April 04, 2012

இயேசு கிறிஸ்து-பட்டினத்தார்-ஒன்பதுவாய்-பதிவு -30




            இயேசு கிறிஸ்து-பட்டினத்தார்-ஒன்பதுவாய்-பதிவு -30

            “”பதிவு முப்பதை விரித்துச் சொல்ல
                            ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

ஒரு மனுஷனுக்கு நுhறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப் போனால் , அவன் மற்றத் தொண்ணுhற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்ச் சிதறிப் போனதைத் தேடாமலிருப்பானோ?”
                                                                                ------மத்தேயு-18:12

அவன் அதைக் கண்டுபிடித்தால் , சிதறிப் போகாத தொண்ணுhற்றொன்பது ஆடுகளைக் குறித்துச் சந்தோஷப் படுகிறதைப் பார்க்கிலும் , அதைக் குறித்து அதிகமாய்ச் சந்தோஷப் படுவான் என்று , மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
                                                                             -------மத்தேயு-18:13

வாழ்க்கையின் யதார்த்தம் கனவுகளின் கற்பனை ,
கனவுகளின் கற்பனை சிந்தனையின் ஆரம்பம் ,
சிந்தனையின் ஆரம்பம் செயலின் வேகம் ,
செயலின் வேகம் காரியத்தில் கடமை ,
காரியத்தில் கடமை கடமையின் நோக்கம் ,
கடமையின் நோக்கம் நோக்கத்தில் வெற்றி,
நோக்கத்தில் வெற்றி வெற்றியின் ஆரம்பம் ,
வெற்றியின் ஆரம்பம் இன்பத்தின் பிறப்பிடம் ,
இன்பத்தின் பிறப்பிடம் பிறப்பிடத்தின் பலன் ,
பிறப்பிடத்தின் பலன் இன்பத்தின் நன்றியுரை ,
இன்பத்தின் நன்றியுரை நன்றிக்கு இலக்கணம் ,
நன்றிக்கு இலக்கணம் மறவாமல் இருப்பது ,
மறவாமல் இருப்பது மறத்தலின் நோக்கம் ,
மறத்தலின் நோக்கம் தீயதின் வேகம் ,
தீயதின் வேகம் துன்பத்தின் முன்னுரை ,
துன்பத்தின் முன்னுரை தளர்ச்சியான குறி ,
தளர்ச்சியான குறி காரியத்தில் மந்தம் ,
காரியத்தில் மந்தம் மந்தத்தின் குறை ,
மந்தத்தின் குறை செயல் தடுமாற்றம் ,
செயல் தடுமாற்றம் இன்பத்தின் முடிவுரை ,
இன்பத்தின் முடிவுரை முடிவுரைக்கு தொடக்கம் ,
முடிவுரைக்கு தொடக்கம் புதிய எண்ணம் ,
புதிய எண்ணம் எண்ணத்தின் கருத்து ,
எண்ணத்தின் கருத்து கருத்தின் தாகம் ,
கருத்தின் தாகம் கற்பனையின் வழிகாட்டி ,
கற்பனையின் வழிகாட்டி செயலுக்கு ஆதரவு ,
செயலுக்கு ஆதரவு ஆதரவின் முடிவு ,
ஆதரவின் முடிவு துன்பத்தின் முடிவுரை ,
 
என்பதில் தெளிவு பெற்றால்
வாழ்க்கையின் யதார்த்தம் தெரியும்
உண்மையின் விளக்கம் புரியும்
உண்மையின் விளக்கம் புரிந்தால்

