December 22, 2012

இயேசுகிறிஸ்து-சிவவாக்கியர்-வேணுமென்ற-பதிவு-58




  இயேசு கிறிஸ்து(பைபிள்)-சிவவாக்கியர்- வேணுமென்ற-பதிவு-58 


      “”பதிவு ஐம்பத்துஎட்டை விரித்துச் சொல்ல    

                        ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

                                                                              

 இயேசு கிறிஸ்து(பைபிள்) :

அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள்.”

------லுாக்கா  - 2 : 8

அவ்வேளையில் கர்த்தருடைய துாதன்  அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது ; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.”

------ லுாக்கா - 2 : 9

தேவதுாதன் அவர்களை நோக்கி :  பயப்படாதிருங்கள் ; இதோ ,எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.”

------ லுாக்கா - 2 : 10

இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர்  உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.”

------ லுாக்கா - 2 : 11

பிள்ளையைத் துணிகளில் சுற்றி , முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்;  இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.”

------ லுாக்கா - 2 : 12

தேவதுாதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி : நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி,

------ லுாக்கா - 2 : 15

தீவிரமாய் வந்து , மரியாளையும் , யோசேப்பையும் , முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.”

------ லுாக்கா - 2 : 16

கண்டு ,அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம் பண்ணினார்கள்.”

------ லுாக்கா - 2 : 17

மேய்ப்பராலே தங்களுக்குச்  சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.”

------ லுாக்கா - 2 : 18

மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி துதித்துக் கொண்டு திரும்பிப் போனார்கள்.”

------ லுாக்கா - 2 : 20


ஏற்றுக் கொள்வதில் இரண்டு நிலைகள் உள்ளது :

ஓன்று               :  எழுதப்பட்டவைகளை படிப்பதன் மூலமும்,

                                  பிறர்  சொல்வதை கேட்பதன் மூலமும் ஏற்றுக் கொள்வது .

மற்றொன்று : அனுபவ பூர்வமாக உணர்வதன் மூலம்  

              ஏற்றுக் கொள்வது .


எழுதப் பட்டவைகளை படிப்பதன் மூலமும் ,

பிறர்  சொல்வதை கேட்பதன் மூலமும் ,

ஏற்றுக் கொள்வதில் சில சங்கடங்கள் உள்ளன.

மனமானது முழுமையாக எதனையும்

ஏற்றுக் கொள்ளும் என்று சொல்ல முடியாது .

அரைகுறை மனதுடனும் ,

கேள்விக்குறி கொண்ட உள்ளத்துடனும் ,

சந்தேகம் கொண்ட நெஞ்சத்துடனும் ,

உண்மையா? பொய்யா? என்ற ஆராய்ச்சியுடனும் ,

இவ்வாறெல்லாம் நடந்ததா? நடக்குமா? நடக்க வாய்ப்பிருக்கிறதா?

என்ற கேள்விக்கணைகளுடனும் ,

இதனை செயல்படுத்த முடியுமா? செயல்படுத்த முடியாதா?

என்ற ஆச்சரியக்குரியுடனும் ,

நடைமுறை சாத்தியமுண்டா? நடைமுறை சாத்தியமில்லையா?

என்ற குழப்பநிலை கொண்ட மனதுடனும் ,

இவைகளை நிறைவேற்ற வாய்ப்பிருக்கிறதா? வாய்ப்பில்லையா?

என்ற எண்ணங்களுடனும் ,

பல்வேறுபட்ட தன்மைகள் கொண்ட

பல்வேறுபட்ட நிலைகள் கொண்ட  

மனதுடன் எழுதப்பட்டவைகளை படிப்பதன் மூலமும் ,

பிறர்  சொல்வதை கேட்பதன் மூலமும்,

ஏற்றுக் கொள்வதில் சில சங்கடங்கள் உள்ளன.


அனுபவ ரீதியாக ஒன்றை உணர்வதில்

இத்தகைய இடர்ப்பாடுகளுக்கும்

கேள்விகளுக்கும் இடம் இல்லை

சந்தேகங்கள் எதிர்ப்பட வாய்ப்பில்லை.


உண்மையாக நினைத்தது பொய்யாக இருக்கிறது ;

பொய்யாக நினைத்தது உண்மையாக இருக்கிறது.

நடைபெறுவது நடைபெறுவதில்லை;

நடைபெறாதது நடைபெறுகிறது.

இயக்கப்படுவது இயக்கப்படுவதில்லை;

இயக்கப்படாதது இயக்கப்படுகிறது.

நிகழ்வது நிகழ்வதில்லை;

நிகழாதது நிகழ்கிறது.

செயல்படுவது செயல்படுவதில்லை;

செயல்படாதது செயல்படுகிறது.

உருவாவது உருவாவதில்லை;

உருவாகாதது உருவாகிறது.

உண்மைகள் பொய்யாகிறது;

பொய்யானது உண்மையாகிறது.

தவறானது சரியாகிறது;

சரியானது தவறாகிறது.

அழிந்தவைகள் உருப்பெறுகிறது;

உருப்பெற்றவைகள் அழிகிறது.


