June 19, 2019

பரம்பொருள்-பதிவு-27


                       பரம்பொருள்-பதிவு-27

இரண்டு ;
 "ஆத்திகவாதிகள் என்றால்
கடவுளை உணர்ந்தவர்கள்
என்று பொருள் ; "

" நாத்திகவாதிகள் என்றால்
கடவுளை உணராதவர்கள்
என்று பொருள் ; "

" ஆனால் தற்போது
ஆத்திகவாதிகள் என்றால்
கடவுள் உண்டு என்று
சொல்பவர்கள் என்றும் ;
நாத்திகவாதிகள் என்றால்
கடவுள் இல்லை என்று
சொல்பவர்கள் என்றும் ;
தவறான பொருள்
கொள்ளப்பட்டு
இச்சமுதாயத்தில்
நடைமுறை வழக்கத்தில்
இருந்து வருகிறது "

" அதைப்போலத்தான்
பகுத்தறிவாதி என்ற
சொல்லும் தவறாக
பொருள் கொள்ளப்பட்டு
இச்சமுதாயத்தில்
தவறான வகையில்
நடைமுறை வழக்கத்தில்
இருந்து வருகிறது '

" இந்த பிரபஞ்சத்தில்
எந்த ஒரு நிகழ்வு
நடந்தாலும் - அந்த நிகழ்வில்
நல்லது எது ?
கெட்டது எது ? என்று
பேதம் பிரித்துப் பார்த்து
ஆராய்ந்து , அறிந்து
உணர்ந்து கொள்பவர்கள்
பகுத்தறிவாதிகள் எனப்படுவர் "

" ஆனால் தற்போது
பகுத்தறிவாதிகள் என்றால்
கடவுள் இல்லை என்று
சொல்பவர்கள் என்று
தவறாக பொருள்
கொள்ளப்பட்டு
இச்சமுதாயத்தில்
தவறான வகையில்
நடைமுறை வழக்கத்தில்
இருந்து வருகிறது "

"ஆகமொத்தம் கடவுள்
இல்லை என்று சொல்பவர்கள்
நாத்திகர்கள் என்றும் ;
பகுத்தறிவாதிகள் என்றும் ;
இச்சமுதாயத்தால் தவறாக
பொருள் கொள்ளப்பட்டு
வருகிறது "

" பகுத்தறிவு என்ற வார்த்தை
கடவுள் இல்லை என்பதற்கு
பயன்படுத்தும் ஒரு
வார்த்தை ஆகி விட்டது ;
அதைப்போல ,
பகுத்தறிவாதி என்ற
வார்த்தையும் கடவுள் இல்லை
என்று சொல்பவர்கள் மட்டுமே
பயன்படுத்தக் கூடிய ஒரு
வார்த்தையாகவும் மாறி விட்டது ;
இதனால் பகுத்தறிவாதி என்ற
வார்த்தையின் உண்மையான
அர்த்தம் சிதைந்து விட்டது ;"

" அரசியலை வைத்து
பிழைக்க முடியாதவர்கள் ;
திரையுலகில் இருந்து
ஓரம் கட்டப்பட்டவர்கள் ;
வேலை இல்லாமல் வெட்டியாக
ஊரைச் சுற்றிக் கொண்டு
ஒன்றுக்கும் உதவாத கதைகளை
பேசிக் கொண்டு திரிபவர்கள் ;
இவர்கள் தாங்கள்
வாழ வேண்டும்
என்பதற்காகவும் ;
தங்கள் பிழைப்பை ஓட்ட
வேண்டும் என்பதற்காகவும் ;
ஆளுமை என்ற ஒன்று
துளி கூட இல்லாமல்
அதிகாரத்தைக் கைப்பற்ற
வேண்டும் என்பதற்காகவும் ;
மக்கள் செல்வாக்கு இல்லாமல்
பதவி சுகம் அனுபவிக்க
வேண்டும் என்பதற்காகவும் ;
தகுதியில் ஒன்றைக் கூட
வளர்த்துக் கொள்ளாமல்
முயற்சியின் வித்தைக் கூட
விதைக்காமல் புகழ் தன்னை
அரவணைக்க வேண்டும்
என்பதற்காகவும் ;
நல்லவன் போல் தன்னை
வெளியில் காட்டிக் கொண்டு
பணத்தைச் சம்பாதிக்க
வேண்டும் என்பதற்காகவும் ;
மக்கள் மத்தியில் போலியாக
நடித்துக் கொண்டிருக்கும்
போலியான பகுத்தறிவாதிகள் ;
தவறான பகுத்தறிவாதிகள் ; "

"இந்தத் தவறான
பகுத்தறிவாதிகள்
அதிகாரம் ; பதவி ;
புகழ் ; பணம் ;
ஆகியவற்றிற்காக மானத்தைப்
பற்றிக்கூட கவலைப்படாமல்
பணக்காரர்களின்
அடிவருடிகளாக இருந்து
கொண்டு எதையும்
செய்யக்கூடியவர்கள் "

" பகுத்தறிவாதி  என்ற சொல்
எப்படி தவறான பொருள்
கொள்ளப்பட்டு
இச்சமுதாயத்தில் எப்படி
தவறாக நிலவி
வருகிறதோ அவ்வாறே
தங்களை பகுத்தறிவாதிகள்
என்று சொல்லிக் கொள்ளும்
தவாறான பகுத்தறிவாதிகள்
பின்னால் மக்கள் தவறாக
சென்று தவறு இழைத்ததின்
மூலம் மக்களும்
தவறானவைகளையே
செய்து வருகின்றனர் "

" உண்மையாகவே
பகுத்தறிவாதிகளாக
இருப்பவர்கள் உண்மையை
உணர்ந்து இச்சமுதாயத்திற்கு
எந்த எந்த செயல்களைச்
செய்ய வேண்டுமோ ?
அந்த அந்த செயல்களை
தேவைப்படும் காலங்களில்
தொடர்ந்து இச்சமுதாயத்திற்கு
செய்து கொண்டு
தான் வருகின்றனர் "

"உயிருள்ள கல்லானது
தேர்ந்தெடுக்கப்பட்டு ;
ஆகம சாஸ்திர முறைகளின்படி
கடவுள் சிலையாக
செதுக்கப்பட்டு ;
பிராண பிரதிஷ்டையின்
மூலம் உயிரூட்டப்பட்டு ;
கும்பாபிஷேகத்தின்
மூலம் இயங்கும்
சக்தியைப் பெற்று ;
தொடர்ந்து செய்யப்படும்
பூஜைகள் , அபிஷேகங்கள் ,
ஆகியவற்றின் மூலம்
கடவுள் சிலையானது
பக்தர்களுக்கு அருள்
வழங்கும் சக்தியைப் பெறும் ;
நிலையை அடைகிறது
என்பதை உணராத
கடவுளை வணங்குபவர்களில்
ஒரு சிலர் ;
கடவுளை வணங்காதவர்களில்
ஒரு சிலர் ;
ஆகியோர் தான் கல்லில்
கடவுள் இல்லை என்று
மூளையில்லாமல் உளறும்
சித்தபிரமை பிடித்து
அலைபவர்கள்
என்பதை நாம் நினைவில்
கொள்ள வேண்டும் "

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 19-06-2019
//////////////////////////////////////////////////////////////