March 28, 2012

இயேசு கிறிஸ்து - அகஸ்தியர் - மனமது- பதிவு - 28




         இயேசு கிறிஸ்து -அகஸ்தியர் -மனமது-பதிவு - 28

       "பதிவு இருபத்துஎட்டை விரித்துச் சொல்ல
                    ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

பூமியின் மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல , பட்டயத்தையே அனுப்ப வந்தேன்””
                                                                  -------மத்தேயு -10:34

எப்படியெனில் , மகனுக்கும் தகப்பனுக்கும் , மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.”””
                                                                   --------மத்தேயு -10:35

நான் இந்த உலகத்திற்கு ,
சமாதானத்தை உண்டாக்க வந்தேன் ;
சமாதானத்தை ஏற்படுத்த வந்தேன் ;
சமாதானத்தை பரப்ப வந்தேன் ;
சமாதானத்தை விதைக்க வந்தேன் ;
சமாதானத்தை நிறுவ வந்தேன் ;
சமாதானத்தை உருவாக்க வந்தேன் ;
சமாதானத்தை வளர்க்க வந்தேன் ;
என்று யாரும் நினைக்க வேண்டாம் .
தவறான எண்ணம் கொள்ள வேண்டாம் .

நான் சமாதானத்தை உருவாக்க வரவில்லை .
பிரிவினையை உருவாக்க வந்தேன் ;
பிளவுகளை ஏற்படுத்த வந்தேன் ;
சண்டைகளை விதைக்க வந்தேன் ;
வேறுபாடுகளை பரப்ப வந்தேன் ;
போர்களை உருவாக்க வந்தேன் ;
என்கிறார்  இயேசு .

         உலக மக்களின் ஆண்டவராக ,
         ஏழைகளின் தோழனாக ,
         கருணையின் இரக்கமாக ,
         இரக்கத்தின் எடுத்துக்காட்டாக ,
         உண்மையின் உருவமாக ,
         அன்பின் இலக்கணமாக ,
         ஆணவத்தை அடக்குபவராக ,
         இல்லாதவருக்கு உதவுபவராக ,
         ஏற்றத்தை உருவாக்குபவராக ,
         பொதுநலத்தை ஏற்படுத்துபவராக ,
         சுயநலத்தை நொறுக்குபவராக ,
         கவலைகளை ஒழிப்பவராக ,
         துன்பங்களை நீக்குபவராக ,
        அறியாமையை விரட்டுபவராக ,
        இன்பங்களை உண்டாக்குபவராக ,
        உண்மையை உரைப்பவராக ,
        பாசத்தை நிலைநாட்டுபவராக ,
        அகிலத்தின் ஆண்டவராக ,
        அவனியை ஆள்பவராக ,
        இதயத்தில் வீற்றிருப்பவராக ,
        உள்ளங்களை மாற்றுபவராக ,
        எளிமைக்கு உதாரணமாக ,
        ஒற்றுமையை வலியுறுத்துபவராக ,
        மறைபொருளை விளக்குபவராக ,
        அனைத்தையும் காப்பவராக ,
        எல்லாவற்றையும் வழிநடத்துபவராக ,

மக்களால் நினைக்கப்படும் ;
நினைத்து போற்றப்படும் ;
போற்றி வணங்கப்படும் ;
வணங்கி பின்பற்றப்படும் ;
பின்பற்றி நினைக்கப்படும் ;
ஆண்டவன் இயேசு- எப்படி
பிரிவினையை உண்டாக்க வந்தேன் என்று கூறுவார்.
சமாதானத்தை உண்டாக்க அல்ல ,
பிரிவினையை உண்டாக்க வந்தேன் என்று கூறுவார்.
பிரிவினையை நமக்குள் , குடும்பத்திற்குள், சமுதாயத்திற்குள்
என்று பல்வேறு  நிலைகளில் பிரிவுகளை உண்டாக்க முடியும்.