என்ற வேறுபட்ட நிலைகளுக்குள்ளவைகளை ,

ஒற்றுமையின் தன்மைகளை,

வேற்றுமையின் அர்த்தங்களை ,

நிகழ்வுகளின் வெளிப்பாடுகளை ,

காலத்தின் புதிய பரிமாணங்களை ,

சிந்தனையின் ஊற்றுக்களை ,

அறிவின் தெளிவுகளை,

மாற்றத்தின் மறுமலர்ச்சிகளை ,

முன்னேற்றத்தின் விடியல்களை ,

ரகசியங்களின் விளக்கங்களை ,

மறுமலர்ச்சியின் தாக்கங்களை ,

உயர்வுகளின் போராட்டங்களை ,

தோல்விகளின் சறுக்கல்களை ,

வெற்றியின் கணக்கீடுகளை ,

துரோகத்தின் துயரங்களை ,

வஞ்சனையின் தழுவல்களை ,

ஏமாற்றத்தின் விவரங்களை ,


வாழ்க்கை நீரோட்டத்தில்

அனுபவத்தின் பயனால் மனமானது ஏற்றுக் கொள்ளும் போது

படிப்பதன் மூலமும் பிறர்  சொல்வதை கேட்பதன் மூலமும் ,

உள்ள வேறுபாடுகளை அதில் உள்ள அர்த்தங்களை

அனுபவ அறிவின் மூலம் ஒன்றை ஏற்றுக் கொள்வதின் மூலமும் ,

அறிந்து கொள்ள முடிகிறது.

சந்தேகங்களை தீர்க்க முடிகிறது ;

உண்மைகளை உணர முடிகிறது ;

அறிவைப் பெற முடிகிறது ;

அறிவு விளக்கம் பெற முடிகிறது ;


நெருப்பு சுடும் என்று எழுதப்பட்டவைகளை படிக்கிறோம்.

பிறர்  சொல்வதை கேட்கிறோம்.

அது உண்மையா பொய்யா நிகழக் கூடிய வாய்ப்பு உண்டா?

நெருப்பு நம்மைத் தொட்டால் சுடுமா ?அல்லது

நாம் போய் நெருப்பைத் தொட்டால் சுடுமா?

சுடுவது என்பது நெருப்பின் இயல்பா

அது தான் அதனுடைய தன்மையா

அந்த குணத்தைத் தான் அது பெற்றிருக்கிறதா

என்ற பல்வேறு கேள்விக்கணைகளுடனும்

சந்தேக நோக்குடனும்

நம் மனம் அலை பாய்கிறது.


ஆனால் வாழ்வில் ஒரு சந்தர்ப்பம் எதிர்ப்பட்டால்

நெருப்பு நம்மை தொடும் சந்தர்ப்பமோ

நாம் போய் நெருப்பைத் தொடும் சந்தர்ப்பமோ ஏற்பட்டால்

அத்தகைய ஒரு நிலை ஏற்பட்டால் ,

அத்தகைய ஒரு வாய்ப்பு ஏற்பட்டால் ,

அத்தகைய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் ,

அத்தகைய ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் ,

நாம் உண்மையை உணர முடியும் .

நெருப்பு சுடும் என்ற கேள்விக்கான விடையை அறிய முடியும்.


எழுதப்பட்டவைகளை படிப்பதன் மூலமும் ,

பிறர்  சொல்வதை கேட்பதன் மூலமும் ,

எழுந்த சந்தேகத்திற்கான விடையை

உண்மையை அனுபவ ரீதியாக உணரும் போது

அறிந்து கொள்கிறோம் ; அதை ஏற்றுக் கொள்கிறோம்.


தெரியாத ஒருவதை நண்பராக ஏற்றுக் கொள்கிறோம்.

அந்தத் தெரியாத ஒருவருடைய நண்பர்  நம்மிடையே வந்து

அவர் நல்லவரில்லை ; நல்ல பண்புகளை கொண்டவரில்லை;

உயர்ந்த மனது கொண்டவரில்லை ;

கள்ளமில்லா நெஞ்சம் கொண்டவரில்லை ;

திறந்த மனப்பான்மை கொண்டவரில்லை ;

நட்பின் இலக்கணம் கொண்டவரில்லை ;

அவரிடம் நட்பு கொள்ள வேண்டாம்

அதன் மூலம் இழப்புகள் பலவற்றை சந்திக்க நேரிடும்

என்று யாராவது சொன்னால் ,

அவருடைய வார்த்தைகளை நாம் நம்பாமல்

அவருடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் மனது இல்லாமல்

உண்மையான வார்த்தைகளா என்று ஆராய்ச்சி செய்யாமல்

தெரியாத ஒருவரை அவர் குணத்தின் தன்மைகளை

பிறர்  சொல்வதை கேட்டும்

அத்தகைய கருத்துக்களை ஒதுக்கி விட்டு

அவரை நண்பராக ஏற்றுக் கொள்கிறோம்.


அவருடைய இன்பங்களில் - துன்பங்களில்

ஏற்றங்களில் - இறக்கங்களில்

உயர்வுகளில் - தாழ்வுகளில்

போற்றுதல்களில் - துாற்றுதல்களில்

பங்கு கொள்கிறோம்.


