July 20, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-46


            நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-46

வீடு, மனைவி, மக்கள்
ஆகியோர் மீது
காணப்படும் செல்வச்
செழிப்பை கண்டு
வியந்தார் குசேலர்.

கிருஷ்ணா உன்னுடைய
நட்பு எவ்வளவு
உயர்ந்த நட்பு
நான் உன்னிடம்
எதையும் கேட்கவில்லை
என் வறுமையைச்
சொல்லி நான்
உதவி செய் என்று
உன்னிடம் கேட்கவில்லை
ஆனால் செல்வச்
செழிப்பை என்
வீடு, மனைவி, மக்கள்
அனைவரின் மீதும்
பொழிந்து கருணை
செய்திருக்கிறாய்
நான் கேட்டிருந்தால்
கூட இவ்வளவு
செல்வச் செழிப்பை
கேட்டிருக்க மாட்டேன்
ஆனால் நீ வழங்கி
இருக்கும் இந்த
செல்வச் செழிப்பு
அளவுக்கு மீறியது
என்று கிருஷ்ணர்
செய்த செயற்கரிய
செயலை நினைத்து
மகிழ்ச்சி அடைந்தார்
குசேலர்

அளவற்ற செல்வச்
செழிப்பு தனக்கு
கிடைத்தாலும் குசேலர்
பற்றற்று இருந்து
கிருஷ்ணரை
நினைத்து ஆழ்ந்த
தியானத்தில் இருந்தார்
செல்வச் செழிப்பு
குசேலருக்குள்
எந்தவிதமான பாதிப்பையும்
ஏற்படுத்தவில்லை
செல்வச் செழிப்பு
அவருடைய
எண்ணத்திலும்,
சொல்லிலும், செயலிலும்
எந்தவிதமான
மாற்றத்தையும்
ஏற்படுத்தவில்லை
அவர் ஏழ்மையில்
இருந்தபோது
எத்தகைய உயர்ந்த
குணங்களைக் கொண்டு
வாழ்ந்து கொண்டு
இருந்தாரோ அவ்வாறே
செல்வச் செழிப்பு
வந்தபோதும் தன் உயர்ந்த
குணங்களை மாற்றாமல்
நல்ல குணங்களை
கொண்டவராகவே
வாழ்ந்தார் குசேலர்

கிருஷ்ணரையே
நினைத்துக் கொண்டு
தியானம் செய்து
வைகுந்தம் அடைந்தார்
குசேலர்,

கிருஷ்ணர் தன்
மீது வைத்திருக்கும்
நட்பைக் கண்டு
வியந்த குசேலர்
ஏழ்மை நிலையில்
இருக்கும் தன்னை
எந்தவித ஆதாயமும்
இல்லாத ஒருவனை
ஒரு காலத்தில்
ஒன்றாக படித்தோம்
நண்பர்களாக இருந்தோம்
என்பதை
நினைவில் வைத்து
ராஜா என்ற உயர்ந்த
நிலையில் இருந்தும்
ஏழையாக இருக்கும்
என்னை
நினைவில் வைத்து
நட்பு பாராட்டிய
கிருஷ்ணரின் உயர்ந்த
குணத்தை எண்ணி
மகிழ்ச்சி கொண்ட
குசேலர் இவ்வளவு
உயர்ந்த குணங்கள்
கொண்ட கிருஷ்ணரிடம்
உதவி கேட்பது
எனது நட்புக்கு களங்கம்
ஏற்படுத்தி விடும்
என்று நினைத்த
குசேலர் கிருஷ்ணரிடம்
தன் குடும்ப ஏழ்மையைச்
சொல்லி உதவி
கேட்கவில்லை.
குசேலரின் இத்தகைய
நட்பு எதையும்
எதிர்பார்க்காத நட்பு,
அதாவது குசேலர்
எதிர்பார்ப்பு அற்று
நட்பு கொண்டவர்

கிருஷ்ணர்
குசேலர் கஷ்டத்தில்
இருக்கிறார் என்பதை
உணர்ந்தும்
குசேலர் நான் ஏழ்மையால்
கஷ்டப் படுகிறேன்
என்னுடைய கஷ்டத்தை
போக்குவதற்கு
உதவி செய்யுங்கள்
என்று தன்னிடம்
கேட்கவில்லை
என்பதை உணர்ந்தும்
குசேலர் ஏழ்மையால்
கஷ்டப்படுகிறார்
என்பதை உணர்ந்து
குசேலருக்கு
உதவி செய்த
கிருஷ்ணரின் இத்தகைய
நட்பு எதையும்
எதிர்பார்க்காத நட்பு
அதாவது கிருஷ்ணர்
எதிர்பார்ப்பு அற்று
நட்பு கொண்டவர்

துரியோதனனும்,
கர்ணனும் கொண்ட
நட்பு எதையும்
எதிர்பார்க்கும் நட்பு
அதாவது இவர்கள்
இருவரும் எதிர்பார்ப்புடன்
நட்பு கொண்டவர்கள்.


கிருஷ்ணரும், குசேலரும்
கொண்ட நட்பு எதையும்
எதிர்பார்க்காத நட்பு
அதாவது
எதிர்பார்ப்பு அற்று
நட்பு கொண்டவர்கள்

உயிர் காப்பான் தோழன்
என்பதற்கு எடுத்துக்காட்டாய்
விளங்கும் நட்பு.

உயிர்காப்பான்
தோழன் என்றால்
நண்பன் கஷ்டப்படும்போது
உதவி என்று
கேட்டு வந்தால்
உதவி செய்பவனும்
நண்பன் கஷ்டப்படுவதைக்
கண்டு தானே சென்று
உதவிகள் செய்து
கஷ்டத்தைப்
போக்க முயற்சிகள்
மேற்கொள்பவனும் தான்
உயிர் காப்பான் தோழன்

நாம் எதிர்பார்ப்பு
அற்று பிறருடன்
நட்பு கொள்ளலாம்
ஆனால் எதிர்பார்ப்பு
அற்ற நண்பர்கள்
நமக்கு கிடைப்பது தான்
கடினம் என்பதைத்தான்
நண்பனுக்காக நாம்
உயிரைக் கொடுக்கலாம்
ஆனால், உயிரைக்
கொடுக்கக்கூடிய
நண்பர்கள் நமக்கு கிடைப்பது
தான் கடினம் என்பதை
சொல்லிச் சென்ற
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்.

----------இன்னும் வரும்
-----------20-07-2018
///////////////////////////////////////////////////////////