December 22, 2019

பரம்பொருள்-பதிவு-103


           பரம்பொருள்-பதிவு-103

(பாண்டவர்களின்
மாளிகைக்குள்
நுழைகிறான்
துரியோதனன் ;

மாளிகைக்குள்
பஞ்ச பாண்டவர்கள்
மற்றும்
கிருஷ்ணன்
இருந்தனர் ;

கிருஷ்ணன்
துரியோதனனை
தடுத்தி
நிறுத்தி பேசத்
தொடங்கினான் ; )

கிருஷ்ணன்  :
“வழி தவறி வந்து
விட்டாயா
துரியோதனா ? “

துரியோதனன் :
“கிருஷ்ணா நீ !
இங்கு தான்
இருக்கிறாயா ?”

கிருஷ்ணன் :
“நான் எல்லா
இடத்திலும் இருந்து
கொண்டு தான்
இருக்கிறேன்
துரியோதனா ?
நீ தான் என்னை
கவனிப்பதே
இல்லை ;”

துரியோதனன் :
“தேவையில்லாத
விஷயங்களில்
எல்லாம்
நான் கவனம்
செலுத்துவதில்லை
கிருஷ்ணா “

கிருஷ்ணா :
“எது தேவையுள்ள
விஷயம்   ;
எது
தேவையில்லாத
விஷயம் ; என்பது
உனக்கு
தெரியாத
காரணத்தினால் தான்
தேவையில்லாத
விஷயங்களைச்
செய்து
தேவையற்ற
பிரச்சினைகளில்
மாட்டிக்
கொள்கிறாய்
துரியோதனா “

துரியோதனன் :
“கிருஷ்ணா உன்
அறிவுரைகளை
கேட்பதற்காக
நான் இங்கு
வரவில்லை ;
எனக்கு நிறைய
வேலை இருக்கிறது ;
யாரேனும்
வேலையில்லாமல்
இருந்தால்
அவர்களிடம்
சென்று உன்
அறிவுரைகளை
வழங்கு “

கிருஷ்ணன் :
“நீ பாண்டவர்களைத்
தானே பார்க்க
வந்திருக்கிறாய்
துரியோதனா ?”

துரியோதனன் :
“ஆமாம்”

கிருஷ்ணன் :
“நானும் அவர்களில்
ஒருவன் தான்”

துரியோதனன் :
“பாண்டவர்கள்
ஐவர் தானே”

கிருஷ்ணன் :
“யார் என்னை
கள்ளம் கபடம்
இல்லாமல்
மனதார
நேசிக்கிறார்களோ ?
அவர்களில்
நானும் ஒருவன்  ;
அதனால் தான்
பாண்டவர்களில்
நானும் ஒருவன்
என்று சொன்னேன் ;”

துரியோதனன் :
(துரியோதனனுக்கு
கோபம் வந்தது
கோபத்தை
அடக்கிக் கொண்டு
சாகாதேவனை
நோக்கி பேசத்
தொடங்கினான்)

“சகாதேவா
நான் உன்னிடம்
கொஞ்சம்
தனிமையில் பேச
வேண்டும்
வருகிறாயா?”

சகாதேவன் :
“வாருங்கள்
அண்ணா”

(என்று சொல்லிக்
கொண்டே
துரியோதனனை
தனி அறைக்குள்
அழைத்துக்
கொண்டு
சென்றான்
சகாதேவன்)

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 22-12-2019
//////////////////////////////////////////