May 10, 2020

அன்னையர் தின வாழ்த்துக்கள்- பதிவு-2


                          பதிவு-2

“பட்டினத்தார்
 பல ஆண்டுகள்
பல  இடங்களுக்கும்
சென்று பல்வேறு
கருத்துக்களைப்
பரப்பி வந்தார்.
அவ்வாறான
செயல்கள்
நடை பெற்றுக்  
கொண்டிருக்கும் 
வேளையில்,
ஒரு நாள்
தவநிலையில்
இருக்கும் போது
அவர் உடுத்தி
இருந்த
ஆடையில்
முடிந்து
வைக்கப்பட்ட
 நாணயம்
அவிழ்ந்து
கீழே  விழுந்தது.”

“அவர் தாய்
இறந்து விட்டார்
என்று
அவருக்கு
தெரிந்ததும்,
அவரையும்  
அறியாமல்
அவர் மனம்
தடுமாற்றம்
அடைந்தது.
மனம் கலக்கம்
அடைந்தது
துயர மேகங்கள்
அவருடைய
இதயத்தை
சூழ்ந்து கொண்டது
உடனே அவர்
அருகில்
இருந்தவர்களிடம்
தன் தாய்
இறந்து விட்டார்
அவரைப் பார்க்க
சென்று
வருகிறேன் என்று
சொல்லி விட்டு
கிளம்பி விட்டார்”

“அவர் தாய்
இருக்கும்
இடத்திற்கு
வந்தபோது
அங்கே அவர்
கண்ட காட்சி
அவரை அதிர்ச்சி
அடையச் செய்தது.
அவர்
 துறவியாகி
எல்லாவற்றையும்
துறந்து விட்டு
சென்று விட்டதால்
சாதி வெறியர்கள்
அவர்
குடும்பத்தை
விலக்கி
வைத்திருந்தனர்.
அதனால்  அவர்
தாயாரின்
இறந்த
உடலுடன்
ஓரிருவர்
மட்டுமே நின்று
கொண்டிருந்தனர்.”

“தன்னுடைய
தாயினுடைய
இறந்த உடலை
பார்த்த
பட்டினத்தார்
மனம்
வேதனையுற்று
தன்னையுமறியாமல்
கண்ணிலிருந்து
விழுந்த
கண்ணீரை
அடக்க
முடியாமல்,
துக்கம் தாளாமல்
தேம்பித்
தேம்பி அழ
ஆரம்பித்தார் ;
கதறி அழ
ஆரம்பித்தார் ;
தன்னுடைய
அழுகையை
கட்டுப்படுத்த
முடியாமல்
அழ ஆரம்பித்தார் ;
உடல் என்னும்
கூட்டை விட்டு
இதயம் வெடித்து
வெளியே
விழுந்து விடும்
என்று
எண்ணத்
தோன்றும்
வகையில்
ஆழ ஆரம்பித்தார் ;
ஆன்மீக
வரிசையில்
ஞானத்தைப்
பெற்று
சமாதியைச்
சுவைத்து
முக்தி என்ற
மோட்ச நிலையை
அடையக்
காத்துக்
கொண்டிருக்கும்
பட்டினத்தார்
தன்னை மறந்து
தாயின்
சடலத்தைப்
பார்த்து அழுதார்

“அப்பொழுது
தான் அவர்
தாய் சொன்னது
அவர்
நினைவுக்கு
வந்தது”

“உலகில் உள்ள
எந்த ஒரு
பாசத்தையும்
துறக்கலாம்  
ஆனால் தாய்
பாசத்தை மட்டும்
துறக்க முடியாது
என்ற வார்த்தை
அவர் காதில்
எதிரொலித்தது”

“தாயின்
வார்த்தையில் உள்ள
உண்மைகளை
உணர்ந்து கொண்டார்
பட்டினத்தார்”

“இந்த உலகத்தில்
உள்ள யாராலும்
தாய்ப்பாசத்தைத்
துறக்க முடியாது
என்ற உண்மையை
தன்னுடைய
அனுபவத்தின் மூலம்
உணர்ந்துகொண்டார்
பட்டினத்தார் “

“இப்போது
பட்டினத்தார்
கண்களிலிருந்து
கண்ணீர் வடிந்தது ;
அது தாய்ப்பாசத்தை
உணர்ந்ததால்
வந்த கண்ணீர் ;”

அன்னையர் தின
வாழ்த்துக்கள்-
10-05-2020

----------என்றும் அன்புடன்
---------K.பாலகங்காதரன்

--------10-05-2020
////////////////////////////////////////////






அன்னையர் தின வாழ்த்துக்கள்-பதிவு-1


       அன்னையர் தின வாழ்த்துக்கள்-
                  10-05-2020 !

                   பதிவு-1

அன்பிற்கினியவர்களே !

