April 01, 2018

இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-பிறவிப்-பதிவு-82-(1)


இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-பிறவிப்-பதிவு-82-(1)

                                  """"பதிவு எண்பத்துஇரண்டைவிரித்துச் சொல்ல
                          ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

இயேசு கிறிஸ்து:

“பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.”
-------மத்தேயு –  22 : 2

“அழைக்கப்பட்டவர்களைக் கலியாணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள்.”
-------மத்தேயு –  22 : 3

“அப்பொழுது அவன் வேறு ஊழியக்காரரை அழைத்து நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம்பணினேன், என் எருதுகளும்  கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது; கலியாணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான்.”
-------மத்தேயு –  22 : 4

“அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைபண்ணி, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்துக்கும் போய்விட்டார்கள்.”
-------மத்தேயு –  22 : 5

“மற்றவர்கள் அவன் ஊழியக்காரரைப் பிடித்து, அவமானப்படுத்தி, கொலை செய்தார்கள்.”
-------மத்தேயு –  22 : 6

“ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான்.”
-------மத்தேயு –  22 : 7

“அப்பொழுது, அவன் தன் ஊழியக்காரரை நோக்கி: கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபாத்திரராய்ப் போனார்கள்.”
-------மத்தேயு –  22 : 8

“ஆகையால், நீங்கள் வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக் கொண்டு வாருங்கள் என்றான்.”
-------மத்தேயு –  22 : 9

“அந்த ஊழியக்காரர் புறப்பட்டு, வழிகளிலே போய், தாங்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவரையும் கூட்டிக் கொண்டு வந்தார்கள்; கலியாணசாலை விருந்தாளிகளால் நிறைந்தது.”
-------மத்தேயு –  22 : 10

“விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு: “
-------மத்தேயு –  22 : 11

“சிநேகினே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்.”
-------மத்தேயு –  22 : 12

“அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி:  இவனைக் கையுங்காலும்  கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும்  உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள்  என்றான்.”
-------மத்தேயு –  22 : 13

“அந்தப்படியே, அழைக்கப்பட்டவர் அநேகர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.”
-------மத்தேயு –  22 : 14


காதல் என்பது
மூன்று விதமான நிலைகளைத்
தன்னுள் கொண்டது
     ஒன்று  : ஆரம்ப நிலை
    இரண்டு :  இடை நிலை
     மூன்று : முடிவு நிலை

ஆரம்ப நிலை என்பது
காதல் ஆரம்பமாவதைக்
குறிக்கும்

இடை நிலை என்பது
காதல் செய்வதைக்
குறிக்கும்

முடிவு நிலை
என்பது காதல் வெற்றி
பெற்றதா அல்லது
தோல்வி அடைந்ததா
என்பதைக் குறிக்கும்


ஆரம்ப நிலை :
காதல் என்பது தோன்றுவது
அது இரண்டு நிலைகளைத் தன்னுள்
கொண்டிருக்கும்
ஒன்று  : எதிர்பார்ப்புடன் கூடிய காதல்
       இரண்டு : எதிர்பார்ப்பு அற்ற காதல்

தான் விரும்பும் ஒரு பெண்
இத்தகைய அழகுடன்
இருக்க வேண்டும்
இத்தகைய குணத்துடன்                                                    
இருக்க வேண்டும்
இத்தகைய செல்வ வளத்துடன்
இருக்க வேண்டும் - என்று
நீண்ட நாட்கள் கனவு
கண்ட பையனுக்கு
அந்த எண்ணத்துக்கு உரிய
பெண் கிடைத்தால்
அது தான் எதிர்பார்த்த
பெண் காதலியாகக் கிடைப்பது
இது தான் எதிர்பார்ப்புடன்
கூடிய காதல்.

ஒரு பெண் எதிரில் வருகிறாள்
ஒரு பெண்
இத்தகைய அழகுடன்
இருக்க வேண்டும்
இத்தகைய குணத்துடன்
இருக்க வேண்டும்
இத்தகைய செல்வ வளத்துடன்
இருக்க வேண்டும்
என்ற நினைவுகளை
மனதில் நிறுத்தாமல்
பையனுக்கு எதிரில் ஒரு பெண்
வரும்போது காதல் வருகிறது
அந்த பையன் சொல்கிறான்
அந்த பெண்ணைப் பார்த்தவுடன்
காதல் வந்து விட்டது
அது எப்படி வந்தது
என்று தெரியவில்லை
ஆனால் வந்து விட்டது
என்கிறான்
இது தான்
எதிர்பார்ப்பு அற்ற காதல்.