அவரிடம் நாம் உண்மையான நட்பை வெளிப்படுத்துகிறோம்

நண்பனாக நடந்து கொள்கிறோம்

நம்முடைய உழைப்பைப் பெற்று ,

நம்முடைய அறிவைப் பெற்று ,

நம்முடைய சிந்தனையைப் பெற்று ,

உயர்வுக்கு சென்ற நண்பர் ;

உயர்வின் ஏற்றத்திற்கு சென்ற நண்பர் ;

வெற்றியின் அரியணைகளை சுவைத்த நண்பர் ;

மகிழ்வுகளின் எல்லைகளை ரசித்த நண்பர் ;

துன்பங்களை தன்னிடமிருந்து விலக்கிய நண்பர் ;

நமக்கு துன்பம் ஏற்பட்டபோது அதை விலக்காமல்

வாழ்க்கையில் சறுக்கல் ஏற்பட்டபோது அதை தடுக்காமல்

துயரத்தின் மேகங்களை

சோகத்தின் தழும்புகளை

கவலைகளின் கண்ணீர்களை

துடைக்காமல் கண்டும் காணாமல் இருந்து விட்டு

நம்மை விட்டு விலகிச் சென்றால்

அத்தகைய ஒரு நிகழ்வு நமக்கு ஏற்பட்டால்

அப்பொழுது தான் நாம் நட்பின் உண்மையை உணர முடியும் .

தெரியாத நண்பரைப் பற்றி

மற்றவர்  சொன்ன கருத்துகள் உண்மை என்று

நம்முடைய வாழ்வில் நிகழ்வுகள் நடைபெறும் போது

நாம் அனுபவ ரீதியாக ஏற்றுக் கொள்கிறோம்;

அனுபவ ரீதியாக ஒன்றை உணர்ந்து ஏற்றுக் கொள்கிறோம் ;

உண்மைகளை உணர்ந்து கொள்கிறோம் ;

அறிவு தெளிவு பெறுகிறோம்.


அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள்

வழி மாறிப் போனவைகளை

வழி தவறாமல் செல்ல வழி நடத்துபவர்கள் ,

பாதை மாறிப் போனவைகளை நல்வழி காட்டி

பயணிக்க பாதை வகுப்பவர்கள்,

சரியானவைகள் என்று நினைத்துக் கொண்டு

தவறானவைக்குள் அடி எடுத்து வைப்பவைகளை

சரியானவைகளை விளக்கி சரியானவைக்குள்

செலுத்துபவர்கள் மேய்ப்பர்கள்.


அத்தகைய மேய்ப்பர்கள் வயல் வெளியிலே தங்கி

இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்

கொண்டிருந்தார்கள்.


அந்த வேளையிலே யாருக்கும் கிடைக்காத

மிகப் பெரிய பேறு அவர்களுக்கு கிடைத்தது.

ஆண்டாண்டு காலமாய்

யாருக்காக காத்துக் கொண்டிருந்தார்களோ

நம்மை ரட்சிக்க வருவார் ;

நம் பாவங்களை போக்க வருவார் ;


அ ன்பை விதைக்க வருவார் ;

ஆ சைகளை நிறைவேற்ற வருவார் ;

இ ரக்கத்தை வளர்க்க வருவார் ;

ஈ கையை பெருக்க வருவார் ;

உ ண்மையை உரைக்க வருவார் ;

ஊ றுகளை நீக்க வருவார் ;

எ ண்ணங்களை நிறைவேற்ற வருவார் ;

ஏ ழ்மையை போக்க வருவார் ;

ஐ திகத்தை நீக்க வருவார் ;

ஒ ழுக்கக்கேடுகளை ஒழிக்க வருவார் ;

ஓ ர்மம் பெருக்க வருவார் ;

ஓள ஷதம் போட வருவார் ;


கருணையை பரப்ப வருவார் ;

சமத்துவத்தை உருவாக்க வருவார் ;

மாற்றத்தை ஏற்படுத்த வருவார் ;

மறுமலர்ச்சியை நிலைபடுத்த வருவார் ;

அடிமை நிலையை விலக்க வருவார் ;

கவலைகளை போக்க வருவார் ;

துன்பங்களை நீக்க வருவார் ;

பாவங்களை கழுவ வருவார் ;

இன்பங்களை அளிக்க வருவார் ;

மகிழ்வுகளை கொடுக்க வருவார் ;

துயரங்களை அறுக்க வருவார் ;

கண்ணீரை துடைக்க வருவார் ;

ஏற்றத்தை பெருக்க வருவார் ;

நன்மைகளை உருவாக்க வருவார் ;

உண்மைகளை வளர்க்க வருவார் ;

பொய்மைகளை புதைக்க வருவார் ;

நல்லவைகளை தருவதற்கு வருவார் ;

கெட்டவைகளை அழிக்க வருவார் ;


என்று யாருக்காக காத்திருந்தார்களோ ,

அந்த ஆண்டவரை  ,அந்த ரட்சகரை , அந்த மீட்பரை ,

அந்த மேய்ப்பரை  ,அவர்  வருகையை ,

அவர்  வருகை குறித்த  விவரங்களை ,

மேய்ப்பர்களுக்கு அளிக்க

கர்த்தருடைய துாதன் அவர்களிடத்தில் வந்து நின்றான் .


