April 17, 2019

பரம்பொருள்-பதிவு-3


                         பரம்பொருள்-பதிவு-3

“நம் உடலில் கடவுள்
எங்கு இருக்கிறார்.
அவரை அடையக்கூடிய
வழி என்ன,
எந்த முறையைப்
பின்பற்றி அவரை
அடையலாம் என்பதை
உணர்ந்தவர்கள்

அந்த முறையைப்
பின்பற்றி கடவுளை
அடையக்கூடிய வழியின்
மூலமாக பிரயாணித்து,

கடவுள் தரிசனம்
பெற்றவர்கள் ;

கடவுளிடமிருந்து தனக்கு
வேண்டியதை பெற்றுக்
கொண்டவர்கள்;

கடவுளுடன் இரண்டறக்
கலந்தவர்கள்;

ஞானம் என்ற உயர்நிலை
அடைந்தவர்கள்;

ஜீவசமாதி அடையக்கூடிய
நிலையில் இருந்தவர்கள்;

பிறப்பை அறுத்தவர்கள்;

இறப்பை வென்றவர்கள்;

முக்தி நிலையை நெருங்கிக்
கொண்டிருந்தவர்கள் ;

என்று ஆன்மீகத்தின் உயர்
நிலைகளை அடைந்தவர்கள்
அனைவரும் தாங்கள்
அடைந்த உயர்ந்த நிலைகளை

உலகில் உள்ள மக்கள்
அனைவரும் பெற வேண்டும்
என்ற உயர்ந்த நோக்கத்துடன்
நம் உடலுக்குள்
செயல்படும் இந்த மூன்று
முக்கியமான ஆன்மீக
விஷயங்களையும்
மறைபொருள்
ரகசியங்களாகவும்,
சூட்சும விஷயங்களாகவும்,,
ரகசிய குறியீடுகளாகவும், 
இந்து மதக்கோயில்களில்
வைத்து - இந்து மதக்
கோயில்களைக் கட்டி
இருக்கின்றனர் “

“நம்முடைய உடலை
அடிப்படையாக வைத்து
கட்டப்பட்டது தான்
இந்துமதக் கோயில்கள் “

“நம்முடைய உடலுக்குள்
கடவுள் எந்த இடத்தில்
இருக்கிறார் என்பதை
கோயிலின் கர்ப்பக்கிரகத்தில்
வைக்கப்பட்டிருக்கும்
மூலவர் சிலை குறிக்கும் !

“நம்முடைய உடலுக்குள்
கடவுளை அடைவதற்கு
எந்த வழியை நாம்
பயன்படுத்த வேண்டுமோ
அந்த வழிகள் கோயிலின்
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
மூலவர் சிலையை
மையமாக வைத்து சுற்றிலும்
ஏற்படுத்தி வைத்திருக்கும்
வழிகளைக் குறிக்கும் !

“நம்முடைய உடலுக்குள்
கடவுளை அடைவதற்கு
நாம் எத்தகைய
முறையைப் பயன்டுத்த
வேண்டுமோ - அத்தகைய
முறை  கோயிலில்
வழிபாட்டு முறைகளாக
வைக்கப்பட்டிருப்பதைக்
குறிக்கும் !”

“நம்முடைய உடலுக்குள்
எந்த முறையைப் பின்பற்றி
எந்த வழியின் மூலமாக
இறைவனை அடைகிறோமோ
அந்த முறைகள் கோயிலில்
அனைவரும் எளிதில் புரிந்து
கொள்ளும் வகையில்
அமைக்கப்பட்டிருக்கிறது”

“எல்லா இடங்களிலும் உள்ள
கடவுளுடன் தொடர்பு கொண்டு
தனக்கு தேவையானதை
இறைவனிடம் இருந்து
பெற்றுக் கொணடு
தன்னுடைய ஆசையை
பூர்த்தி செய்து கொள்ள
முடியாமல் இந்த உலகில்
வாழ்ந்து கொண்டிருக்கும்
மக்கள் அனைவரும்…………….?

“ கோயிலுக்கு சென்று
கோயிலில் பின்பற்றப்படும்
வழிபாட்டு முறைகளை
சிறிதும் பிழையில்லாமல்
எந்தவிதமான குறைவும்
இல்லாமல் பின்பற்றி “

“ கர்ப்பக் கிரகத்தில் உள்ள
மூலவர் சிலையை சுற்றி
உள்ள வழிகளைப் பின்பற்றி
கர்ப்பகிரகத்தை அடைந்து “

“கர்ப்பகிரகத்தில் உள்ள
மூலவர் சிலையுடன்
தொடர்பை ஏற்படுத்திக்
கொண்டு “

“தங்களுக்கு தேவையானதை
இறைவனிடம் இருந்து
பெற்றுக் கொண்டு
தன்னுடைய ஆசையை
பூர்த்தி செய்து கொள்ளும்
வகையில் இருக்கும்படித்
தான் இந்துமதக் கோயில்கள்
கட்டப்பட்டிருக்கின்றன”

“மலையில் உள்ள
படிக்கட்டுகளின் வாயிலாக
கோயிலை அடைவது என்பது
கடவுளை அடைவதற்கான
முறையைக் குறிப்பது ஆகும் !

“கோயிலை அடைந்தவுடன்
கோயிலைச் சுற்றி
வந்து கர்ப்பகிரகத்தை
அடைவது என்பது
கடவுளை அடையக்கூடிய
வழியைக் குறிப்பது ஆகும்”

“கர்ப்பகிரகத்தில் உள்ள
கடவுளை அடைந்து
கடவுளை வணங்குவது
கடவுள் எங்கு இருக்கிறார்
என்பதைக் குறிப்பது ஆகும்!

“உலகத்தில் உள்ள
அனைத்து இந்து மதக்
கோயில்களில் இந்த
மூன்று விஷயங்களும்
தான் முக்கியமாக
இடம் பெற்றிருக்கிறது
என்பதை அனுபவ பூர்வமாக
உணர்ந்து கொள்ளுங்கள்”

--------   இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  17-04-2019
/////////////////////////////////////////////////////