நம்முள் இருக்கும்
இன்பத்திற்கும் , துன்பத்திற்கும் பிரிவினை
நல்லவைகளுக்கும் , கெட்டவைகளுக்கும் பிரிவினை
என்ற இறு வேறுபட்ட பிரிவினைகளை உண்டாக்க முடியும்

குடும்பத்திற்குள் இருக்கும் ,
சமுதாயத்திற்குள் இருக்கும் ,
உயர்வுக்கும் - தாழ்வுக்கும் பிரிவினை ;
முதலாளிக்கும் - தொழிலாளிக்கும் பிரிவினை ;
பணக்காரனுக்கும்-ஏழைக்கும் பிரிவினை ;
உயர்ந்தோருக்கும்-தாழ்ந்தோருக்கும் பிரிவினை ;
நல்லவருக்கும் - கெட்டவருக்கும் பிரிவினை ;
பொதுநலத்திற்கும்-சுயநலத்திற்கும் பிரிவினை ;
என்ற இரு வேறுபட்ட தன்மைகளுக்கு
இரு வேறுபட்ட நிலைகளுக்கு இடையே
பிரிவினை உண்டாக்க வந்தேன் என்கிறார்.

மேலும் ,
மகனுக்கும் , தகப்பனுக்கும் இடையே பிரிவினை ;
மகளுக்கும் , தாய்க்கும் இடையே பிரிவினை ;
மருமகளுக்கும் , மாமிக்கும் இடையே பிரிவினை ;
உண்டாக்க வந்தேன் என்கிறார்.

பிரிவுகள் எப்போது உண்டாகும் ?
பிரிவுகள் உண்டாக காரணங்கள் என்ன?
வேறுபாடுகள் ஏற்படும் போது பிரிவுகள் உண்டாகும் .

பிரிவுகள் வார்த்தைகளாலும் , சொற்களாலும்  ,
வாளாலும் , போர்களாலும் ஏற்படும் .
நம்முள் இருக்கும் இரு வேறுபட்ட நிலைகளை ,
குடும்பத்திற்குள் இருக்கும் இரு வேறுபட்ட நிலைகளை ,
சமுதாயத்திற்குள் இருக்கும் இரு வேறுபட்ட நிலைகளை,
தீர்க்க வேண்டுமென்றால்
பிளவுகளை உண்டாக்க வேண்டும்.
பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும்.

இத்தகைய பிரிவுகளை வாளால் , போரால் ஏற்படுத்த முடியும் .
நம்முள் இருக்கும் நல்லவை ,கெட்டவைகளை
அகத்தாய்வு மூலம் , அறுகுண சீரமைப்பு மூலம்,
எண்ணத்தை ஆராய்வதன் மூலம்,
நம்முள் ஒரு அளவிட முடியாத போர்  மூளும் ;
மனதிற்குள் போராட்டங்கள் நடக்கும் ;
மனது சிந்தனை செய்ய முடியாமல் சிக்கித் தவிக்கும் ;
ஆராய முடியாமல் குழம்பித் தவிக்கும் ;
அந்த நிலையில் வாள் எப்படி ஒன்றை இரண்டாக பிளக்கிறதோ
அதைப்போல் நம்முள் இருப்பதை
இரண்டாக உடைக்க வேண்டும்
வேறுபடுத்தி அறிய வேண்டும்
நம்முள் இருக்கும் மாறுபட்ட நிலைகளை உணர வேண்டும் .

நம்முள் பிளவை உண்டாக்கி,
பிரிவினையை உண்டாக்கி,
நம்முள் இருக்கும் நல்லவற்றையும் , கெட்டவற்றையும்
வேறுபடுத்தி அறியும் திறன்
எப்போது வந்து விட்டதோ ?
எப்போது அறியும் தெளிவு வந்து விட்டதோ ?

அப்போதே நாம் ,
உண்மையை நோக்கி நடை போடஆரம்பித்து விட்டோம் ;
நல்லவைகளை உணர ஆரம்பித்து விட்டோம் ;
உண்மைகளை புரிய ஆரம்பித்து விட்டோம் ;
பண்புகளை பெற ஆரம்பித்து விட்டோம் ;
நல்லவனாக வாழ வழி வகைகளை
உருவாக்க ஆரம்பித்து விட்டோம் ;
இரு வேறுபட்ட நிலைகளை பிரித்து பார்க்க
ஆரம்பித்து விட்டோம்  என்று அர்த்தம்

எப்போது நாம் நமக்குள் பிரிவுகளை உண்டாக்கி
இருவேறுபட்ட நிலைகளை பிரித்து பார்க்கும் தன்மை
நமக்குள் வந்து விட்டதோ?

