August 03, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-54



            நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-54

வடக்கிருக்கத்
துணிந்து செயலில்
இறங்கிய
கோப்பெருஞ்சோழன்
தன்னுடைய
உயிர் நண்பரான
பிசிராந்தையாரைப்
பார்க்காமலேயே
உயிரை விடப்
போகிறோமே என்று
மிகவும் மனம்
வருந்தினான்

தான் வடக்கிருக்கும்
செய்தியை
பிசிராந்தையார் அறிந்தால்
பிசிராந்தையாரும்
கண்டிப்பாகத்
தன்னுடன் வடக்கிருக்க
வருவார் என்று
கோப்பெருஞ்சோழனின்
உள் உணர்விற்குத்
தோன்றியதால்
மந்திரியிடமும்
மற்றையோரிடமும்
தன்னுடைய நண்பரான
பிசிராந்தையாருக்கும்
ஓர் இடத்தைத்
தயார் செய்யும்படி
வலியுறுத்திக் கூறினார்.

அரசனின் ஆணை
உடனடியாக
நிறைவேற்றப்பட்டது
ஆனால் பிசிராந்தையார்
அரசனுடன்
வடக்கிருக்க
வருவார் என்பதை
யாருமே நம்பவில்லை

பிசிராந்தையார்
வடக்கிருந்து
கோப்பெருஞ்சோழனுடன்
உயிரை
விடுவதற்கு துணிவாரா
அதுவும்
ஒருவரையொருவர்
பார்க்காமல் கொண்ட
நட்பிற்காக
இவ்வாறு செய்வாரா
ஒருவரை ஒருவர்
பார்த்து பழகும்
நட்பே ஆபத்து
என்றால் ஓடிவிடும்
நிலையில் இருக்கும்போது
ஒருவரையொருவர்
பார்க்காமல் செய்யும்
நட்பிற்கு எவ்வாறு
பிசிராந்தையார் வந்து
வடக்கிருந்து
உயிரை விடுவார்
என்று அனைவரும்
நினைத்தனர்

கோப்பெருஞ்சோழனின்
செயலை நினைத்து
மனதிற்குள்
அனைவரும்

சிரித்துக் கொண்டார்கள்

நாட்கள் நகர்ந்து
கொண்டே இருந்தது
பிசிராந்தையார்
வந்து விடுவார் என்று
அவர் வரும்
வழியைப் பார்த்துக்
காத்துக் கொண்டிருந்த
கோப்பெருஞ்சோழனும்
சோர்ந்து போனான்
பிசிராந்தையார்
வருவதாகத் தெரியவில்லை
அதனால் சோழன்
நண்பரைக் காணாமலேயே
வடக்கிருக்கும்
தவத்தை மேற்கொள்ளத்
தொடங்கினான்

ஆனால் சோழனின்
எண்ணப்படியே
செய்தியைக் கேள்விப்பட்டதும்
பிசிராந்தையார்
சோழ நாட்டை நோக்கி
ஓடோடி வந்தார்
நண்பனைக் கண்டார்
கண்ணீர் பெருகி நின்றார்

வேறு எதுவும் பேசவில்லை
எற்கனவே
அவருக்காகத் தயாராக
அமைக்கப்பட்டிருந்த
இடத்தில் போய்
உட்கார்ந்து
வடக்கிருந்து சோழனுடன்
தானும் தன் இன்னுயிரை
மாய்த்துக் கொண்டார்

பிசிராந்தையார்
என்ற புலவரும்
கோப்பெருஞ்சோழன்
என்ற மன்னனும்
ஒருவரை ஒருத்தர்
காணாமலேயே
நட்புக் கொண்டு
ஒன்றாகவே
உயிர்நீத்த நட்பின்
சிறப்பினை
பல இலக்கியங்கள்
நமக்கு எடுத்துக் காட்டுகின்றன
பொத்தியார் என்ற புலவர்
தன்னுடைய பாடலில்
இதனைப் பதிவு
செய்திருக்கிறார்

பிசிராந்தையாரும்
கோப்பெருஞ்சோழனும்
கொண்ட நட்பு எத்தகைய
விஷயத்தையும்
செய்யத் தயாராக 
இருக்கும் நட்பு

இராமரும், ஶ்ரீநிவாசனும்
கொண்ட நட்பு
எந்த சூழ்நிலையிலும்
ஒரே மாதிரியாக
இருக்கும் நட்பு
என்பதையும்
பிசிராந்தையாரும்,
கோப்பெருஞ்சோழனும்
கொண்ட நட்பு
எத்தகைய
விஷயத்தையும்
செய்வதற்குத் தயாராக
இருக்கும் நட்பு
என்பதையும்
நாம் உணர்ந்து
கொண்டால்
உண்மையான நட்பு
எதிர்பார்ப்பு அற்று
இருக்கும் என்பதை
நாம் உணர்ந்து
கொள்ளலாம்

இத்தகைய உயர்ந்த
நட்பின் பெருமையை
நாம் உணர்ந்து
கொள்ளாத
காரணத்தினால் தான்
துரியோதனனும்,
கர்ணனும் கொண்ட
எதிர்பார்ப்புடன்
கூடிய நட்பை
இச்சமுதாயத்தில்
உள்ளவர்கள்
பின்பற்றி வருகிறார்கள்

உயர்ந்த நட்பை
நாம் கவனிக்கத்
தவறி விட்ட
காரணத்தினால் தான்
சாதாரண நட்பை நாம்
உயர்ந்த நட்பாக
கருதி போற்றி
பின்பற்றி வருகிறோம்
என்பதை நாம்
நினைவில் கொள்ள
வேண்டும்.

----------இன்னும் வரும்
------------03-08-2018
///////////////////////////////////////////////////////////