March 08, 2019

திருக்குறள்-பதிவு-121


                    திருக்குறள்-பதிவு-121

“ ஜியார்டானோ
புருனோவின் சிலை
அவர் உயிரோடு
எரிக்கப்பட்ட இடமான
காம்போ டி ஃபியோரி
(Campo dei Fiori)
என்ற இடத்தில் வைக்க
வேண்டும் என்று
அரசாலும் ஜியார்டானோ
புருனோவின்
ஆதரவாளர்களாலும்
முடிவு செய்யப்பட்டது “

“ கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
செயல்பட்டவருடைய
சிலையை வாட்டிகனுக்கு
அருதில் வைப்பது
என்பது  - தங்களை
இழிவு படுத்தும் செயல்
என்று கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபை ;
சர்ச்சுகள் ; ஒட்டு
மொத்த  கிறிஸ்தவர்களும்
எதிர்த்தனர்  ; “

“ எதிர்ப்பானது
பேச்சு வார்த்தை
வாக்குவாதம், சண்டை
என்று சென்று
ஜியார்டானோ
புருனோவின் சிலை
வாட்டிகனுக்கு அருகில்
வைக்கலாம் - ஆனால்
சூரியனை பார்த்தவாறு
அமைக்கப்பட வேண்டும்
என்று முடிவு
செய்யப்பட்டு சிலை
வடிக்கப்பட்டது ”

“ ஆனால் தற்போது
செதுக்கி வைக்கப்பட்டு
திறப்பு விழாவிற்காக
காத்துக் கொண்டிருக்கும்
ஜியார்டானோ
புருனோவின் சிலை
சூரியனைப் பார்த்தவாறு
இல்லாமல் ;
வாட்டிகன் நகரத்தை
நோக்கி பார்த்தவாறு
அமைக்கப்பட்டுள்ளது ; “

“ வாட்டிகன் நகரத்தைப்
பார்த்தவாறு தங்களை
எதிர்த்த ஜியார்டானோ
புருனோவின் சிலையை
நிறுவுவது என்பது
தங்களால் ஏற்றுக்
கொள்ள முடியாத
ஒன்று - என்று
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையும் ;
உலகில் உள்ள ஒட்டு
மொத்த கிறிஸ்தவ
மக்களும் ; எதிர்த்தனர்”

“ வாட்டிகன் நகரத்தைப்
பார்த்தவாறு வைக்கப்படும்
ஜியார்டானோ
புருனோவின் சிலை ஒட்டு
மொத்த கிறிஸ்தவர்களையும்
இழிவு படுத்தும்
ஒரு செயல்  ;
வாட்டிகன் நகரத்தைப்
பார்த்தவாறு - இந்த
சிலையை வைக்கக்கூடாது ;
என்று அனைத்து
கிறிஸ்தவர்களும்
போராட்டம் நடத்தினர் ; “

“ சூரியனை பார்ப்பது
போல் சிலையை
நிறுவுகிறோம் - என்று
சொன்னவர்கள் ;
இன்று சிலையை
வாட்டிகன் நகரத்தைப்
பார்த்தவாறு அமைத்தது ;
என்பது – ஒரு
ஏமாற்று வேலை ;
நயவஞ்சக செயல் ;
பித்தலாட்டத்தின் உச்சம் ;
நம்பிக்கை துரோகம் ;
என்று கிறிஸ்தவர்கள்
அனைவரும் தங்கள்
எதிர்ப்பை தெரிவித்தனர் ; “

“ சூரியன் என்பது
இருளை நீக்கி
ஒளியைத் தருவது ;
இருண்டு கிடக்கும்
வாட்டிகன் நகரம்
ஜியார்டானோ
புருனோவின் பார்வை
பட்டு ஒளிபெற
வேண்டும் என்ற நல்ல
நோக்கத்திற்காகவே ;
ஜியார்டானோ புருனோவின்
சிலை வாட்டிகன்
நகரத்தைப் பார்த்து
அமைக்கப்பட்டது ; “

“ ஜியார்டானோ
புருனோவின் சிலை
வாட்டிகன் நகரத்தை
பார்த்த வண்ணம்
தான் இருக்கும் ;
சூரியனைப் பார்த்த
வண்ணம் சிலையை
மாற்றி அமைக்க
முடியாது ; ‘

“ இதற்காக எங்கள்
உயிரையும் இழப்பதற்கு
நாங்கள் தயாராக
இருக்கிறோம் ;
என்றனர் ஜியார்டானோ
புருனோ ஆதரவாளர்கள் ; “

“ ஜியார்டானோ
புருனோவினுடைய
ஆதரவாளர்கள்
இவ்வாறு சொன்ன
காரணத்தினால்
சிறிய நெருப்பாக      
புகைந்து கொண்டிருந்த
பிரச்சினை - பெரிய
எரிமலையாக வெடிக்க
ஆரம்பித்ததது ;”

“ இரண்டு பிரிவினருக்கும்
வாக்குவாதங்கள் ;
பேச்சு வார்த்தைகள் ;
சண்டைகள் ;
உச்ச கட்டத்தை
அடைந்தன ; “

“ பேச்சு வார்த்தைகள்
பெரும்பாலும் ஒரு
குறிப்பிட்ட விஷயத்தை
மையமாக வைத்தே
பெரும்பாலும் இருந்தன “

“அந்த பேச்சுவார்த்தைகள்
நடந்த விதம்
இப்படித் தான்………………………?

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  08-03-2019
//////////////////////////////////////////////