அப்போதே நாம்
கெட்டவைகளை நீக்கி நல்லவைகளை கைக்கொள்ளும்
காலம் நெருங்கிவிட்டது என்று பொருள் .

உண்மை விளங்கி விட்டால் ,
பிரிவுகள் புரிந்து விட்டால் ,
வேறுபாடுகள் தெரிந்து விட்டால் ,
நம்மை நாமே நல்லவனாக ,
சிந்தனை தெளிந்தவனாக ,
உண்மை உணர்ந்தவனாக ,
மாற்றிக் கொள்ள முடியும் .

பாதி மனதை அரக்கத்தனமும் ;
மீதி மனதை இரக்கத்தனமும் ;
ஆண்டு கொண்டிருந்தால் ,
பிரிவினை உண்டாக்கி வேறுபடுத்தி அறியத் தெரிந்தவன்
அரக்கத்தனத்தை அழித்து முழுமனதிலும் இரக்கத்தனத்தை
குடிகொள்ளச் செய்வான் .

முழுமனதிலும் இரக்கத்தனத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால்
அரக்கத்தனத்திற்கும் , இரக்கத்தனத்திற்கும்
பிரிவினை உண்டாக்க தெரிந்திருக்க வேண்டும் .
வேறுபடுத்தி அறிய தெரிந்திருக்க வேண்டும் .

இத்தகைய பிரிவினையை உண்டாக்கி ,
வேறுபடுத்தி அறியத் தெரிந்தவனால் மட்டுமே
தன்னை ஒரு இரக்கம் நிறைந்த மனிதனாக


அன்பு குடி கொண்டவனாக ,
கருணை நிறைந்தவனாக மாற்ற முடியும் .
அத்தகைய ஒரு பிரிவினையை எப்படி உண்டாக்குவது
பிரிவுகளை எவ்வாறு உருவாக்குவது
என்பதை உணர வைப்பதற்கு வந்தேன் என்கிறார்  இயேசு .

மேலும் மகனுக்கும் , தகப்பனுக்கும்
மகளுக்கும் , தாய்க்கும்
மருமகளுக்கும் , மாமிக்கும்
பிரிவினை உண்டாக்க வந்தேன் என்றால்
இருவரிடமும் உள்ள வேறுபாடுகளை
இருவரிடமும் உள்ள மாறுபட்ட கருத்துக்களை
உணர்த்த வந்தேன் என்று பொருள் .

அதாவது ,
ஒருவர்  உண்மையையும் , ஒருவர் பொய்மையையும்
பின்பற்றுவதாக இருந்தால்
ஒற்றுமையாக இருந்தால்
எது நல்லது?  எது கெட்டது ? என்று தெரியாது .
இருவரும் பிரிந்து இருக்கும் போது மட்டும் தான்
பிரிந்து தனித்து சிந்திக்கும் போது தான்
தான் செய்தது எது  சரி ? தான் செய்தது எது தவறு ?
என்று தனக்குள் முடிவு எடுக்க முடியும்.


முதலில் வெளியில் ஏற்பட்ட பிரிவு
உள்ளுக்குள் பிரிவாக மாறும் போது
சிந்தனை விழித்துக் கொள்கிறது ;
நல்லவை , கெட்டவை ஆராயப்படுகிறது ;
அரக்கத்தனம் முடிந்து விடுகிறது  ;
இரக்கத்தனம் முழுமனதை ஆட்சி செய்கிறது ;
தன் மனம் ஒன்றாகிறது ;
பிறகு சிந்தனை சீர்திருத்தம் பெற்ற பிறகு
இரு நெஞ்சங்கள் அன்பால் ஒன்றிணைகிறது.

முன்பு பாசத்திற்காக , உறவுக்காக இணைக்கப்பட்ட
இருநெஞ்சங்கள் பிளவு ஏற்பட்டு
பிரிவினை உண்டாகி மீண்டும் சேர்ந்த போது
உண்மையான அன்புடன்
அழிக்க முடியாத பாசத்துடன் இணைகிறது .