நல்லவை செய்வார் ;
அல்லவை விடுவார் ;
தீயவை ஒழிப்பார் ;
நீதியை நிலை நாட்டுவார் ;
தர்மத்தை கடை பிடிப்பார் ;
கருணையை பின் பற்றுவார் ;
அன்பின் வழி நடப்பார் ;
பண்பின் பாதை மாறமாட்டார் ;
பொல்லாங்கு பேச மாட்டார் ;
கடமையை விலக்க மாட்டார் ;
அன்பை துறக்க மாட்டார் ;
நன்றியை மறக்க மாட்டார் ;
கெடுதல்களை செய்ய மாட்டார் ;
தவறான பாதைபோக மாட்டார் ;
பகைமை மறக்க மாட்டார் ;
சுயநலம் பார்க்க மாட்டார் ;
சுயசிந்தனை இழக்க மாட்டார் ;
கடமையைத் தொலைக்க மாட்டார் ;
இல்லாரை வெறுக்க மாட்டார் ;
அறியாமையை வளர்க்க மாட்டார் ;
ஏழ்மையை பரப்ப மாட்டார் ;

இத்தகைய பண்பை கொண்டவர்
நேர்  வழியில் நின்று ; நேர் வழியைப் பின்பற்றி ;
நேர்  வழியில் சென்று ;
அறம் தழைக்க ; அன்பு நிறைய ;
எல்லாம் வல்ல இறைவனின்
கருணைப் பார்வைக்குள் சென்று ,
ஆண்டவனின் அருளைப் பெற்று ,
ஆண்டவனின் வழி காட்டுதலில் ,
ஆண்டவனின் அருள் மழையில் ,
ஆண்டவனின் அன்பு கரங்களுக்குள் ,
இருந்து வழி நடத்தப்படுவார் ;
ஆண்டவனால் வழி நடத்தப்படுவார் ;
உயர்வுகள் பெறுவார் ;
பாவங்கள் தொலைப்பார் ;
நல்வழி நடப்பார் ;
நேர்மை சூடுவார் ;
நித்தியம் உணர்வார் ;
அநித்தியம் கழிப்பார் ;

அதை விடுத்து ,
பொய்கள் பேசி புகழ் மாலை சூட்டிக் கொள்பவர் ;
கபட நாடகம் புனைந்து கயமைத் தனம் வளர்ப்பவர் ;
தகாத விதமாய்ப் பேசி தகுதியை வளர்த்துக் கொள்பவர் ;
ஏமாற்று வித்தை புரிந்து ஏய்த்து பிழைப்பவர் ;
உண்மைகளை புதைத்து பொய்மையாக உலா வருபவர் ;
பிறரைக் கெடுத்து தான் வாழ வழி தேடுபவர் ;
மாற்றான் பொருளை கவர காலம் பார்ப்பவர் ;
அடிமைகளை உருவாக்கி ஆட்சிக் கட்டிலில் அமர்பவர் ;
பக்தியை வியாபாரமாக்கி தன்னை வளர்த்துக் கொள்பவர் ;
பொதுநலத்தை வேரறுத்து சுயநலமாக நடந்து கொள்பவர் ;

இத்தகைய தன்மை கொண்டோர் ,
தீயவழி நடந்து , பாவத்தில் பங்கு கொண்டு ,
பாவத்தை தோளில் போட்டு சுமப்பவர் ;
கடவுளின் பார்வையிலிருந்து விலகிச் சென்று விடுவார் .
பாதை மாறி பயணிப்பார் ;
பள்ளத்தில் வீழ்வார் ;
கஷ்டத்தில் தள்ளாடுவார் ;
துன்பத்தில் நீந்துவார் ;
அறிவை தொலைப்பார் ;
பாதை மாறிய பயணம் பகுத்தறிவை பாழ்படுத்தும் .
பண்பை பாழாக்கும் .

நெறி தவறியவரின் வாழ்க்கை நேர்மையற்று இருக்கும் .
முறை தவறியவரின் வாழ்க்கை
முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடும் .
உள்ளன்பில்லாதவரின் வாழ்க்கையை
கரையான் அரிக்கும் .

