May 08, 2019

பரம்பொருள்- பதிவு-13


                   பரம்பொருள்- பதிவு-13

“பிராண பிரதிஷ்டையின்
மூலம் ஒரு பொருளுக்கு
சக்தியைச் செலுத்தி
உயிரூட்டத் தெரிந்த
பிராண பிரதிஷ்டை
செய்பவர்கள்
பிராண பிரதிஷ்டையை
இரண்டு விஷயத்திற்காக
பயன்படுத்துகிறார்கள் “

ஒன்று
“நல்ல விஷயத்திற்காக
பிராண பிரதிஷ்டையை
பயன்படுத்துகிறார்கள் ;”

இரண்டு
“கெட்ட விஷயத்திற்காக
பிராண பிரதிஷ்டையை
பயன்படுத்துகிறார்கள் ;”

ஒன்று
“பிரபஞ்சம் முழுவதும்
நிறைந்து இருக்கக்கூடிய
இறை சக்தியை
கடவுள் சிலைக்குள்
செலுத்தி
கடவுள் சிலைக்கு
உயிரூட்டி
மக்கள் அனைவரும்
தங்களுக்கு வேண்டியதை
பெற்றுக் கொள்ள
வேண்டும் என்ற
உயர்ந்த நோக்கத்துடன்
பிராண பிரதிஷ்டையை
செய்பவர்கள்
நல்ல விஷயத்திற்காக
பிராண பிரதிஷ்டையை
பயன்படுத்துகிறார்கள் “

இரண்டு
“ தெரிந்த நபராக
இருந்தாலும் சரி ;
தெரியாத நபராக
இருந்தாலும் சரி ;
அவர் யாராக
இருந்தாலும் சரி ;
நேரில் பார்த்தோ
அல்லது புகைப்படத்தை
பார்த்தோ அவரைப்பற்றி
தெரிந்து கொண்டபின்
உலகின் எந்த
ஒரு மூலையில் அவர்
வசித்தாலும் அவருடைய
உருவத்தை மனதில்
நிறுத்தி முதலில்
அவரைப் போல ஒரு
உருவத்தை பொம்மையில்
செய்து கொள்கிறார்கள் “

“ பிறகு அந்த A என்ற
நபருடைய
உயிர்ச்சக்தியை
அந்த பொம்மைக்குள்
செலுத்துவதற்காக
பிராண பிரதிஷ்டை
செய்கிறார்கள்”

“அதாவது A
என்பவருடைய
உயிர்ச்சக்தியை அந்த
பொம்மைக்குள்
கொண்டு வருவதற்கு
பிராண பிரதிஷ்டை
செய்கிறார்கள் “

“ அவ்வாறு
பிராண பிரதிஷ்டை
செய்த பிறகு
அந்த பொம்மைக்குள்
A என்பவரது உயிர்
வந்து விடும் ;
அந்த பொம்மை
A ஆகவே மாறி விடும் ;
ஆமாம் அந்த பொம்மை
A ஆகவே மாறி விட்டது ;”

“இப்போது அந்த
பொம்மையில்
சிறிய ஊசி வைத்து
அந்த பொம்மையின்
வலது கையில்
ஊசியால் குத்தினால்
உலகின் எங்கோ
ஒரு மூலையில்
இருக்கும்
அந்த A என்ற
நபருக்கு வலிக்கும்”

“அந்த பொம்மையின்
கையை ஒடித்தால்
உலகின் எங்கோ ஒரு
மூலையில் இருக்கும்
A என்பவருடைய கை
ஒடிந்து விடும்”

“பொம்மையை நாம்
எத்தகைய நிலைக்கு
துன்பப்படுத்துகிறோமோ
அந்த அளவிற்கு
அந்த A துன்பப்படுவார்”

“பிராண பிரதிஷ்டையின்
மூலம் உலகின் எங்கோ
ஒரு மூலையில்
இருப்பவருடைய
உயிர்ச்சக்தியை
பொம்மைக்குள் செலுத்தி
அவரை எத்தகைய
துன்பத்திற்கும்
உள்ளாக்கலாம் என்றால்
பிராண பிரதிஷ்டை
எவ்வளவு வலிமை
வாய்ந்தது என்பதையும்
பிராண பிரதிஷ்டை
தவறான விஷயத்திற்கும்
பயன்படுத்துகிறார்கள்
என்பதையும்
தெரிந்து கொள்ளுங்கள்”

“பிராண பிரதிஷ்டையின்
மூலம் கடவுள்
சிலைக்கு உயிர் கொடுத்து
உயிரோட்டம் உள்ள
ஒன்றாக மாற்றுவதற்கு
எப்படி
ஆகம சாஸ்திரம்
விதிமுறைகளை வகுத்து
வைத்து இருக்கிறதோ  ;
அவ்வாறே ,
பிராண பிரதிஷ்டையை
பயன்படுத்தி ஒருவரை
பாதிப்பு அடையச் செய்து
வீழ்த்துவதற்கும் ;
மாந்திரீக சாஸ்திரம்
விதிமுறைகள் வகுத்து
வைத்திருக்கிறது “

“மக்கள் அனைவரும்
துன்பம் நீக்கி
இன்பத்தை நுகர்ந்து வாழ
வேண்டும் என்று
உயர்ந்த நோக்கத்துடன் ;
கடவுள் சிலைக்கு
உயிரூட்டி கடவுளாகவே
மாற்றுவதற்காக ;
பிராண பிரதிஷ்டை
செய்பவர்கள் நல்ல
செயலுக்குரிய
பலனைப் பெறுவர் ;
பிறரை பாதிப்பு அடையச்
செய்து வீழ்த்த வேண்டும்
என்ற தவறான
நோக்கத்துடன்
பிராண பிரதிஷ்டையை
செய்பவர்கள்
பாவத்தின் சம்பளத்தை
அனுபவித்தே ஆக
வேண்டும் “

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 08-05-2019
/////////////////////////////////////////////////////