இந்த இரண்டு நிலைகளில் தான்
காதல் என்பது ஏற்படுகிறது

ஆண் மட்டும் காதலிப்பது
(அல்லது)
பெண் மட்டும் காதலிப்பது
என்று ஒரு பக்க
காதல் என்று இல்லாமல்
ஆண், பெண் என்ற
இரண்டு பக்கங்களும்
இணைந்து விட்டால்
காதல் என்பது
ஆரம்பமாகிறது
இது தான் காதல்
என்பது ஆரம்பமாகும்
இது தான் காதல்
என்பதின் ஆரம்ப நிலை

இடை நிலை
காதலின் இடைப்பட்ட நிலை என்பது
காதல் செய்வதைக் குறிக்கும்
வீட்டிற்குத் தெரியாமல்,
பெற்றோருக்குத் தெரியாமல்,
உறவினர்களுக்குத் தெரியாமல்,
சுற்றத்தாருக்குத் தெரியாமல்,
காதல் செய்யும்
ஆணும், பெண்ணும்
வெளி இடங்களுக்கு
சுற்றித் திரிவதும்,
காதல் சிறகை விரித்து
காதல் வானில் பறப்பதைக்
குறிக்கும்.

அந்த சமயத்தில்
காதல் செய்யும் போது
அவர்களுக்கு
தங்களைச் சுற்றி
என்ன நடக்கிறது
என்பதே தெரியாது
காதல் செய்யும் போது
காலம் என்பதே இருக்காது
இது இடைப்பட்ட நிலை

முடிவு நிலை
முடிவு நிலை என்பது
காதல் வெற்றி பெற்றதா
அல்லது
தோல்வி அடைந்ததா
என்பதைக் குறிக்கும்


காதல் தோல்வியுறுவது
என்பது இரண்டு நபர்களால்
ஏற்படுகிறது.

ஒன்று காதலிக்கும் ஆணால்
                 ஏற்படுகிறது

இரண்டு காதலிக்கும் பெண்ணால்
                  ஏற்படுகிறது

ஒன்று
நேற்று இந்த நிலையில் இருந்தோம்
நாளை திருமணம் செய்தால்
இந்த நிலைக்கு ஆளாவோம்
சாதி சண்டை ஏற்படும்
குடும்பத்தில் அமைதி
இழப்பு ஏற்படும்
பெரிய துன்பங்கள்
ஆகியவை ஏற்படும்
என்ற காரணத்தினால்
காதல் வேண்டாம் என்று சொல்வது

இரண்டு
இவரைத் திருமணம் செய்தால்
பிற்காலம் நன்றாக இருக்கும்
பணக்காரன்,
நல்ல வேலை
சுகமாக வாழலாம்
என்று நினைத்தால்
ஆகியவை இல்லை
எனவே
காதல் வேண்டாம்
என்று சொல்வது

காதலிக்கும் ஆணோ (அல்லது) பெண்ணோ
மேற்கண்ட இரண்டு காரணங்களினால்
காதல் வேண்டாம் என்று
சொல்வார்கள்

இது காலம் என்ற ஒன்றுக்குள்
அடைபட்ட காதல்
எனவே,
இந்த காதல் வெற்றி பெறாது
இந்த காதல்
இறந்த காலத்தையும்
நிகழ் காலத்தையும்
எதிர் காலத்தையும்
ஆகிய மூன்றையும்
தன்னுள் கொண்டதால்
இது காலத்திற்கு உட்பட்ட காதல்

அதாவது
மேற்கண்ட இரண்டு காரணங்களினால்
ஒரு பெண்
ஒரு ஆணை வேண்டாம்  
என்று சொன்னாலோ
(அல்லது)
மேற்கண்ட இரண்டு காரணங்களினால்
ஒரு ஆண்
ஒரு பெண்ணை வேண்டாம் என்று
சொன்னாலோ
(அல்லது)
மேற்கண்ட இரண்டு காரணங்களினால்
இருவருமே வேண்டாம் என்று
சொன்னாலோ
அத்தகைய காதலை
காலத்திற்கு உட்பட்ட காதல்
என்று சொல்லலாம்

காலத்திற்கு உட்படாத காதல் என்பது
இறந்த காலம்,
நிகழ்காலம்,
எதிர்காலம்
மூன்றும் இல்லாதது
அதாவது காதலிப்பவர்
காலம் என்ற ஒன்றிற்குள்
இல்லாமல் இருப்பார்
அதாவது
நேற்று - இப்படி இருந்தோம்
இன்று - இப்படி இருக்கிறோம்
நாளை - எப்படி இருப்போம்
என்பதை யோசிக்காமல்
காதலை மட்டும் யோசித்து
முடிவு எடுப்பது
காலத்திற்கு உட்படாத
காதல்

ஒரு ஆண்
மேற்கண்ட காரணங்களினால்
ஆழ்ந்து இருந்து
பெண் இல்லை என்றால்
அதாவது
ஆண்ணிணுடைய காதல்
காலத்திற்கு உட்படாத
காதலாக இருந்து
பெண்ணிணுடைய காதல்
காலத்திற்கு உட்பட்ட
காதலாக இருந்தால்
காதல் தோல்வியுறும்