மகன் பாதை தவறி போனால்
தந்தை பாதை மாறிய பயணத்தை தடை செய்து
அறிவுரை பல சொல்லி ,
வாழ்வின் யாதார்தத்தை விளக்கி ,
தவறுகளை மன்னித்து தண்டனை அளிக்காமல் ,
தன் தவறை தானே உணரும் படிச் செய்து
பாவம் என்ற பள்ளத்தில் வீழ்ந்தவனை ,
கை துhக்கி விட்டு உண்மைதனை உரைத்து ,
ஆரத் தழுவி அரவணைத்து நல்வழி காட்டி
உண்மையின் மதிப்பை உணரச் செய்து
தன்னுடன் இணைத்துக் கொள்வார் .

அதைப் போல எல்லாம் வல்ல ஆண்டவன்
பாவத்தில் தலை சாய்ந்து
பாவச் செயல்களில் ஈடுபட்டு
பாவ மூட்டையை சுமந்து கொண்டு
பாதை மாறிப் போன
பாவிகளின் உள்ளத்தை உணர்ந்த ஆண்டவர்
பாவப்பட்ட நெஞ்சம்
பரிதவிக்காமால் இருக்க
பாதை மாறிய வாழ்க்கையை
பாவத்தால் மாறிப் போன வழியை
பாவத்தை மன்னித்து
பாவத்தை ஏற்று
பாவிகளாக இல்லாமல்
பாவம் கழிக்கப்பட்டவனாக
பாவத்திலிருந்து விடுபட்டவனாக
பாவம் கழிக்கப்பட்டு பண்புள்ளவனாக
பாவத்தை துறந்தவனாக மாற்றி

தன்னுள் இணைத்து
உண்மை வழி காட்டி
உயர்வான நெறி காட்டி
துhய்மையான உள்ளம் காட்டி
விலை மதிக்க முடியாத அன்பை
அவன் மேல் சொரிந்து
மீண்டும் பாவம் என்னும் புதை சேற்றுக்குள்
இறங்காமல் காத்து ரட்சித்து ஆசிர்வதித்து
தன்னுள் இணைத்துக் கொள்வார்.

திருந்திய உள்ளத்துடன்
தெளிவான சிந்தனையில் இருப்பவரை விட
துன்பச் சேற்றில் சிக்கி
பாவச் சுழலில் மாட்டி பரிதவிப்பவர்
பாசமழை பொழியும் போது
பாவப்பட்ட நெஞ்சம் பாதை மாறிப் போகாது
என்ற காரணத்தினால் ,
பாதை மாறிப் போனவனை தேடிப்பிடித்து அவன் மேல்
கருணையையும் இரக்கத்தையும் பாய்ச்சி
தன்னுள் இணைத்துக் கொண்டு மகிழ்ச்சியடைகிறார்
என்பதே இயேசு சொன்ன உவமைக்கு பொருள் .


தவறு செய்தவனை தண்டனை கொடுத்து திருத்துவதை விட
தவறு செய்தவனை தவறை உணரச் செய்வதே அவனை
திருத்தும் வழி என்கிறார் .

தவறுக்கு தண்டனை கொடுத்தால் தவறு அதிகமாக வாய்ப்பு உள்ளது
தவறை உணரச் செய்தால் தவறை உணர்ந்தவன்
மீண்டும் தவறை செய்ய மாட்டான் என்கிறார்  இயேசு .



பட்டினத்தார்:
    “””ஒன்பதுவாய்த் தோற்பைக் கொருநாளைப் போலவே
         அன்புவைத்து நெஞ்சே அலைந்தாயே - வன்கழுக்கள்
          தத்தித்தச் திச்சட்டை தட்டிக்கட் டிப்பிட்டுக்
          கத்திக்குத் தித்தின்னக் கண்டு”””
                                        -----பட்டினத்தார்----பெரியஞானக் கோவை---

மனிதனுடைய உடலானது ஒன்பது ஓட்டைகளைக் கொண்டது
இந்த ஒன்பது ஓட்டைகளை நவதுவாரங்கள் என்கிறோம்


இரண்டு செவிகள் ,
இரண்டு கண்கள் ,
மூக்கின் இரண்டு துவாரங்கள்  ,ஒரு வாய் ,
மூத்திர துவாரமான ஒரு லிங்கம் ,
மலதுவாரமான ஒரு குதம் .