கர்த்தருடைய மகிமை அவர்களைச்

சுற்றிலும் இருந்தது ; பிரகாசித்தது ;

அந்த காட்சியைக் கண்டு அவர்கள் மிகவும் பயந்தார்கள்.

தேவதுாதன் அவர்களை நோக்கி பயப்படாதிருங்கள்

இந்த உலகமே மகிழ்வு அடையும் ,

மனங்கள் சந்தோஷம் அடையும் ,

உயிரினங்கள் இன்பத்தின் எல்லையை அடையும் ,

நற்செய்தி ஒன்றை உங்களுக்கு அளிக்கிறேன்.


பிறருக்கு கிட்டாத,  மற்றவர்கள் நினைத்து பார்க்க முடியாத,

மிகப்பெரிய நற்செய்தி ஒன்றை உங்களுக்கு அளிக்கிறேன்.

இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர்,

உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

மேலும் பிள்ளையைத் துணிகளில்

முன்னணையிலே  கிடத்தியிருக்கக் காண்பீர்கள்

இது உங்களுக்கு அடையாளம் என்றான்.


இயேசு கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றியும்

அவர்  வருகையைப் பற்றியும்

அவர் எங்கே இருப்பார் ; எந்த நிலையில் இருப்பார் ;

அதற்கான அடையாளங்கள் என்ன என்பதைப் பற்றியும்

அவர்களுக்கு அளிக்கப் பட்டன.


அந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்வதில்

மேய்ப்பர்கள் மனதில் குழப்பம் நிலவியது .

இது உண்மையா ? இது கனவா ? என்ற நிலையில் மனமானது

இரு வேறுபட்ட நிலையில் குழப்பத்திற்குள் தள்ளப்பட்டது.

தேவதுாதன்  வார்த்தைகளை ஏற்றுக் கொள்வதில்

மேய்ப்பர்கள் மனதில் குழப்பம் நிலவியது.


அதனால் அத்தகைய காரணத்தினால்  ,

குழப்பத்தினால் தள்ளப்பட்ட மனதினால்  ,

சந்தேகத்தின் துாண்டுதலால்

உண்மையா என்ற கேள்வியால்

உள்ளத்தின் தடுமாற்றத்தினால்

தேவதுாதர்கள் அவர்களை விட்டுப்

பரலோகத்துக்குப் போன பின்பு மேய்ப்பர்கள்

ஒருவரை ஒருவர்  நோக்கி

தங்களுக்குள் தங்கள் எண்ணங்களை

தங்கள் கருத்துக்களை

தங்கள் நிலைப்பாடுகளை

பெத்லகேம் ஊருக்குப் போய்

கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட

இந்தக் காரியம் நடந்ததா என்பதைப் பார்ப்போம்.

அந்த நிகழ்ச்சியை நேரில் பார்ப்போம் .

உண்மையா என்று நேரில் கண்டு உண்மை தெளிவோம் .

உண்மையை அறிவோம் வாருங்கள் என்று சொல்லி ,

தேவதுாதன் சொன்ன இடத்தை அடைந்து

தேவதுாதன்  சொன்ன அடையாளங்கள்

சரியாக இருக்கிறதா ? பொருந்தி இருக்கிறதா?

என்பதை சரி பார்க்க அங்கே சென்றார்கள் .


மரியாளையும் , யோசேப்பையும் முன்னணையிலே

கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள் .

உண்மையை உணர்ந்தார்கள்

உண்மையை நேரில் கண்டார்கள்

தேவதுாதர்  சொன்னவை அனைத்தும் உண்மை

என்பதை உணர்ந்து கொண்டார்கள் .


தாங்கள் கண்டவைகளை ,

தாங்கள் கேட்டவைகளை ,

தாங்கள் உணர்ந்தவைகளை ,

தாங்கள் அறிந்தவைகளை ,

தங்களுக்கு அறிவிக்கப்பட்டவைகளை ,

தங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளை ,

தாங்கள் உணர்ந்த உண்மைகளை , உணர்ந்தவைகளை ,

மற்றவர்களுக்கு பிரசித்தம் பண்ணினார்கள்.

மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும்

அவைகளைக் குறித்து ஆச்சரியப் பட்டார்கள்.


அந்த அதிசயத்தைக் குறித்து வியந்தார்கள்.

ஆண்டவரின்அற்புதத்தைக் கண்டு மனம் நெகிழ்ந்தார்கள்.

உணர்ச்சி வயப்பட்டார்கள்  ; உள்ளம் உருகினார்கள் ;

நற்செய்தி வெளிப்பட்ட விதம் கண்டு மனம் உவகை அடைந்தார்கள் ;

நிகழ்வுகள் நடந்த விதம் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.


மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின் படியே

கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும்

தேவனை மகிமைப் படுத்தி

துதித்துக் கொண்டு திரும்பிப் போனார்கள்.

தேவதுாதன்  சொல்வதை ஏற்றுக் கொள்வதில்

மேய்ப்பர்களுக்கு மனமில்லை குழப்பமே நிலவியது.

அது உண்மையா என்ற சந்தேகம் மனதில் குடி கொண்டிருந்தது.