அதேபோல்
பெண்ணிணுடைய காதல்
காலத்திற்கு உட்படாத
காதலாக இருந்து
ஆண்ணிணுடைய காதல்
காலத்திற்கு உட்பட்ட
காதலாக இருந்தால்
காதல் வெற்றி பெறாது

ஆனால்
பெண்ணிணுடைய காதல்
காலத்திற்கு உட்படாத
காதலாக இருந்து,
ஆண்ணிணுடைய காதலும்
காலத்திற்கு உட்படாத
காதலாக இருந்தால்
காதல் வெற்றி பெறும்

அதாவது,
முக்காலத்தையும்
நினைக்காமல்
காதல் ஒன்றையே நினைத்து
காதலுக்காகவே இருக்கும்
காதல் மட்டுமே வெற்றி பெறும்

வெற்றி பெற்ற காதல்
அனைத்தையும்
உற்று பார்த்தால்
வெற்றி பெற்ற காதலர்களைப் பார்த்தால்
வெற்றி பெற்ற காதலர்களே
தங்களை பார்த்துக் கொண்டால்
வெற்றி பெற்ற காதல்
காலத்திற்கு உட்படாத
காதலாகத்
தான் இருக்கும்

தோல்வியுற்ற காதல் அனைத்தும்
காலத்திற்கு உட்பட்ட
காதலாகத் தான் இருக்கும்

இன்னொன்று காதலர்கள்
இச்சமுதாயத்தில் வாழ
முடியவில்லை என்றால்
இச் சமுதாயம் காதலர்களை
வாழ விடவில்லை என்றால்
காதல் நிறைவேறவில்லை - என்று
தற்கொலை செய்து கொண்டால்
அத்தகைய காதல்
வெற்றி பெற்ற காதலா (அல்லது)
தோல்வியுற்ற காதலா
என்ற ஐயம் ஏற்படும்
இதில் ஐயம் என்பதே
ஏற்படக்கூடாது
இது வெற்றி பெற்ற காதல் தான்
காதலும் வெற்றி பெற்றது
காதலர்களும் வெற்றி பெற்றார்கள்

சிலர் சொல்வார்கள்
காதலர்கள் தான் இறந்தார்கள்
காதல் இறப்பதில்லை
இந்த வார்த்தையே தவறானது.

அந்த வார்த்தையே
தவறானது மட்டுமல்ல
அந்த கருத்தே
மிகத் தவறானது

ஒரு அரசன் எதிரி நாட்டுடன்
போரிட்டு வெற்றி பெற்றால்
அந்த அரசனும் வெற்றி பெற்றான்
நாடும் வெற்றி பெற்றது
என்று  சொல்கிறோம்.
அதைப்போல ஒரு அரசன்
எதிரி நாட்டுடன் போரிட்டு
தோற்றுப் போனால்
அந்த அரசனும் தோற்றான்
அந்த நாடும் தோற்றது என்கிறோம்.

எப்படி என்றால்
காதலர்கள் தற்கொலை செய்து கொண்டால்
அவர்கள் காலத்திற்கு
உட்படாத காதலை
இருவருமே செய்திருக்கிறார்கள்
என்று அர்த்தம்
அதனால் தான்
இருவரும் தற்கொலை
செய்து கொண்டார்கள்
எனவே, காதலும் வெற்றி பெற்றது
காதலர்களும் வெற்றி
பெற்றார்கள்.
இவர்கள் காலத்திற்கு
உட்படாத காதலை செய்து இறந்தார்கள்
இது வெற்றி பெற்ற காதல்

அதே போல்,
காலத்திற்கு உட்படாத
காதலைச் செய்து
இருவர் திருமணம்
செய்து கொண்டு வாழ்ந்தாலும்
அதுவும் வெற்றி பெற்ற
காதல் தான்.

காலத்திற்கு உட்படாத
காதலை புரிந்தவர்கள்
காதலில் வெற்றி பெற்று
திருமணம் புரிந்து
வாழ்ந்தாலும்,
காலத்திற்கு உட்படாத
காலத்தை புரிந்தவர்கள்
இறந்தாலும்
காதலர்களும் வெற்றி பெற்றார்கள்
காதலும் வெற்றி பெற்றது
எனக் கொள்ள வேண்டும்

காலத்திற்கு உட்படாத
காதல் இறந்தாலும் வெற்றியே
காலத்திற்கு உட்படாத
காதல் வாழ்ந்தாலும் வெற்றியே
என்பதை நினைவில்
கொள்ள வேண்டும்

இவ்வாறு காதல் என்பது
ஆரம்ப நிலை
இடை நிலை
முடிவு நிலை
என்ற மூன்று நிலைகளைத்
தன்னுள் கொண்டு இருக்கிறது

---------இதன் தொடர்ச்சி
     இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-பிறவிப்-பதிவு-82-(2)
      ------------பார்க்கவும், படிக்கவும்







No comments:

Post a Comment