August 04, 2024

ஜபம்-பதிவு-1003 மரணமற்ற அஸ்வத்தாமன்-135 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1003

மரணமற்ற அஸ்வத்தாமன்-135

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஆனால், அடங்கி இருப்பவனை

அடிமையாக இருப்பவனை

சுயமாக சிந்ததிக்க இயலாதவனை

எதையும் சிந்திக்காமல் தலையாட்டிக் கொண்டு இருப்பவனை

சொல்லும் அனைத்தையும் கேள்வி கேட்காமல்

ஏற்றுக் கொண்டு இருப்பவனை

இந்த உலகம் நல்லவன் என்கிறது

 

இந்த உலகம் நல்லவன் கெட்டவன் என்று

பார்க்கும் முறையே தவறானது

அதனால் தான் இந்த உலகத்தில் போலிகளின்

எண்ணிக்கை அதிகமாகி விட்டது

பொய்யர்கள் அதிகமாகி விட்டனர்

சுயநலமிகள் அதிகமாகி விட்டனர்

தான் வாழ்வதற்காகப் பிறரை அழிக்கவும்

தயாராக இருப்பவர்களும் உருவாகி விட்டனர்

பிறரை அழித்தாவது தான் வாழ வேண்டும்

என் நிலைக்கு வந்து விட்டனர்

அப்படி வந்து விட்ட பிறகு

துணிந்து தவறு செய்ய வந்து விட்ட பிறகு

செய்யும் செயல் பாவம் என்ற தெரிந்தும்

பாவம் செய்ய வந்து விட்ட பிறகு

உண்மை எது பொய் எது

என்று பேதம் பிரித்துப் பார்க்கத் தெரியாத

நிலை வந்து விட்ட பிறகு

போலியானவர்கள் சொல்பவவைகளை தான்

உண்மை என்று நம்பும் நிலைக்கு

இந்த உலகம் தள்ளப்பட்டுவிட்டது

 

எது நியாயம் என்று தெரியாதவர்களிடம்

நியாயத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்

நியாயத்தை எதிர்பார்க்கவே முடியாது

 

பீஷ்மர் துரோணர் கர்ணன் சல்லியன் போன்ற மாவீர்கள்

வீழ்த்தப்பட்டது அதர்மத்தின் பக்கம் சேர்ந்த காரணத்தினால் இல்லை

இவர்கள் நால்வரும் அதர்மத்தின் பக்கம் சேர்ந்த காரணத்தினால் வீழ்த்தப்படவில்லை

 

துரியோதனன் பக்கம் சேர்ந்த காரணத்தினால் வீழ்த்தப்படவில்லை

 

பீஷ்மர் துரோணர் கர்ணன் சல்லியன் போன்ற மாவீர்கள் இருந்தும் துரியோதனன் தோற்றதற்குக் காரணம் துரியோதனன் பக்கம் அதர்மம் இருந்த காரணத்தினால் தான் என்று சொல்வது தவறான விஷயம்

 

பீஷ்மர் பாண்டவர்கள் மேல் அதிக அளவு அன்பு வைத்திருந்தார்

பாண்டவர்கள் ஐவரையும் கொல்ல மாட்டேன் என்று

சொல்லி விட்டுத் தான் போர் செய்ய வந்தார்

பாண்டவப் படையை மட்டும் கொல்வேன்

என்று போர் செய்ய வந்தார்

பாண்டவர்கள் மேல் அன்பு வைத்துக் கொண்டு

பீஷ்மர் கௌரவர்கள் படையில் போர் செய்தார்

என்பதை உணர்ந்து கொண்ட கிருஷ்ணன்

பீஷ்மரின் பலவீனத்தை

பீஷ்மரின் வாயாலேயே கேட்டான்

என் எதிரில் ஆண் இருந்தால் மட்டுமே போர் செய்வேன்

பெண் வந்தாலும் ஆண் பெண் சேர்ந்த நிலையில்

இருப்பவர்கள் வந்தாலும்

போர் செய்ய மாட்டேன் என்று சொன்ன காரணத்தினால்

பீஷ்மர் சிகண்டியால் கொல்லப்பட்டார்

 

பீஷ்மராவது பாண்டவர்கள் ஐயவரையும்

கொல்ல மாட்டேன் என்று நேரடியாக சொல்லி விட்டார்

ஆனால் துரோணர்

பாண்டவர்கள் ஐயவரையும் கொல்வேன் என்றோ

கொல்ல மாட்டேன் என்றோ வாக்களிக்க மாட்டேன் என்று

சாதுர்யமாகச் சொல்லி தப்பித்து விட்டார்.

பாண்டவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டார்

பாண்டவர்கள் மேல் அன்பு வைத்துக் கொண்டு

துரோணர் கௌரவர்கள் படையில் போர் செய்தார்

தான் ஆயுதங்களைக் கீழே போட்டால்

தன்னைக் கொல்ல முடியும் என்ற விஷயத்தை

தன்னுடைய எதிரிக்கே சொல்லி விட்டார் துரோணர்

துரோணரின் ஆயுதங்களைக் கீழே போட

சதிவேலை செய்தான் கிருஷ்ணன்

அந்தச் சதிவேலையில் மாட்டிக் கொண்ட

துரோணர் ஆயுதங்களைக் கீழே போட்டார்

ஆயுதம் எதுவும் இன்றி தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த

துரோணரை திருஷ்டத்யும்னன் தலையை வெட்டிக் கொன்றான்

 

கர்ணன் கவச குண்டலங்களை இந்திரனுக்கு கொடுத்து விட்டான்

அர்ஜுனனைத் தவிர மற்ற பாண்டவர்களைக்

கொல்ல மாட்டேன் என்று குந்தி தேவிக்கு

வாக்குறுதி கொடுத்து விட்டான்

நாகாஸ்திரத்தை ஒரு தடவைக்கு மேல்

மற்றொரு முறை விட மாட்டேன் என்றான்

கர்ணன் ஆயுதங்களைக் கீழே போட்ட சமயத்தில்

ஆயுதங்கள் இல்லாத நிலையில்

கர்ணனை அர்ஜுனன் கொன்றான்

 

நகுலன் சகாதேவனுக்கு சல்லியன் தாய் மாமன்

நகுலனும் சகாதேவனும் அவனுக்கு மருமகன்கள்

சல்லியனை தர்மன் பின்னால் இருந்து ஈட்டியால் கொன்றான்

 

இவர்கள் நால்வரும்

தர்மத்திற்கு எதிராக இருந்ததால் இவர்கள் கொல்லப்படவில்லை

அதர்மத்தின் பக்கம் இருந்ததால் இவர்கள் கொல்லப்படவில்லை

துரியோதனன் பக்கம் இருந்ததால் இவர்கள் கொல்லப்படவில்லை

துரியோதனன் பக்கம் அதர்மம் இருந்ததால் இவர்கள் கொல்லப்படவில்லை

பாண்டவர்கள் பக்கம் தர்மம் இருந்ததால் இவர்கள் கொல்லப்படவில்லை

பாண்டவர்கள் பக்கம் கிருஷ்ணன் இருந்ததால் இவர்கள் கொல்லப்படவில்லை

பாண்டவர்கள் பக்கம் கடவுள் இருந்ததால் இவர்கள் கொல்லப்படவில்லை

கிருஷ்ணனின் சூழ்ச்சியால் தான்

இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்

இவர்கள் அனைவரும் சூழ்ச்சியால் தான் கொல்லப்பட்டார்கள்

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----04-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

 

 

 

 

No comments:

Post a Comment