ஒருவன் தன்னை உணர்ந்து கொள்வதற்காகவும் ,
சமுதாயம் தன்னை திருத்திக் கொள்வதற்காகவும் ,
பிரிவினை உண்டாக்க வந்தேன் என்று இயேசு கூறியது
இந்த கருத்தின் அடிப்படையில் தான் என்பதை நாம்
உணர்ந்து கொள்வோம் .



அகஸ்தியர் :

மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை யுயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மை யாமே””
                               ------அகஸ்தியர்-----பெரியஞானக் கோவை---

மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா””
பிறப்பு இறப்பு என்ற சூழலில் சிக்கி
வாழ்க்கை சகதியில் மாட்டிக் கொள்ள
காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தோமானால்
நாம் செய்யும் நல்லவை - தீயவை
பாவ , புண்ணிய கணக்கில் சேர்க்கப்பட்டு
கர்ம வினையில் மாட்டிக் கொள்வதால்
பிறப்பு , இறப்பு என்ற சூழல் உருவாகிறது .

நாம் செய்யும் நல்லவை எவை
தீயவை எவை என்று பேதம் பிரித்து பார்த்து
பிளவினை உண்டாக்கி , பிரிவினையை ஏற்படுத்தி
பாவத்தையும் புண்ணியத்தையும் பிரித்து
பாவத்தைக் கழித்து  ,புண்ணியத்தை உயர்த்தி
புண்ணியப் பலன்கள் நிரப்பப்படும்போது
நாம் புண்ணியவானாகிறோம் .

இறுதியில் புண்ணியத்தையும் கழித்து
கர்மவினைகளை முற்றிலும் நீக்கி விட்டால்
பிறப்பு , இறப்பு சுழற்சியை நிறுத்த முடியும் .

கர்மவினைகளை கழிக்கும் உபாயத்தை அறிந்து ,
கர்மவினைகளைக் கழிக்கும் விதிமுறைகளைப் பின்பற்றி ,
கர்மவினைகளைக் கழித்து அறிவு தெளிவு பெற்று ,
ஞானநிலையை அடைந்து பிறப்பு - இறப்பு சுழற்சியை அறுக்க முடியும் .

துன்பங்களை நீக்கி இன்பத்தைப் பெற்று
மகிழ்ச்சியுடன் வாழ எதை அடைந்தால் எல்லாம் கிடைக்குமோ?
எது அதுவானால் அது எல்லாம் அளிக்குமோ?
அதுவாகவே மாறிவிட்டால் மனது தெளிவு பெறும்.
மனது செம்மையாகி விடும் .

மந்திரம்:
மந்திரங்கள் என்பவை மனிதன் தன் தேவையை
நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்தும் ஒரு ஆயுதம் .

ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்
மந்திரங்கள் உயிர்ப்பெற்று இயங்க வேண்டுமானால்
யந்திர சூட்சுமங்கள் ; தந்திர வழிகாட்டுதல்கள்
 தெரிந்திருக்க வேண்டும்

மேலும் மந்திரங்களை பஞ்சபூதங்களுடன் இணைத்து செயல்பட
வைக்கக் கூடிய ரகசியங்களும் தெரிந்திருக்க வேண்டும் .
இவையனைத்தும் மட்டுமின்றி மேலும் சில
மறைபொருள் எழுத்தின் விளக்கங்களும் ;
இயக்குவிக்கும் தன்மைகளும் ; அறிந்திருக்க வேண்டும் .
இவையெல்லாம் தெரிந்து பயன்படுத்தினால் மட்டுமே
மந்திரம் தனக்குரிய பலனை அளிக்கும்.

எல்லாம் வல்ல இறைநிலையுடன் இருப்பு நிலையுடன் இணைந்து
தான் அவனாக மாறிவிட்ட பிறகு அனைத்து விதமான
நித்தியமான சக்திகள் அனைத்தையும் பெற்று விட்ட பிறகு
மனம் துhய்மையாகி செம்மையாகி விட்ட பிறகு
குறிப்பிட்ட தேவைகளை நிறைவேற்ற உபயோகப்படும் மந்திரங்களை
பயன்படுத்தி பெறப்படும் சக்திகள் தேவையில்லை
மந்திரங்களை செபிக்கத் தேவையில்லை
மந்திரங்களை செபிக்க வேண்டாம் என்கிறார்  அகஸ்தியர்.