அதனால் தேவதுாதன்  வார்த்தைகளை ஏற்கலாமா ? கூடாதா ?

என்ற குழப்ப நிலையில் ,

மேய்ப்பர்களுக்களுடைய மனம் இருந்தது.

அந்த குழப்பத்தை தீர்க்க , உண்மையை உணர்ந்து கொள்ள,

அனுபவ பூர்வமாக தெரிந்து கொள்ள இயேசுவை கண்டனர்.

அடையாளங்களை கண்டனர் ;  உண்மையை உணர்ந்தனர் .


ஏற்றுக் கொள்வதில் ஒரு உண்மையை ஏற்றுக் கொள்வதில்

மேய்ப்பர்கள் மனதில் குழப்பமே நிலவியது .

தேவதுாதன்  சொன்னவைகளை உண்மையை

ஏற்றுக் கொள்ளாத மேய்ப்பர்களின் மனமானது

அதை அனுபவ பூர்வமாக உணர்ந்த போது

உண்மையை நேரில் கண்டபோது

உண்மையை நேரில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்த போது

இந்த அவனியை உய்விக்க வந்த ஆண்டவரை

நேரில் தரிசிக்கும் சந்தர்ப்பம் வாய்த்த போது ஏற்றுக் கொண்டது.


பிறர்  சொல்வதை கேட்டு உண்மையை உணராமல்

மனக்குழப்பத்தில் இருப்பவர்கள்

உண்மையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அதை அனுபவரீதியாக உணர்வதன் மூலமே

உண்மையை தரிசிப்பதன் மூலமே ஏற்றுக் கொள்வார்கள்


ஏற்றுக் கொள்வதில் மனக்குழப்பம் உள்ளவர்கள்

பிறர்  சொல்வதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்

அதை அனுபவ ரீதியாக உணர்பவர்கள்

மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள்

என்கிறது பைபிள்.



சிவவாக்கியர்:

வேணுமென்ற ஞானமும் விரும்புகின்ற நுாலிலே

தாணுவுண்டங் கென்கிறீர்  தரிக்கிலீர்  மறக்கிலீர்

தாணுவொன்று மூலநாடி தன்னுள் நாடியும்முளே

காணுமன்றி வேறியாவுங் கண்மயக்க மொக்குமே                            

                                ---சிவவாக்கியர் -சிவவாக்கியம்-1000----


ஏற்றுக்கொள்வதில் மனிதரிடையே வேறுபாடு இருக்கிறது.

வேறுபட்ட மனநிலை கொண்டவர்கள்

வேறுபட்ட குணாதிசயம் கொண்டவர்கள்

வேறுபட்ட தன்மைகளை தன்னுள் கொண்டவர்கள்

வேறுபட்ட சிந்தனைகளை தன்னுள் கொண்டவர்கள்

வேறுபட்ட அறிவுத்திறனில் நின்று யோசிப்பவர்கள்

என்று பல்வேறு தரப்பட்ட

பல்வேறு வேறுபாடு கொண்ட

மனிதர்கள் வாழ்வில் நிகழும்

நிகழ்ச்சிகள் , செயல்கள் ஆகியவற்றை

அவரவர்  நிலையில் நின்று கொண்டு

அவரவர்  சிந்தனைக்கேற்ப ,

அவரவர் சுயநிலைக் கேற்ப ,

அவரவர்  அறிவு நிலைக் கேற்ப ,

நல்லவைகளையும் ,கெட்டவைகளையும்

தான் நினைத்தது தான் சரி

தன் செயல் தான் சரி

தன் நிலைப்பாடு தான் சரி

என்று நினைத்துக் கொண்டு

நல்லவையா ? கெட்டவையா?

தான் ஏற்றுக் கொண்டு செய்த செயல்

சரியா ? தவறா ? என்று ஆராயாமல்

தான் ஏற்றுக் கொண்டு செய்த செயல் தான் சரி

தான் ஏற்றுக் கொண்டு எடுத்த முடிவு தான் சரி

என்ற நிலையில் இருந்து கொண்டு செயல்படுவதால்

மற்றவர்  நிலையையும்

மற்றவர்  சொல்லிய சொல்லையும்

மற்றவர்  காட்டிய வழிமுறைகளையும்

மற்றவர்  காட்டிய பாதையையும்

மற்றவருடைய நிலையில் நின்று ஆராய்ந்து பார்க்காமல்

தான் ஏற்றுக் கொண்ட முடிவு தான் சரி

தான் ஏற்று செயல்படுத்திய செயல் தான் சரி

என்ற நிலையில் இருக்கின்றனர்.


இது சில சமயம் சரியா இருக்கலாம்

சில சமயம் தவறாக இருக்கலாம்.

சரியான முடிவுகள் நம்மை உயர்த்தும்

தவறான முடிவுகள் நம்மை தாழ்த்தும் .

முடிவுகள் என்பது காலத்தை பொறுத்து வேறுபடும் .

