April 11, 2019

திருக்குறள்-பதிவு-134


                      திருக்குறள்-பதிவு-134

“தசுக்கனியி பேரரசரான
இரண்டாம் பெர்டினாண்டோ
இவரது தந்தையும்
முன்னோரும் அடக்கம்
செய்யட்டுள்ள
சாந்தோ குரோசில்
உள்ள பாசிலிக்காவில்
முதன்மைப் பகுதியில்
அடக்கம் செய்து
ஒரு சலவைக்கல்
நினைவுச் சின்னமும்
எழுப்பிட விரும்பி
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையிடம் அனுமதி
கேட்டபோது ,
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையால்
தண்டிக்கப்பட்டவர்
கலிலியோ
என்ற காரணத்தினால்
எட்டாம் உர்பன் போப்பும்,
பேராயர் பிரான்செசுகோ
பார்பெரினியும் அனுமதி
அளிக்க மறுத்து விட்டனர் “

“டாலமி சொன்ன
பூமியை மையமாக
வைத்து சூரியன் சுற்றி
வருகிறது என்ற
பூமி மையக் கோட்பாடு
தவறானது
சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றி
வருகிறது என்ற
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் சொன்ன
சூரிய மையக் கோட்பாடே
சரியானது என்று
சொன்னதுடன் நிற்காமல்
அதனை கலிலியோ
தன்னுடைய
தொலைநோக்கியின்
மூலம் நிரூபித்துக்
காட்டினார் ;
பைபிளில் உள்ள
கருத்துக்கு எதிராக
கருத்து சொல்லி
தன்னுடைய உயிரை
காப்பாற்றிக் கொள்வதற்காக
மண்டியிட்டு மன்னிப்பு
கேட்கவில்லை கலிலியோ”

“பைபிளில் சொல்லப்பட்டுள்ள
ஆண்டவரின்
வார்த்தைகளுக்கு எதிராக
கலிலியோ தான் சொன்ன
கருத்துக்களை தவறு
என்று சொல்லி
மன்னிப்பு கேட்டுக்
கொண்டால் அவரை
விட்டு விடுகிறோம்
என்று எவ்வளவு
எடுத்துச் சொல்லியும்
தன்னுடைய உயிரை
காப்பாற்றிக் கொள்வதற்காக
மண்டியிட்டு மன்னிப்பு
கேட்கவில்லை கலிலியோ”

 “கலிலியோவிற்கு
அவருடைய அன்றாடக்
கடமைகளை
நிறைவேற்றுவதற்குத்
தேவையான பொருட்களை
கூட வழங்காமல் ;
தேவையான மருத்துவ
உதவிகள் தனக்கு
வேண்டும் என்று கேட்டும் ;
தேவைப்படும் மருத்துவ
உதவிகளை தேவைப்படும்
காலத்தில் வழங்காமல்
பல்வேறு ரூபங்களில்
கலிலியோவை- வீட்டுச்
சிறையில் வைத்து
சித்திரவதை செய்த போதும் ;
தான் கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக செயல்பட்டது
தவறு என்று
தன்னுடைய உயிரை
காப்பாற்றிக் கொள்வதற்காக
மண்டியிட்டு மன்னிப்பு
கேட்கவில்லை கலிலியோ”


“தன்னுடைய
அன்பு மகள் இறந்து
கலிலியோ மீளாத் துயரில்
வீழ்ந்த போதும் ;
தன்னுடைய கண்களை
இழந்து வாழ்க்கையை
ஒட்டுவதற்கு கஷ்டப்
பட்ட போதும் ;
தன்னுடைய ஆராய்ச்சியை
நிறுத்திக் கொள்ளாமல்
தொடர்ந்து செய்து
கொண்டிருந்த போதும் ;
கணக்கிலடங்கா துயரங்கள்
தன்னை தாக்கிய போதும் ;
தன்னுடைய உயிரை
காப்பாற்றிக் கொள்வதற்காக
மண்டியிட்டு மன்னிப்பு
கேட்கவில்லை கலிலியோ”

“கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை, சர்ச்சுகள்,
கிறிஸ்தவர்கள் ஆக
மொத்தம் உலகில்
உள்ள அனைத்து
கிறிஸ்தவர்களும்
கலிலியோவிற்கு
எதிரியாகி எதிராக
நின்ற போதும் ;
பல்வேறு விதமான
கஷ்டங்களை கலிலியோ
சாகும் வரை
அனுபவித்த போதும் ;
சாகும் வரை
தன்னுடைய உயிரை
காப்பாற்றிக் கொள்வதற்காக
மண்டியிட்டு மன்னிப்பு
கேட்கவில்லை கலிலியோ”

“தன்னடைய உயிரை
காப்பாற்றிக்
கொள்வதற்காக
மண்டியிட்டு மன்னிப்பு
கேட்காத கலிலியோவை
சாந்தா குரோசில் உள்ள
பாசிலிக்காவில்
முதன்மைப் பகுதியில்
அடக்கம் செய்ய அனுமதி
கேட்டபோது- கலிலியோ
கிறிஸ்தவ மதத்திற்கும்
கிறிஸ்தவர்களுக்கும் 
எதிராக செயல்பட்டார்
என்ற காரணத்திற்காகவும் ;
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையால்
தண்டிக்கப்பட்டவர்
கலிலியோ என்ற
காரணத்திற்காகவும் ;
அனுமதி மறுக்கப்பட்டது”

“பாசிலிக்காவின்
தென்வளாகத்துக்கு
அருகில் அமைந்த
நோவிசெசு கல்லறைத்
தோட்டத்திற்கு அண்மையில்
ஒரு சிறிய அறையில்
கலிலியோவை அடக்கம்
செய்ய அனுமதி
வழங்கப்பட்டு அந்த
இடத்தில் கலிலியோ
அடக்கம் செய்யப்பட்டார்”

“ வரலாற்றையே மாற்றி
அமைத்த சூரிய
மையக் கோட்பாட்டை
கண்டுபிடித்த
கலிலியோவின் இறப்பிற்கு
பின்னும் மதம்
மதவெறியுடன் நடந்து
கொண்டது வெட்கப்பட
வேண்டிய விஷயம் “

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  11-04-2019
/////////////////////////////////////////////////////