October 30, 2019

பரம்பொருள்-பதிவு-78


              பரம்பொருள்-பதிவு-78

“தன்னுடைய கறவைப்
பசுக்கள் கள்வர்களால்
களவாடப்பட்டு சென்று
விட்டதே என்ற
வேதனையின் காரணமாக
கோபாவேசத்துடன் பேசி
தற்போது கண்ணீர் சிந்தி
அழுது கொண்டிருக்கும்
அந்தணனைக்
கண்டான் அர்ஜுனன் ;
சோகமே வடிவமாய்
நின்று கொண்டிருந்த
அந்தணனைக்
கண்டான் அர்ஜுனன் ;
இழப்பின் வேதனையை
முடிந்த அளவு
வார்த்தைகளால்
சொல்லி விட்டு
சொல்லமுடியாத
வேதனையை
தன்னுடைய கண்ணீரின்
மூலம் வெளிப்படுத்திக்
கொண்டு நின்று
கொண்டிருந்த
அந்தணனைக்
கண்டான் அர்ஜுனன்;”

" அந்தணனுக்கு யார்
தீங்கிழைத்தார்களோ
அவர்களுக்கு நான்
சரியான வகையில்
தண்டனை வழங்கவில்லை
என்றால் நான் நீதி
தவறியவன் ஆவேன் ;
அந்தணனுடைய
கறவைப் பசுக்களை
நான் மீட்டு வரவில்லை
என்றால் தர்மருடைய
ஆட்சிக்கு நான் களங்கம்
விளைவித்தவனாவேன் ;
என் கடமையிலிருந்து
விலகியவன் ஆவேன் ;
நீங்கமுடியாத
களங்கத்தை அரசுக்கு
செய்தவனாவேன் ;
அறத்தை மறந்தவன்
ஆவேன் ;
தர்மர் ஆட்சிக்கு
கெட்ட பெயரை
உண்டாக்கியவன் ஆவேன்,;
கழிக்க முடியாத
பாவத்தை
செய்தவன் ஆவேன்,;
குடிமக்களைக் காக்கத்
தவறி விட்டார்
தர்மர் என்ற
அவப்பெயரை
தர்மருக்கு ஏற்படுத்தி
தீர்க்க முடியாத
குற்றத்தைச்
செய்தவனாவேன் ;
இதனால் ஏற்படக்கூடிய
பாவத்தை எத்தனை
பிறவி எடுத்தாலும்
கழிக்க முடியாத
பாவியாவேன்;"

"அந்தணனிடமிருந்து
கள்வர்களால் களவாடி
செல்லப்பட்ட கறவைப்
பசுக்களை மீட்டு
வரவில்லை என்றால்
தர்மர் தன்
குடிமக்களைக் காக்கத்
தவறி விட்டார்
என்ற செய்தியும் ;
அர்ஜுனன் அந்தணனுடைய
கறவைப் பசுக்களை
மீட்டு வரவில்லை
என்ற செய்தியும் ;
நாடு முழுவதும் பரவும் ;
அப்படி நாடு முழுவதும்
பரவினால் தர்மருடைய
ஆட்சிக்கும் ;
பஞ்ச பாண்டவர்களுக்கும்
நீக்க முடியாத
அவப்பெயர் ஏற்படும்,;"

"தர்மரும் திரௌபதியும்
தனித்திருக்கும்
ஆயுத சாலைக்குள்
நுழைந்தால்
விதியை மீறிய
குற்றத்திற்காக
12 மாதங்கள்
பிரம்மச்சாரியாக
வனவாசம் போக
வேண்டியதிருக்கும் ;
என்ற விதிக்கு
பயந்து நான்
என்னுடைய தனிப்பட்ட
நலன்களை மட்டுமே
கருத்தில் கொண்டு
சுயநலத்துடன்
செயல்பட்டால் ;
என் மேல்
முழுவதும்
நம்பிக்கை வைத்து
என் மீது அளவற்ற
பாசத்துடன் இருக்கும்
என்னுடைய
அண்ணன் தர்மர்
அவர்களுடைய
ஆட்சிக்கு மிகப்பெரிய
துரோகம்
செய்தவனாவேன் "

"தர்மர் ஆட்சிக்கு
கெட்ட பெயர் எதுவும்
ஏற்படாமல் இருக்க
வேண்டும் என்றால்
நான் ஆயுத சாலைக்குள்
நுழைந்து கண்டிப்பாக
ஆயுதங்களை
எடுத்துத் தான்
வர வேண்டும் ;
கள்வர்களை தண்டித்து
கறவைப் பசுக்களை
மீட்டுத் தான்
வர வேண்டும் ;"

"சுயநலத்தை விட
பொது நலன்
தான் முக்கியம் ;
என் நலத்தை விட
மக்கள் நலன் தான்
முக்கியம் ;
என்னை விட
தர்மர் ஆட்சிக்கு
கெட்ட பெயர்
ஏற்படாமல்
இருப்பது தான்
முக்கியம் ; - என்று
பல்வேறு விதமாக
யோசனை செய்தான்
அர்ஜுனன் “

"இறுதியில்
தர்மரும், திரௌபதியும்
தனித்திருக்கும்
ஆயுத சாலைக்குள்
நுழைந்து
ஆயுதத்தை
எடுத்து வந்து
கள்வர்களிடமிருந்து
அந்தணனுடைய
கறவைப் பசுக்களை
மீட்டு வருவது என்றும் ;
இதனால் விதியை
மீறிய குற்றத்திற்காக
தான் 12 மாதங்கள்
பிரம்மச்சாரியாக
வனவாசம் செல்லவும்
தயார் என்றும் ;
முடிவெடுத்தான்
அர்ஜுனன்"

"தர்மரும், திரௌபதியும்
தனித்திருக்கும்
ஆயுதசாலைக்குள்
நுழைந்து ஆயுதங்களை
எடுத்து வருவதற்காக
ஆயுத சாலையின்
கதவுகளைத்
திறந்து உள்ளே
சென்றான் அர்ஜுனன்".

“அந்த அறைக்குள்………………….?”

-----------இன்னும் வரும்

------------K.பாலகங்காதரன்
-----------30-10-2019
//////////////////////////////////////////