எடுக்கப்படும் முடிவுகளில் எது சரி ? எது தவறு ? என்பது

வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும்

வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற - இறக்கங்களையும்

வாழ்க்கையில் ஏற்படும் இன்ப - துன்பங்களையும்

வாழ்க்கையில் ஏற்படும் நிம்மதியையும் நிம்மதியின்மையையும்

வாழ்க்கையில் ஏற்படும் உயர்வு - தாழ்வுகளையும்

வைத்தே தெரிந்து கொள்ளலாம்.


வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தின் தன்மைகளே

ஒருவர் ஏற்று செயல்படுத்திய செயல் சரியா ? தவறா ?

என்பதை நிரூபிக்கும்.


ஒரு பெண் திருமணமாகி

பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீடு செல்கிறார் .

புகுந்த வீட்டில் மாமனார் , மாமியார் ,

கணவர்  தங்கை , கணவர்  தம்பி,

என்று பல்வேறு உறவு முறைகள் இருக்கின்றன.


மணமகளுக்கு புகுந்த வீடு புதியது ;

உறவுமுறைகள் புதியது ;

பழக்கவழக்கங்கள் புதியது ;

சூழ்நிலைகள் புதியது ;

பிறந்த வீட்டின் சூழ்நிலையிலிருந்து

புகுந்த வீட்டின் சூழ்நிலை முற்றிலும் புதியது ;

மாறுபட்ட நிலை கொண்டது ;

மணமகள் அத்தகைய ஒரு பதிய சூழ்நிலையில்

தன்னை இணைத்துக் கொள்ள சிறிது காலம் பிடிக்கும் .


மணமகள் பிறந்த வீடு உயர்ந்த நிலையில் இருக்கலாம் ;

செல்வச் செழிப்பில் திளைத்து இருக்கலாம் ;

கூப்பிட்ட குரலுக்கு வேலை செய்ய பணியாட்கள்

பலர்  இருந்து இருக்கலாம் ;

வெளியிடங்களுக்கு சுற்றி வர வாகனங்கள்

பல பெற்று இருக்கலாம் ;

தன் விருப்பத்தை நிறைவேற்ற

தன் ஆசைகளை நிறைவேற்ற

பணத்தை தண்ணீராக செலவழித்து இருக்கலாம் ;

ஆடம்பரத்தில் நீந்தி இருக்கலாம் ;

சுகத்தில் மூழ்கி இருக்கலாம் ;

இன்பத்தில் நனைந்து இருக்கலாம் ;

மகிழ்ச்சியில் விளையாடி இருக்கலாம் ;


ஆனால் புகுந்த வீடு அதற்கு நேர்  எதிராக

வறுமையில் இருக்கலாம் ;

ஏழ்மை கொண்டதாக இருக்கலாம் ;

அளவுக்குட்பட்டு செலவு செய்பவர்கள்

புகுந்த வீட்டில் இருக்கலாம் ;

நினைத்ததை நினைத்தபடி வாங்க முடியாத

நிலைகள் இருக்கலாம் ;

கட்டுப்பாடுகள் பலவற்றை தன்னுள்

கொண்டதாக இருக்கலாம் ;

தன் ஆசையை நிறைவேற்றக் கூடிய

சூழ்நிலைகள் இல்லாமல் இருக்கலாம் ;

வேலைப்பளு அதிகமாக இருக்கலாம் ;

வேலைகள் பலவற்றை தான் செய்யக்கூடிய

நிலைகள் இருக்கலாம் ;

இந்த நிலையில் மணமகளானவள்

புகுந்த வீட்டின் நிலையை அனுசரித்து சென்றால் ,

சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டால் ,

மணமகளுக்கும் , புகுந்த வீட்டிற்கும் பிணக்கு இல்லை .


புகுந்த வீட்டில் உள்ளவர்களும்

பிறந்த வீட்டில் உள்ள சூழ்நிலை வேறு

வாழ்ந்த நிலை வேறு

பழகிய பழக்க வழக்கங்கள் வேறு

உறவு முறைகளின் தன்மைகள் வேறு

சுற்றத்தாரின் குணாதிசயங்கள் வேறு

என்ற எண்ணத்தை மனதில் கொண்டால் ,

மணமகளின் தன்மைக் கேற்ப

தங்களை அனுசரித்து சென்றால் ,

தவறு இல்லை ; பிணக்கு இல்லை ; சண்டை இல்லை;


ஆனால் இதை இரு நிலையில் உள்ளவர்களும்

மனதில் கொள்ளாமல் ,

மணமகளும் , புகுந்த வீட்டில் உள்ளவர்களும்

மனதில் கொள்ளாமல் ,

தான் சொன்ன சொல்லுக்கேற்ப

தன் எண்ணத்திற்கேற்ப

புகுந்த வீட்டில் உள்ளவர்கள்

நடந்து கொள்ளவில்லை என்று

மணமகள் தான் ஏற்றுக் கொண்ட கொள்கை தான் சரி

தான் ஏற்றுக்கொண்ட முடிவு தான் சரி என்று

அவர்களுடைய நிலையில் நின்று புகுந்த வீட்டில்

உள்ளவர்களின் நிலையை எண்ணிப் பார்க்காமல் இருந்தால்

மணமகளின் உள்ளத்தில் புகுந்த வீட்டில் உள்ளவர்கள்

விரோதிகளாகத் தான் தெரிவார்கள்.