இவைகளையே நவதுவாரங்கள் , ஒன்பது ஓட்டைகள் என்கிறோம் .
இந்த ஒன்பது ஓட்டைகளைத் தன்னகத்தே கொண்டவனே மனிதன் .

தோல்பையில் தண்ணீர்  ஊற்றி குடிப்பதற்காக
பிரயாணத்தின் போது முற்காலத்தில் கொண்டு செல்லப்பட்டது .
ஒரு ஓட்டை இருந்தால் கூட
அதனைப் பயன்படுத்த முடியாது ;
உபயோகமற்றதாகி விடுகிறது ;
பலனில்லை என்று விலக்கப்படுகிறது ;
உபயோகமில்லை என்று புறக்கணிக்கப்படுகிறது ;
தேவையில்லை என்று துhக்கி வீசப்படுகிறது .

ஒரு ஓட்டை இருந்தாலே இந்த நிலை என்றால் ,
ஒன்பது ஓட்டைகளை தன்னகத்தே கொண்ட மனிதனை
யாரும் ஓட்டை மனிதன் என்று சொல்வதில்லை .
மனிதன் உபயோகமற்றவன் என்று இகழ்ந்து
மற்ற உயிரினங்கள் விலக்குவதில்லை .

மனித இனம் ஒன்பது ஓட்டைகளை
தன்னுள் கொண்டு தான் உயர்ந்த இனம்
என்று பெருமைப் பட்டுக் கொள்கிறது .

ஆறறிவு பெற்றவன் ;
சிந்தனையில் சிறந்தவன் ;
விஞ்ஞானத்தில் உயர்ந்தவன் ;
மெய்ஞ்ஞானத்தை அறிந்தவன் ;
கண்டங்களை கண்டறிந்தவன் ;
கிரகங்களை கடந்தவன் ;
சிரிப்பில் மகிழ்பவன் ;
நாகரிகத்தில் வளர்ந்தவன் ;
பண்பாட்டை படைத்தவன் ;
கலாச்சாரத்தை காப்பவன் ;

என்று மனித இனம் தன்னைப் பற்றி
பெருமை கொள்கிறது .

மனிதன் தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறான் .
பெருமைப் பட்டுக் கொள்கிறான் .
மற்ற உயிரினங்கள் மனிதனை புகழ்கிறதா? இகழ்கிறதா?
என்பது கூட தெரியாமல் ,
மற்ற உயிரினங்களின் மொழி தெரியாததால்
தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறான் .


எந்த சிங்கமும் மனிதக் குட்டி பிறந்திருக்கிறது - என்று
தான் ஈன்ற குட்டியைப் பார்த்து
பெருமைப் பட்டுக் கொள்வதில்லை .
மகிழ்ச்சி கொள்வதில்லை .
மனிதன் மட்டும் தான் சிங்கக்குட்டி பிறந்திருக்கிறது
என்று சொல்லி ஐயறிவு விலங்குடன் தன்னை ஒப்பிட்டு
தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கிறான் .

பரிணாம வளர்ச்சியில் பச்சோந்தி தன்னைத் காத்துக் கொள்வதற்கும் ,
தன் இரையை பெற்றுக் கொள்வதற்கும் ,
தன் நிறத்தை மாற்றுகிறதே ஒழிய - மனிதனைப் போல
மற்றவரை குடி கெடுத்து தான் மட்டும் வாழ வேண்டும்
மற்றவரை ஏமாற்றி செல்வம் சேர்க்க வேண்டும்
என்ற தவறான காரணத்திற்காக
தன் நிறத்தை மாற்றுவதில்லை - ஆனால் மனிதன்
பச்சோந்தி மாதிரி செயல்படுகிறாயே
என்று பச்சோந்தியை இகழ்கிறான் ; பழிக்கிறான் ;
பச்சோந்தியை இழித்துப் பேச மனிதுக்கு
தகுதியும் இல்லை ; உரிமையும் இல்லை ;
என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .

