January 01, 2019

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்-01-01-2019


           ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் - 01-01-2019 !!!

அன்பிற்கினியவர்களே !

""தாய்க்குப்
பின் தாரம்"""
              
என்ற பழமொழி
எவ்வளவு உயர்ந்த
அர்த்தங்களை
தன்னுள் கொண்டுள்ளது
என்பது எத்தனை
பேருக்குத் தெரியும்

கடவுளின் குணங்களாக
முக்கியமாக இரண்டைக்
குறிப்பிடலாம்

 ஒன்று  : அன்பு
இரண்டு : கருணை

மாமரத்தில் உள்ள
மாங்காயை மாமரம்
தன்னுடைய காம்பின்
மூலம் கீழே விழாமல்
தாங்கி பிடித்துக்
கொண்டு இருக்கிறது.
இதற்குப் பெயர்
தான் அன்பு ;

மாங்காய்க்கு
தேவையானதை
மாமரம் அந்த
காம்பு வழியாக
அளித்துக் கொண்டு
இருக்கிறது
இதற்குப் பெயர்
தான் கருணை ;

மனிதரில் இந்த
இரண்டு உயர்ந்த
குணங்களும் உலகில்
இரண்டு நபர்களுக்கு
மட்டுமே அதிகமான
அளவில் உள்ளது.

   ஒன்று  : தாய்
  இரண்டு  : தாரம்

ஒரு தாய்
தான் பெற்றெடுத்த
பிள்ளையை
பாதுகாப்பாக வைத்துக்
கொண்டு பராமரித்துக்
கொண்டு வருகிறாள்
இதற்குப் பெயர்
தான் அன்பு ;

அந்த பிள்ளை
தன்னுடைய அன்றாடக்
கடமைகளைத்
தானே செய்யத்
துவங்குவதற்கு முன்பும் ;
தன்னுடைய கடமைகளைத்
தானே செய்யத்
துவங்கிய பின்பும் ;
அந்த பிள்ளைக்கு
உடல் நிலை
சரியில்லாத போது
தன்னுடைய
அத்தியாவசிய
அன்றாடக் கடமைகளைத்
தானே செய்ய
முடியாமல் போகும் போதும் ;
தாயானவள் தன்னுடைய
பிள்ளைக்குத் தேவையான
அத்தனை செயல்களையும்
செய்கிறாள். இதற்குப்
பெயர் தான் கருணை ;

அந்த ஆண் குழந்தை
பெரியவனாக வளர்ந்து
திருமணம் நடந்து
முடிந்து கணவன்,
மனைவி என்ற
உறவிற்குள்
நுழைந்த பிறகு
மனைவியானவள்
கணவனை மிகுந்த
அன்புடன் பார்த்துக்
கொள்கிறாள்
இதற்குப் பெயர்
தான் அன்பு ;

கணவனுக்கு உடம்பு
சரியில்லை என்ற
நிலை வரும்போது ;
தன்னுடைய அன்றாட
அத்தியாவசிய
கடமைகளைத்
தன்னால் செய்ய
முடியாத நிலை
கணவருக்கு வரும்போது ;
மனைவியானவள்
கணவனுக்கு செய்ய
வேண்டிய அன்றாட
அத்தியாவசியமானக்
கடமைகளைச் செய்கிறாள் ;
இதற்குப் பெயர்
தான் கருணை ;

ஒரு ஆண் பிள்ளையாக
இருக்கும் போதும் ;
உடல் நிலை குன்றி
இருக்கும் போதும் ;
தன் அன்றாடக்
கடமைகளை தானே
செய்ய முடியாமல்
இருக்கும் போதும் ;
தாய் எப்படி தன்னுடைய
பிள்ளைக்குச் செய்ய
வேண்டிய அன்றாட
அத்தியாவசியக்
கடமைகளைச் செய்ய
அன்பையும் ;
கருணையையும் ;
வாரி வழங்குகிறாளோ !

அவ்வாறே,
அந்த ஆண் பிள்ளை
திருமணம் முடிந்து
கணவன், மனைவி
என்ற பந்தத்திற்குள்
நுழைந்த பிறகு,
உடல் நிலை
குன்றிய நிலைக்கு
ஆளாகும் போது ;
தன்னுடைய அன்றாட
அத்தியாவசியக்
கடமைகளைத் தானே
செய்ய முடியாமல்
போகும் போது ;
மனைவி தன்னுடைய
கணவனுக்குத் தேவையான
கடமைகளைச் செய்ய
அன்பையும் ;
கருணையையும் ;
வாரி வழங்குகின்றாள்

இத்தகைய
காரணங்களினால்
தான் நாம்
“ தாய்க்கு பின் தாரம் “
என்கிறோம்

இது வரை
நாம் தாயையும்,
தாரத்தையும் மதித்துப்
போற்றவில்லை என்றால்
இந்த ஆங்கிலப்
புத்தாண்டு
01-01-2019 ஆம் ஆண்டில்
இருந்தாவது அவர்களை
மதித்துப் போற்றுவோம்

ஆங்கில புத்தாண்டு
வாழ்த்துக்கள் !!
01-01-2019

-------என்றும் அன்புடன்
-------K.பாலகங்காதரன்
-------01-01-2019
/////////////////////////////////////////////////