November 13, 2019

கடிதம்


அன்பிற்கினியவர்களே!

“19-10-2011-ஆம் தேதி முதல்
kbalagangadharan.blogspot.com
என்ற BLOGSPOT-முகவரியில்
“பாலாவின்
பார்வையில் சித்தர்கள்”
என்ற தலைப்பில் நான்
எழுதத் தொடங்கினேன்!”

“இயேசு கிறிஸ்து என்ற
தலைப்பில் இயேசு கிறிஸ்து
சொன்ன உவமைகளுக்கு
விளக்கங்கள்!”

“அகஸ்தியர், போகர்,
சிவவாக்கியர் என்று
பெரும்பாலான சித்தர்கள்
எழுதிய கடினமாக
பாடல்களுக்கு விளக்கங்கள்!”

“கிறிஸ்தவ மதத்தையும்
இந்து மதத்தையும் 
ஒப்பீடு செய்து ஆய்வுக்
கட்டுரைகளுடன்
கூடிய விளக்கங்கள்!”

“பல்வேறு வகையான
தமிழ் இலக்கியங்களில்
உள்ள பலதரப்பட்ட
பாடல்களுக்கு விளக்கங்கள்!“

“திருவள்ளுவர் எழுதிய
திருக்குறளுக்கு விளக்கங்கள்!

“பழமொழிகளை மாற்றாமல்
அதற்குரிய விளக்கங்கள்!”

“வாழ்த்து மடல்!
கவிதைகள்!
வரலாற்றுக் கட்டுரைகள்!
அறிவியல் கட்டுரைகள்!
என்று பல்வேறு விதமான
கட்டுரைகள் என
இன்று வரை 476-க்கும்
மேற்பட்ட கட்டுரைகளை
எழுதி இருக்கிறேன்
எழுதிக் கொண்டு
இருக்கிறேன்!”

“பாலாவின் பார்வையில்
சித்தர்கள் என்ற
தலைப்பைக் கொண்ட
BLOGSPOT-லும்,

Bala Gangadharan-என்ற
பெயரைக் கொண்ட
FACE BOOK-லும்,

பாலாவின் பார்வையில்
சித்தர்கள் என்ற
தலைப்பைக் கொண்ட
FACE BOOK-லும்,

தொடர்ந்து கட்டுரைகள்
எழுதி வருகிறேன்”

“ஒரு வருடத்திற்கு முன்பு
WHATS APP-ல் ஜபம் என்ற
தலைப்பில் பல்வேறு
கட்டுரைகள் எழுதி
வருகிறேன்!”

“உலகத்தில் நடந்தவைகள்
எதுவாக இருந்தாலும் சரி!
எழுதப்பட்டவைகள்
எதுவாக இருந்தாலும் சரி!
அதனுடைய
மையக் கருத்தையும்
கதையையும் மட்டுமே
எடுத்துக் கொண்டு
கதை,திரைக்கதை,வசனம்,
என்னுடைய சொந்த
அறிவைப் பயன்படுத்தி
தமிழ்மொழியில் எழுதிக்
கொண்டு வருகிறேன்
என்பதை அனைவருக்கும்
தெரிவித்துக் கொள்ள
ஆசைப்படுகிறேன்”

“உலகம் முழுவதும்
இருக்கும் என்னுடைய
ரசிகர்கள் என்மேல்
அன்பு கொண்டவர்கள்
என பல்வேறு தரப்பினரும்
ஒன்றாக இணைந்து
என்னுடைய கட்டுரைகளை
ஒவ்வொரு கால கட்டத்திலும்
புத்தகமாக கொண்டுவர
முயற்சி செய்தோம்”

“இயேசு கிறிஸ்து என்ற
தலைப்பில் இயேசு கிறிஸ்து
சொன்ன உவமைக்குரிய
விளக்கங்களை புத்தகமாக
கொண்டு வர முயற்சி
செய்தோம் முடியவில்லை”

“சித்தர்கள் எழுதிய
பாடல்களுக்கு நான்
எழுதிய விளக்கங்கள்
அடங்கியவைகளை
புத்தகமாக கொண்டு
வர முயற்சி செய்தோம்
முடியவில்லை”

“கிறிஸ்தவ மதத்தையும்
இந்து மதத்தையும்
ஒப்பிட்டு நான் எழுதிய
ஆய்வுக் கட்டுரையை
புத்தகமாக கொண்டு வர
முயற்சி செய்தோம்
முடியவில்லை”

“நான் எழுதிய பல்வேறு
கட்டுரைகளை ஒன்றிணைத்து
கட்டுரைகளாக கொண்டு
வர முயற்சி செய்தோம்
முடியவில்லை”

“ஆனால் தற்போது
BLOGSPOT-ல்
நான் எழுதி வரும்
கட்டுரைகள்
FACEBOOK-ல்
நான் எழுதி வரும்
கட்டுரைகள்
WHATSAPP-ல்
நான் எழுதி வரும்
கட்டுரைகள்
ஆகிய அனைத்தையும்
புத்தகமாக கொண்டு
வருவதற்கான அனைத்து
ஆயத்த வேலைகளையும்
தொடங்கி செய்து
கொண்டு இருக்கிறோம்”

“இதற்காக உலகம்
முழுவதும் இருக்கும்
என்னுடைய ரசிகர்கள்
என்மேல் அன்பு
கொண்டவர்கள் ஆகிய
அனைவரும் ஒன்றாக
இணைந்து பொருளுதவி
மற்றும் பல்வேறு
உதவிகளை தங்களால்
இயன்ற அளவு
செய்து வருகிறார்கள்”

“நான் எழுதிய கட்டுரைகளை
எப்படி எந்த வடிவில்
புத்தகமாக கொண்டு
வருவது என்பதைப் பற்றியும்
எத்தகைய புத்தகங்களாக
பதிப்பு செய்வது
என்பதைப் பற்றியும்
எத்தகைய வடிவத்தில்
கொண்டு வருவது
என்பதைப் பற்றியும்
கட்டுரைகளை எந்த
தலைப்பின் கீழ்
தனித்தனியாக பிரித்து
வெளியிடுவது என்பதைப்
பற்றியும் கடினமாக அலுவல்
பணிகளுக்கிடையேயும்
கஷ்டமான குடும்ப
சூழ்நிலைகளுக்கிடையேயும்
என்னுடைய கட்டுரைகளை
புத்தகமாக கொண்டு வர
முயற்சி செய்து
அனைவரும் உழைத்துக்
கொண்டிருக்கிறார்கள்”

“இறைவனின் அருளாலும்
சித்தர்களின் ஆசியினாலும்
அன்புள்ளம் கொண்டவர்களின்
வழிகாட்டுதலினாலும்
உயிரனைய உறவுகளின்
உழைப்பாலும் -என்னுடைய
கட்டுரைகள் அனைத்தும்
2020 ஆம் ஆண்டு
ஒவ்வொன்றாக
புத்தகமாக வெளிவரும்
என்பதைத் தெரிவித்துக்
கொள்வதில் நான்
மிகுந்த மகிழ்சசி
அடைகிறேன்!”

---------என்றும் அன்புடன்

---------K.பாலகங்காதரன்
--------13-11-2019
//////////////////////////////////////////////