மனமது செம்மையானால் வாயுவை யுயர்த்த வேண்டா
நம் மூச்சை உள்ளே இழுப்பது பூரகம் என்றும் ,
மூச்சை உள்ளே நிறுத்துவது கும்பகம் என்றும் ,
வெளியே விடுவது இரேசகம் என்றும் அழைக்கப்படுகிறது .

சுவாசக் காற்றை கும்பகப்படுத்தி உள்ளே அதிக அளவில்
நிறுத்துவதால் சக்திகள் பல கிடைக்கும் .
அதன் மூலம் நம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் .

பூரகம் , கும்பகம் , இரேசகம் மாத்திரை அளவுகளை
மாற்றி அமைப்பதன் மூலம் சக்திகள் பலவற்றைப் பெறலாம் .

இதில் முக்கியமாக பிராணவாயுவை
16 மாத்திரை பூரகம் செய்து உள்ளே வாங்கி ,
64 மாத்திரை கும்பகம் செய்து உள்ளே நிறுத்தி ,
32 மாத்திரை இரேசகம் செய்து வெளியே விட்டு ,
பிராணயாமப் பயிற்சியில் தேர்ந்தவன் சக்திகள் பல அடையலாம்.
தான் அவனாகி நின்று நித்திய சக்திகளைப் பெற்ற பிறகு
வாயுவின் எண்ணிக்கையை மாற்றி அமைத்து
வாயுவின் எண்ணிக்கையை உயர்த்தி பெறப்படும்
சக்திகள் தேவையில்லை
அத்தகைய பயிற்சியை செய்வது அவசியமில்லை
என்கிறார்  அகஸ்தியர்.



“”மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா””
நாம் ஒருமுறை சுவாசிக்கும் போது சுவாசக்காற்றானது
வெளியே 12 அங்குலம் செல்கிறது
உள்ளே 8 அங்குலம் செல்கிறது
4 அங்குலம் சுவாசக் காற்றானது வீணாகிறது
வீணாகும் 4 அங்குல காற்றை முதலில் நிறுத்தி
உள்ளே 8 அங்குலம்
வெளியே 8 அங்குலம்
சமப்படுத்த வேண்டும்- பிறகு
வெளியே செல்லும் 8 அங்குல காற்றையும்
படிப்படியாக குறைக்க வேண்டும் .

அவ்வாறு செய்வதன் மூலம் அளப்பரிய சக்திகளைப் பெறலாம்;
சித்துகளைப் பெறலாம்; சக்திகளைப் பெறலாம்;

தானே அவனாக மாறிவிட்ட பிறகு நித்திய சக்திகளை
உடைய நமக்கு சித்துக்களை அடைய உதவும்
வாசி என்னும் மூச்சுப் பயிற்சி தேவையில்லை
செய்ய வேண்டிய அவசியமில்லை என்கிறார்  அகஸ்தியர்.



“”மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மை யாமே””””
நம்முடைய தேவை எதுவோ?
அதற்குரிய மந்திரத்தை தேர்ந்தெடுத்து
மந்திர , யந்திர , தந்திர முறைகளை முறைப்படி பயன்படுத்தி
பஞ்ச பூதங்களை இணைத்து செயல்படுத்தி
ஒரு இலட்சத்திற்கு மேல் உரு ஏறி முதலில் சித்தி செய்ய வேண்டும் .

மந்திரத்தை சித்தி செய்த பிறகு
வார்த்தைகளை சேர்த்தும் நடுமாறல் ,கடைமாறல்
போன்ற முறைகளை உபயோகப்படுத்தியும்
நமக்கு தேவையானவைகளையும்
அஷ்டகன்ம சித்திகளையும் பெற முடியும் .

