April 01, 2018

இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-பிறவிப்-பதிவு-82-(3)


இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-பிறவிப்-பதிவு-82-(3)

            """"பதிவு எண்பத்துஇரண்டைவிரித்துச் சொல்ல
            ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

இயேசு கிறிஸ்து:

ராஜா அதைக் கேள்வி பட்டு
கோபமடைந்து
தன் சேனைகளை அனுப்பி
தன் ஊழியக் காரரை
கொலை செய்த
கொலை பாதகரை அழித்து
அவர்கள்
பட்டணத்தை சுட்டெரித்தான்.

அப்பொழுது அவர்கள்
தன் ஊழியக் காரரிடம்
கல்யாண விருந்து
ஆயத்தம் செய்யப்பட்டு இருந்தது
ஆனால் கல்யாணத்திற்கு
அழைக்கப்பட்டவர்களோ
அதற்கு தகுதியில்லாதவர்கள்
ஆனார்கள் என்றான்

கல்யாணத்திற்கு அழைப்பவர்களுக்கும்
கல்யாணத்திற்கு வருபவர்களுக்கும்
இரண்டு பேர்களுக்கும்
ஒரு ஒத்திசைவு
இருந்தால் மட்டுமே
கல்யாணத்திற்கு அழைத்தவர்களின்
வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து
கல்யாணத்திற்கு வருவார்கள்

கல்யாணத்திற்கு அழைப்பவர்களுக்கும்
கல்யாணத்திற்கு வருபவர்களுக்கும்
இரண்டு பேர்களுக்கும்
ஒரு ஒத்திசைவு
இல்லை என்றால்
கல்யாணத்திற்கு அழைத்தவர்களின்
வார்த்தைக்கு
மதிப்பு கொடுக்காமல்
கல்யாணத்திற்கு வரமாட்டார்கள்.

கல்யாணத்திற்கு அழைப்பவர்கள்
தங்களது தகுதிக்கு
தகுதியானவர்களை
அழைத்தால்
தகுதியானவர்கள்
கல்யாணத்திற்கு வருவார்கள்

அதே போல்
கல்யாணத்திற்கு அழைப்பவர்கள்
தங்களது தகுதிக்கு
தகுதியானவர்கள் - என்று
மட்டும் பார்க்காமல்
அனைவரையும் அழைத்தால்
கல்யாணத்திற்கு வருபவர்கள்
கல்யாணத்திற்கு அழைத்தவர்களுடைய
பெருந்தன்மையைப் பாராட்டி
வருவார்கள்

இந்த இடத்தில் ஒன்றை
நினைவில் கொள்ள வேண்டும்
திருமணத்திற்கு அழைப்பவருடைய
வார்த்தை எவ்வளவு
மதிப்பு மிக்கது என்று
பயன்படுத்தும் வார்த்தையைப்
பொறுத்துத் தான்
ஒருவர் திருமணத்திற்கு
வருவதும்
வராமல் இருப்பதும்
என்பதை நாம்
அறிந்து கொள்ள வேண்டும்
பயன் படுத்தப்படும் வார்த்தை
சில இடங்களில்
எவ்வளவு முக்கியத்துவம்
பெறுகிறது என்பதை நாம்
இந்த நிகழ்வில் இருந்து
தெரிந்து கொள்ள வேண்டும்

நடந்த விஷயத்தை
ராஜா பெரியதாக எடுத்துக்
கொள்ளாமல்
ஊழியக் காரர்களை அழைத்து
நீங்கள் வழிச்சந்திகளிலே போய்
அங்கே காணப்படுகின்ற
யாவரையும் கல்யாணத்திற்கு
அழைத்துக் கொண்டு
வாருங்கள் என்றார்.

ஒரு விஷயம் நம் வாழ்வில் நடைபெற்றால்
மக்கள் அதனை இரண்டு விதமாக
எடுத்துக் கொள்கிறார்கள்

ஒன்று : நடந்த விஷயத்தை பெரியதாக
                 எடுத்துக் கொள்பவர்கள்

இரண்டு: நடந்த விஷயத்தை சாதாரணமாக
                 எடுத்துக் கொள்பவர்கள்

ஒருவர் பத்தாம் வகுப்பில்
தேர்ச்சி அடையவில்லை
பெயிலாகி விட்டார்
அதனை நினைத்து அவர்
வேதனை அடைகிறார்
வருத்தம் அடைகிறார்
வாழ்க்கையே போய் விட்டது போல்
வருந்துகிறார்
மனம் வேதனைப் படுகிறார்
உறவினர்கள் என்ன சொல்வார்களோ
என்று வேதனைப் படுகிறார்
நண்பர்கள் கிண்டல் பண்ணுவார்களே
என்று வருத்தப் படுகிறார்
வாழ்க்கையே இழந்து விட்டது போல்
துனபம் அடைகிறார்