ஒன்பது வாய்த் தோல்பை என்றால் ,
ஒன்பது ஓட்டைகளைக் கொண்ட மனிதன் என்று பொருள் .

நல்லவற்றை தன்னுள் கொள்ளாத மனிதன்
தான் வாழ்வதற்காகவும் ;
தன் நிலை உயர்வதற்காகவும் ;
தன் குடும்பம் செழிப்பதற்காகவும் ;
சுற்றத்தார்  பாராட்டுவதற்காகவும் ;
குடும்பத்தார்  போற்றுவதற்காகவும் ;
உறவினர்கள் மதிப்பதற்காகவும் ;
சமுதாயம் புகழ்வதற்காகவும் ;
செய்யத் தகுந்தவை எவை?
செய்யத்தகாதவை எவை? என்று
வேறுபடுத்தி கூடப் பார்க்காமல் இந்த ஒன்பது ஓட்டை உடலை
பாதுகாக்க பராமரிக்க பேணிக்காக்க ,
அழகு படுத்தி சிறப்பிக்க ,
அணிகலன்களை பூட்டுவிக்க ,
வாசனை திரவியங்களை தெளிக்க ,
புறத்தை அழகுபடுத்தி ,
தன்னையும் தன் சுற்றத்தையும் வாழ்விக்கிறான் .

உயிர்  உடலில் இருக்கும் வரை
மனிதன் என்ற பெயரைப் பெற்று உலா வரும் மனிதன் .
உயிர்  உடலை விட்டுப் பிரிந்தால்
பிணம் என்று பெயரைப் பெற்று விடுகிறான் .
புதைக்கப்படுகிறான் ; எரிக்கப்டுகிறான் .

இறந்த உடலை கழுகுகள் பல கூடி
நார்  நாராக கிழித்து ; நரம்புகளை கிழித்து ;
சதைகளை கிழித்து ; உணவாக உட்கொள்கிறது .

உயிர்  உடலை விட்டுப் பிரிந்தால்
எந்த உயிருக்கும் இந்த நிலை தான் என்பதை உணராமல் ,
இந்த நிகழ்வுகளை கண்ணால் கண்டும்
சிந்தித்து உணராமல்
மனது தெளிவடையாமல்
அறிவு விளக்கம் பெறாமல்
அலைவதால் என்ன பயன்?

தவறுகள் பல செய்து
பாவங்கள் பல பெருக்கி
பாவத்தின் எண்ணிக்கையை கூட்டிக் கொண்டால்
இந்த நிலை தான் என்பதை உணர்ந்து
தவறு செய்வதால் ஏற்படும்
விளைவுகளை உணர்ந்து
தவறை தானே உணர்ந்து
தவறை திருத்திக் கொண்டு
நல்வழியில் நடப்பதால்
பாவங்களைக் கழித்து
பிறப்பு - இறப்பை அறுத்து
பேரின்பப் பெருவெள்ளத்தில் நீந்துவதால்
ஞானத்திற்கான உயிர்ப்பை அடைய முடியும்
தன் தவறை தானே உணர்ந்து திருந்தியவன்
உயர்ந்த நிலை அடைகிறான் .
ஞானத்திற்கான திறவுகோலைப் பெற்று
தான் அவனாக மாறுகிறான்
என்கிறார்  பட்டினத்தார் .



இயேசு கிறிஸ்து- பட்டினத்தார் :
இயேசு , தவறு செய்பவனுடைய தவறை உணரும் படி செய்தால்
தவறு செய்பவன் தன் தவறை உணர்ந்து திருந்தி மேன்மை நிலை
அடைவான் என்கிறார்.

அவ்வாறே ,
பட்டினத்தாரும் ,தவறு செய்பவன் தான் செய்தது தவறு
என்று உணரும் போது
தவறை திருத்தி உயர்ந்த நிலை அடைகிறான் என்கிறார்.
       
  
                   “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                      போற்றினேன் பதிவுமுப்பது  ந்தான்முற்றே “”