மந்திரங்களைப் பயன்படுத்தி
நமக்கு தேவைப்படும் குறிப்பிட்ட வாழ்க்கைத் தேவைகளை
நிறைவேற்றிக் கொள்ளலாம் ;
அஷ்டகன்ம சக்திகளை பெற்றுக் கொள்ளலாம் ;
சூட்சும சக்திகளுடன் தொடர்பு கொள்ளலாம் ;
சூட்சும உலகை அறிந்து கொள்ளலாம் ;
சூட்சும ரகசியங்களை விளங்கிக் கொள்ளலாம் ;
இயக்க நிலைக்கு உட்பட்ட சக்திகளை உணர்ந்து கொள்ளலாம் ;

இருப்பு நிலை சக்திகளை இயக்கநிலையைப்
பயன்படுத்தி பெற முடியாது
ஆனால் இருப்பு நிலை அடைந்து விட்டால்
இயக்க நிலைக்கு உட்பட்ட அனைத்து சக்திகளையும் பெற்று விடலாம் .

எல்லாம் வல்ல இறைநிலையான இருப்பு நிலையுடன் இணைந்து
தானே அவனாக மாறிவிட்ட பிறகு உலகில் உள்ள கோடானு கோடி
மந்திரங்கள் சித்தி செய்து பெறப்படும் சக்திகள் என்பவை
தேவையில்லை சித்தி செய்ய அவசியமில்லை.

உயர்ந்த நிலை அடைந்த விட்ட பிறகு
மந்திரத்தை சொல்லிய அளவிலேயே

சித்தியாகி அதனுடைய பலனை கொடுத்து விடும்
உயர்ந்த நிலை அடைந்து விட்டவருக்கு
இந்த சக்திகள் தேவையில்லை என்கிறார்  அகஸ்தியர்.


நம்முடைய எண்ணம் , சொல் , செயலால் உண்டாகும்
பாவ புண்ணிய பதிவுகளை உணர்ந்து
அவைகளை வேறுபடுத்தி அறிந்து பிளவை ஏற்படுத்தி
பிரிவினை உண்டாக்கி பாவத்தை நீக்கி புண்ணியத்தை
நிரப்பும் போது உயர்ந்த நிலை அடைகிறான்.

இருப்பு நிலை என்ற உயர்ந்த நிலை அடைந்தவனுக்கு
இயக்க நிலையில் கிடைக்கும் சக்திகளின் மதிப்பு குறைவே ஆகும் .


ஆதலால் ஒவ்வொருவரும் தான் செய்யும்
நல்லவை -  தீயவைகளால் எழும் பாவ - புண்ணியங்களை ,
பேதம் பிரித்து பிளவினை உண்டாக்கி , பிரிவினை உண்டாக்கி, 
உண்மையை உணர்ந்து , உண்மையில் தெளிவு பெற்று,
உயர்ந்த நிலை அடைய வேண்டும் என்கிறார் அகஸ்தியர்.



இயேசு கிறிஸ்து- அகஸ்தியர் :
இயேசு , நாம் செயலாற்றும் நல்லவை தீயவைகளுக்கு ஏற்ப உண்டாகும்
பாவ புண்ணிய பதிவுகளை பிரிவினை உண்டாக்கி
பாவத்தை கழித்து புண்ணியத்தை நிரப்பினால் உயர்ந்த நிலையை
அடையலாம் என்கிறார்


அவ்வாறே ,
அகஸ்தியரும் ,நாம் செயலாற்றும் நல்லவை தீயவைகளுக்கு
ஏற்ப உண்டாகும் பாவ புண்ணிய பதிவுகளை அடையாளம் கண்டு
பிரிவினை உண்டாக்கி , பாவத்தை கழித்து புண்ணியத்தை நிரப்பி
கர்மவினைகளை எரித்து ; பிறப்பு இறப்பு சூழலை அறுத்து ;
ஞானத் தெளிவு பெற்று இறைநிலையுடன் இணைந்து
தான் அவனாக மாறினால் அனைத்து சக்திகளையும் பெற்று
உயரலாம் என்கிறார்  அகஸ்தியர்.


                “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                              போற்றினேன் பதிவுஇருபத்துஎட்டு  ந்தான்முற்றே “”