இத்தகையவர்கள் தங்களுக்காக
வாழ மாட்டார்கள்
பிறருக்காக வாழ்பவர்கள்
எந்த ஒரு செயலைச் செய்தாலும்
எந்த ஒரு நிகழ்வு
தன் வாழ்க்கையில் நடந்தாலும்
பிறர் என்ன சொல்வார்களோ
பிறர் என்ன நினைப்பார்களோ
என்பதிலேயே
வாழ்க்கையை ஓட்டுபவர்கள்
இவர்கள் தங்களுக்காக
வாழ மாட்டார்கள்
பிறருக்காக வாழ்பவர்கள்

நாம் எப்பொழுது பிறர்
என்ன நினைப்பார்களோ
பிறர் என்ன சொல்வார்களோ
என்று வாழ
ஆரம்பித்து விட்டால்
நாம் நம் தனித்தன்மையை
இழந்து விடுவோம்
நம்முடைய உண்மைத் தன்மை
வெளிப்படாது

நாம் பிறரை பின்பற்றியே
வாழக்கூடிய நிலைக்கு
தள்ளப்பட்டு விடுவோம்
ஒரு விஷயத்தை பெரியதாக
எடுத்துக் கொள்பவர்கள்
எப்பொழுதும் தமக்காக
வாழ மாட்டார்கள்
பிறர் என்ன நினைப்பார்களோ
என்று வாழ்க்கையை
பயத்துடனே வாழ்வார்கள்

இவர்கள் வாழ்க்கையில்
ஒரு விஷயம் நடந்தால்
அதை பெரிதாக
எடுத்துக் கொள்பவர்கள்.

மற்றொருவர்
பத்தாம் வகுப்பு
தேர்ச்சி அடையவில்லை
பெயிலாகி விட்டார்
அவர் அதைப் பற்றி
கவலைப்படவில்லை
பெயில் தானே ஆனோம்
அடுத்த முறை எழுதி பாஸ்
பண்ணிக் கொள்ளலாம்
என்று அமைதியாக இருக்கிறார்.
இவர் எதைப் பற்றியும்
கவலைப்படவில்லை

உறவினர்கள்
தன்னை அவமானமாக நினைப்பார்களோ
என்று வருத்தப்படவில்லை
நண்பர்கள் கிண்டல் பண்ணுவார்களோ
என்று வருத்தப்படவில்லை
சுற்றத்தார்கள் தன்னை
இழிவாக நினைப்பார்களோ
என்று வருத்தப்படவில்லை.

இவர் தன்னைப் பற்றி
பிறர் என்ன நினைப்பார்களோ
என்று நினைத்து
வாழ்க்கையை வாழ்வதில்லை
இவர் பிறர் தன்னைப் பற்றி
இழிவாக நினைப்பார் என்று
நினைத்து வாழ்வதில்லை
தன் செயல்கள் சரியா
தான் செய்வது சரியா
தன்னுடைய செயல்கள் சரியா
என்று யோசித்து வாழ்பவர்கள்

இவர்கள் பிறரை நம்பி
வாழ மாட்டார்கள்
வாழ்க்கையில் எந்த
பிரச்சினை வந்தாலும்
அதை துணிச்சலாக எதிர்த்து
போராடக் கூடியவர்கள்
இவர்கள் பிறர் என்ன சொல்வார்களோ
என்று நினைத்து
வாழ்க்கையை வீணாக்காமல்
தனக்காக வாழ்பவர்கள்
தங்கள் சுயத்தை விட்டுக்
கொடுக்க மாட்டார்கள்
தங்கள் வாழ்க்கையில்
எந்த பிரச்சினை வந்தாலும்
எதிர்த்து போராடக்கூடியவர்கள்

வாழ்க்கையில் ஒரு விஷயம் நடந்தால்
அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல்
சாதாரணமாக எடுத்துக் கொள்பவர்களால்
மட்டுமே
தன் சுயத்தை இழக்காமல்
பிறரை நம்பியே
எப்போதும் இருக்காமல்
வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ முடியும்

இவர்கள் வாழ்க்கையில்
ஒரு விஷயம் நடந்தால்
அதை சாதாரணமாக எடுத்துக்
கொள்பவர்கள்.

