Showing posts with label Bhima. Show all posts
Showing posts with label Bhima. Show all posts

February 29, 2020

பரம்பொருள்-பதிவு-143


           பரம்பொருள்-பதிவு-143

உலூபி  :
“நான் இறுதியாக
ஒரே ஒரு
விஷயத்தைத் தான்
கேட்க விரும்புகிறேன் “

“அரவானைப்
பெற்றெடுத்த தாயாக
இருப்பதால்
கேட்க விரும்புகிறேன் ; “

“பிள்ளைப் பாசத்தால்
துடித்துக்
கொண்டிருக்கும்
ஒரு தாயாக
இருப்பதால்
கேட்க விரும்புகிறேன் ; “

“களப்பலியை
தடுக்க முடியாத
ஒரு தாயாக
இருப்பதால்
கேட்க விரும்புகிறேன் ; “

“என் மகன் விடும்
சுவாசக் காற்றில்
வாழ்ந்து
கொண்டிருக்கும்
ஒரு தாயாக
இருப்பதால்
கேட்க விரும்புகிறேன் ; “

“என்னுடைய
மகனுடைய கதி
என்னவாகும் என்ற
கேள்விக்கு விடை
தெரியாமல்
தவித்துக்
கொண்டிருக்கும்
ஒரு தாயாக
இருப்பதால்
கேட்க விரும்புகிறேன் ; ‘

“அரவானைக்
களப்பலியிலிருந்து
காப்பாற்றவே
முடியாதா ? “

சகாதேவன்  :
“முடியாது
முடியவே முடியாது “

“அரவானைக்
களப்பலியிலிருந்து
காப்பாற்றவே
முடியாது “

“அரவானுடைய
கர்மா
தன் வேலையை
செய்யத் தொடங்கி
விட்டது “

“அரவானுடைய
கர்மா
செயல்படுவதற்கு
ஏற்ற வகையில்
காலத்தின்
அனைத்து
கதவுகளும்
திறக்கப்பட்டு
விட்டது  

“இதனால்
கர்மா
எந்தவிதமான
தடங்கலும்
இல்லாமல்
இயங்குவதற்கு
ஆரம்பித்து
விட்டது “

“அரவானின்
கர்மா
கச்சிதமாக
தன்னுடைய
வேலையை
முடித்து விட்டால்
தவறான
விளைவுகள் ஏற்பட்டு
விடும் என்ற
காரணத்தினால் தான்

அரவானுடைய
கர்மா
நிகழ்த்தப் போகும்
செயல்களை மாற்றி
அமைக்க
பரந்தாமன் கிருஷ்ணன்
முயற்சி செய்து
கொண்டிருக்கிறார் “

உலூபி :
“அரவான்
களப்பலியாகப்
போவது யாருக்காக ? “

சகாதேவன் :
“ அது நீங்கள்
அளிக்கப் போகும்
ஒப்புதலைப்
பொறுத்துத்
தான் இருக்கிறது “

“நீங்கள்
அளிக்கப் போகும்
ஒப்புதலுக்காக
அனைவரும்
எப்படி காத்துக்
கொண்டிருக்கிறார்களோ
அப்படியே
நானும் காத்துக்
கொண்டிருக்கிறேன் “

“பாண்டவர்கள்
சார்பாக
அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
ஒப்புதல் அளிப்பீர்களா “

உலூபி :
(உலூபி எதுவும்
சொல்லாமல்
அமைதியாக இருந்தாள்)

சகாதேவன் :
(சகாதேவன் உலூபியையே
பார்த்துக் கொண்டிருந்தான்)

(சோதிட சாஸ்திரம்
மூலம் அரவானைப்
பற்றி ஓரளவு
விவரங்களைத்
தெரிந்து கொண்ட
உலூபி
தன்னுடைய கணவன்
அர்ஜுனனைப் பார்த்தாள்.

உலூபியின்
பார்வையை
நேருக்கு நேர்
சந்திக்க முடியாமல்
தன்னுடைய கண்களை
வேறு பக்கம்
திருப்பிக் கொண்டான்
அர்ஜுனன்

அர்ஜுனனின்
முன்னால் போய்
நின்றாள் உலூபி)


----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 29-02-2020
//////////////////////////////////////////


February 25, 2020

பரம்பொருள்-பதிவு-139


           பரம்பொருள்-பதிவு-139

சகாதேவன் :
" களப்பலியாகக்
கொடுப்பதற்கு
தகுதி உடையவன்
அரவான்
என்பதையும்  ;
களப்பலி
கொடுப்பதற்கு
உகந்த நாள்
வருகின்ற
அமாவாசை
என்பதையும் ;
குறித்துக்
கொடுத்தேன் ; "

"இதில் தவறு
எதுவும்
இருப்பதாக
எனக்குத்
தெரியவில்லையே ! "

"நான் சொன்னதில்
அரவானைப்
பற்றிய
தனிப்பட்ட
விஷயங்கள்
எதுவும்
இல்லையே ! "

"பொதுவான
விஷயங்கள்
தானே
இருக்கிறது ! "

"சோதிட
சாஸ்திரத்தை
மீறி எந்த ஒரு
சொல்லையும்  
நான் சொல்லவே
இல்லையே  ! "

உலூபி :
"அரவானைப் பற்றி
நீங்கள் சொன்னது
இன்னொருவருடைய
தனிப்பட்ட
விஷயம்
இல்லையா ? "

