August 08, 2018

திருக்குறள்-பதிவு-1


                      திருக்குறள்-பதிவு-1

“””தோன்றின் புகழோடு
தோன்றுக அஃதிலார்
தோன்றலின்
தோன்றாமை நன்று””””

உலகம் முழுவதும்
வாழ்க்கையை
வாழ்பவர்களை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : தனக்காக
        வாழ்பவர்கள்
இரண்டு: பிறருக்காக
         வாழ்பவர்கள்

தனக்காக வாழ்பவர்கள்
என்பவர்கள்
தான், தன்னுடைய குடும்பம்,
நண்பர்கள் ஆகியோருக்காக
வாழ்பவர்களைக் குறிக்கும்

பிறருக்காக வாழ்பவர்கள்
என்பவர்கள்
தான், தன்னுடைய குடும்பம்,
நண்பர்கள்
ஆகியோரைத் தவிர்த்து
உலகில் உள்ள
அனைவருக்காகவும்
வாழ்பவர்களைக் குறிக்கும்

பிறருக்காக வாழ்பவர்கள்
பிறரை வாழ வைப்பதற்காக
இச்சமுதாயத்தில் உள்ள
மூன்று நிலைகளில்
உள்ளவர்களுடன் போராட
வேண்டி இருக்கிறது

ஒன்று  : பணம் படைத்தவர்கள்
இரண்டு : பதவி படைத்தவர்கள்
மூன்று  : அதிகாரம் படைத்தவர்கள்

இந்த மூன்று நிலையில்
உள்ளவர்கள் பிறருக்காக
வாழ்பவர்களை அழிப்பதற்காக
மூன்று செயல்களைக்
கையாள்கின்றனர்.

ஒன்று   : அடிமையாக்க
           நினைப்பது
இரண்டு  : மிரட்டுவது
மூன்று   : கொன்று விடுவது

மூன்று நிலைகளில்
உள்ளவர்கள்
மூன்று செயல்களைக்
கொண்டு அழித்தவர்களில்
முக்கியமானவர் சாக்ரடீஸ்.

சாக்ரடிஸ் மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுகள்
இவைகள் தான்:

ஏழை மக்களும்
தங்களுக்குள்ள
உரிமையைப் பெற்று
வாழ வேண்டும்
என்று கொந்தளிக்கும்
சூரியனாய் எரிகிறாய்;

உன் இன மக்கள்
முன்னேற்றம் அடைய
இரத்தம் சிந்தி
கதிரவனாய் பிரகாசிக்கிறாய்;

தாழ்த்தப்படுத்தப்பட்ட
பிற்படுத்தப்பட்ட
மிகவும் பிற்படுத்தப்பட்ட
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக
போராடும் ஞாயிறாய்
தகிக்கிறாய்;

அடிமைகளாய் இருப்பவர்களை
அதிலிருந்து விடுவிக்க
முரசொலிக்கிறாய்;

பகுத்தறிவு கருத்துக்களை
மக்களிடம் விதைக்க
மக்களுக்காக தந்தையாகவும்,
அண்ணாவாகவும் பாடுபடுகிறாய்;

பணக்காரர்கள்
பதவியில் இருப்பவர்கள்
அதிகாரம் படைத்தவர்கள்
ஆகியோரை எதிர்த்து
நீ செய்யும் ஒவ்வொரு
செயலும் அரசியலாக
மாறுகிறது

இது தான் நீ செய்த
குற்றம் என்றனர்
இந்த குற்றத்தை
நீ நிறுத்தி விட்டால்
உன்னை உயிரோடு
விடுகிறோம்
இதனை நீ தொடர்ந்து
செய்தால் உனக்கு
மரண தண்டனை
விதிக்கப்படும் என்றனர்
குற்றத்தை சுமத்தியோர்

நான் பிறருக்காக
பாடுபடுவது குற்றம் என்றால்
அந்த குற்றத்தை
பிறருக்காக வாழும்
அந்த குற்றத்தை
எனக்கு இறப்பே ஏற்பட்டாலும்
தொடர்ந்து செய்வேன்
என்று கூறி ஆதிக்க
சக்தி கொண்டோரால்
வழங்கப்பட்ட தண்டனைக்கான
விஷத்தை அருத்தி
மரணத்தை தழுவிய
சாக்ரடீஸ் வாழும் போதும்
போராடியது மட்டுமல்லாமல்
இறந்த பின்பும்
மக்களை போராட வைத்தார்

வாழும் போதும்
வரலாறு படைத்து
இறப்பின் போதும்
வரலாறு படைத்த
அந்த தலைவனை
அமைதி கொள் தலைவா
கோடானுகோடி
உடன்பிறப்புகளின்
இதயத்தில் வாழும் நீ
அமைதியாக
துயில் கொள் தலைவா
என்று இச்சமுதாயம்
பிறருக்காகவே வாழ்ந்து
பிறருக்காகவே உயிர்நீத்த
அந்த தெய்வத்தை கண்டு
கண்ணீர் செலுத்தியது

வாழும் போதும்
சாக்ரடிஸ் பிறருக்காகவே
வாழ்கிறார் என்று
மக்களால் புகழப்பட்டார்
இறந்த பின்பும்
சாக்ரடிஸ் பிறருக்காகவே
வாழ்ந்து உயிர் விட்டார்
என்று மக்களால்
புகழப்பட்டார்.
  
தோன்றிற் புகழோடு
தோன்றுக என்றால்
வாழும் போது
இவர் பிறருக்காகவே
வாழ்கிறார் என்று
மக்களால் புகழக்கூடிய
நிலையும்,
இறந்த பின்பு
இவர் பிறருக்காகவே
வாழ்ந்தவர் என்று
மக்களால் புகழக்கூடிய
நிலையும் உண்டாகக்கூடிய
வாய்ப்பு இருந்தால்
மட்டுமே வாழ வேண்டும்
என்று அர்த்தம்.

அஃதிலார் தோன்றலின்
தோன்றாமை
நன்று என்றால்
பிறருக்காக வாழ
முடியவில்லை என்றால்
வாழ்வதை விட இறப்பதே
மேல் என்பது தான்
இதற்கு அர்த்தம்

அதாவது வாழும் போதும்
பிறருக்காக
வாழ்ந்தவர் இவர்
இறந்த பின்பும்
பிறருக்காகவே
வாழ்ந்தவர் இவர்
இறந்து விட்டார் என்று
சமுதாயம் புகழக்கூடிய
உயர்ந்த நிலையில்
புகழோடு இருக்க முடிந்தால்
வாழ வேண்டும்
அப்படி பிறருக்காக வாழ
முடியவில்லை என்றால்
வாழ்வதை விட இறப்பதே
மேல் என்பது தான்

“””தோன்றின் புகழோடு
தோன்றுக அஃதிலார்
தோன்றலின்
தோன்றாமை நன்று”””
என்பதற்கான அர்த்தம்
  
---------இன்னும் வரும்
-----------07-08-2018
///////////////////////////////////////////////////////////