது  ;
சிந்தனை குழப்பம்
அடைகிறது ;
எண்ணம் தடுமாறுகிறது  ;
பேச வார்தை
வர மாட்டேன் என்கிறது ;
என்னால் என்னுடைய
உணர்வுகளை கட்டுப்படுத்த
முடியவில்லை ;"

"சொல்……………………………….?
யார் நீ………………………………..?

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 12-12-2019
//////////////////////////////////////////