July 09, 2020

அறிய வேண்டியவை-பதிவு-93


               ஜபம்-பதிவு-585
         (அறிய வேண்டியவை-93)

“என்னுடைய உடலில்
காயங்களால் ஏற்பட்ட
வலியைப்
போக்குவதற்காகவும்
எனக்குள் ஏற்பட்டுள்ள
மனக்குழப்பதை
நீக்குவதற்காகவும்
என்னை ஆக்ரமித்துள்ள
கவலைகளை
மனதிலிருந்து
வெளியேற்றுவதற்காகவும்
எனக்கு அமைதி
தேவைப் படுகிறது
எனக்கு நிம்மதி
தேவைப்படுகிறது
ஆகவே நான் தண்ணீரை
ஸ்தம்பனம் செய்து
மடுவிற்குள் ஓய்வெடுக்கப்
போகிறேன் என்று
என்னுடைய தந்தையிடம்
சென்று சொல் சஞ்சயா

(ஸ்தம்பனம் என்றால்
எந்த ஒரு இயக்கத்தையும்
இயங்க விடாமல் அப்படியே
அசைவற்று நிறுத்தி
வைத்தல் என்று பொருள்)

“துரியோதனன்
ஒளிந்து கொண்டிருக்கிறான்
பதுங்கிக் கொண்டிருக்கிறான்
மறைந்து கொண்டிருக்கிறான்
என்ற வார்த்தையை மட்டும்
தவறியும் பயன்படுத்தி
விடாதே சஞ்சயா - அது
இந்த துரியோதனனுடைய
வீரத்தையே
களங்கப்படுத்தியதாக
ஆகி விடும்
துரியோதனன் மடுவிற்குள்
ஓய்வெடுத்துக் கொண்டு
இருக்கிறான் என்று
சொல் சஞ்சயா”

“காலம் கனியும் வரை
நான் காத்திருக்கப்
போவதாகவும்
காலம் கனிந்தவுடன்
போரிடப் போவதாகவும்
என் தந்தையிடம் சென்று
விஷயத்தைச் சொல்லி
விடு சஞ்சயா “

“அஸ்வத்தாமன் கிருபர்
கிருதவர்மன்
ஆகிய மூவர் என்னைப்
பார்க்க வந்தாலும்
அவர்களுக்கு நான்
இருக்கும் இடத்தைச்
சொல் சஞ்சயா”

“வேறு யாருக்கும் நான்
இருக்கும் இடம்
தெரிய வேண்டாம்
ரகசியமாகவே
இருக்கட்டும்”

(என்று சொல்லி விட்டு
துரியோதனன் தண்ணீரை
ஸ்தம்பனம் செய்து
விட்டு மடுவிற்குள்
புகுந்து ஓய்வெடுக்ககத்
தொடங்கினான் )

////////////////////////////////////////////////
(அஸ்வத்தாமன்
கிருபர் கிருதவர்மன்
ஆகியோர்
துரியோதனனைத் தேடி
அலைந்து
கொண்டிருந்தனர்
துரியோதனன்
எங்கே இருக்கிறான்
எந்த இடத்தில்
இருக்கிறான் என்று
தேடி அலைந்து
கொண்டிருந்தனர் - அந்த
நேரத்தில் தனக்கு
எதிராக வந்து
கொண்டிருந்த
சஞ்சயனைக் கண்ட
மூவரும் அவனிடம்
பேசினர்)

அஸ்வத்தாமன் :
“சஞ்சயா நாங்கள்
மூவர் தான் கௌரவர்கள்
படையில் மிஞ்சியவர்கள்
இப்போது உயிரோடு
இருப்பவர்கள் நாங்கள்
மட்டும் தான்”

“துரியோதனனை
போர்க்களத்தில்
தேடினோம்
கிடைக்கவில்லை
காயம் பட்டவர்களுக்கு
மத்தியில் தேடினோம்
கிடைக்கவில்லை
பிணக் குவியல்களுக்கு
மத்தியில் தேடினோம்
கிடைக்கவில்லை
எங்கு தேடிப் பார்த்தும்
துரியோதனன்
கிடைக்கவில்லை “

“துரியோதனன்
உயிரோடு இருக்கிறானா
என்றும் தெரியவில்லை
உயிரோடு
இருக்கிறான் என்றால்
எங்கே இருக்கிறான்
என்றும் தெரியவில்லை
எந்த இடத்தில்
இருக்கிறான் என்றும்
தெரியவில்லை
என்ன செய்து
கொண்டிருக்கிறான்
என்றும் தெரியவில்லை”

“ஆனால் ஒன்று
மட்டும் எங்களுக்கு
நன்றாகத் தெரியும்
துரியோதனனை எதிர்க்கத்
துணிந்தவர்களும்
துரியோதனனை எதிர்க்கக்
கூடியவர்களும்
துரியோதனனை வீழ்த்தக்
கூடியவர்களும் - இந்த
உலகத்தில் யாரும்
இல்லை என்று” -

“துரியோதனனை அவ்வளவு
எளிதில் யாராலும்
வீழ்த்தி விட முடியாது
துரியோதனனை சூழ்ச்சி
செய்து தான்
கொல்ல முடியும்
நேருக்கு நேர் நின்று
போர் புரிந்து வெற்றி
பெறக் கூடியவர் - இந்த
உலகத்தில் யாரும் இல்லை”

“துரியோதனன் இருக்கும்
இடத்தை நீங்கள்
அறிந்திருந்தால்”

“துரியோதனன் எந்த
இடத்தில் இருக்கிறான்
என்பதை நீங்கள்
பார்த்திருந்தால்”

“துரியோதனன்
இந்த இடத்தில்
இருக்கிறேன் என்று
துரியோதனன்
தான் இருக்கும்
இடத்தை உங்களுக்கு
சொல்லியிருந்தால்”

“துரியோதனனை நீங்கள்
நேரில் சந்தித்து பேசி
துரியோதனன்
இந்த இடத்தில் தான்
நான் இருப்பேன்
என்று உங்களுக்கு
சொல்லியிருந்தால்”

“யாரேனும் உங்களுக்கு
துரியோதனன் - இந்த
இடத்தில் இருக்கிறான்
என்பதை உங்களுக்கு
சொல்லியிருந்தால்”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 09-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment