July 26, 2022

ஜபம்-பதிவு-817 (சாவேயில்லாத சிகண்டி-151)

 ஜபம்-பதிவு-817

(சாவேயில்லாத

சிகண்டி-151)

 

பிரச்சினையை

எப்படி தீர்ப்பது

என்று முயற்சி

செய்யாதவர்களாலும்

 

பிரச்சினையைக்

கண்டு பயந்து

ஓடி ஒளிந்து

கொள்பவர்களாலும்

 

பிரச்சினை முடிந்தால்

தான் நான் எந்த

ஒரு வேலையையும்

செய்வேன் என்று

சொல்லிக்

கொண்டிருப்பவர்களாலும்

 

பிரச்சினையைத்

தீர்க்கத் தெரியாதவர்களிடம்

தன்னுடைய

பிரச்சினையை சொல்லிக்

கொண்டிருப்பவர்களாலும்,

 

தன்னுடைய

பிரச்சினைச் சொல்லி

அனுதாபம் தேட

நினைப்பவர்களாலும்

 

தனக்கு மட்டும் தான்

பிரச்சினை

மற்றவர்களுக்கு

பிரச்சினை இல்லை

என்று நினைத்துக்

கொண்டிருப்பவர்களாலும்

 

வாழ்க்கையில் எந்த

ஒரு சாதனையையும்

படைக்கவும் முடியாது

வாழ்க்கையை

வாழ்க்கையாகவும்

வாழவும் முடியாது

 

பிரச்சினையில்

மூழ்கி இருப்பவர்கள்

வாழ்க்கையில்

எதிர்ப்படும்

இன்பங்களை

தவற விட்டு

விடுவார்கள்

 

வாழ்க்கையை

மாற்றுவதற்காக

வாழ்க்கையில்

எதிர்ப்படும்

வாய்ப்புகளையும்

பயன்படுத்தத்

தவறி விடுவார்கள்

 

இதனால்

வாழ வேண்டிய

வாழ்க்கையைத்

தொலைத்து

விடுவார்கள்

 

எனக்கு மனைவியால்

வந்த பிரச்சினையை

எப்படி எதிர்கொள்வது

என்பதை நான்

பார்த்துக் கொள்கிறேன்

எப்படி தீர்ப்பது

என்பதை நான்

யோசித்துக் கொள்கிறேன்

அந்த பிரச்சினை

என்னைத்

தாக்கும் போது

எப்படி எதிர்கொள்வது

என்பதை நானே

தீர்மானித்துக்

கொள்கிறேன்

 

துருபதன் :

நம்முடன் நட்பாக

இருந்தவர்கள்

நமக்கு பின்னால்

இருந்து கொண்டு

 

நம்மை கேவலமாக

பேசிக் கொண்டு

இருக்கிறார்கள்

 

குறை சொல்லிக்

கொண்டு இருக்கிறார்கள்

 

நமக்கு எதிராக

இழிவான செயல்களைச்

செய்து

கொண்டிருக்கிறார்கள்

 

இதற்கு நாம்

பதில் சொல்லியே

ஆக வேண்டும்

 

சிகண்டி :

நம்முடன் நேருக்கு

நேராக நின்று பேச

தைரியம் இல்லாதவர்கள்

 

நம்முடன் சரிசமமாக

நிற்பதற்கு பயப்படுபவர்கள்

 

நம்முடைய திறமையுடன்

போட்டி போட

முடியாதவர்கள்

 

நம்முடைய

வளர்ச்சியைக் கண்டு

பொறாமைப்படுபவர்கள்

 

தனித்தன்மையுடன்

தனித்து நின்று

வாழ்க்கையை

வாழத் தெரியாமல்

தன்னுடைய

வாழ்க்கையைக்

காப்பாற்றிக் கொள்ள

வேண்டும் என்பதற்காக

பிறருடைய காலைப்

பிடித்து வாழ்பவர்கள்

போட்டுக் கொடுத்து

வாழ்பவர்கள்

காட்டிக் கொடுத்து

வாழ்பவர்கள்

கூட்டிக் கொடுத்து

வாழ்பவர்கள் தான்

நம் பின்னால்

இருந்து பேசுவார்கள்

குறை சொல்வார்கள்

நமக்கு எதிரான

செயல்களைச் செய்து

கொண்டிருப்பார்கள்

 

நம்மைக் குறை

சொல்பவர்களுக்கும்

நம் பின்னால்

இருந்து கொண்டு

பேசிக் கொண்டு

இருப்பவர்களுக்கும்

நமக்கு எதிராக

இழிவான

செயல்களைச் செய்து

கொண்டிருப்பவர்களுக்கும்

நாம் பதில் சொல்லிக்

கொண்டே இருந்தால்

நம் வாழ்நாள்

முழுவதும் பதில்

சொல்லிக் கொண்டே

தான் இருக்க வேண்டும்

 

நம்முடைய கடமைகளை

நாம் செய்ய முடியாது

நம்முடைய வேலைகளை

நாம் முடிக்க முடியாது

நாம் எதற்காக

பிறப்பெடுத்தோமோ

அதைச் செய்யவே

முடியாது

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----26-07-2022

-----செவ்வாய்க் கிழமை

 

//////////////////////////////////////////////

No comments:

Post a Comment