October 28, 2018

திருக்குறள்-பதிவு-40



                          திருக்குறள்-பதிவு-40

“”””கெடாஅ வழிவந்த
கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும்
உலகு”””””

உலகில் நண்பர்கள்
கொள்ளும் நட்பை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று  :
தற்காலிகமான
நட்பு

இரண்டு :
நீண்ட காலமான
நட்பு

ஒரு இடத்தில்
வாழும்போதோ.
பள்ளியில்
படிக்கும் போதோ.
கல்லூரியில்
படிக்கும் போதோ.
வேலை
செய்யும் போதோ.
நண்பர்களாக
இருந்து
விட்டுப் பிரிந்து
சென்றவர்களுடைய
நட்பை
தற்காலிகமான
நட்பு எனலாம்.

ஒரு இடத்தில்
வாழும்போதோ,
பள்ளியில்
படிக்கும் போதோ,
கல்லூரியில்
படிக்கும் போதோ,
வேலை
செய்யும் போதோ,
நண்பர்களாக
இருந்தவர்கள்
வாழ்க்கை முழுவதும்
நட்பு கொண்டு
நண்பர்களாக
இருந்து கொண்டு
வருபவர்களுடைய
நட்பை
நீண்டகாலமான
நட்பு எனலாம்

ஏதேனும் ஒரு
காலகட்டத்தில்
ஆரம்பித்த நட்பு
பள்ளிப்படிப்பை
முடித்து விட்டு
பிரிந்து சென்றாலும்;
அதனைத் தொடர்ந்து
கல்லூரிப் படிப்பை
படித்து
முடித்து விட்டு
பிரிந்து சென்றாலும்;
அதனைத் தொடர்ந்து
வேலை தேடி
வேலையில் சேர்ந்து
வேலை செய்தாலும்;
அதனைத் தொடர்ந்து
திருமணம் நடந்து
வாழ்க்கையை
வாழ்ந்து
கொண்டிருந்தாலும்;
ஏதேனும் ஒரு
காலகட்டத்தில்
ஆரம்பித்த நட்பு
தொடர்ந்து
கொண்டிருந்தால்
அந்த நட்பை
நீண்ட காலமான
நட்பு எனலாம்
ஒத்த கருத்து
இல்லாமல் எந்த
நட்பும் நீண்ட காலம்
நட்பு கொண்டு
இருக்க முடியாது

ஒத்த
கருத்துடையவர்கள்
தான் நீண்டகாலமான
நட்பு கொண்டு
நண்பர்களாக
இருக்க முடியும்
ஒத்த கருத்து
இல்லாதவர்கள்
தற்காலிகமான
நட்பு கொண்ட
நண்பர்களாகத்
தான் இருக்க
முடியும்

நம்முடைய
வாழ்க்கையில்
நம்முடன்
நீண்ட காலமான
நட்பு கொண்டு
நம்முடன் வரும்
நண்பர்களை
ஆராய்ந்து பார்த்தால்
நாமும்
நம்முடைய
நண்பர்களும்
ஒத்த கருத்து
உடையவர்களாக
இருப்பதை நாம்
அறிந்து கொள்ளலாம்

நம்முடைய
வாழ்க்கையில்
வந்து சென்ற
தற்காலிகமான நட்பு
கொண்ட நண்பர்களை
ஆராய்ந்துப் பார்த்தால்
தற்காலிகமான நட்பு
கொண்ட நண்பர்கள்
அனைவரும்
ஒரு தேவையின்
அடிப்படையில்
நம்மிடம்
சேர்ந்திருக்கிறார்கள்
அவர்கள் தேவை
தீர்ந்தவுடன்
அவர்கள் நம்மை
விட்டு பிரிந்து
சென்று இருக்கிறார்கள்
என்பதை நாம்
அறிந்து கொள்ளலாம்
  
தேவையின்
அடிப்படையிலும்
ஒத்த கருத்து
இல்லாமலும்
தற்காலிகமான நட்பு
கொண்டு பிரிந்து
செல்லாமல்,
ஒத்த கருத்துடன்
நீண்டகாலமான
நட்பு கொண்டு
நண்பர்களாக
இருப்பவர்களைத் தான்
இந்த உலகம்
விரும்பும் என்பதை
உணர்ந்து கொண்டு
நாமும் தேவையின்
அடிப்படையில்
நட்பு கொள்ளாமல்
ஒத்த கருத்தின்
அடிப்படையில்
நீண்டகாலமான நட்பு
கொண்டு நண்பர்களாக
இருக்க வேண்டும்
என்பதைத் தான்

“”””கெடாஅ வழிவந்த
கேண்மையார்
கேண்மை
விடாஅர் விழையும்
உலகு”””””

 என்ற திருக்குறளின்
மூலம் நமக்கு
தெரியப்படுத்துகிறார்
திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  27-10-2018
///////////////////////////////////////////