சகாதேவன் :
"அரவான்
எதிர்காலத்தில்
எப்படி இருப்பான்  ?
அரவானுடைய
எதிர்கால
வாழ்க்கை
எப்படி இருக்கும் ?
என்ற கேள்வி
எழுப்பப்பட்டு
அதற்கு நான்
பதில் சொல்லி
இருந்தால் - அது
அரவானுடைய
தனிப்பட்ட
விஷயங்களை
சொன்னதாக
இருக்கும் "

"அப்போது தான்
நான் சோதிட
சாஸ்திரத்தை
மீறியவனாவேன் "

"ஆனால் நான்
களப்பலி
கொடுப்பதற்கு
தகுந்த ஆள்
அரவான்
என்பதையும்  ;
வருகின்ற
அமாவாசை
தினத்தன்று
களப்பலி
கொடுப்பதற்கு
உகந்த நாள்
என்பதையும்  ;
குறித்துக்
கொடுத்தேன் ;"

"இது எப்படி
அரவானுடைய
தனிப்பட்ட
விஷயங்களை
நான் சொன்னதாக
எடுத்துக் கொள்ள
முடியும் "

"அரவானைப்
பற்றிய
பொதுவான
விஷயங்களைத்
தானே
சொல்லியிருக்கிறேன் "

"இது எப்படி
தவறாகும்  "

"நான் தவறு
எதுவும்
செய்யவுமில்லை "

"சோதிட
சாஸ்திரத்தை
மீறவும் இல்லை "

"எந்த ரகசியத்தை
சொல்ல வேண்டும்
எந்த ரகசியத்தை
சொல்லக்கூடாது
என்று
சோதிட சாஸ்திரம்
வகுத்து வைத்த
விதியின் படி
தான் சொன்னேன் ;
சோதிட சாஸ்திர
விதிகளுக்குக்
கட்டுப்பட்டுத்தான்
சொன்னேன் ; "

"சோதிட
சாஸ்திரத்தை
மீறி நான்
எந்த ஒரு
சொல்லையும்
சொல்லவேயில்லை  !

உலூபி :
"ஆனால்
உங்களுடைய
செயலால்
எத்தகைய
விளைவுகள்
ஏற்பட்டிருக்கிறது
என்பதைப்
பார்த்தீர்களா ? "

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 25-02-2020
//////////////////////////////////////////

February 24, 2020

பரம்பொருள்-பதிவு-138


            பரம்பொருள்-பதிவு-138

உலூபி :
“களப்பலியை
ஆரம்பித்து
வைத்தது
நீங்கள் தானே ? “

சகாதேவன் :
“ நான் இல்லை ”

உலூபி :
“வேறு யார் ? ”

சகாதேவன் :
“அண்ணன்
துரியோதனன்”

உலூபி :
“அவருக்கு
வழி காட்டியது
நீங்கள் தானே ? “

சகாதேவன் :
“ நான் யாருக்கும்
வழி காட்டவில்லை “

உலூபி :
“ வழிகாட்டாமல்
என்ன செய்தீர்கள் ?”

சகாதேவன் :
“அவர் கேட்ட
கேள்விகளுக்கு
பதில் சொன்னேன்”

உலூபி :
“சோதிடத்தை
பயன்படுத்தி
அல்லவா பதில்
சொல்லி
இருக்கிறீர்கள் ? ”

சகாதேவன் :
“ஆமாம்! அவர்
கேட்ட
கேள்விகள்
அப்படி”

உலூபி :
“சோதிட
சாஸ்திரப்படி
ஒருவருடைய
விவரங்களை
அவருடைய
அனுமதி
இல்லாமல்
இன்னொருவருக்கு
சொல்லக்கூடாது
என்பது
உங்களுக்கு
தெரியுமில்லையா?”

சகாதேவன் :
“தெரியும்”

உலூபி : 
அப்படி
தெரிந்திருந்தும்
நீங்கள் எப்படி
அரவானைப்
பற்றிய
விஷயங்களை
வேறொருவரிடம்
சொன்னீர்கள் ? “

சகாதேவன் :
“சோதிட
சாஸ்திரத்தின்படி
என்ன சொல்ல
வேண்டுமோ
அதைத் தான்
சொன்னேன்”

உலூபி :
“ரகசியங்களை
வெளியிடக் கூடாது
என்று சோதிட
சாஸ்திர விதி
சொல்கிறதே!”

சகாதேவன் :
“சோதிட சாஸ்திரம்
சொல்லும்
விதியை மீறி
நான் எந்த ஒரு
ரகசியத்தையும்
வெளியிடவேயில்லையே ? “

உலூபி :
“களப்பலியாகக்
கொடுப்பதற்கு
அரவானையும்,
களப்பலி
கொடுப்பதற்குரிய
நாளையும்
குறித்துக்
கொடுத்தது
நீங்கள் தானே ?
இது சோதிட
சாஸ்திரத்தை
மீறிய செயல்
இல்லையா ?”

சகாதேவன் :
“மீறிய செயல்
இல்லை”

உலூபி :
“அது எப்படி
மீறிய செயல்
இல்லாமல் போகும்”

சகாதேவன் :
“ஆமாம் ! மீறிய
செயல்
இல்லை தான் “

உலூபி :
“ஒரு நபரின்
தனிப்பட்ட
விஷயங்களை
சொல்வது
சோதிட
சாஸ்திரத்தை
மீறிய செயல்
இல்லையா ?
அரவானைப்
பற்றிச்
சொன்னது
தவறில்லையா ? “

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 24-02-2020
//////////////////////////////////////////