August 04, 2024

ஜபம்-பதிவு-1002 மரணமற்ற அஸ்வத்தாமன்-134 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1002

மரணமற்ற அஸ்வத்தாமன்-134

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

அஸ்வத்தாமன் : விரைவாக வருகிறேன். பாண்டவர்கள் இறந்து விட்டார்கள் என்ற செய்தியுடன் வருகிறேன்.

 

வாருங்கள் செல்வோம்

 

கிருபர் : எங்கே செல்கிறோம்

 

அஸ்வத்தாமன் : பாண்டவர்கள் மேல் போர் தொடுப்பதற்கு

 

கிருபர் : இந்த இரவிலா?

 

அஸ்வத்தாமன் : ஆமாம், இந்த இரவில் தான். போர் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டால் பகல் என்றும் பார்க்கக் கூடாது, இரவு என்றும் பார்க்கக் கூடாது போர் செய்ய வேண்டும்

 

கிருபர் : இரவில் போர் புரிவது போர் முறை கிடையாது

 

அஸ்வத்தாமன் : இரவில் போர் புரிவது போர் முறை கிடையாது என்றால் இரவில் போர் புரியும் முறையை புதியதாக உருவாக்குவோம், அதை இந்த உலகத்திற்கு அளிப்போம். அதை பாண்டவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவோம்.

 

வாருங்கள் முதலில் பாண்டவர்கள் இருக்கும் பாசறைக்குச் செல்வோம். பிறகு அனைத்தையும் யோசிப்போம்.

 

அஸ்வத்தாமன், கிருபர், கிருதவர்மன் மூவரும் தென்திசையை நோக்கிச் சென்றனர். பாண்டவர்களுடைய பாசறைக்கு அருகில் வந்தார்கள். களைப்பால் கிருபரும், கிருதவர்மனும் உறங்கி விட்டார்கள். அஸ்வத்தாமன் உறங்கவில்லை.

 

அவர்கள் அமர்ந்திருந்த ஆலமரத்தில் உறங்குகின்ற பல காக்கைகளை ஒரு கோட்டான் வந்து கொன்று குவித்ததை அஸ்வத்தாமன் பார்த்தான். அதை தனக்கு வழங்கப்பட்ட உபதேசமாக அஸ்வத்தாமன் எடுத்துக் கொண்டான். அஸ்வத்தாமன் உறங்கிக் கொண்டிருந்த கிருபரையும், கிருதவர்மனையும் எழுப்பினான்

 

அஸ்வத்தாமன் : இந்தக் கோட்டான் உறங்கிக் கொண்டிருக்கின்ற காக்கைகளை கொன்றது போல் உறங்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களையும், பாண்டவர் படைகளையும், பாஞ்சாலர்களையும் கொல்ல வேண்டும்.

 

கிருபர் : தவறான முறையைப் பின்பற்றக் கூடாது

அஸ்வத்தாமன் : பாண்டவர்கள் தவறான முறையைப் பின்பற்றவில்லையா?

 

கிருபர் : ஒருவர் தவறான முறையைப் பின்பற்றுகின்றார் என்பதற்காக நாமும் தவறான முறையைப் பின்பற்றக் கூடாது

 

பாண்டவர்கள் தவறான முறையைப் பின்பற்றினார்கள் என்பதற்காக நாமும் தவறான முறையைப் பின்பற்றினால் அவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது

 

பீஷ்மர் துரோணர் கர்ணன் சல்லியன் போன்ற மாபெரும் வீரர்கள் இருந்தும் கௌரவப் படைகள் தோற்றதற்குக் காரணம் அவர்கள் பக்கம் அதர்மம் இருந்தது அதனால் தான் அவர்கள் தோற்றார்கள்

 

பாண்டவர்கள் பக்கம் தர்மம் இருந்தது அதனால் தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

 

பாண்டவர்கள் பக்கம் கிருஷ்ணர் இருந்தார். கடவுள் யார் பக்கம் இருக்கிறாரோ அந்தப் பக்கம் தான் வெற்றி பெறும். அதனால் தான் பாண்டவர்கள் வெற்றி பெற்றார்கள்.

 

அஸ்வத்தாமன் : இதை நீங்கள் சொல்கிறீர்களா

 

கிருபர் : இதை நான் மட்டும் சொல்லவில்லை. இந்த உலகமே சொல்கிறது

 

அஸ்வத்தாமன் : நீங்கள் மட்டுமில்லை.

இந்த உலகமும் அறியாமல் சொல்கிறது

உண்மையை உணராமல் சொல்கிறது

உண்மையைப் புரிந்து கொள்ளாமல் சொல்கிறது

எது உண்மை என்று தெரிந்து கொள்ளாமல் சொல்கிறது

உண்மையைப் புரிந்து கொள்ள முடியாமல் சொல்கிறது

 

ஒருவர் சிந்திக்காமல் சொன்னால்

அதையே உண்மை என்று நினைத்துக் கொண்டு

இந்த உலகம் திரும்ப திரும்பச் சொல்கிறது

 

பணம் பதவி அதிகாரம் படைத்தவர்கள் சொன்னால்

அடிமை நிலையில் ஏற்றுக் கொண்டு சொல்கிறது

 

இந்த உலகத்திற்கு உண்மை எது

பொய் எது என்று தெரியவில்லை

அதனால் உண்மையை பொய்யாகவும்

பொய்யை உண்மையாகவும் நினைத்துக் கொண்டு இருக்கிறது

 

இந்த உலகம் உண்மையானவர்களை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது

போலியானவர்களை எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறது

அதனால் இந்த உலகம் போலியானவர்களால் நிரம்பிவழிகிறது.

போலியானவர்கள் சொல்லும் பொய்களை

உண்மை என்று நம்புகிறது

அதைப் பின்பற்றுகிறது

போலியானவர்களும்

போலியான விஷயங்களை

உண்மைக்கு புறம்பான விஷயங்களை

உண்மை என்று மக்களை நம்ப வைத்து விடுகின்றனர்

போலியானவைகளை பின்பற்ற வேண்டும் என்ற நிலையை

உருவாக்கி வைத்து விடுகின்றனர்

இந்த உலகம் போலியானவர்களால் நிரம்பி விட்டதால்

போலியானவர்கள் சொல்லும் பொய்களை

போலியானவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்

உண்மையானவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்

 

உண்மையாக இருப்பவனை

சுயமான சிந்திப்பவனை

சுதந்திரமாக சிந்தித்து செயல்படுபவனை

யாருக்கும் அடிமையாக இல்லாமல் இருப்பவனை

அடிமையாக இருக்க மறுப்பவனை

தன் சொந்த கால்களில் நிற்பவனை

இந்த சமுதாயம் கெட்டவன் என்கிறது

திமிர் பிடித்தன் என்கிறது

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----04-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment