December 11, 2019

பரம்பொருள்-பதிவு-96


                    பரம்பொருள்-பதிவு-96

“தன்னுடைய தாய்
உலூபியின்
மேற்பார்வையில்
பாதுகாப்பில்
மற்றும்
அரவணைப்பில்
வளர்ந்த அரவான் ;

  ன்பிற்கு
இலக்கணமாய் !

  ளுமைக்கு
உறைவிடமாய் !

  னிமைக்கு
இருப்பிடமாய் !

  கைக்கு
எடுத்துக்காட்டாய் !

  ழைப்புக்கு
உயர்வாய் !

  ருக்கு
உதாரணமாய் !

  ளிமைக்கு
ஆதரவாய் !

  ற்றத்திற்கு
சிந்தனையாய் !

  யத்திற்கு
விளக்கமாய் !

  ற்றுமைக்கு
ஒளிச்சுடராய் !

  ர்மைக்கு
வரலாறாய் !

ஒள ஷதத்திற்கு
முகவரியாய் !

அனைவரும்
போற்றும்படி
வீரத்திற்கு
விளை நிலமாய் !
வெற்றியின்
திருவுருவமாய் !
வளர்ந்தான்  

“இத்தகைய
சூழ்நிலையில்
பாண்டவர்களுக்கும் ;
கௌரவர்களுக்கும் ;
இடையே போர்
ஏற்படாமல்
இருக்க வேண்டும்
என்பதற்காக
நடத்தப்பட்ட
அனைத்து சமாதான
பேச்சு வார்த்தைகளும் ;
தோல்வியில் முடிந்து
விட்ட காரணத்தினால்
பாண்டவர்களுக்கும் ;
கௌரவர்களுக்கும் ;
இடையே போர்
நடைபெறுவது என்பது
உறுதியாகி விட்டது "

"இதனால் போர்
நடப்பதற்கு
தேவையான
அனைத்து ஆயத்த
வேலைகளையும்
பாண்டவர்களும்  ;
கௌரவர்களும் ;
தனித்தனியாக செய்து
கொண்டிருந்தனர் "

"பாண்டவர்கள்
அணியில் நின்று
பாண்டவர்களுக்கு
ஆதரவாக  ;
பாண்டவர்களின் சார்பாக ;
போர் செய்வதற்காக
தங்களுடைய
சம்மதத்தை அளித்து  ;
தங்களுடைய ஆதரவை
தெரிவிப்பதற்காகவும் ;
கௌரவர்கள்
அணியில் நின்று
கௌரவர்களுக்கு
ஆதரவாக
கௌரவர்களின்
சார்பாக போர்
செய்வதற்காக
தங்களுடைய 
சம்மதத்தை அளித்து
தங்களுடைய
ஆதரவை
தெரிவிப்பதற்காகவும் ; "

"பல்வேறு நாட்டைச்
சேர்ந்தவர்களும்  ;
பல்வேறு திறமைகளை
படைத்தவர்களும் ;
பல்வேறு அற்புதமான
ஆற்றல்
படைத்தவர்களும் ;
பிரமிக்கத்தக்க சக்தி
படைத்தவர்களும் ;
பாண்டவர்களையும்
கௌரவர்களையும்
தனித்தனியாக
சந்தித்து
தங்களுடைய
சம்மதத்தை அளித்து
தங்களுடைய ஆதரவை
தெரிவித்த
வண்ணம் இருந்தனர்".

"இதனைக்
கேள்வியுற்ற
அரவான்
தன்னுடைய தந்தை
அர்ஜுனனுக்கு
ஆதரவாகவும்  ;
பாண்டவர்களின்
சார்பாகவும் ;'
பாண்டவர்கள்
அணியில் நின்று
போரிடுவதற்காகவும் ;
தன்னுடைய
சம்மதத்தை அளித்து ;
தன்னுடைய ஆதரவை
தெரிவிப்பதற்காகவும் '
தன்னுடைய தந்தை
அர்ஜுனனைக்
காண புறப்பட்டான் ;"

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 11-12-2019
//////////////////////////////////////////