அதே போல் தான் ராஜாவும்
நடந்த விஷயத்தை
சாதாரணமாக எடுத்துக் கொண்டு
ஊழியக் காரர்களை அழைத்து
நீங்கள் வழிச்சந்திகளிலே போய்
அங்கே காணப்படுகின்ற
யாவரையும் கல்யாணத்திற்கு
அழைத்துக் கொண்டு
வாருங்கள் என்றார்.

நடந்த கஷ்டமான விஷயத்தை
நினைத்து வருந்தாமல்,
கஷ்டத்தை நினைத்து
சோர்ந்து விடாமல்,
கஷ்டத்தை நினைத்து
மனம் வேதனைப்படாமல்,
நீங்கள் வழிச்சந்திகளிலே போய்
அங்கே காணப்படுகின்ற
யாவரையும் கல்யாணத்திற்கு
அழைத்துக் கொண்டு
வாருங்கள் என்றார்.

உலகில் உள்ள கஷ்டங்களை எல்லாம்
இரண்டு நிலைகளில் பிரித்து விடலாம்

ஒன்று  :  தானே ஏற்பட்ட கஷ்டம்
இரண்டு : தன்னால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட
                   கஷ்டம்

தானே ஏற்பட்ட கஷ்டம் என்பது
நாமே உருவாக்காத கஷ்டம்
அது தனாகவே உருவான கஷ்டம்
அதாவது
நாமே உருவாக்கிக் கொள்ளாத
கஷ்டம்.

தன்னால் ஏற்படுத்திக்
கொண்ட கஷ்டம் என்பது
நாமே உருவாக்கிக் கொண்ட கஷ்டம்
அது தானாக உருவான
கஷ்டம் இல்லை.

எவைகள் இல்லாமல்
நாம் வாழ முடியாதோ
அவைகள் இல்லாமல்
நாம் வாழ்ந்தால்
அதற்குப் பெயர்
கஷ்டம்
அந்த வாழ்க்கைக்குப் பெயர்
கஷ்டமான வாழ்க்கை

எவைகள் இல்லாமல்
நாம் வாழலாமோ
அவைகள் இருந்தால்
தான் வாழ்வேன்
என்று சொல்வதற்குப்
பெயர் கஷ்டம் இல்லை,.

இவைகள் இல்லாமல்
வாழ முடியாது
என்று சொல்லும்போது
அது தானே ஏற்பட்ட கஷ்டம்

இவைகள் இல்லாமலும்
வாழலாம் ஆனால்
இவைகள் இருந்தால்
தான் வாழ்வேன்
என்று சொல்வது
தானே ஏற்படுத்திக்
கொண்ட கஷ்டம்

மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான
அத்தியாவசிய தேவை
மூன்று
  ஒன்று :  உண்ண உணவு
இரண்டு : உடுக்க உடை
 மூன்று : இருக்க இடம்

இவை மூன்றும் மனிதன்
உயிர் வாழ்வதற்குத்
தேவையானவை
ஆகும்,
இவைகளில் எது குறைந்தாலும்
(அல்லது)
எது ஒன்று குறைந்தாலும்
மனிதன் வாழ்க்கையை
வாழ்வதற்கு கஷ்டம்
மனவேதனை ஏற்படும்
ஏழ்மையில் வாழ நேரிடும்
துன்பங்கள் ஏற்படும்

உண்ண உணவு
இல்லையென்றாலும் கஷ்டம்
உடுக்க உடை இல்லையென்றாலும் கஷ்டம்
இருக்க இடம்  இல்லையென்றாலும் கஷ்டம்

இந்த கஷ்டங்களை எல்லாம்
நாம் உருவாக்கிக் கொண்ட
கஷ்டம் இல்லை
இவைகள் தானே
உருவான கஷ்டம்
எனவே,
இவைகளை தானே உருவான
கஷ்டம் என்கிறோம்
இவைகள் நாம் உருவாக்கிய
கஷ்டம் இல்லை

நாம் வாடகை வீட்டில்
தங்கி இருக்கிறோம்
வீடு ஒன்று வாங்க
முயற்சி செய்கிறோம்
ஆனால் பணம் அதிகமாகத்
தேவைப்படுகிறது
எப்படியாவது நாம் வீட்டை
வாங்க வேண்டும் என்று
கடன் வாங்கி வீட்டை வாங்குகிறோம்
வட்டி அதிகம் வாங்கி
வீட்டை வாங்குகிறோம்

