August 04, 2024

ஜபம்-பதிவு-1000 மரணமற்ற அஸ்வத்தாமன்-132 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1000

மரணமற்ற அஸ்வத்தாமன்-132

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

நீ என்னைப் பற்றித் தெரிந்து கொள்ளவில்லை

என்னுடைய திறமையைப் பற்றி நீ தெரிந்து கொள்ளவில்லை

நான் சிரஞ்சீவி

மரணமற்றவன் - இந்த

அஸ்வத்தாமன் மரணமற்றவன்

மரணமற்றவன் அஸ்வத்தாமன்

 

இந்த உலகத்தின் கடைசி உயிர் இறந்த பின் தான் இறப்பேன்

என்னுடைய இறப்பு இந்த உலகத்தின் இறப்பு

என் மேல் நீ சந்தேகம் கொள்ளவில்லை எனில்

என்னைப் பற்றி நீ தெரிந்து கொண்டிருப்பாய்

உன்னுடைய சந்தேகம் என்னைப் பற்றித்

தெரிந்து கொள்ள முடியாமல் உன்னைச் செய்து விட்டது

என்னைப் பற்றிய ரகசியங்களை

உன்னைத் தெரிந்து கொள்ள விடாமல் செய்து விட்டது

அதுவே உன்னுடைய அழிவிற்கும் காரணமாகி விட்டது

 

என்னை மட்டும் நீ கௌரவர்களின் படைத் தலைவனாக ஆக்கி இருந்தால்

நீ தான் வெற்றி பெற்று இருப்பாய்

போர் எப்போதோ முடிந்து போய் இருக்கும்

உனக்கும் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது

 

எனக்கு இறப்பு கிடையாது

என்னை யாராலும் கொல்ல முடியாது

நான் இறந்தால் இந்த உலகம் அழிந்து விடும்

என்ற காரணத்தினால் என்னை கொல்ல மாட்டார்கள்

ஆனால் நான் அனைவரையும் கொல்லலாம்

இந்த விஷயம் தெரிந்த காரணத்தினால் தான்

கிருஷ்ணன் என் மேல் சந்தேகம் வரும் படி செய்தான்

 

நீ என்னைப் பற்றி யோசிக்காமல்

என் நட்பைப் பற்றி யோசிக்காமல்

என் மேல் சந்தேகம் கொண்ட காரணத்தினால்

அடிபட்ட நிலையில் இருக்கிறாய்

 

கர்ணனை விட நான் என்ன விதத்தில் குறைந்து விட்டேன்

 

கர்ணன் உன் மேல் கொண்ட அன்பை

உண்மையான அன்பு என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்

நீயும் கர்ணனும் கொண்ட அன்பை

இந்த உலகம் உண்மையான அன்பு என்று நினைத்துக் கொண்டிருக்கிறது

நட்புக்கு எடுத்துக் காட்டாக உங்கள் நட்பை சொல்லிக் கொண்டிருக்கிறது

 

இந்த உலகம் போலியானவர்களைத் தான்

உண்மையானவர்கள் என்று நம்பும்

உண்மையானவர்களை நம்பாது

 

போலியானவர்கள் பின் தான் செல்லும்

உண்மையானவர்கள் பின் செல்லாது

 

போலியானவர்கள் இந்த உலத்திற்கு வழிகாட்டுவதினால் தான்

உண்மையானவர்கள் மறைக்கப்பட்டு விடுகிறார்கள்

ஒதுக்கப்பட்டு விடுகிறார்கள்

 

உண்மையானவர்கள் எத்தகைய தன்மையைப் பெற்றவர்கள் என்பதை

இந்த உலகம் அறிந்து கொள்ள முடியாமல் போய் விடுகிறது

 

உண்மையானவர்கள் ஒதுக்கப்படுகின்ற காரணத்தினால் தான்

உண்மையானவர்கள் புறக்கணிக்கப்படுகின்ற காரணத்தினால் தான்

போலியானவர்கள் தலை விரித்து ஆடுகின்றனர்

 

நீ கர்ணன் மேல் வைத்த நட்பு உண்மையாக இருக்கலாம்

ஆனால் கர்ணன் உன் மேல் வைத்த நட்பு

உண்மையான நட்பு கிடையாது

போலியான நட்பு

 

கர்ணனின் மானத்தை நீ காப்பாற்றிய போது

உனக்காக உயிரையே கொடுப்பேன் என்று கர்ணன் கூறினான்

ஆனால் அதை அவன் செய்யவில்லை

உனக்காக அவன் உயிரைக் கொடுக்கவில்லை

அவன் உயிர் எடுக்கப்பட்டது

அவன் உயிர் எடுக்கப்பட்டு விட்டதற்கு காரணம்

சதிவேலைகள் பாசம் என்று

பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும்

உண்மையான காரணம்

அவன் உன் மேல் உண்மையான

நட்பு கொள்ளாமல் இருந்தது தான்

 

கர்ணன் உன் மேல் உண்மையான

நட்பு கொண்டிருந்திருப்பானேயானால்

உனக்காக உயிரைக் கொடுத்து இருப்பான்

ஆனால் அவன் உயிரைக் கொடுக்கவில்லை

 

அவன் உன் மேல் உண்மையான நட்பு கொள்ளவில்லை

அதனால் அவன் உயிர் எடுக்கப்பட்டு விட்டது

 

அவன் ஒரு நம்பிக்கை துரோகி

நண்பன் என்று சொல்வதற்கே தகுதியில்லாதவன்

 

கர்ணன் உன் மேல் உண்மையான நட்பு கொண்டு இருப்பான் என்றால்

உனக்கா உயிரையே கொடுப்பேன் என்று சொன்னது உண்மை என்றால்

உனக்காக மட்டுமே வாழ்கிறேன் என்று சொன்னது உண்மை என்றால்

கர்ணன் என்ன செய்து இருக்க வேண்டும்

 

இந்திரன் கவச குண்டலங்களைக் கேட்டு வந்த போது

அதை இந்திரனுக்குக் கொடுத்திருக்கக் கூடாது

 

அவனுடைய தாய் குந்தி தேவி கேட்ட போது

அர்ஜுனனை மட்டும் தான்கொல்வேன்

மற்ற பாண்டவர்களைக் கொல்ல மாட்டேன்

என்றும்

அர்ஜுனன் மேல் ஒரு முறை தான் நாகாஸ்திரத்தை

பிரயோகம் செய்வேன்

என்று சத்தியம் செய்து தந்து இருக்கக் கூடாது

 

இவ்வளவையும் செய்து விட்டுத் தான்

உனக்கு துரோகம் செய்து விட்டுத் தான்

நட்புக்கு களங்கம் விளைவித்து விட்டுத் தான்

போருக்கு வந்தான்

 

செத்த பாம்பாகத் தான் கர்ணன் போருக்கு வந்தான்

செத்த பாம்பு போருக்கு வந்து என்ன பயன்

ஒரு பயனும் இல்லை.

செத்த பாம்பாக வந்தவனைத் தான் அர்ஜுனன் கொன்றான்

செத்த பாம்பைத் தான் கொன்றான்

அதுவும் நேருக்கு நேராக நின்று கொல்லவில்லை

கர்ணன் ஆயுதம் இல்லாத போது தான் அவனைக் கொன்றான்

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----04-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

No comments:

Post a Comment