June 29, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-34



            நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-34
                     
மனுநீதிச் சோழன்
மணியோசையைக் கேட்டு
எழுந்து வந்து
யாருக்கு என்ன
குறை நேர்ந்தது
ஒரு நாளும்
அடிக்கப்படாமல் இருந்த
மணியை அடித்தது யார்
என்று கேட்டார்.

காவலர் அரசரை
வணங்கி
இந்தப் பசு தான் மணியை
அடித்தது என்றனர்,

அழுத படி
சோகமாய் நிற்கும்
பசுவைக் கண்ட
மனுநீதி சோழன்
மனம் வருந்தி
தன் அருகில் நிற்கும்
அமைச்சர்களை அழைத்து
இந்த பசு ஏன் அழுகின்றது
இந்த பசுவுக்கு தீங்கு
செய்தவன் யார்
என்று கேட்டார்

அமைச்சர்களில்
ஒருவர் அரசே
நமது இளவரசர்
தேரேறிச் சென்றபோது
இப்பசுவின் கன்று
யார் கண்ணிற்கும்
படாமல் துள்ளிக்
குதித்துச் சென்று
தேர்ச்சக்கரத்தில்
அகப்பட்டு இறந்து விட்டது
அளவற்ற துன்பம்
அடைந்த இப்பசு
வருத்தம் அடைந்து
இந்த ஆராய்ச்சி மணியை
அடித்தது என்றார்

மனுநீதிச் சோழன்
என் ஆட்சியில் எந்த
ஒரு சிறிய உயிருக்கும்
தீங்கு நேர்ந்ததில்லை
பசு இறந்த
தன்னுடைய கன்றிடம்
அளவற்ற அன்பு
வைத்து இருந்திருக்குமே
அளவுக்கு அதிகமாக
தன் கன்றிடம்
அன்பு வைத்து
இருந்ததற்கு
அடையாளமாகத் தான்
பசுவின் கண்களில்
இருந்து
கண்ணீர் வருகிறது
இதைப் பார்த்த
பிறகும் கூட
என் உயிர் பிரியாமல்
இருக்கிறதே
என்று வருந்தினார்

மன்னரின் நிலையைக்  
கண்ட அமைச்சர்கள்
கருணையின் வடிவமான
தாங்கள் எப்படி
இந்த நிகழ்வைக் கண்டு
வருந்துகிறீர்களோ
அதைப் போலத் தான்
கருணை வடிவமான
தங்கள் மகனும்
தெரியாமல் கன்றைக்
கொன்று விட்டு
வருந்தினார்
எனவே, இதற்கு
தாங்கள் பரிகாரம்
தேடுவதே முறை
என்றனர்

அமைச்சர்களே
நீதி தவறாத நான்
நீதி தவறலாமா
என் மகன் செய்தான்
என்பதற்காக
பிராயச்சித்தமும்
பிறர் செய்தால்
மரண தண்டனையும்
விதித்தால்
அது நீதியாகுமா
அறமாகுமா
கன்றை இழந்த
பசு எவ்வாறு
வருந்துகிறதோ அவ்வாறே
நானும் மகனை
இழந்து துன்பப்படுவதே
நியாயமாகும் என்றார்
மனுநீதிச் சோழன்

அரசரின் சொல்லைக்
கேட்ட அமைச்சர்கள்
மன்னரை
நோக்கி அரசே
பசுவதை புரிந்தவருக்கு
அறநூல்களில்
பிராயச்சித்தம்
வகுக்கப்பட்டுள்ளது
இறந்த பசுவின்
தோலைப்
போர்த்துக் கொண்டு
பசுமந்தையில் வசித்தும்,
கோநீரால் குளித்தும்
பசுக்கள் புல் மேயும்போது
வெயிலில் காய்ந்தும்,
பசு மழையில்
நனையும்போது
தானும் நனைந்தும்,
பன்னிரண்டு ஆண்டுகள்
இருக்க வேண்டும்
என்பது கழுவாயாகும்
ஆகவே இந்த
பிராயச்சித்தத்தை
செய்தால் போதும்
மகனை கொல்ல
வேண்டிய அவசியமில்லை
என்றனர் அமைச்சர்கள்

பசு வதைக்குக் கழுவாய்
அறநூலில் கூறியிருப்பதை
நான் அறிவேன்
என் மகன்
செய்த செயலுக்கு
நான் பிராயச்சித்தம்
செய்தால்
பசுவின் துயரம் நீங்குமா
தன்னுடைய கன்றை
இழந்து பசு
எவ்வாறு வருந்துகிறதோ
அவ்வாறே நானும்
அழ வேண்டும்
என்றார்.

அமைச்சர்கள்
பசு ஐந்தறிவு கொண்ட
விலங்கு ஐந்தறிவு
கொண்ட விலங்கை
கொன்றதற்கு
ஆறறிவு கொண்ட
மனிதனை கொல்வது
நியாயமாகாது என்றனர்

உயர்வு, தாழ்வு
என்பது பிறப்பையும்
உடம்பையும்
சார்ந்தது அன்று
உயர்வு தாழ்வு
என்பது அறிவைக்
குறித்ததே ஆகும்
யாராவது தமக்கு
தீங்கு செய்வாராயின்
இம்மணியை அடித்தால்
நான் நேரில் வந்து
நீதி வழங்குவேன்
என்று மணியை
அடித்து நீதியை
எதிர்பார்த்து காத்துக்
கொண்டிருக்கும்
இப்பசுவை ஐந்தறிவு
படைத்த விலங்கு
என்று கூறமுடியுமா
மனிதக் கொலைக்கு
ஏற்ற தண்டனையே
இதற்கு உரியதாகும்
எனவே, என் மகனைக்
கொல்வதே சிறந்த
நீதியாகும்
என்றார் மனு நீதிச்
சோழன்

----------இன்னும் வரும்
////////////////////////////////////////////