July 07, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு- 38


              நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு- 38

இராமர்
அனுமாரை அழைத்து
சீதையிடம் சென்று
இராவண வதத்தைத்
தெரிவிப்பாயாக
என்றார்.

அனுமார்
அசோகவனம் சென்று
சீதையின் கால்களில்
வீழ்ந்து வணங்கி
அன்னையே
இராவணன்
இராம பானத்தால்
இறந்தான்
என்று கூறினார்.

அனுமாரின் இந்த
மகிழ்ச்சியைத்
தரக்கூடிய
செய்தியைக்
கேட்ட சீதை
இந்த மகிழ்ச்சியான
செய்தியைச் சொன்ன
உனக்கு நான் என்ன
கைமாறு செய்வேன்
உனக்கு என்ன வரம்
வேண்டும் கேள்
தருவேன் என்று
சீதை கூறினார்.

இதைக் கேட்ட
அனுமார்
அன்னையே நான்
திருமணம் ஆகாத
பிரம்மச்சாரி
எனக்கு இந்த
உலகத்தில்
தேவைப்படுவது
ஒன்றும் இல்லை.
இருந்தாலும்
தாங்கள் வரம்
தருகிறேன்
என்று கூறியதால்
நான் கேட்கிறேன்
உங்களை இத்தனை
மாதங்களாக
சித்ரவதை செய்த
இந்த கொடிய
அரக்கியரை
நான் கொல்லுவேன்
இவர்களைக்
கொல்ல வேண்டும்
என்ற வரத்தை
எனக்கு தாருங்கள்
என்றார் அனுமார்,.

சீதை அனுமாரை நோக்கி
இந்த அரக்கிமார்கள்
எனக்கு எந்த தீங்கும்
செய்யவில்லை
நான் இழைத்த
வினையினால்
இந்தத் துன்பம்
ஏற்பட்டது.
என் துன்பத்திற்குக்
காரணம்
நான் செய்த
வினை தான்.
வினையைத் தான்
நோக வேண்டுமேயன்றி
இவர்களை
நோகக் கூடாது.

நான் விருப்பப்பட்டு
கேட்ட மானுக்காக
துரத்திச் சென்ற
என் கணவருக்கு ஆபத்து
நேரிட்டு விட்டது
என்று கருதி
லட்சுமணரை அழைத்து
என் கணவரை
போய்ப் பார்த்து அவரை
காப்பாற்றச் சொன்னேன்
அதை கேட்காத
லட்சுமணரை நான்
பலவாறாக திட்டினேன்
மனம் வருத்தப்படும்படி
பேசினேன்

பல ஆண்டுகள்
கண்களை
இமை காப்பது போல்
உண்ணாமல்
உறங்காமல்
நிலத்தில் உட்காராமல்
என் கணவருக்கு
தொண்டு செய்த
என் மைத்துனரான
லட்சுமணரை தன்
வாழ்க்கையைப் பற்றி
கவலைப்படாமல்
என் கணவரின்
வாழ்க்கையைப் பற்றி
மட்டுமே
கவலைப் பட்ட
லட்சுமணரை
நீ மாற்றாந்தாய் மகன்
நயவஞ்சகன் என்று
பலவாறாக பேசி
அவர் மனதை
புண்பட வைத்தேன்
அல்லவா
அவ்வினையினால்
இவ்வினை வந்தது,
வினையைத் தான்
நோக வேண்டுமே தவிர
இவர்களை நோகக் கூடாது

எனவே இந்த
அரக்கியர்களை
கொல்ல வேண்டாம்
நான் செய்த
வினையின் விளைவை
நான் அனுபவித்துத் தான்
ஆக வேண்டும்
என்றார் சீதை

ஒருவன்
தெரிந்து பாவம்
செய்தாலும்
தெரியாமல் பாவம்
செய்தாலும்
பாவத்திற்குரிய தண்டனை
இறைவனால்
குறிப்பிட்ட காலத்தில்
வழங்கப்படும்
என்பதையும்,
ஒருவன் குற்றம்
செய்தால் செய்த
குற்றத்திற்குரிய
தண்டனையை
இறைவன் வழங்கி
அந்த குற்றத்தை
செய்தவனை
அதற்குரிய விளைவை
அனுபவிக்கும்
காலம் வரும்போது
இறைவன் அனுபவிக்கச்
செய்வான்
என்பதையும்,
செய்த செயலுக்குரிய
விளைவிலிருந்து
யாரும் தப்பிக்க முடியாது
என்பதையும்,
தெய்வம் நின்று
கொல்லும் என்பதற்கான
அர்த்தத்தையும்,
இந்தக் கதையின்
மூலம் தெரிந்து கொள்ளலாம்

இந்தக் கதைதான்
தெய்வம் நின்று
கொல்லும் என்பதற்கான
அர்த்தம்

----------இன்னும் வரும்
///////////////////////////////////////////////