“பட்டினத்தார் ஞானம்
பெற  வேண்டி
அனைத்தையும்  
துறந்து வீட்டை
விட்டு வெளியே
செல்லும் போது
தன் தாயிடம்
இருந்து விடை
பெறுகிறார்.”

தாயார் :
“மகனே செல்ல
வேண்டும்
என்று முடிவு
எடுத்து விட்டாய் !
இனி உன்னை
யாராலும் தடுத்து
நிறுத்த முடியாது ;
நானும் உன்னை
தடுத்து நிறுத்த
விரும்பவில்லை ;
எனக்காக நீ ஒன்றே
ஒன்றை மட்டும்
செய்ய வேண்டும்”

பட்டினத்தார் :
“அனைத்தையும்
துறந்தவனிடம் என்ன
எதிர்பார்க்கிறீர்கள்
தாயே”

தாயார் :
“எனக்கு ஒரே
ஒரு ஆசை தான்
உள்ளது மகனே!
நான் செத்தபிறகு நீ
வந்து தான் எனக்கு
கொள்ளி போட
வேண்டும்
கொள்ளி போட
வருவாயா மகனே”

பட்டினத்தார் :
“தாயே ! நான்
அனைத்தையும்
துறந்து விட்டு
செல்கிறேன்
செல்வத்தை
மட்டுமல்ல
பாசத்தையும்
சேர்த்துத்தான்
துறந்து விட்டு
செல்கிறேன்
தாய் பாசம் மட்டும்
என்ன அதற்கு
விதிவிலக்கா
தாய் பாசத்தையும்
சேர்த்துத் தானே
நான் துறந்து விட்டு
செல்கிறேன் - அப்படி
இருக்கும் போது
நான் எப்படி
உங்களுக்கு கொள்ளி
வைக்க வரமுடியும்”

தாயார் :
“மகனே!
இந்த உலகில்
உள்ள எந்த ஒரு
பாசத்தையும்
துறந்து விடலாம்  
ஆனால் தாய்
பாசத்தை மட்டும்
இந்த உலகத்தில்
உள்ள யாராலும்
துறக்க முடியாது “

பட்டினத்தார் :
“நீங்கள் பேசும்
வார்த்தைகள்
சாதாரண மக்களுக்கு
வேண்டுமானாலும்
பொருந்தலாம் ;
அனைத்தையும்
துறந்து விட்டு
செல்லும் எனக்கு
எப்படி பொருந்தும் ; “

 “அனைத்தையும்
துறந்தவனுக்கு
தாய் என்ன ?
தந்தை என்ன ?
மகன் என்ன ?
எல்லாம் ஒன்று தான்”

தாயார் :
“இப்பொழுது நான்
 பேசும் வார்த்தைகள்
எதுவும் உன்
காதுகளுக்கு
எட்டப்போவதில்லை.
அனுபவம் என்ற
ஒன்றை நீ பெறும்
போது தான்
நான் பேசிய
வார்த்தைகளில்
உள்ள அர்த்தம்
எல்லாம் உனக்கு
புரியவரும்
அது வரை
நான் பேசிய
வார்த்தைகளில் உள்ள
அர்த்தம் எதுவும்
உனக்கு புரியாது
இருந்தாலும் நான்
சொல்வதைக் கேள்
இந்த நாணயத்தை
நீ வைத்துக் கொள்
தினமும் நீ அணியும்
ஆடையின் முனையில்
இதை முடி போட்டு
வைத்துக் கொள்.”

“நான் இறந்தவுடன்
அந்த முடி
அவிழ்ந்து நாணயம்
கீழே விழுந்து விடும்.
நான் இறந்து
விட்டேன் என்று
உனக்கு தெரிந்தவுடன்
 நீ எங்கிருந்தாலும்
நான் இருக்கும்
இடம் தேடி
வந்து நீ எனக்கு
கொள்ளி வைக்க
வேண்டும்.-  நீ
கொள்ளி வைத்தால்
தான் என் ஆன்மா
சாந்தி அடையும்.”

பட்டினத்தார் :
“நீங்கள்
சொன்னவைகளை
என்னால் செயல்
படுத்த முடியாது
செயல்படுத்துவது
என்பது
இயலாத காரியம்
இருந்தாலும்
உங்களுடைய
வார்த்தைக்கு
மதிப்பு கொடுத்து
உங்களுக்காக அந்த
நாணயத்தை என்
துண்டின் ஓரத்தில்
கட்டி வைத்துக்
கொள்கிறேன்

என்று அந்த
நாணயத்தை
வாங்கிக் கொண்டார்
அதை அவர்
உடுத்தியிருந்த
உடையின் ஓரத்தில்
முடிச்சு போட்டு
வைத்துக் கொண்டார்”

----------என்றும் அன்புடன்
---------K.பாலகங்காதரன்

--------10-05-2020
////////////////////////////////////////////