August 09, 2018

திருக்குறள்-பதிவு-2



                    திருக்குறள்-பதிவு-2

இன்னா செய்தாரை
ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

தனக்குத் துன்பம் செய்தவரைத்
தண்டிப்பது என்பது அவர்
வெட்கப்படும்படி அவருக்கு
நல்லது செய்து விடுவதாகும்
என்று பொருள்
கொள்ளப்படுகிறது

இதற்கு இப்படியும்
அர்த்தம் சொல்லலாம்


ஒருவர் நமக்கு
தொடர்ந்து தீமையான
செயல்களையே செய்து
கொண்டிருக்கிறார்;
நமக்கு கிடைக்க
வேண்டிய நல்ல
விஷயங்களை
நமக்கு தொடர்ந்து
கிடைக்க விடாமல்
தடுக்கிறார்;
வேலையில் தடைகளை
ஏற்படுத்துகிறார்;
நம்மைப் பற்றி
பிறரிடம் பொய்யான
தகவல்களைச் சொல்லி
நம்முடைய பெயரை
கெடுக்க பார்க்கிறார்;
நம்மை பிறரிடம்
தப்பாக சொல்லி
பிறரை நமக்கு
எதிரியாக்குகிறார்;
நமக்கு சேர
வேண்டியவைகளை
அபகரித்துக் கொள்கிறார்;
இவ்வளவையும் தாங்கிக்
கொண்ட நாம்
நமக்கு கெடுதல்
செய்தவருக்கு
துன்பம் வந்த போது
நாம் ஓடிச் சென்று
உதவி செய்கிறோம்
இதனால் அவர்
ஒரு பெரிய
பிரச்சினையிலிருந்து
தப்பிக்கிறார்.

நாம் உதவி செய்த
நபர் நம்மைப் பற்றி
நினைக்கிறார்
நாம் எவ்வளவு
கெடுதல்கள் அவருக்கு
செய்திருக்கிறோம்
ஆனால் அவர்
அதை எல்லாம்
தாங்கிக் கொண்டு
அவைகளை எல்லாம்
மறந்து விட்டு
பெருந்தன்மையுடன்
நமக்கு துன்பம்
வந்தபோது ஓடி வந்து
உதவி செய்திருக்கிறார்
இவ்வளவு உயர்ந்த
குணம் கொண்ட
ஒருவருக்கு
நான் கெடுதல் செய்து
மிகப் பெரிய
பாவத்தை செய்து
விட்டேன்
என்று வருந்துகிறார்.

நாண என்பதற்கு
இந்த இடத்தில்
வெட்கப்படுதல்
என்று பொருள்
கொள்ளக் கூடாது.

நாண என்பதற்கு
இந்த இடத்தில்
வருத்தப்படுதல்
என்று பொருள்
கொள்ள வேண்டும்.

ஒருவர் தான்
செய்த தீமையான
செயலை நினைத்து
வருத்தப்படுவதில்
இரண்டு நிலைகள்
இருக்கிறது

   ஒன்று : உண்மையாக
            வருத்துப்படுவது

  இரண்டு : உண்மையாக
            இல்லாமல்
            வருத்தப்படுவது

யார் ஒருவர் தான்
செய்த தீமையான
செயலை நினைத்து
உண்மையாக
வருத்தப்படுகிறாரோ
அவர் அந்த தீமையான
செயலை மீண்டும்
அவர் தன் வாழ்க்கையில்
செய்ய மாட்டார்

ஆனால் ஒருவர்
தான் செய்த
தீமையான செயலை
நினைத்து
உண்மையாக இல்லாமல்
பொய்யாக
வருத்தப்படுகிறாரோ
அவர் தான் அந்த
தீமையான செயலை
தன் வாழ்க்கையில்
மீண்டும் மீண்டும்
செய்து கொண்டிருப்பார்

நாம் நம்முடைய
வாழ்க்கையை
எடுத்துப் பார்த்தால்
நாம் சிறிய வயது முதல்
தற்போது வரை
சிறிய வயதில் செய்த சில
தீமையான செயல்களை
இன்றும் நாம்
செய்து கொண்டிருப்போம்
அதற்குக் காரணம்
நாம் செய்த
தீமையான செயலை
நினைத்து நாம்
உண்மையாக
வருத்தப்படாததே
காரணம்

நாம் செய்த
தீமையான செயலை
நினைத்து நாம்
உண்மையாக
வருத்தப்பட்டிருப்போமேயானால்
அந்த தீமையான செயலை
நாம் செய்யாமல்
விட்டிருப்போம்

நாம் இன்றும்
தொடர்ந்து தீமையான
செயல்களை தொடர்ந்து
செய்வதற்குக் காரணம்
நாம் செய்யும்
தீமையான செயலை
நினைத்து நாம்
உண்மையாக வருத்தப்
படாததே காரணம்

இன்னா செய்தாரை
ஒறுத்தல் என்றால்
நமக்கு கெடுதல்
செய்யும் ஒருவர்
என்று பொருள்

அவர்நாண நன்னயம்
செய்து விடல் என்றால்,
நாம் செய்த
நன்மையான செயலை
நினைத்து அவர்
உண்மையாக
வருத்தப்பட்டால்
அவர் மீண்டும்
அந்த தப்பை
செய்ய மாட்டார்
என்று பொருள்.

அதாவது நமக்கு கெடுதல்
செய்த ஒருவருக்கு
நாம் நன்மை செய்தால்
அதை நினைத்து
அவர் உண்மையாக
வருத்தப்பட்டால்
அவர் மீண்டும்
அந்த தப்பை
நமக்கு மட்டும் அல்ல
யாருக்கும் செய்ய
மாட்டார்
என்கிறார் திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  09-08-2018
///////////////////////////////////////////////////////////