புகுந்த வீட்டில் உள்ளவர்கள் மணமகளின் நிலையில் நின்று

அவள் பக்கம் உள்ளவைகளை எண்ணி பார்க்காமல்

பகைமை பாராட்டினால்

ஆணவத்துடன் நடந்து கொள்கிறாள் ;

பணக்கார திமிருடன் உலா வருகிறாள் ;

அகம்பாவம் கொண்டு தலைவிரித்து ஆடுகிறாள் ;

என்ற நிலையில் ,

தான் எடுத்த முடிவு தான் சரி என்று நினைத்துக் கொண்டு

மணமகளின் நிலையில் இருந்து சிந்திக்காமல்

மணமகளின் பக்கத்தில் உள்ள நியாயங்களை ஆராய்ந்து பார்க்காமல்

அதனை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் இருந்தால் ,

மணமகளின் மீது வெறுப்பு தான் ஏற்படும்.


மணமகளும் புகுந்த வீட்டில் உள்ளவர்களும்

அவரவர்  பக்கத்தில் உள்ள நியாயங்கள் சரி என்றும்

மற்றவர்  பக்கம் உள்ள நியாயங்களை

ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் இருப்பதால் ,

ஆராய்ந்து பார்க்காமல் இருப்பதால் ,

தங்களை திருத்திக் கொள்ள முயலாமல் இருப்பதால் ,

சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ள

விருப்பப்படாமல் இருப்பதே

இருவருக்கும் பிணக்கு ஏற்பட காரணம் .

சரியானவைகளை சரியானவைகள் என்றும் ,

தவறானவைகளை தவறானவைகள் என்றும் ,

வேறுபடுத்தி ஏற்றுக் கொள்ளும்

மனப்பாங்கு இல்லாத காரணத்தினால் ,

வாழ்க்கையில் பிணக்குகளும் , அமைதியின்மையும் ,

நிம்மதிக் குலைவும் ஏற்படுகிறது .


பொய்மைக்கும்,  உண்மைக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து ,

சரியானவைக்கும் , தவறானவைக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து ,

உணர்ந்து ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே

பொய்மையை நீக்கி உண்மையை உணர முடியும்.

தவறானவைகளை நீக்கி

சரியானவைகளை பயன்படுத்த முடியும் .

அனுபவம் மட்டுமே

சரியானவைக்கும் , தவறானவைக்கும்

உள்ள வேறுபாட்டை உணர வைக்கும் .


ஞானத்தை தேடி பலர்

பல்வேறு இடங்களைத் தேடி

பல்வேறு மனிதர்களைத் தேடி

பல்வேறு ஊர்களைத் தேடி

பல்வேறு புத்தகங்களைத் தேடி அலைகின்றனர்.

பெரும்பாலானவர்கள் ஞானத்தை

புத்தகங்களில் தேடுகின்றனர் ;

புத்தகங்களை அலசுகின்றனர் ;

ஆராய்கின்றனர் ;  ஆழ்ந்து படிக்கின்றனர் ;

புத்தகச் சிந்தனையிலேயே மூழ்குகின்றனர் ;


2     இதிகாசங்கள்

4     வேதங்கள்

12    திருமுறைகள்

14    சைவ சித்தாந்த சாத்திரங்கள்

18    புராணங்கள்

28   ஆகமங்கள்

108   உபநிஷத்துக்கள்


என பல்வேறு நிலைகள் கொண்ட

புத்தகங்கள் வாயிலாக ஞானத்தைத் தேடுகின்றனர்.

புத்தகங்கள் என்பவைக்குள் தங்கள்  ஞானத்தை தேடுகின்றனர்.

அவைகள் ஞானத்தின் பாதையைக் காட்டுகின்றன ;

ஞானத்திற்கான வழிமுறையை அளிக்கின்றன ;

தேடுவதற்கான நிலைகள் எவை என்பதை வலியுறுத்துகின்றன ;


அத்தகைய புத்தகங்களில் ,

தனக்கு எத்தகைய புத்தகங்கள் பிடிக்குமோ ,

எத்தகைய கொள்கையை வலியுத்தியவர் பிடிக்குமோ ,

அவரை பின்பற்றி

அவர்  அடியொற்றி

அவருடைய புத்தகங்கள் மட்டுமின்றி

ஞானத்தை விளக்குவதாக சொல்லும் ,

ஞானத்தை தருவதாக சொல்லும் ,

ஞானத்தை அளிப்பதாக சொல்லும் ,

ஞானத்தை கொடுப்பதாக சொல்லும் ,

விரும்புகின்ற புத்தகத்தில் தேடுகின்றனர்.

தேடி செயல்படுத்தி விளைவுகளைப் பார்க்கின்றனர் .


புத்தகத்தில்  சொல்லப்பட்ட அறிகுறிகளையும் ,

தனக்கு ஆன்மீகத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளையும் ,

தனக்கு ஆன்மீகத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் ,

ஒப்பிட்டுப் பார்த்து

தான் ஆன்மீகத்தில் உயர்ந்து விட்டதாக நினைத்துக் கொள்கின்றனர் ;

ஞானம் அடைந்து விட்டதாக நினைத்துக் கொள்கின்றனர் ;

தன்னைப் பற்றி பெருமையாக நினைத்துக் கொள்கின்றனர் ;

தான் உயர்நிலை அடைந்து விட்டதாகவும் ,

பிரம்ம நிலை எய்தி விட்டதாகவும் ,

ஞானநிலை கிடைத்து விட்டதாகவும் ,

நினைத்துக் கொள்கின்றனர்.