மாதா மாதம் கடனை
அடைப்பது மட்டும் அல்லாமல்
வட்டியையும் சேர்த்து அடைக்க
வேண்டி வருவதால்
கஷ்டப்பட வேண்டி இருக்கிறது
ஒவ்வொரு மாதத்தையும்
ஓட்டுவதே கஷ்டமாக இருக்கிறது

இதைத் தான் நாமே
ஏற்படுத்திக் கொண்ட
கஷ்டம்
என்கிறோம்
அதாவது நாம் வாடகை வீட்டில்
தங்கி இருக்கிறோம்
அதுவே நமக்கு போதுமானது
ஆனால் ஆசையின் காரணமாக
வரவுக்கு மேல் செலவு செய்து
வீட்டை வாங்கி
கடனையும் அடைக்க முடியாமல்
வட்டியும் கட்ட முடியாமல்
மாதா மாதம் கஷ்டப்படுகிறோம்
இது தான் நாமே
ஏற்படுத்திக் கொண்ட கஷ்டம்

இது இருந்தால் தான்
நாம்
வாழ முடியும்
அவைகள் கிடைக்கவில்லை
என்றால்
வாழ முடியாது என்ற
சூழ்நிலை வரும்போது
அவை தானே ஏற்பட்ட கஷ்டம்

இவைகள் இல்லாமலும்
நாம் வாழலாம்
ஆனால்
இவைகள் இருந்தால் தான்
நான் வாழ்வேன் என்பது
நாமே ஏற்படுத்திக் கொண்ட
கஷ்டம்

ராஜா தனக்கு ஏற்பட்ட
கஷ்டம்
தானே ஏற்பட்ட கஷ்டம்
தன்னால் ஏற்படுத்திக் கொண்ட
கஷ்டம் இல்லை
என்பதை உணர்ந்து
நீங்கள் வழிச்சந்திகளிலே போய்
அங்கே காணப்படுகின்ற
யாவரையும் கல்யாணத்திற்கு
அழைத்துக் கொண்டு
வாருங்கள் என்றார்.



அந்த ஊழியக்காரர்
புறப்பட்டு வழிகளிலே போய்
தாங்கள் கண்ணில் கண்ட
நல்லவர்கள், பொல்லாதவர்கள்
எல்லோரையும்
கல்யாணத்திற்கு கூட்டிக்கொண்டு
வந்தார்கள்

கல்யாணசாலை விருந்தாளிகளால்
நிறைந்தது

விருந்தாளிகளைப் பார்க்கும்படி
ராஜா உள்ளே
பிரவேசித்தபோது,
கல்யாண வஸ்திரம் தரித்திராத
ஒரு மனுஷனை அங்கே கண்டு
நீ கல்யாண வஸ்திரமில்லாதவனாய்
எப்படி இங்கே வந்தாய்
என்று கேட்டான்

அதற்கு அவன் எதுவும்
பேசாமலிருந்தான்

அப்பொழுது ராஜா
பணிவிடைக்காரரை நோக்கி
இவனைக் கையுங்காலும்
கட்டிக் கொண்டுபோய்,
அழுகையும், பற்கடிப்பும்
உண்டாயிருக்கிற புறம்பான
இருளிலே போடுங்கள்
என்றான்.

கல்யாண விருந்தில்
கலந்து கொள்ள வேண்டும்
என்று உண்மையாக
விரும்பியவர்கள்
கல்யாண விருந்தில்
கௌரவிக்கப்பட்டார்கள்
கல்யாண விருந்தை
புறக்கணித்தவர்கள்
போலியாக
கல்யாண விருந்தில்
கலந்து கொண்டவர்கள்
தண்டிக்கப் பட்டார்கள்

அதைப்போல்
பரலோக ராஜ்யம்
என்றால் என்ன
ஆண்டவர் என்பவர்
யார் என்பதை
உண்மையாக
தெரிந்து கொண்டு
அதைப் பின்பற்றுபவர்கள்
ஆண்டவரால் இரட்சிக்கப்
படுவார்கள்

பரலோக ராஜ்யம்
என்றால் என்ன
ஆண்டவர் என்பவர்
யார் என்பதை
அறிய விரும்பாதவர்கள்
அறிய விரும்புவது போல்
நடிப்பவர்கள்
தண்டிக்கப் படுவார்கள்
என்கிறார்
இயேசு.

---------இதன் தொடர்ச்சி


இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-பிறவிப்-பதிவு-82-(4)
      ------------பார்க்கவும், படிக்கவும்






























No comments:

Post a Comment