அதனால் நிலை தடுமாறி ,

ஆணவ மிகுதியால் ,

தலை கணத்தால்  ,

மற்றவரை சாதாரணமாக நினைக்கக் கூடிய நிலையும் ,

மற்றவரை மதிக்காத சூழ்நிலையும் ,

பிறரை இழிவாக நினைக்கும் மனப்பக்குவமும் ஏற்படுகிறது.


உண்மையான நிலை உணர்ந்தவருக்கு

இத்தகைய நிலை ஏற்படுவதில்லை .

உண்மை நிலை அடைந்து விட்டோம்

என்று தவறாக நினைத்துக் கொண்டிருப்பவர்க்கே

தன்னைப் பற்றி ஒரு உயர்வான நிலையும் ,

மற்றவரை தாழ்வாக எண்ணும் நிலையும் ஏற்படுகிறது.


உண்மை நிலை உணர்ந்து விட்டால்

அனைத்து உயிரையும் சமமாக பாவிக்கும் எண்ணமும் ,

ஏற்றத் தாழ்வு நீக்கிய எண்ணமும் இருக்கும்.

உண்மை நிலை உணராதவருக்கு

இத்தகைய நிலை இருக்காது.


தனக்குள்ளே சென்று

தன்னுள் இறைவனை உணர்ந்து

அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது ;

இப்பிரபஞ்சத்தை இயக்குவதே , தன்னையும் இயக்குகிறது ;

இப்பிரபஞ்சத்தில் நீக்கமற நிறைந்து இருப்பதே

தன்னுள்ளும் நிறைந்து இருக்கிறது.


அவனே அனைத்திற்கும் மூலம் ;

அவனே அனைத்திற்கும் ஆதி-  அந்தம் ;

அவனே அனைத்திற்கும் முழு முதற்பொருள் .


எல்லாமாக பரவி இருப்பதே கடவுள் ;

எல்லாமாக பரிணமித்திருப்பதே கடவுள் ;

எல்லாமாக உருவாகி இருப்பதே கடவுள் ;

என்பதை ,

மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும்

குண்டலினி சக்தியை எழுப்பி  ,

ஆறு ஆதாரங்களைக் கடந்து ,

ஒன்பது வாசலை அடைத்து ,

பத்தாவது வாசலைத் திறந்து ,

சக்தியை - சிவனுடன் சேர்த்து

அமிர்தத்தை உண்டு ஞானத்தைப் பெற்று ,

நானே அவனாகவும்

அவனே நானாகவும் இருப்பதை அறிந்து ,

முழு முதற் பொருளை

உணர்ந்து கொள்பவர்களால் மட்டுமே ,

உண்மையை உணர முடியும் .

பொய்மையை விலக்க முடியும் .


உண்மையை உணர வேண்டுமானால்

அனுபவத்தால் மட்டுமே முடியும் .

அனுபவத்தால் ஏற்படும் தோல்விகளை ஆராய்ந்து

ஏற்றுக் கொள்பவர்களால் மட்டுமே

உண்மையை உணர முடியும் .



சரியானவைக்குள் இருக்கும் தவறுகளையும்

உண்மைக்குள் இருக்கும் பொய்மைகளையும்

உணர்ந்து ஏற்றுக் கொள்பவர்களால் மட்டுமே

உண்மைகளையும் சரியானவைகளையும்

உணர முடியும் .


வாழ்க்கையை உண்மையாக வாழ முடியும் ;

மயக்கம் நீக்கி உண்மையாக வாழ முடியும் ;


நாம் உண்மையாக வாழவேண்டும் என்றால் ,

உண்மை நிலை அடைய வேண்டும் என்றால் ,

உண்மைக்கும் பொய்மைக்கும்

உள்ள வேறுபாட்டை உணர்ந்து ஏற்றுக்கொள்ளும்

மனப்பக்குவம் இருக்க வேண்டும்

என்கிறார்  சிவவாக்கியர் .


இயேசு கிறிஸ்து (பைபிள்)  - சிவவாக்கியர் :

பைபிள்,

மனதில் எந்தவித குழப்பங்களும்

இல்லாமல் இருந்தால் மட்டுமே

உண்மையை ஏற்றுக் கொள்ள முடியும்.

உண்மையை அனுபவத்தினால்

உணர்ந்து கொள்வதின் மூலமே

உண்மையை  மனதில் எந்தவித குழப்பமும் இல்லாமல்

ஏற்றுக் கொள்ள முடியும் என்கிறது.


அவ்வாறே,

சிவவாக்கியரும்,

உண்மைக்கும் பொய்மைக்கும் உள்ள வேறுபாட்டை

அனுபவத்தின் மூலம் உணர்வதன் மூலமே

உண்மையை உணரமுடியும் என்கிறார் .


           “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்

                                போற்றினேன் பதிவுஐம்பத்துஎட்டு ந்தான்முற்றே “”